Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையைச் சொல்லுங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே நீங்கள் எனக்கு உங்கள் உண்மையான கருத்தைச் சொல்ல வேண்டும்.

 

நான் யாழுக்கு வந்ததன் பின்னால்த்தான் கதைகளை எழுதத் தொடங்கினேன். உங்கள் ஆதரவும் உற்சாகமான கருத்துக்களுமே என்னை மேலும் மேலும்  எழுதத் தூண்டியது. நீங்கள் நன்றாக இருக்கிறது என்று கருத்து எழுதும் போதெல்லாம் எதோ சாதித்துவிட்டதுபோல் மனதில் தோன்றும். எனக்குள் நானே நானும் ஒரு எழுத்தாளர் என்னும் கர்வம் கொண்டேன்.

 

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு என்னை உச்சாணிக் கொப்பிலிருந்து கீழே வீழ்ந்துவிட்ட விட்ட  மனநிலைக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாது மேற்கொண்டு என்னால் ஒரு கதையைக் கூட எழுதுவதற்கு முடியாத மன நிலையையும் கொண்டுவந்துவிட்டது.

 

அவரும் ஒரு எழுத்தாளர். பத்திரிகையிலும் எழுதுபவர். எனது இரு கதைகளை ஒரு பேப்பரில் பார்த்திருந்தார். தொலைபேசியில் உரையாடியபோது என் கதைகளைப் பற்றிய பேச்சு வந்தது. எனது கதைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கினால் என்ன என்னும் எண்ணம் மேலிட அவரிடம் எனது கதைகளை அனுப்பினேன்.

 

ஒரு வாரம் செல்ல அவருக்கு தொலைபேசி எடுத்தபோது, நான் எழுதியது கதைகளே அல்ல என்றார். அதுமட்டுமல்ல இதை நீங்கள் புத்தகமாக அடிக்காது விடுவது மேல் என்றும் சொன்னார். உடனே எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாயினும் அவர் கூறுவதை முழுவதும் கேட்டபோது எனக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் ஆகியும் என்னால் மீண்டும் ஒரு கதையை எழுதவே முடியவில்லை.

 

யோசித்துப் பார்த்தபோது அவர்மேல் எனக்குக் கோபம் வரவில்லை. ஆனாலும் உண்மை நிலையை அறிய வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டுள்ளது. என்னை உற்சாகப்படுத்துவதற்காகத் தட்டிக்கொடுத்த நீங்கள் இப்போது என் எழுத்துப் பற்றிய உண்மையான விமர்சனத்தைக் கூறவேண்டும். அது என்னை மேலும் வளர்க்க உதவும். :rolleyes: :rolleyes:

 

 

 

 

 

 

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 87
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சியமா அவர் சொன்னது தான் சரி நீங்கள் எழுதினது கதைகளே அல்ல உங்கள் வாழ்வில் தரிசித்த சில சம்பவங்களின் தொகுப்பை ஒரு கட்டுரையாக தந்தீர்கள் இதை எல்லாம் வேல மேனக்ளட்டு புத்தகம் அடிச்சு போட்டிங்க எண்டா ஜஸ்ட் வேஸ்ட் ஒப் மணி அண்ட் எனெர்ஜி நீங்கள் அதுக்கு செலவழிக்கும் பணத்தை நேசக்கரத்துக்கு கொடுங்கள் மக்களுக்காவது உதவும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுண்டல் உங்கள் துணிவான கருத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கதை என்பதில் காட்சியின் பின்னணி (backdrop), வர்ணனைகள் (உ+ம்: கிருபன் :lol: ) மன உணர்வுகள் போன்றவற்றை நீட்டி முழக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பார்போல.. கரும்பு தரச்சொன்னால் நேராக சாற்றைப் பிழிந்து குடுக்கிறீங்கள்.. :D கதைகள் வாசிக்க பஞ்சிப்படும் எனக்கு அந்த டீல் பிடிச்சிருந்தது.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை உங்கள் கருத்துக்கு. இன்னும் கொஞ்சப் பேர் எழுதிய பிறகு நான் என் கருத்தை வைக்கிறேன்.

நான் தங்களுடைய ஓரிரு ஆக்கங்களையே வாசித்திருக்கிறேன்.. அதனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு முடிவை கூற முடியாது. கதைகளை பலவிதமாக பிரிக்கலாம். சமூகக் கதைகள் எனும்போது அவை நிஜங்களின் தரிசனங்கள்தான்.. அவற்றுள் எழுதுபவரின் எண்ணங்களும் கலக்கும்போது அவை செய்திகள் அல்லது சம்பவங்கள் என்ற நிலையில் இருந்து கதைகள் ஆகின்றன. 

