Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படிப்பறிவில்லாதவர்கள், ஆடு, மாடுகள் போல நடந்து கொண்டனர்! - காணாமற்போனவர்களின் போராட்டம் குறித்த பொலிஸ் அதிகாரியின் கருத்து இது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jaffna-301113-150.jpg

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட காணாமல் போனவர்களது போராட்டத்தில் தாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்தார். நேற்று யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அருகில் இடம்பெற்ற காணாமல் போனோரது போராட்டத்தில் கிறீஸ்தவ பாதிரியார் ஒருவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறித்து ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

  

அவர் மேலும் தெரிவிக்கையில், டேவிட் கமரூன் வருகை தந்திருந்த போது நாங்கள் அவருக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்காகவே அங்கு சென்றோமே தவிர யாரையும் தாக்கும் எண்ணம் எங்களிடம் இருக்கவில்லை. ஒரு நாட்டு பிரதமர் வரும் போது அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எமது கடமை. ஏனெனில் அவருக்கு ஏதாவது நடந்துவிட்டால் எமது நாட்டின் கௌரவம் பாதிக்கப்படும். எனினும் இவ்வாறானதொரு முக்கிய பிரமுகர் வரும் போது பாதுகாப்புக் கடமைக்கு துப்பாக்கியை கொண்டு செல்வது அவசியமானது. எனினும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. லத்தி மட்டுமே எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும் துரையப்பா மைதானத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள் வந்திறங்கும் போது மக்கள் ஆடுமாடுகள் போல நடந்து கொண்டனர். அவ்வாறு இருக்கும் போது எப்படி அவரைச் சந்திக்க அனுமதிப்பது.

படிப்பறிவு இல்லாதவர்கள் மேற்கொண்ட இந்த செயல் மிகவும் கவலையளிக்கின்றது. எனினும் கமரூனை சந்திப்பதற்கு ஒரு ஏற்பாட்டினை செய்திருந்தால் அந்த இடத்தில் நாங்கள் விட்டிருப்போம். எனினும் அவ்வாறு ஒரு ஏற்பாடு இல்லாத இடத்தில் மக்களின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இடமளிக்க முடியாது. பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எமது கடமை. இருப்பினும் நாங்கள் அங்கு கலந்து கொண்டவர்களில் ஒருவரைக் கூட தாக்கவில்லை. டேவிட் கமரூன் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு சென்றிருந்தார். சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்குள்ளவர்கள் அவருக்கு அருகில் நின்று பேசிக்கொண்டனர் அதற்குப் பொலிஸார் இடமளித்தனர். இது அவர்களது கண்ணியத்தன்மையைக் காட்டுகின்றது. என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97951&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரும்

சிங்களவரும் ஒரு கலாச்சாரமாம்............??

பன்றிக்குட்டி  தன்னை  மாதிரியே

வேதனையிலுள்ளவர்களையும் பார்க்கிறது :(

படிப்பறிவற்ற ஆடு, மாடுகள் போல இருந்த அந்த மக்கள் கூட்டத்தின் பிள்ளைகளை அந்த போலிஸ் அதிகாரியின் உறவினரான காட்டுமிராண்டிக் கூட்டம் ஆடுமாடுகள் போல வேட்டையாடிக் கொன்றோழி

த்தன.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை  ஈவிரக்கம் இன்றி கொன்றவர்கள் படித்தவர்கள்.கலாச்சாரமானவர்கள்.அதற்கு நீதி கேட்ட தமிழ் மக்கள் படிப்பறிவற்றவர்கள்.காட்டுமிராண்டிகளாம்.  நல்லாய் உருப்படும் உங்கள் சிங்கள நாடு."கெடு குடி சொல் கேளாது" என்பது எவ்வளவு நிதர்சன வார்த்தை.

படிப்பையும் பண்பையும் பற்றி பெசுறிங்க ஆனா மனிதவுரிமை பற்றி பேசினா ஏன் சினக்கிறிங்க?

