Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவை விட்டு நேற்று ஈ.பி.டி.பி. வெளியேற்றம்; தீவகத்தில் பல அலுவலகங்களுக்கு மூடுவிழா கமலின் கைதை அடுத்துத் திடீர்த் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவுப் பிரதேச சபை தவிசாளர் றெக்­யன் படுகொலையைத் தொடர்ந்தும் அந்தக் கொலை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி) சேர்ந்த கமல் எனப்படும் கந்தசாமி கமலேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்தும் நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் நேற்றுத் திடீரென வெளியேறினர். 

 
அங்கிருந்த கட்சி அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் நெடுந்தீவை விட்டு வெளியேறினர். யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த விசேட ஈ.பி.டி.பி குழுவின் தலைமையில் இந்த மூடுவிழா நேற்று நடத்தப்பட்டது. 
 
அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின், ஊர்காவற்றுறைப் பிரதேச சபை தலைவர் என்.ஜெயகாந்தன் மற்றும் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர்.
 
நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் வெளியேறிய அதே நேரத்தில் தீவகத்தில் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய கட்சி அலுவலகங்களை இழுத்து மூடுவது எனவும் அக்கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
சகோதரப் படுகொலையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஈடுபட்டதை அடுத்து தீவக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் எதிர்ப்பு உணர்வலைகளே  ஈ.பி.டி.பியின் இந்த முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது.
 
விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலையைக் கண்டித்து வந்த ஈ.பி.டி.பியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் அதே சகோதரப் படுகொலையில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் விசனத்தையும் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
 

 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலையைக் கண்டித்து வந்த ஈ.பி.டி.பியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் அதே சகோதரப் படுகொலையில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் விசனத்தையும் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

முடியல்ல. ஏதோ இன்றைக்குத் தான் உது நடக்கிறது போல.. செய்தி போடுறாய்ங்களே. ஈபிடிபி தொடங்கின காலம் தொட்டு உவர் தலீவர் ஈபியில் இருக்கிற காலம் தொட்டு உது நடக்குது. இந்த நாடகங்கள் எல்லாம் இந்தச் சாவுகளை வைச்சு.. மக்களின் கொஞ்ச அனுதாபத்தை என்றாலும் ஈட்டுவோம் என்ற அப்பட்டமான பிண அரசியல் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  காலம் பிறக்குது

நல்ல காலம் பிறக்குது

ஒரு கால் நூற்றாண்டுக்குப்பின்

என் ஊருக்கு விடிவு வந்துகொண்டிருக்கு... :icon_idea:

 

அப்படியே

இவர்களுக்கு அஞ்சலி  செலுத்துகிற

ஊராகப்பார்த்து ஒதுக்கிவிடுங்கோ

புண்ணியமாப்போகும்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எவ்வளவுகாலத்துக்குதான் மாக்களை முட்டாள்களாக்கி அரசியல் பிழைப்பு நடத்துவார்கள் .........?
 

ஒரு கள்வன் போக வேறொரு கள்வன் தான் வருவான் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கள்வன் போக வேறொரு கள்வன் தான் வருவான் .

 

 

எஞ்சி உள்ளது கூட்டமைப்பு தான். :)  :)

கூட்டமைப்பு என்ற கலவை பற்றி யோ கர்ணன் அழகாக எழுதியுள்ளார் ,அவர்களை விட்டால் எம்மவருக்கு வேறு தெரிவும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூட்டமைப்பை மறைமுகமாக கள்வன் என்றதை வன்மையாக கண்டிக்கிறேன். :)

அரசாங்க  புலனாய்வு குழுவுடன் சேர்ந்து கமல் பலகொலைகளை செய்துள்ளார். எல்லலாக் கொலைகளும் இப்பொது ஈபிடிபிய் மேல் சுமத்தப்பட இருக்கிறது. கமல் இராணுவ சிருடையில் உள்ள பட்த்தை இங்கே காணலாம்.

 

kamal-600x639.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அங்கயன் குழுவுக்கும் டக்லஸ் குழுவுக்கும் இடையில் போட்டி. அண்மையில் அவுஸ்திரெலியாவுக்கு சென்ற போது அங்கயன் இராமநாதன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற வதந்தி பரவிவருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த டக்லஸ் குழுவினர் அவுஸ்திரெலியாவில் வசிக்கும் நண்பர்களைத் தொடர்பு கொண்டு இச்செய்தி உண்மையா என்று கேட்டுவருகிறார்கள்.