 

ஆகவே முதலில் அவை கதைகளா என்று முடிவெடுக்க வேண்டியது தாங்கள்.. அதன் பிறகே வாசகர்கள்!!  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே...

 

உண்மையைச்சொல்லச்சொல்கிறீர்கள்

அதனால் எழுதுகின்றேன்

 

முதலில் நாங்கள் இங்கு எல்லோரையும் ஊக்குவிக்ககின்றோம்.

அது அவர்களை  தொடர்ந்து எழுதவும்

அந்த ஊக்கத்தினூடாக தம்மை அவர்கள் வளர்த்துக்கொள்ளவுமே.

இங்கு திறமைகள்  கவனிக்கப்பட்டாலும்

ஒரு குழந்தையைத்தாலாட்டுதலே  நடக்கிறது.

 

இந்த படைப்பாளிகள் என்ற  பதம் இங்கு பாவிக்கப்பட்ட பொழுது

அதை காட்டமாக  எதிர்த்தவன் நான்.

காரணம்

அதன் தார்ப்பரியம் மிகவும் வலுவானது

பெறுமதியானது

 

ஆனால் இங்கு சிலர் தமக்குத்தானே  படைப்பாளிகள் என பெயர் வைத்து  பெருமை கொள்கின்றனர்.

உண்மையில்

நீங்கள் படைக்கும்;படைப்புக்களை  மக்கள் விரும்பி

அதை புத்தகமாக்கி

உங்களுக்கு படைப்பாளி  என்ற  பட்டத்ததை கொடுக்கணும்.

 

 

இப்பொழுதெல்லாம்

தாமே எழுதுகின்றார்கள்

அதை தாமே வெளியிடுகிறார்கள்

தம்மைப்பற்றி தாமே பெருமையாக பேசுகிறார்கள்

(கொஞ்ச வெளியீட்டு விழாக்களுக்கு போனவன் என்றரீதியில்)

 

 

இனி

நீங்கள் படைப்பாளியா?

அல்லது 

அதற்கு தயாராபவரா???

பணம் இருந்தால் எதையும் இன்று வெளியிடலாம்

செய்யலாம்.

இருந்தால் செய்து பாருங்களேன்.

குடியா முழுகிவிடப்போகிறது...

ஆனால் வென்று விட்டால்

நீங்களும் படைப்பாளிதான்

அடுத்த  கட்டத்துக்கு நகரலாம்.

இது தான் தற்பொழுதைய படைப்பாளிகள் தரம்.

1). வேறு பதிப்பளர்களை தேடிய முடியுமா என்று பாருங்கள்.

2). அவர் உங்கள் கதைகளில் எதையாவது நேரடியாக சொல்லியிருந்தால் அவற்றை திருத்தி யாழில் பதிந்து அபிப்பிரயத்தை உறவுகளிடம் கேளுங்கள். பழைய பதிவுகளை மாற்றுவதில் யாழ் நிர்வாகத்துடன் முரண்படுவடை தவிர்க்க திருத்தங்களை முழுவதாகவே திரும்ப பதியுங்கள்.

3). நீங்கள் பதிந்திருக்கும் கதைகளில் யாராவது உறவுகள் கதை பற்றி சொல்லியிருக்கும் கருத்துகள் பதிப்பாளரின் கருத்தை ஒத்து வருகிறதா என்று பாருங்கள்.

4). உங்களின் கதைகளை உங்களுடன் சேர்ந்து திருத்த, திரும்ப எழுத இன்னொரு எழுதாளரை தேட பாருங்கள்.

5). மிக மிக முக்கியமானது பதிந்துதான் முடிக்க வேண்டுமா?. குப்பை தொட்டி ஒன்றை கண்டு பிடிக்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

5) :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இருந்தாப் போல இந்தச் சுய பரிசோதனை? :o

 

கதை என்பது ஒருவரது அனுபவங்களின் தொகுப்பெனவே நினைக்கிறேன்! அந்த அனுபவங்களை, ஒரு வாசகனைக் கேட்போனாக வைத்து எழுத்தாளர் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் தான் ஒரு கதையின் வெற்றி தங்கியுள்ளது! அந்தக் கதை மூலம் எழுத்தாளர் வாசகர்களுக்கு, தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விதங்கள் எழுத்தாளருக்கு, எழுத்தாளர் வேறு படும்! அதுவே காலப்போக்கில், ஒரு எழுத்தாளனின் தனித்துவமாகவும் அமைந்து விடுகின்றது! 

 

ஒரே கதைக்கருவை இரண்டு எழுத்தாளர்கள், எழுதும்போது கதை வேறு வேறாக அமையும்! அங்கு தான் ஒரு கதை சொல்லியின் திறமை வெளிக்காட்டப் படுகின்றது!

 

உதாரணமாக எழிலி கிணற்றுக்குள் பாய்ந்தாள் என்று ஒருவர் எழுதலாம்!