ஜெனிவாவில உங்களுக்காம பதில் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பறிவைப்பற்றி நீங்கள் கதைக்கிறீங்கள்.40 வருடம் பின்னால திரும்பி பாருங்கோ.எல்லாம் காலமாடா சாமி :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-301113-150.jpg

படிப்பறிவு இல்லாதவர்கள் மேற்கொண்ட இந்த செயல் மிகவும் கவலையளிக்கின்றது. எனினும் கமரூனை சந்திப்பதற்கு ஒரு ஏற்பாட்டினை செய்திருந்தால் அந்த இடத்தில் நாங்கள் விட்டிருப்போம்..

 

http://www.seithy.com/breifNews.php?newsID=97951&category=TamilNews&language=tamil

இது தமிழ் அரசியல் தலைவர்களின் முன்னோக்கற்ற தலைமைத்துவத்துக்கு இன்னுமொரு உதாரணம். சம்பந்தன் ஸ்ரீதரன் ஆனந்தி மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் ஏன் இந்த பொதுமக்களை டேவிட் கமரூன் ஒரு இரண்டு நிமிட சந்திப்பையாவது செய்ய ஏற்பாடு செய்யவில்லை? இது அவர்களின் தவறும் அக்கறையின்மையுமே.

விடுங்கப்பா முரளித்தம்பியே நெறைய நல்ல விடயம் சொல்லி எங்களின் காது குளிரூது........

ஆடு மாடுகள் எதற்கும் முட்டி மோதுவதில்லை...அது அந்த முட்டாளுக்கு தெரியவில்லை...

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
படிப்பறிவில்லாதவர்கள், ஆடு, மாடுகள் போல நடந்து கொண்டனர்! - காணாமற்போனவர்களின் போராட்டம் குறித்த பொலிஸ் அதிகாரியின் கருத்து இது.

 

 

வெளிநாடு வந்து இன்னும் திருந்தேல்லை எண்டு சொல்லுறவை இஞ்சையே இருக்கினம்....இதுக்கை ஏன் நாங்கள் சிங்களவனை மட்டம்தட்டுவான்?????

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மாடுகள் எதற்கும் முட்டி மோதுவதில்லை...அது அந்த முட்டாளுக்கு தெரியவில்லை...

 

 

புலிகள் இருந்திருந்தால் இப்படி ஒரு போராட்டத்தை மக்களால் நடத்தியிருக்க முடியாது.
புலிகள் அழிந்ததன் பின்பு .....
ஆடு மாடுகள் போல் .........அலைந்து போராடி வாழ முடிகிறது மக்களால்.
இதை இந்த புல(ன்)ம் பெயர்ந்த கூட்டம் எப்போது உணருமோ தெரியவில்லை.
புலிகளுக்கு வால்  பிடித்த கூட்டம் ..... இப்போதும் அதே சிந்தனையுடனேயே வாழ்கிறது.

வெளிநாடு வந்து இன்னும் திருந்தேல்லை எண்டு சொல்லுறவை இஞ்சையே இருக்கினம்....இதுக்கை ஏன் நாங்கள் சிங்களவனை மட்டம்தட்டுவான்?????

 

அவையள அங்கே அனுப்பி ஒரு போராட்டத்தை நடத்தி பார்ப்போம்............ அப்ப சிங்களவன் என்ன சொல்கிறான் என்று.
 
எங்களிடம் படித்தவர்கள் இல்லை என்று நினைத்தான் போல்.
கனடாவில் இருந்து ஒருவரை இறக்க்கினாலே போதும்.......
  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சத் தொலைச்ச கோழி கூட பருந்தை விரட்டும். அந்த நிலையில் தான் எம் மக்கள். தங்கள் சொந்தங்களை சிங்களக் காடைகளிடம்.. இனப்படுகொலையாளர்களிடம் கொடுத்திட்டு படுற அவதி. எப்படியாவது தங்களிடம் தங்கள் சொந்தங்கள் திரும்பாயினமோ என்ற ஏக்கம் உள்ளவனுக்குத் தான் தெரியும்.. வலியும் வேதனையும்.

 

சிங்களவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் நினைத்திருந்தால்.. இவர்களையும் இப்படி ஆடு மாடு மாதிரி நடைப்பிணமாக நடக்கச் செய்ய அதிக நேரம் எடுத்திருக்காது. அதற்காக புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி சொல்ல வேண்டிய சிங்களவர்கள்.. இப்படிப் பேசுவது தான் படிப்பறிவற்ற தன்மை ஆகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.