இது மிக வரவேற்க தக்க நிகழ்வு...இப்படி ஆயுத குழுக்கள் மறைவது தான் மக்களுக்கு நிம்மதி... இப்போது அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

இது மிக வரவேற்க தக்க நிகழ்வு...இப்படி ஆயுத குழுக்கள் மறைவது தான் மக்களுக்கு நிம்மதி... இப்போது அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

ஆமிக்காறன் ஒரு மூண்டு லட்சம் பேர் அங்கினை நிக்கிறதிலை பிரச்சினை ஒண்டும் இல்லைதானே...??

  • கருத்துக்கள உறவுகள்

ஆமிக்காறன் ஒரு மூண்டு லட்சம் பேர் அங்கினை நிக்கிறதிலை பிரச்சினை ஒண்டும் இல்லைதானே...??

 

 

நீங்க வேற..........

அவர் இரவில  பாண் வாங்கி  வர  வழி நெடுகிலும்  பாணுக்கு பாதுகாப்பு  கொடுத்ததே அவர்கள் தானே...

ஆமிக்காறன் ஆயுதக்குழு என்று சொல்ல அவர்கள். தமிழர்கள் இல்லையே அவர்கள் எம் எஜமானர்கள். ஒன்றா இரண்டா மூன்று லட்சம் எஜமானரைக் கொண்ட நாம் எவ்வளவு பாக்கிய சாலிகள். ஓ மன்னிக்கவும் செருப்பு தைக்கும் சிங்களவன் கூட நம் எஜமான் அல்லவா! அப்படிப்பார்த்தால் ஒரு கோடிக்கு மேற்ப்பட்ட எஜமானரகளை அதாவது உலகிலேயே மிக அதிகமான எஜமானரகளை கொண்ட பெருமை மிக்க இனம் நாங்கள்.

Edited by tulpen

முடியல்ல. ஏதோ இன்றைக்குத் தான் உது நடக்கிறது போல.. செய்தி போடுறாய்ங்களே. ஈபிடிபி தொடங்கின காலம் தொட்டு உவர் தலீவர் ஈபியில் இருக்கிற காலம் தொட்டு உது நடக்குது. இந்த நாடகங்கள் எல்லாம் இந்தச் சாவுகளை வைச்சு.. மக்களின் கொஞ்ச அனுதாபத்தை என்றாலும் ஈட்டுவோம் என்ற அப்பட்டமான பிண அரசியல் ஆகும்.

 

அதுதானே... :lol:

 

ஆனாலும் அவர்கள் வெளியேறினால் நல்லது தான். :rolleyes:

இராணுவ அடக்குமுறையை முறியடிப்போம் என்று புறப்பட்ட ஆயுத குழுக்கள் அவர்களை விட கேவலமாக அடக்குமுறையில் ஈடுபட்டது பற்றி எழுதினால் சிலருக்கு பொத்துக்கொண்டு வருகின்றது .

ஆயுத குழுக்கள் வர முதலே இராணுவ அடக்குமுறை இருந்ததுதான் அதை எதிர்த்து மக்கள் போராடி  வந்துதான் இருந்தார்கள் இருக்கின்றார்கள் .

இப்ப இருக்கும் இராணுவம் அல்ல முன்னர் இராணுவம்  எல்லாம் ஒன்று தான் .அவர்கள் சிங்கள இராணுவம் எங்கள் எதிரி இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான் ,அதிலிருந்து மக்களை காப்பவர்களாக வந்தவர்கள் அதைவிட அடாவடியும் அராஜகமும் செய்ததுதான் தமிழனின் தோல்வி .

அதை எழுதினால் என்னவோ இவன் இராணுவம் இருப்பதை நல்லது என்கின்றான் என்று சொல்லுகின்றார்கள் .

எங்களது தமிழ் குழுக்களிலும் (புலிகள் உட்பட) பார்க்க இராணுவத்துடன் காலம் தள்ளலாம்..மக்கள் நிம்மதியா இருந்த காலம் ஒன்றேன்றால் அது (இந்திய/இலங்கை)இராணுவத்தின் கீழ் தான் :lol:

 

ஆய்த குழுக்களுக்கு வாழ் பிடித்தவர்களுக்கு தான் பிரச்னை...மற்றவர்களுக்கு இல்லை

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது தமிழ் குழுக்களிலும் (புலிகள் உட்பட) பார்க்க இராணுவத்துடன் காலம் தள்ளலாம்..மக்கள் நிம்மதியா இருந்த காலம் ஒன்றேன்றால் அது (இந்திய/இலங்கை)இராணுவத்தின் கீழ் தான் :lol:

 