 

அதையே இன்னொருவர் எழுதும்போது, நேரே கிணற்றுக்குள் பாய்ந்தாள் என்று எழுதாமல்,

 

எழிலி கிணற்றுக்கட்டில் அமர்ந்து, கிணற்றுக்குள் குதிப்பதா அல்லது வேறு ஏதாவது வழியில் உயிரை

மாய்த்துக்கொள்ளலாமா என்று சிறிது நேரம் சிந்தித்தாள்! அந்த ஆழமான கிணற்றில், தனது உடல் மறுநாள் காலையில் மிதக்கும் போது, அந்தச் செய்தியை எவரோ போய், அம்மாவுக்குச் சொல்லுவார்கள்! அப்போது தன்னைப் பத்துமாதம் சுமந்த அந்த வயிறு எவ்வளவுக்குத் துடித்துப்போகும்! வாழும் போது தான் என்னால் அவளுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை!..................

 

இதில் மேலுள்ளவை இரண்டுமே ஒரே கருப்பொருளைத் தான் சொல்லுகின்றன! ஆனால் விதம் வேறு படுகின்றது!

 

உங்கள் நண்பர் இதைப்பற்றித் தான் குறிப்பிட்டிருக்கிறார் என எண்ணுகின்றேன்!

 

இறுதியாக நீங்கள் ஒரு எழுத்தாளரா இல்லையா என்பதை இன்னுமொரு எழுத்தாளர் முடிவு செய்ய இயலாது! அவர் வாசகர் என்னும் நிலைக்கு இறங்கி வந்து விமர்சிப்பதே முறையாகும்!

 

எனக்கென்னவோ வாசகன் என்ற முறையில் உங்கள் கதைகளை வாசிக்கவும், விமரிசிக்கவும் விருப்பம்!

 

கிருபன், நிழலி, கோமகன், அர்ஜுன் , ஜஸ்டின் நுணா , ரதி போன்றவர்களது கருத்துக்களையும் கேழுங்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இருந்தாப் போல இந்தச் சுய பரிசோதனை? :o

 

கதை என்பது ஒருவரது அனுபவங்களின் தொகுப்பெனவே நினைக்கிறேன்! அந்த அனுபவங்களை, ஒரு வாசகனைக் கேட்போனாக வைத்து எழுத்தாளர் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் தான் ஒரு கதையின் வெற்றி தங்கியுள்ளது! அந்தக் கதை மூலம் எழுத்தாளர் வாசகர்களுக்கு, தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விதங்கள் எழுத்தாளருக்கு, எழுத்தாளர் வேறு படும்! அதுவே காலப்போக்கில், ஒரு எழுத்தாளனின் தனித்துவமாகவும் அமைந்து விடுகின்றது! 

 

ஒரே கதைக்கருவை இரண்டு எழுத்தாளர்கள், எழுதும்போது கதை வேறு வேறாக அமையும்! அங்கு தான் ஒரு கதை சொல்லியின் திறமை வெளிக்காட்டப் படுகின்றது!

 

உதாரணமாக எழிலி கிணற்றுக்குள் பாய்ந்தாள் என்று ஒருவர் எழுதலாம்!

 

அதையே இன்னொருவர் எழுதும்போது, நேரே கிணற்றுக்குள் பாய்ந்தாள் என்று எழுதாமல்,

 

எழிலி கிணற்றுக்கட்டில் அமர்ந்து, கிணற்றுக்குள் குதிப்பதா அல்லது வேறு ஏதாவது வழியில் உயிரை

மாய்த்துக்கொள்ளலாமா என்று சிறிது நேரம் சிந்தித்தாள்! அந்த ஆழமான கிணற்றில், தனது உடல் மறுநாள் காலையில் மிதக்கும் போது, அந்தச் செய்தியை எவரோ போய், அம்மாவுக்குச் சொல்லுவார்கள்! அப்போது தன்னைப் பத்துமாதம் சுமந்த அந்த வயிறு எவ்வளவுக்குத் துடித்துப்போகும்! வாழும் போது தான் என்னால் அவளுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை!..................

 

இதில் மேலுள்ளவை இரண்டுமே ஒரே கருப்பொருளைத் தான் சொல்லுகின்றன! ஆனால் விதம் வேறு படுகின்றது!

 

உங்கள் நண்பர் இதைப்பற்றித் தான் குறிப்பிட்டிருக்கிறார் என எண்ணுகின்றேன்!

 

இறுதியாக நீங்கள் ஒரு எழுத்தாளரா இல்லையா என்பதை இன்னுமொரு எழுத்தாளர் முடிவு செய்ய இயலாது! அவர் வாசகர் என்னும் நிலைக்கு இறங்கி வந்து விமர்சிப்பதே முறையாகும்!

