Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் முன்னாள் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக சம்பந்தன் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sambanthan%20TNA_CI.jpg

அரசாங்கம் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை எட்டும் நோக்கில் புலிகளுடன் இணைந்து செயற்பட விரும்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், முன்னாள் கிழக்கு முதலலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் போன்ற முன்னாள் புலி உறுப்பினர்களுடன் அரசாங்கம் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கமே இவ்வாறு புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற காலத்திலும் அதன் பின்னரும் படையினரின் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

படையினரில் நல்லவர்களும் இருக்கின்றனர் எனவும், சில கெட்டவர்களும் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடி;ககை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99827/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்லடா சாமி. தேர்தலில் ஒன்று தேர்தலுக்கு அப்புறம் ஒன்று. சம்பந்தனை விட சிங்களவனுக்கு விளங்குது சம்பந்தன் எங்க இருக்கிறார் என்று. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சனம் அடிபோடும் போது பார்க்க பாவமாயிருந்தது இதை படித்தபின் என்னம் கொஞ்சம் கூட அடிவிழுந்திருந்தால் சில வேளைகளில் இந்த பச்சோந்திரக நோயை குணப்படுத்தியிருக்கலாம் என நிணைக்கிறன். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயய்யோ சம்மந்தனுக்கு  தட்டிக்கிட்டிப்போச்சுப்போல மாறி மாறி பேசிறார்,  நல்ல வைத்தியரிடம் காட்டவேணும்.  

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமரின் ஆவி உள்ள புகுந்திட்டுது போல் உள்ளது ஆளை ஒருக்க லண்டன் பக்கம் கூட்டி கொண்டு வாங்கோ பேயை ஓட்டி விடவேணும் நாள்பட விடக்கூடாது  :icon_mrgreen:  :icon_mrgreen:

சம்பந்தர் மிக தெளிவாகத்தான் இருக்கின்றார் .

தாங்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் பலர் புசத்த தொடங்கி இப்ப நாலு வருடங்கள் தாண்டுது .அடுத்த கட்டம் தான் மிக ஆபத்தானது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன் அந்த கட்டத்தை தாண்டி பல ஆண்டுகள் ஆகிற்று ...  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தர் ராஜ தந்திரமா பேசுறாராமாம் ....... சம்மந்தரின் சாணக்கியம் என்று சொல்லும் அடிப்பொடியல இன்னும் காணோம்.....

சம்மந்தருக்கு தமிழ் மக்கள் அடிக்கும் போது சிங்கள போலீஸ் தானே வந்து காப்பாற்றினது இல்லது அண்டைக்கு நல்லா வாங்கி இருப்பார் அந்த விசுவாசம் தான்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை  ஆதரிக்கின்றீர்கள் என்று சொல்லும் அரசுதான்

பல முன்னாள் புலிகளை  தன்னுடன் வைத்திருக்கு என்பது  உண்மைதானே.....?

அவர்களை  வெளியில் எடுக்க சம்பந்தர் முயல்கிறார் போலும்...... :)

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் மிக தெளிவாகத்தான் இருக்கின்றார் .

தாங்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்காமல் பலர் புசத்த தொடங்கி இப்ப நாலு வருடங்கள் தாண்டுது .அடுத்த கட்டம் தான் மிக ஆபத்தானது .

 

 

சம்பந்தர்  சொல்வது சரியானது. ஏனெனில் நீங்கள் இணைத்த காணோளியில் புலிகளுக்கு எதிராக சாட்சி சொல்ல வைக்கப்படுவது முன்னாள் புலிகள் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.

 

மார்க்கத்தில் இருந்து புசத்த யாரும் கேட்பதாக இல்லை. :D

சம்பந்தன் ஜயா சொல்வது சரிதான். கருனா, பிள்ளையான், கே.பி எல்லாரும் ஒரு வகையி புலிகளாக இருந்தவர்கள். அவர்களை வைத்து தானே  இப்போ தமிழன் கண்ணுக்குள்ளேயே குத்துகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஜயா சொல்வது சரிதான். கருனா, பிள்ளையான், கே.பி எல்லாரும் ஒரு வகையி புலிகளாக இருந்தவர்கள். அவர்களை வைத்து தானே  இப்போ தமிழன் கண்ணுக்குள்ளேயே குத்துகிறார்கள்.

