Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவிப் புருசனை விழுங்கிய பொண்டாட்டி: தெஹிவளையில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெஹிவளை மிருகக் காட்சிசாலையின் ஊர்வன பிரிவிலுள்ள பெண் அனகொண்டா ஒன்று ஆண் அனகொண்டா ஒன்றினை விழுங்கியுள்ளது.  இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

 

இரு அனகொண்டாக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போதே ஆண் அனகொண்டாவை பெண் அனகொண்டா விழுங்கி உள்ளதாக மிருகக் காட்சிசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்து அடி நீளமான இந்த பெண் அனெகொண்டாவால் ஒன்பது அடி நீளமான ஆண் அனகொண்டாவே விழுங்கப்பட்டுள்ளது.

 

குறித்த அனகொண்டாக்களை வேறாகப் பிரித்து வைக்குமாறு பலமுறை மிருகக்காட்சிசாலை அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் கூட அது கவனத்தில் எடுக்கப்படவில்லையென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு மிருகக் காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்ட இந்த ஜோடி மூலம் பல அனகொண்டா குட்டிகள் கிடைக்கப் பெற்றதாகவும் மிருகக் காட்சிசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=3446#sthash.vbGGLTOQ.dpuf

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை மனிசியும் அப்பப்ப கன்னத்தை கிள்ளிக்கிள்ளி உங்களை கடிச்சு தின்னோணும் போலை கிடக்கு எண்டு  செல்லம் கொட்டுது :mellow:  :blink:  :unsure:  <_<  :rolleyes:  :o  ^_^  :huh: ........இனி எட்டத்தை பாயை விரிக்க  வேணும் போலை கிடக்கு.. :(

எப்ப விழுங்கிடுவாளோ என்று பயத்தில திரிகிற மனிசன் இந்த செய்தியை படிச்சா வீட்டையும் வரமாட்டுது..

  • கருத்துக்கள உறவுகள்

இரு அனகொண்டாக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போதே ஆண் அனகொண்டாவை பெண் அனகொண்டா விழுங்கி உள்ளதாக மிருகக் காட்சிசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்து அடி நீளமான இந்த பெண் அனெகொண்டாவால் ஒன்பது அடி நீளமான ஆண் அனகொண்டாவே விழுங்கப்பட்டுள்ளது.

 

குறித்த அனகொண்டாக்களை வேறாகப் பிரித்து வைக்குமாறு பலமுறை மிருகக்காட்சிசாலை அதிகாரிகளுக்கு தெரிவித்த போதிலும் கூட அது கவனத்தில் எடுக்கப்படவில்லையென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு மிருகக் காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்ட இந்த ஜோடி மூலம் பல அனகொண்டா குட்டிகள் கிடைக்கப் பெற்றதாகவும் மிருகக் காட்சிசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

2004´ம் ஆண்டிலிருந்து... ஒன்றாக உறவாடி, பல குட்டிகளைப் பெற்ற பின், அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது.

இனி அந்த ஆண் அனகொண்டாவில் வேலை இல்லை, என்று நினைத்து... பெண் அனகொண்டா விழுங்கி விட்டது :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப விழுங்கிடுவாளோ என்று பயத்தில திரிகிற மனிசன் இந்த செய்தியை படிச்சா வீட்டையும் வரமாட்டுது..

 

உங்கள் வீட்டிலுமா ?????????

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அனக்கொண்டாவுக்கு கொடுக்க வேண்டிய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டான் போல அதனால பசியில தனது பாட்டினரையே சாப்பிட்டு விட்டுது  :o  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அனக்கொண்டாவுக்கு கொடுக்க வேண்டிய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டான் போல அதனால பசியில தனது பாட்டினரையே சாப்பிட்டு விட்டுது :o:icon_idea:

இந்தச் சடையல் தானே வேணாங்கிறது. தலையாவது மிஞ்சியிருக்கா
  • கருத்துக்கள உறவுகள்

என்ரை மனிசியும் அப்பப்ப கன்னத்தை கிள்ளிக்கிள்ளி உங்களை கடிச்சு தின்னோணும் போலை கிடக்கு எண்டு  செல்லம் கொட்டுது :mellow:  :blink:  :unsure:  <_<  :rolleyes:  :o  ^_^  :huh: ........இனி எட்டத்தை பாயை விரிக்க  வேணும் போலை கிடக்கு.. :(

 

எட்ட விரிச்சுப் படுத்தாலும் ஆப்த்த்துக் குறையாதண்ணா. தனி அறையுக்குள்ள பூட்டிப்போட்டுப் படுக்கிறதுதான் நல்லது :lol:  

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சிலர்

பாம்பை  படமெடுக்க  விட்டுவிட்டு படுக்கிறார்கள் போலும்

அது

அதைச்சாப்பிட்டு விட்டு படுத்திடும்..... :icon_mrgreen:

எனக்கு இன்னும் அந்த நிலை வரல...