 

எனக்கென்னவோ வாசகன் என்ற முறையில் உங்கள் கதைகளை வாசிக்கவும், விமரிசிக்கவும் விருப்பம்!

 

கிருபன், நிழலி, கோமகன், அர்ஜுன் , ஜஸ்டின் நுணா , ரதி போன்றவர்களது கருத்துக்களையும் கேழுங்கள்! :D

 

இதுக்கு மிஞ்சி நாங்கள் கருத்தெழுதினால் மதிப்பிருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் மனம் திறந்த வெளிப்படையான   கேள்விக்கு .  அபிப்பிராயம்    கேட்பதற்கு நன்றி . கிட்ட் தட்ட   நானும் உங்கள் மன  நிலையில்   தான் இருந்தேன் ஆனால் புத்தகம் வெளியிடும் நிலையில் அல்ல சிலர் பாராட்டுவார்கள் சிலர் பிழை பிடிப் பார்க கள் பிழை சொல்லுபவர்களிடம் கோபிக்க் முடியாது மனம் சோரவும் கூடாது.  சுடச்சுட மிளிரும்பொன் போல மீண்டும் திருத்தி,  திருத்தத் கூடியவற்றை வாசித்து திருத்தி . அதன் பின் களத்தில் பதிய வேண்டும். உங்கள் பதிவுகள்  அநேகம்  கேள்வி பட்ட சம்பவமாக இருக்கும் . எழுதுபவர் கண்ணோட்டம் வேறு.  வாசகரின் கண்ணோட்டம் வேறு ...நாம   இன்னும் கத்துக்குட்டிகள் தான் என எண்ணவேண்டும். நீங்கள் எண்ணுவதை வார்த்தைகள் வழியாக   வெளியிட்டு அதை   அவர்கள் புரிந்து   கொள்ளும்போது வரும் சந்தோஷமே அலாதியானது ..பொறுமையாக  இன்னும் வாசகர்கள் சொல்வதை கவனத்தில் எடுத்து உங்கள் பதிவுகளை புடம் போட்ட   பின் ..பட்டை   தீட்டியபின்   ..இன்னும் கொஞ்ச காலம் எடுத்து  வெளியிடலாம். என்பது என பணிவான   கருத்து

 

 

 

 

சபாஷ் புங்கையூரன் .

 

எழிலி கிணற்றுக்கட்டில் அமர்ந்து, கிணற்றுக்குள் குதிப்பதா அல்லது வேறு ஏதாவது வழியில் உயிரை
மாய்த்துக்கொள்ளலாமா என்று சிறிது நேரம் சிந்தித்தாள்! அந்த ஆழமான கிணற்றில், தனது உடல் மறுநாள் காலையில் மிதக்கும் போது, அந்தச் செய்தியை எவரோ போய், அம்மாவுக்குச் சொல்லுவார்கள்! அப்போது தன்னைப் பத்துமாதம் சுமந்த அந்த வயிறு எவ்வளவுக்குத் துடித்துப்போகும்! வாழும் போது தான் என்னால் அவளுக்கு எதுவுமே செய்ய முடியவில்லை!.............

 

 

சபாஷ் புங்கையூரன் ..அழகான   உதாரணம்..இதற்காக உங்கள் பதிவுகளை தேடிவா சிக்கும் வாசகரில்   நானும் ஒருத்தி .. :D 

Edited by நிலாமதி

சுமே ,

ஒருவரின் படைப்பு என்பது அவரது ஆத்ம திருப்தி.

விமர்சனம் ,வரவேற்பு ,நல்லது கெட்டது எல்லாம் இரண்டாம் பட்சம் .

எது நல்லது எது கெட்டது என்பதை யார் தீர்மானிப்பது ? .வாசகர்கள் தான் என்றால் இம்முறை சாகித்திய அகடமி பரிசு பெற்ற ஜோ டி குருசை எத்தனை பேருக்கு தெரியும் ? ரமணி சந்திரனை தெரியாதவர்கள் இல்லை .

இதுதான் படைப்பு என்று ஒரு படைப்பிற்கு  வரைவிலக்கணம் இல்லை. உங்களுக்கு திருப்தியா ? தொடர்ந்து எழுதுங்கள்.தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள் .

உங்களை விட எவ்வளவோ மொக்கையான கவிஞர்கள்,கதாசிரியர்களின் படைப்புகள் எல்லாம் பதிப்புகளாக வந்திருக்கின்றன.

இப்போது செய்யாவிட்டால் எப்போதும் இல்லை ,பத்து பதினைந்து வருடங்களுக்கு பின்னர் உங்களுக்கான பெரும் சொத்து அதுதான் .

