Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் துரோகத்திற்கு நன்றி...! (இசைக்கவிதை)

Featured Replies

 

நாம்... ரொம்பவும் நேசிக்கும் ஒருவரால்தான்,
'துரோகம்' எனும் பரிசையும்...
புன்னகைத்தபடியே... கொடுக்க முடிகிறது!

மனச்சாட்சிகள் எப்பொழுதும்
தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..!
அது... துரோகம் செய்தவரையும்
ஒருநாள் தட்டியெழுப்பும்..!!
காலம் கடந்த ஞானத்தால்...
கோலம் மாற்ற முடியாது!
காலைச் சுற்றிய பாம்பாக...
மனச்சாட்சியின் தொண்டைக்குழியை,
இறுக்கிக்கொண்டேயிருக்கும்...!!

துரோகத்தின் தடங்களில்...
அனுபவப்பாதை விரிந்து செல்லும்...!
தாங்களே பின்னிய வலையில்,
துரோகிகள் சிக்கித் தவிக்க...
மற்றவரின் பயணம் மட்டும் தொடரும்!
மீண்டுமொருமுறை துரோகச் சந்திகளில் தரிக்காத,
தனித்த நீண்ட பயணங்களில்......
மாற்றங்கள் இருக்கும்...!
ஏமாற்றங்கள் இருக்காது...!!

இனிமையான பொழுதொன்றில்....
திரும்பிப் பார்க்கும் போது,
ஏறிவந்த படிக்கட்டுகளாய் துரோகங்கள்,
எங்கோ தொலைவில்... கறுப்பு வெள்ளையாய்!
வலிகளை வழிகளாக்கி...
துரோகங்களையும் அனுபவங்களாக்கி...
வாழ்க்கையினை வண்ணங்களாக்க உதவிய...
துரோகங்களுக்கும்... அதைப் பரிசாகத் தந்தவர்களுக்கும்,
ஒரு நன்றி சொல்லியே ஆகவேண்டும்!!!

துரோகத்திற்கு நன்றிகள்..............!
உங்கள் துரோகத்திற்கு நன்றிகள்.......!!

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சிகள் எப்பொழுதும்
தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..!
அது... துரோகம் செய்தவரையும்
ஒருநாள் தட்டியெழுப்பும்..!!

 

 

 

 

மிகவும் அருமை. ஏழை விடும் கண்ணீர் கூரிய வாள் போன்றது என்பார்கள் துரோகத்தனம் ஒரு நாள் உணர வைக்கும்.

கவிதையை கவிதை வடிக்க வைக்கும்

துரோகத்திற்க்கு நன்றிகள்

உங்கள் துரோகத்திற்க்கு நன்றிகள் :) :) :)

  • தொடங்கியவர்

மனச்சாட்சிகள் எப்பொழுதும்

தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..!

அது... துரோகம் செய்தவரையும்

ஒருநாள் தட்டியெழுப்பும்..!!

 

 

 

 

மிகவும் அருமை. ஏழை விடும் கண்ணீர் கூரிய வாள் போன்றது என்பார்கள் துரோகத்தனம் ஒரு நாள் உணர வைக்கும்.

 

உண்மைதான் நிலாக்கா....

துரோகம் செய்தவர்களுக்கு என்றாவது ஒருநாள் அதை உணரும் நிலை நிச்சயம் ஏற்படும்.

அப்பொழுது அதற்கான பலனை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.

 

மிக்க நன்றி அக்கா :)

துரோகங்களுக்கு என்றும் நன்றி சொல்லு.

உன்னை தூக்கி நிறுத்தும் “வெறி” தந்ததால்.
செய்தவ(ளு)னுக்கும் நன்றி சொல்லு

தன்னை யார் என்று காட்டியதால்

  • தொடங்கியவர்

379699_406445562821302_810752139_n.jpg

 

 

அவளை மறப்பதற்கு ஒரு ஜென்மம் போதும்.......... ஆனால், பிரியும்போது அவள் சொன்ன வார்த்தைகளையும் காரணங்களையும் மறப்பதற்கு எத்தனை ஜென்மம் வேண்டுமோ தெரியவில்லை..!? :unsure::(

  • தொடங்கியவர்

கவிதையை கவிதை வடிக்க வைக்கும்

துரோகத்திற்க்கு நன்றிகள்

உங்கள் துரோகத்திற்க்கு நன்றிகள் :) :) :)

 

மிக்க நன்றி ராஜன் விஷ்வா :)

  • தொடங்கியவர்

துரோகங்களுக்கு என்றும் நன்றி சொல்லு.

