Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வாயில் குடியேற 20 ஆயிரம் இந்தியர்கள் விண்ணப்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
mars-121213-150.jpg

சிவப்பு கிரகமான செவ்வாயில் நிரந்தரமாக குடியேற உலகம் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் 20,000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்தைச் சேர்ந்த, ‘மார்ஸ் ஒன்’ என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்துக்கு 2023ம் ஆண்டில் மனிதர்களை குடியேற்றப்போவதாக கூறி வருகிறது. இதற்காக 2018ம் ஆண்டில், ரோபோவை அனுப்பி வைக்கப்போவதாகவும் அது தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான குடியிருப்புகளை அமைக்கப் போவதாகவும், அங்கு சென்று தங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சமீபத்தில் அது அறிவிப்பு வெளியிட்டது.

  

இந்த விண்ணப்பத்துக்கான இறுதி நாள் நேற்றுடன் முடிந்தது. விண்ணப்பங்கள் குறித்து அந்நிறுவனத்தினர் கூறியதாவது: செவ்வாய் கிரகத்துக்கு சென்று குடியேற உலகம் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 20,000 பேர். 140 நாடுகளில் இருந்து எங்களுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2 லட்சம் விண்ணப்பத்தில், அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து 24 சதவீதம் பேரும், இந்தியாவில் இருந்து 10 சதவீதம் பேரும், சீனாவில் இருந்து 6 சதவீதம் பேரும், பிரேசிலில் இருந்து 5 சதவீதம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதேபோல், இங்கிலாந்து, கனடா, ரஷ்யா, மெக்சிகோ ஆகியவற்றில் இருந்து 4 சதவீதம் பேரும், பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், கொலம்பியா, அர்ஜென்டினா ஆகியவற்றில் இருந்து 2 சதவீதம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.இந்த விண்ணப்பங்களில் இருந்து, வரும் 2 ஆண்டுக்குள் 3 சுற்றுகளின் கீழ் இறுதி விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2015ம் ஆண்டுக்குள் 4 பேர் அடங்கிய 6 முதல் 10 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 7 ஆண்டுகள் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். 2023ம் ஆண்டில் இதில் இருந்து ஒரு குழு செவ்வாய் கிரகத்துக்கு முதலில் அனுப்பி வைக்கப்படும்.

அவர்கள் அங்கு தன் வாழ்நாளை கழிப்பார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் சுற்றுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வெளியிடப்படும். அடுத்த சுற்று அடுத்த ஆண்டில் நேர்முகத் தேர்வுடன் இருக்கும். இவ்வாறு மார்ஸ் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98906&category=IndianNews&language=tamil

ஏனைய நாடுகளை விட இந்தியாவிலிருந்து அநேகமானோர் வெளியேற விரும்புவதாகச் சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற கருத்துக் கணிப்பொன்றில் தெரியவந்தது.

இந்தியர்கள் குடியேற முன்பு ஏதாவது ஒரு நாடு முன்வந்து கழிப்பறைகளை கட்டிவிட வேண்டும் ஏனெனில் இந்திய மேல்தட்டு வர்க்கத்தினர் கூட அதைக்கட்ட ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இனப் படுகொலைக்கு ஆளாகி தமக்கெனத் தனியானவோர் நாடொன்றில்லாமல் உலகமெங்கும் அலையும் தமிழீழ மக்கள் யாரும் விண்ணப்பிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முதலொரு பிளான் இருந்தது!

 

இந்தச் செய்தியைப் பாத்தபிறகு கைவிட்டாச்சு! :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முதலொரு பிளான் இருந்தது!

 

இந்தச் செய்தியைப் பாத்தபிறகு கைவிட்டாச்சு! :D

 

வியாழனுக்குப் போகத்தானே புங்கை????

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழனுக்குப் போகத்தானே புங்கை????

 

இருக்கிறதை விட்டுவிட்டு பறக்கிறதை புடிக்க நினைக்க மாட்டார் நம்மட புங்கையூரன்  :D

  • கருத்துக்கள உறவுகள்

இனப் படுகொலைக்கு ஆளாகி தமக்கெனத் தனியானவோர் நாடொன்றில்லாமல் உலகமெங்கும் அலையும் தமிழீழ மக்கள் யாரும் விண்ணப்பிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

 

 

இதிலிருந்தும் நாம் புரிந்து கொள்ளலாம்

தமிழன்

தன் தேசத்தை மட்டுமே விரும்பகின்றான்

எவன் தேசமும் வேண்டாம் அவனுக்கு...........

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஜோக் அடிக்காதிங்க விசு அண்ணா ஒரு வேளை தமிழ் ஈழம் கிடைச்சாலும் புலம்பெயர் அகதி தமிழனும் அவர் தம் மொழியை கலாச்சாரத்தை இனத்தை அடையாளத்தை அவர் தம் வேரை மறந்த அகதி பிள்ளைகளும் போக போவதே இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
செவ்வாயில் குடியேற 20 ஆயிரம் இந்தியர்கள் விண்ணப்பம்!

 

 

என்னப்பா தட்டிவானிலை சன்னதிக்கு ஏறிப்போற மாதிரி.......சனம் கியூவிலை நிக்கிது... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனம்.. 2025 இல் செவ்வாய்க்குப் போக ஒரு வழி ரிக்கட் விற்கப் போகுதாம். போகலாம்.. ஆனால் வரேலாது. வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன... போக ஒரு வழி காட்டுவாங்க. எப்படி வசதி..??! :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.