வருட பிறப்பிற்கு சுமேயின் புத்தகம் வெளி வருவதற்கு எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்
சுமே உங்களுக்கு நீங்கள் எழுதியது பூரணமாக திருப்தி எனும் போது அதாவது நீங்கள்  சொல்ல வேண்டியதை உங்கள் பாணியில் சொல்லி இருக்கிறீர்கள் என நீங்கள் மனதிருப்தி அடைந்தால் புத்தகம் வெளியிடுவதில் ஏது தயக்கம்?
 
வாசகர்கள் பல வகை. சிலருக்கு உங்களின் அதிர்வெண் இருக்கலாம். அவர்கள் உடனடியாக என்ன சொல்ல வருகிறீர்கள் என புரிந்து விடுவார்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் சுண்டல், இசை, சோழியன், விசுகு அண்ணா, மல்லை, நிலாமதி அக்கா, அர்ஜுன் அண்ணா,புங்கை, நுணா ஆகியோருக்கு நன்றி. நான் உங்களிடம் தெளிவாகக் கேட்டிருக்க வேண்டும். புத்தகம் அடிப்பது பற்றியது அல்ல என் கேள்வி. நான் எழுதியவை கதைகள் என்பதுள் வருகிறதா ?????என்பது.

 

 


நிச்சியமா அவர் சொன்னது தான் சரி நீங்கள் எழுதினது கதைகளே அல்ல உங்கள் வாழ்வில் தரிசித்த சில சம்பவங்களின் தொகுப்பை ஒரு கட்டுரையாக தந்தீர்கள் இதை எல்லாம் வேல மேனக்ளட்டு புத்தகம் அடிச்சு போட்டிங்க எண்டா ஜஸ்ட் வேஸ்ட் ஒப் மணி அண்ட் எனெர்ஜி நீங்கள் அதுக்கு செலவழிக்கும் பணத்தை நேசக்கரத்துக்கு கொடுங்கள் மக்களுக்காவது உதவும்.....

 

ஏன் சுண்டல் கட்டுரைகளை புத்தகமாக அடிப்பது வேலை மினைக்கேடு என்று எப்படி எண்ணுவீர்கள். ஒருவர் எழுதுவது என்பது நினைத்த மாத்திரத்தில் வந்துவிடும் ஒன்றா ????? :rolleyes:
 

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் சுண்டல், இசை, சோழியன், விசுகு அண்ணா, மல்லை, நிலாமதி அக்கா, அர்ஜுன் அண்ணா,புங்கை, நுணா ஆகியோருக்கு நன்றி. நான் உங்களிடம் தெளிவாகக் கேட்டிருக்க வேண்டும்.

 

புத்தகம் அடிப்பது பற்றியது அல்ல என் கேள்வி.

 

நான் எழுதியவை கதைகள் என்பதுள் வருகிறதா ?????என்பது.

 

 

யாழ்  களத்தில் மட்டுமே தாங்கள் இதுவரை எழுதியதாக எழுதியுள்ளீர்கள்....

இது முகங்கள் காட்டாத  ஒரு தளம்

கொஞ்சம் தெரிந்த இடங்களிலும்  உங்கள் கதைகளை  விடுங்கள்

(கவனம்  எழுதப்பட்ட கதைகள் வேறு ஒருவரின் சுயகதைகள்)

 

எனவே வேறு புனை  பெயரில் விடுங்கள்

(இப்படித்தான் பலரும் பெயர்களை  சூட்டிக்கொள்கிறார்கள்)

நல்ல கருத்து அல்லது வரவேற்பு கிடைத்தால் அதேபெயரில்   தொடரலாம்.

அத்துடன்  கதை  எழுதும் நோக்கமிருந்தால்

முதலில் கதைகளைப்படியுங்கள்..............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தங்களுடைய ஓரிரு ஆக்கங்களையே வாசித்திருக்கிறேன்.. அதனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு முடிவை கூற முடியாது. கதைகளை பலவிதமாக பிரிக்கலாம். சமூகக் கதைகள் எனும்போது அவை நிஜங்களின் தரிசனங்கள்தான்.. அவற்றுள் எழுதுபவரின் எண்ணங்களும் கலக்கும்போது அவை செய்திகள் அல்லது சம்பவங்கள் என்ற நிலையில் இருந்து கதைகள் ஆகின்றன. 

 

ஆகவே முதலில் அவை கதைகளா என்று முடிவெடுக்க வேண்டியது தாங்கள்.. அதன் பிறகே வாசகர்கள்!!  :rolleyes:

 

நீங்கள் கூறுவதில் ஒரு நியாயப்பாடு இருக்கிறது. சமூகத்தில் நிகழ்பவையே பெரும்பாலும் கதைகளாகின்றன. அத்துடன் எத்தனையோ வகையாகப் பிரித்துப் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனாலும் கதைகள் என்று நாம் மட்டும் முடிவெடுத்தாற் போதுமா??? வாசகர்களின் எண்ணங்களும் முக்கியமல்லவா???