 

அப்படிப் பார்த்தால் சம்பந்தன் ஐயா வரலாற்றில் எத்தனை தடவைகள் சிங்களத்தோடு சேர்ந்து கொண்டு தமிழர்களின் கண்ணுக்குள் குத்தி இருப்பார்..??!

 

சந்திரிக்கா அம்மையார் காலத்தில் நீலனுக்கு..பொதிசுமந்தவர்.. ஐயா. மறந்திடக் கூடாது.

 

கருணா.. பிள்ளையான்.. கேபி அவர்களின் இன்றைய... போக்கில் இருந்து கடந்து வந்தவர் தான் ஐயா. அதனையும் ஐயா நினைச்சுப் பார்க்கனும். பார்த்திட்டு எனியும் தமிழர்களுக்கு கண்ணுக்க குத்தாத வகையில் இதைச் சொல்லி இருந்தால் வரவேற்பதில் தப்பில்லை தான்.

புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றிருந்தால் எம்.பியாகியிருப்பேன்:ஆனந்தசங்கரி

விடுதலைப்புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் இன்று நான் ஒரு எம்.பியாகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (30) கே.கே.எஸ்.வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பிரபாகரனை எவ்வாறு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்வது. அவர் பொதுமக்கள் முன்பாக வந்தாரா அல்லது தேர்தலில் போட்டியிட்டாரா. ஆனால் நான் திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறேன் பேச்சுவார்த்தைக்கு  விடுதலைப்புலிகள் தான் போகவேண்டும் என்று.

நாங்கள் போனால் கொடுக்கிற வாக்குறுதிகளை தராமல் அரசாங்கம் ஏமாற்றும். விடுதலைப் புலிகளிடம் ஆயுதம் இருந்தது. புலிகள் சென்றால் அரசாங்கம் பயப்பிடும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். இதற்காகத் தான் நான் விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டேனே தவிர விடுதலைப் புலிகளிடம் எனக்கு எந்தவித கோபமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/91532-2013-12-01-05-47-49.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவருடைய முழுப் பேச்சையும் படித்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள், இது யாரையோ திருப்திப் படுத்த பதிந்த ஒரு பகுதி .

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றிருந்தால் எம்.பியாகியிருப்பேன்:ஆனந்தசங்கரி

பிரபாகரனை எவ்வாறு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்வது. அவர் பொதுமக்கள் முன்பாக வந்தாரா அல்லது தேர்தலில் போட்டியிட்டாரா. ஆனால் நான் திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறேன் பேச்சுவார்த்தைக்கு  விடுதலைப்புலிகள் தான் போகவேண்டும் என்று.

நாங்கள் போனால் கொடுக்கிற வாக்குறுதிகளை தராமல் அரசாங்கம் ஏமாற்றும். விடுதலைப் புலிகளிடம் ஆயுதம் இருந்தது. புலிகள் சென்றால் அரசாங்கம் பயப்பிடும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். இதற்காகத் தான் நான் விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டேனே தவிர விடுதலைப் புலிகளிடம் எனக்கு எந்தவித கோபமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

இதுவும் கடந்து போகும் கடந்த காலங்களின் சங்கரியின் சிறப்பு அறிக்கைகளை சம்மந்தருக்கு போட்டு காட்டினால் நல்லது கடைசியில் சுடலைஞானம் கிடைக்கும்போது மோட்சம் பக்கத்தில்இருக்கும் அப்ப புலி நல்லவங்கள் பயங்கரவாதிகள் அல்ல என்று உண்மையை சொன்னாலும் சனம் நம்பாது துரோகி துரோகிதான் இதுகளை சொல்லியாவது சம்மந்தனை மாற்ற முயட்ச்சித்தால் நல்லது .இல்லாவிடின் கருணாவின் பிள்ளைகள் இங்கிலாந்தில் தனியார் பள்ளிகளில் படித்தாலும் படும் பாட்டை காட்டியாவது மாற்ற முயற்ச்சித்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

"குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்"

20 வருடங்களுக்கு மேல் இனத்த்தை விலை பேசி தமது இருப்பை தக்க வைத்த்து கொண்டவர்கள்.

அந்த மன பயம் அவர்களுக்கு என்றும் இருக்கும். எப்போது யார் கல்  எறிவான் என்று அவர்களுக்கே தெரியாது. அவர்களுக்கு இன்னும் ஓற்ன்று தெரியவில்லை ஈன தமிழனை இன்னமும் 100 வருடம்கள் ஏமாற்றினாலும் ஏமாறுவான் என்பதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.