ஆய்த குழுக்களுக்கு வாழ் பிடித்தவர்களுக்கு தான் பிரச்னை...மற்றவர்களுக்கு இல்லை

இந்தக்கருத்து சபேசன்36 இன் "பாண் கொள்கை"க்கு ஒப்பானதாக இருக்கு.. :D

சிங்களப்பேரினவாதத்தை பொறுத்தை வரை தமிழர்களின் ஒரு பகுதியினரை காலகாலம் தம்பக்கம் வைத்திருந்து பேரினவாதத்தை நியாயப்படுத்திக்கொண்டிருகும். ஆரம்பத்தில் ராமநாதன் வகையறா மேட்டுக்குடிகள் பின்னர் ஆயுதப்போராட்ட காலத்தில் பல இயக்கங்கள் பிள்ளையான் கருணா ஈபிடிபி இஸ்லாமிய மற்றும் பிரதேசவாதங்களையும் பயன்படுத்தியது. தற்போதைய காலகட்டத்தில் விக்கி சம்மந்தன் போன்றவர்கள் அனைத்துக்கும் மாற்றீடாக உள்ளனர். பூசுவாக்களுடன் ஊடாட்டம் இருக்கும்போது ஏனையவர்களின் அவசியம் பேரினவாதத்திற்கு குறைகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது தமிழ் குழுக்களிலும் (புலிகள் உட்பட) பார்க்க இராணுவத்துடன் காலம் தள்ளலாம்..மக்கள் நிம்மதியா இருந்த காலம் ஒன்றேன்றால் அது (இந்திய/இலங்கை)இராணுவத்தின் கீழ் தான் :lol:

 

ஆய்த குழுக்களுக்கு வாழ் பிடித்தவர்களுக்கு தான் பிரச்னை...மற்றவர்களுக்கு இல்லை

 

நான்  நினைக்கிறேன் மேலே கருத்து எழுதுபவர்கள்......
இலங்கை இல் தமிழர் வாழும் பிரதேசம் .......... தமிழ் ஈழம்  பற்றி பேசுகிறார்கள் என்று.
 
அங்கு இராணுவ கெடு  பிடி அதிகமாக இருந்தது.
 
1990 இல் யாழ்பாணத்தில் புலிகள் மட்டுமே இருந்தார்கள்.......
இலங்கையின் இரண்டாவது பொருளாதார பொருண்மிய  பிரதேசமாக யாழ் இருந்தது....
அது கணக்கு அதுகளோடு சம்பந்தபட்டது ......
 
எங்களுக்கு பாண் கணக்கே மட்டுமட்டு அதேன்  இப்போ எமக்கு?
 
நீங்கள் சொல்வது சரிதான் ...........
பலாலி இராணுவ முகாமுக்குள் இருந்தவர்களுக்கு ........இராணுவம் இருக்கும்போது மிகவும் பாதுகாப்பாக இருந்தது.
 
வெளியில் இருந்த மக்களின் பிரச்சனை பற்றி இவர்கள் பேசுகிறார்கள்.
 
நீங்கள் இன்னொரு திரி திறந்து.....
 நீங்களும் நானும் அங்கே போய்  பேசுவோம். அகமெட்  நஜிபுல்லா அவர்கொளோடு எனக்கும் முன்பு நல்ல தொடர்பு இருந்தது. கே கே எஸ் ஸில் எனது சொந்த காரர் ஒருவரையும் புலிகளுடன் சேர்த்து வைத்திருந்தார்கள். அவரை பார்க்க உதயனிடம்தான் உதவி கேட்டு வருவேன். அப்போது கிடைத்ததுதான் இந்த நட்புகள் எல்லாம்.
திண்ணைக்கு வாரீங்களா ??

மருதங்கேணி: நீங்கள் வந்து கடவுளை விட மேலானவர்கள் புலிகள் என்று வாதாடுவீங்கள்...அந்தளவுக்கு கதைக்க கூடிய அறிவு எனக்கு இல்லை... நான் புலிகளை/மற்றைய இயக்கங்களை பற்றி வைத்திருக்கும் எண்ணம் நான் நேரில் பார்த்தது...

முடிவு: உங்களோட கதைக்கிற அறிவு எனக்கு இல்லை...மன்னியுங்கோ

மருதங்கேணி: நீங்கள் வந்து கடவுளை விட மேலானவர்கள் புலிகள் என்று வாதாடுவீங்கள்...அந்தளவுக்கு கதைக்க கூடிய அறிவு எனக்கு இல்லை... நான் புலிகளை/மற்றைய இயக்கங்களை பற்றி வைத்திருக்கும் எண்ணம் நான் நேரில் பார்த்தது...

முடிவு: உங்களோட கதைக்கிற அறிவு எனக்கு இல்லை...மன்னியுங்கோ

அதே ஆட்கள் தான் இப்ப ராஜபக்சா கடவுளிலும் மேலானவர் என்கின்றார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.