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  களத்தில் மட்டுமே தாங்கள் இதுவரை எழுதியதாக எழுதியுள்ளீர்கள்....

இது முகங்கள் காட்டாத  ஒரு தளம்

கொஞ்சம் தெரிந்த இடங்களிலும்  உங்கள் கதைகளை  விடுங்கள்

(கவனம்  எழுதப்பட்ட கதைகள் வேறு ஒருவரின் சுயகதைகள்)

 

எனவே வேறு புனை  பெயரில் விடுங்கள்

(இப்படித்தான் பலரும் பெயர்களை  சூட்டிக்கொள்கிறார்கள்)

நல்ல கருத்து அல்லது வரவேற்பு கிடைத்தால் அதேபெயரில்   தொடரலாம்.

அத்துடன்  கதை  எழுதும் நோக்கமிருந்தால்

முதலில் கதைகளைப்படியுங்கள்..............

 

நீங்கள் இப்போதுதான் விடயத்துக்குள் வந்துள்ளீர்கள். இது முகம் காட்டாத தளம் என்னும்போதுதான் முகத்துக்கு அஞ்சி பொய்யாக எழுதாமல் சிலர் உண்மையையும் கூறுவர் என்று நான் எண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனாலும் யாழில் உள்ள பலருக்கேதான் என் முகம் தெரியாது. பல யாழின் வாசகர்களுக்கு என்னைத் தெரியும். அவர்கள் நான் எழுதியதை இரசித்தும் உள்ளனர். மற்றவரின் கதைகள் எனினும் எந்தக் கதையுமே அவர்களின் பெயர் பாவிக்கப்படாமலேயே எழுதப்பட்டிருக்கிறது.

 

மற்றவர் கதைகளைப் படித்து நான் அவர்கள் பாணியில் எழுத வேண்டும் என்கிறீர்களா????

 

கதை என்பதில் காட்சியின் பின்னணி (backdrop), வர்ணனைகள் (உ+ம்: கிருபன் :lol: ) மன உணர்வுகள் போன்றவற்றை நீட்டி முழக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பார்போல.. கரும்பு தரச்சொன்னால் நேராக சாற்றைப் பிழிந்து குடுக்கிறீங்கள்.. :D கதைகள் வாசிக்க பஞ்சிப்படும் எனக்கு அந்த டீல் பிடிச்சிருந்தது.. :lol:

 

எனக்கு ஏனோ தெரியவில்லை அதீதமாகக் கற்பனையில் வர்ணிப்பதும் சிறு விடயத்தை மிகைப்படுத்துவதிலும் உடன்பாடு இல்லை. நீங்கள் பிரச்சனை இல்லை கருப்பஞ்சாறே வருகிறது என்று குடித்துவிட்டுப் போவீர்கள். சிலர் கரும்பு கேட்டால் இவ ஏன் சாற்றைத் தருகிறார் என்று நிராகரித்துவிட்டே செல்ல இடமுண்டு இசை.

 

இதுக்கு மிஞ்சி நாங்கள் கருத்தெழுதினால் மதிப்பிருக்காது!

 

இது தப்பும் புத்தி. உங்களுக்கு என்று சொந்தமாக ஒரு கருத்து இருக்கும் தானே வாலி. அதை எழுதுங்கள். :D

 

  • கருத்துக்கள உறவுகள்

 

மற்றவர் கதைகளைப் படித்து நான் அவர்கள் பாணியில் எழுத வேண்டும் என்கிறீர்களா????

 

 

இல்லை சுமே

அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை

 

வாசிப்பதினூடாக

கதை என்றால் என்ன?

அதைத்தொடங்குவது எப்படி?

கருவைச்சொல்வது எப்படி?

வாசகரை கவரும் வண்ணம் அதனைத்தொடர்வது எப்படி?

இடைவெளி  எங்கு விடவேண்டும்

எதில் எப்படி முடிப்பது??  என்பன போன்ற  விடயங்களை  அறியமுடியும் என்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இருந்தாப் போல இந்தச் சுய பரிசோதனை? :o

 

 

சுய பரிசோதனை என்பது கண்டிப்பாகத் தேவை புங்கை. கசப்பு மருந்து எனினும் காச்சல் நிக்கும் அல்லோ.

இல்லை சுமே

அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை

 

வாசிப்பதினூடாக

கதை என்றால் என்ன?

அதைத்தொடங்குவது எப்படி?

கருவைச்சொல்வது எப்படி?

வாசகரை கவரும் வண்ணம் அதனைத்தொடர்வது எப்படி?

இடைவெளி  எங்கு விடவேண்டும்

எதில் எப்படி முடிப்பது??  என்பன போன்ற  விடயங்களை  அறியமுடியும் என்றேன்.