எதுக்கும்

குமாரசாமியண்ணையின் நிலை தான்  நமக்கும்....... :lol:  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பிளைப் பாம்பு வேற யாரை தேடி, எங்க போகப் போகுது, என்ற நினைப்பில, ஆம்பிளைப் பாம்பு, அட்டகாசம் பண்ணி இருக்கும்.

பொறுத்துப், பொறுத்து பார்த்து கடைசீல இந்த முடிவுக்கு வந்து இருக்குது போல.

ஆம்பிளைப் பாம்பின், இடையிலா ஆய்கினைகளையும், அதனால் பெண் பாம்பு பட்ட பாட்டையும் அவதானித்த ஊழியர், இரண்டையும், பிரித்து வைக்குமாறு நிர்வாகத்துக்கு சொன்னதாகவும், அதை பொருட்படுத்த வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதரில் கூட, ஆய்கினை தாங்கமுடியா நிலையில், கத்தியை எடுத்துக் கொண்டு போய், 'அதை' நறுக்கி எறிந்த பொம்பிளையள் இருக்கீனமே.

குமாரசாமி அண்ணோய்,

உங்கட கதைய கேட்டால், எட்டத்தில படுத்தால் தான், கத்தி வரும் போல கிடக்குது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின் வாழ்வுக்குக்கும் மனித வாழ்வுக்கும் நிறைய தொடர்புகள் இருப்பதை சில பின்னூட்டங்கள் தந்திருக்கின்றன. :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிப் புருஷன் என்று கெ ளரவம் வேறு ..... கொடுத்திட்டாங்கப்பா .....அது பசியால் வந்த  கொலை வெறி யாக்கும். :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சுகவீனமுற்ற நிலையில் பெண் அனகொண்டா: ஆண் அனகொண்டாவை விழுங்கியதற்கு உணவுக் குறைப்பும் காரணமென தகவல் 

 

தெஹிவளை, மிருகக்காட்சிசாலையில் ஆண் அனெகொண்டாவை விழுங்கிய பெண் அனெகொண்டாவையின் உடல் நிலை பாதிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடத்து இதற்கு விசேட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம்  ஆண் அனகொண்டாவை  பெண் அனெகொண்டா விழுங்கிய நிலையிலேயே அது தற்போது சுகவீனமடைந்துள்ளது.

3459anaconda2.jpgஇந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் ஊhவன பிரிவில் இந்த இரு அனகொண்டாக்களும் 15 8 அடி கொண்ட ஓர் அறையிலேயே அடைக்கப்பட்டிருந்தன.

 

இருப்பினும் 12 மற்றும் 15 அடிகள் நீளத்தைக் கொண்ட இந்த இரு அனகொண்டாக்களுக்கும் இவை போதுமானவையாகக் காணப்படவில்லை. இதன் காரணமாக அவை கூட்டுக்குள் எந்தத் தடையுமின்றி ஊர்ந்து செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தன.

இதேவேளை, இந்த அனெகொண்டாக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை 15 புரொய்லர் இனக் கோழிகளும் உணவாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அதில் குறைப்புச் செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு ஒருமுறை ஒன்றரை கிலோ புரொய்லர் கோழிகளே உணவாக வழங்கப்பட்டது. இதனால் அவை பாதிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறானதொரு நிலையில் அவர்களுக்குள் உணவைப் பெற்றுக் கொள்வதிலும் போட்டா போட்டித்தன்மையும் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெஹிவளை மிருகக் காட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=3459#sthash.hQjAk4uo.dpuf

 

Edited by பிழம்பு

அத்தார் புறேய்லர் கோழி வரக் காணேலை என்றுவிட்டு தான் கள்ள கோழி பிடிக்க போனாரோ தெரியவில்லை. 

 

இந்த ஆணைகொண்டா பாம்பும் இப்போ black widow ஆகிவிட்டதே.

  • கருத்துக்கள உறவுகள்
'கூடிய' பின் விழுங்கிய புருசனை, உயிர் இல்லா நிலையில் கக்கியது, பெண் பாம்பு.
 
விழுங்கிய கணம் முதல், மனமும், உடல் நலமும் வாட்டமாக காணப் பட்ட பெண் பாம்பு, கக்கிய பின் வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பதாக தெரிவிக்கப் படுகிறது.
 
என்ன இருந்தாலும், புரியன் இல்லையா. ஏதோ கோபத்தில் விழுங்கியாகிவிட்டது. கக்கி வெளியே வந்த ஆண் பாம்பினை, உயர் உள்ளதா என ஆவலுடன், நெருக்கி, தட்டி பார்த்ததாம். இப்போது இறந்த ஆண் பாம்பின் உடல், பாதுகாப்பாக, காட்சிப் படுத்த, கொழும்பு நூதன சாலைக்கு அனுப்பி வைக்கப் பட்டு உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.