 

எனது எந்த ஒரு கதை தன்னும் நீங்கள் கோடிட்டவற்றைக் கொண்டிருக்கவில்லையா ?????

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மிஞ்சி நாங்கள் கருத்தெழுதினால் மதிப்பிருக்காது!

 

வாலி கோவிச்சுக் கொள்ளாதையுங்கோ! :D

 

கிருபன், நிழலி, கோமகன், அர்ஜுன் , ஜஸ்டின் நுணா , ரதி போன்றவர்களது கருத்துக்களையும் கேழுங்கள்!  :D

 

நீங்கள் இந்தப் போன்றவர்களது க்குள்ளை நிச்சயம் வாறீங்கள்!

 

 

 
  • கருத்துக்கள உறவுகள்

 

வாலி கோவிச்சுக் கொள்ளாதையுங்கோ! :D

 

கிருபன், நிழலி, கோமகன், அர்ஜுன் , ஜஸ்டின் நுணா , ரதி போன்றவர்களது கருத்துக்களையும் கேழுங்கள்!  :D

 

நீங்கள் இந்தப் போன்றவர்களது க்குள்ளை நிச்சயம் வாறீங்கள்!

 

 

ஆனைக்கும்

அடி சறுக்கும்...... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்கள் மனம் திறந்த வெளிப்படையான   கேள்விக்கு .  அபிப்பிராயம்    கேட்பதற்கு நன்றி . கிட்ட் தட்ட   நானும் உங்கள் மன  நிலையில்   தான் இருந்தேன் ஆனால் புத்தகம் வெளியிடும் நிலையில் அல்ல சிலர் பாராட்டுவார்கள் சிலர் பிழை பிடிப் பார்க கள் பிழை சொல்லுபவர்களிடம் கோபிக்க் முடியாது மனம் சோரவும் கூடாது.  சுடச்சுட மிளிரும்பொன் போல மீண்டும் திருத்தி,  திருத்தத் கூடியவற்றை வாசித்து திருத்தி . அதன் பின் களத்தில் பதிய வேண்டும். உங்கள் பதிவுகள்  அநேகம்  கேள்வி பட்ட சம்பவமாக இருக்கும் . எழுதுபவர் கண்ணோட்டம் வேறு.  வாசகரின் கண்ணோட்டம் வேறு ...நாம   இன்னும் கத்துக்குட்டிகள் தான் என எண்ணவேண்டும். நீங்கள் எண்ணுவதை வார்த்தைகள் வழியாக   வெளியிட்டு அதை   அவர்கள் புரிந்து   கொள்ளும்போது வரும் சந்தோஷமே அலாதியானது ..பொறுமையாக  இன்னும் வாசகர்கள் சொல்வதை கவனத்தில் எடுத்து உங்கள் பதிவுகளை புடம் போட்ட   பின் ..பட்டை   தீட்டியபின்   ..இன்னும் கொஞ்ச காலம் எடுத்து  வெளியிடலாம். என்பது என பணிவான   கருத்து

 

 

நன்றி அக்கா உங்கள் கருத்துக்கு.  நான் கதை எழுதுகிறேன் என்னும் விடயம் தெரியாத ஒரு பெண்ணிடம் எனது ஆறு கதைகளை நன்பியுடையது. வாசித்துவிட்டு கருத்தையும் எழுதித் தாருங்கள் என்றேன். அவர் வாசித்துவிட்டு இந்திய எழுத்தாளர்களின் கதைகள் போல் இல்லை. ஆனால் வாசித்து முடிக்காது ஒரு கதையையும் இடை நிறுத்தவில்லை. முடிவு என்ன என்று அறியவேண்டும் என்று ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் பொது இருந்தது என்றார். இதையே எனது எழுத்துக்குக் கிடைத்த ஒரு வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியும்தான். ஆனால் ஒவ்வொருவரின் இரசனையும் வெவ்வேறு விதமானதுதானே.

1). வேறு பதிப்பளர்களை தேடிய முடியுமா என்று பாருங்கள்.

2). அவர் உங்கள் கதைகளில் எதையாவது நேரடியாக சொல்லியிருந்தால் அவற்றை திருத்தி யாழில் பதிந்து அபிப்பிரயத்தை உறவுகளிடம் கேளுங்கள். பழைய பதிவுகளை மாற்றுவதில் யாழ் நிர்வாகத்துடன் முரண்படுவடை தவிர்க்க திருத்தங்களை முழுவதாகவே திரும்ப பதியுங்கள்.

3). நீங்கள் பதிந்திருக்கும் கதைகளில் யாராவது உறவுகள் கதை பற்றி சொல்லியிருக்கும் கருத்துகள் பதிப்பாளரின் கருத்தை ஒத்து வருகிறதா என்று பாருங்கள்.

4). உங்களின் கதைகளை உங்களுடன் சேர்ந்து திருத்த, திரும்ப எழுத இன்னொரு எழுதாளரை தேட பாருங்கள்.

5). மிக மிக முக்கியமானது பதிந்துதான் முடிக்க வேண்டுமா?. குப்பை தொட்டி ஒன்றை கண்டு பிடிக்க முடியாதா?

 

மல்லை, நீங்கள் கூறியுள்ளதில் ஐந்தாவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆனைக்கும்

அடி சறுக்கும்...... :(

 

உனக்கு ஏழரைச் சனி நடக்குது, இந்த மோட்டுத்தனமான சனங்களின்ர கதையைக் கேக்காமல், ஒழுங்கா ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து எள்ளெண்ணை எரி எண்டு,ரவி ஐயர் திரும்பத் திரும்பச் சொன்னவர் ! :o

 

சரி குளிச்சிட்டு, வெளிக்கிட்டுப் போவம்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமே ,

ஒருவரின் படைப்பு என்பது அவரது ஆத்ம திருப்தி.

விமர்சனம் ,வரவேற்பு ,நல்லது கெட்டது எல்லாம் இரண்டாம் பட்சம் .

எது நல்லது எது கெட்டது என்பதை யார் தீர்மானிப்பது ? .வாசகர்கள் தான் என்றால் இம்முறை சாகித்திய அகடமி பரிசு பெற்ற ஜோ டி குருசை எத்தனை பேருக்கு தெரியும் ? ரமணி சந்திரனை தெரியாதவர்கள் இல்லை .

இதுதான் படைப்பு என்று ஒரு படைப்பிற்கு  வரைவிலக்கணம் இல்லை. உங்களுக்கு திருப்தியா ? தொடர்ந்து எழுதுங்கள்.தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள் .

உங்களை விட எவ்வளவோ மொக்கையான கவிஞர்கள்,கதாசிரியர்களின் படைப்புகள் எல்லாம் பதிப்புகளாக வந்திருக்கின்றன.

இப்போது செய்யாவிட்டால் எப்போதும் இல்லை ,பத்து பதினைந்து வருடங்களுக்கு பின்னர் உங்களுக்கான பெரும் சொத்து அதுதான் .

வருட பிறப்பிற்கு சுமேயின் புத்தகம் வெளி வருவதற்கு எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள் ..

 

நீங்கள் கூறுவதிலும் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறதுதான். நான் புத்தகமாக அடிக்க எண்ணியமைக்குக் காரணமே என் எழுத்துக்களைப் பதிப்பிக்கத்தான். ஏனெனில் நான் முன்பு பனங்காடு என்று ஒரு புளோக்ஸ் வைத்திருந்தேன். எவரோ தெரியவில்லை. அதற்குள் புகுந்து அத்தனை ஆக்கங்களையும் அழித்துவிட்டனர். மீண்டும் பூங்க்காட்டைத் திறந்து இப்பொழுதுதான் எல்லாவற்றையும் போட்டு முடித்தேன். எனக்குக் கணணி பற்றிய அறிவு அதிகம் இல்லை ஆதலால் என்னால் மற்றவர்களுடன் மல்லுக்கட்ட முடியவில்லை.

 

உனக்கு ஏழரைச் சனி நடக்குது, இந்த மோட்டுத்தனமான சனங்களின்ர கதையைக் கேக்காமல், ஒழுங்கா ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து எள்ளெண்ணை எரி எண்டு,ரவி ஐயர் திரும்பத் திரும்பச் சொன்னவர் ! :o

 

சரி குளிச்சிட்டு, வெளிக்கிட்டுப் போவம்! :icon_idea:

 

எதுக்கும் மிச்சம் பிடிக்காமல் ஒன்பது சட்டிகளை வாங்கி எரியுங்கோ :lol:

 

 

சுமே உங்களுக்கு நீங்கள் எழுதியது பூரணமாக திருப்தி எனும் போது அதாவது நீங்கள்  சொல்ல வேண்டியதை உங்கள் பாணியில் சொல்லி இருக்கிறீர்கள் என நீங்கள் மனதிருப்தி அடைந்தால் புத்தகம் வெளியிடுவதில் ஏது தயக்கம்?
 
வாசகர்கள் பல வகை. சிலருக்கு உங்களின் அதிர்வெண் இருக்கலாம். அவர்கள் உடனடியாக என்ன சொல்ல வருகிறீர்கள் என புரிந்து விடுவார்கள்.

 

 

எனக்கு மட்டும் திருப்தி ஏற்பட்டால் போதுமா??? மற்றவர்கள் திட்டாமல் இருக்கவும் வேணும் எல்லோ???

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.