உன்னை தூக்கி நிறுத்தும் “வெறி” தந்ததால்.

செய்தவ(ளு)னுக்கும் நன்றி சொல்லு

தன்னை யார் என்று காட்டியதால்

 

தம்மை யாரென்று காட்டி... எதிர்காலத்தில் அவர்களிடத்திலும்

அவர்களைப் போன்றவர்களிடத்திலும்  ஏமாறாமல் இருக்க எம்மை அனுபவப்படுத்தியதிலும்

துரோகங்களின் வலிகளை வெறியாக்கி வெற்ரி நோக்கி நகர்த்தியதற்காகவும் அவர்களுக்கு நிச்சயமாக

பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகவேண்டும் நண்பா.............!  :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வலியாவது கிடைக்கப்பெற வேண்டும்.. :rolleyes: உங்களுக்கு இந்த வடிவத்தில் கிடைத்துள்ளது.. வாழ்த்துக்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களுக்கு மனசு எருமை மாட்டுத் தோல் போர்த்தியது. அதுங்களுக்கு சூடு சொரணை வேதனை அன்பு பாசம் இதெல்லாம் உணரவராது. அப்படியான ஜென்மங்களிடத்தில்.. துரோகம் என்பது இயல்பானது. அதுங்க அதுக்காக வருந்தவும் மாட்டுதுங்க. ஏன்னா அதுங்களுக்கு வருந்திறது என்றாலே என்னென்று தெரியாது.  :icon_idea:  :)


மற்றவர்கள் வருந்துவதை பார்த்து ரசிக்கிற.. அதில் திருப்திப்படுற..  கொடூர புத்தி உள்ளதுங்களாகவே இருக்குங்க.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களுக்கு மனசு எருமை மாட்டுத் தோல் போர்த்தியது. அதுங்களுக்கு சூடு சொரணை வேதனை அன்பு பாசம் இதெல்லாம் உணரவராது. அப்படியான ஜென்மங்களிடத்தில்.. துரோகம் என்பது இயல்பானது. அதுங்க அதுக்காக வருந்தவும் மாட்டுதுங்க. ஏன்னா அதுங்களுக்கு வருந்திறது என்றாலே என்னென்று தெரியாது.  :icon_idea:  :)

மற்றவர்கள் வருந்துவதை பார்த்து ரசிக்கிற.. அதில் திருப்திப்படுற..  கொடூர புத்தி உள்ளதுங்களாகவே இருக்குங்க.  :icon_idea:

 

அப்ப சில பெண்களுக்குத் தானா? அனேகமான பெண்கள் நல்லவங்களா? Gotcha! :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சில பெண்களுக்குத் தானா? அனேகமான பெண்கள் நல்லவங்களா? Gotcha! :lol:

என்ன செய்யிறது.. அந்த சில பெண்களும் நெடுக்கை மட்டும் தேர்ந்தெடுத்து நொங்கு எடுத்துப்போட்டினம்?! :blink::D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சில பெண்களுக்குத் தானா? அனேகமான பெண்கள் நல்லவங்களா? Gotcha! :lol:

 

 

சில பெண்களுக்கு மட்டும் தான் எருமை மாட்டுத் தோல். இன்னும் கொஞ்சத்திற்கு சும்மா மாட்டுத் தோல். இன்னும் கொஞ்சத்திற்கு முதலைத் தோள்... இப்படி பல வகையான தோல்களில் இங்கு கவனத்தில் எடுக்கப்பட்டது எருமை மாட்டுத் தோல்..! எருமை மாட்டில் மழை பெய்தாலும்.. அதுக்கு சூடு சொரணை வராதாம்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது.. அந்த சில பெண்களும் நெடுக்கை மட்டும் தேர்ந்தெடுத்து நொங்கு எடுத்துப்போட்டினம்?! :blink::D

 

நெடுக்கரும் sado -masochism ஓ ஏதோ இழவு மாதிரி அந்த வகையான பெண்களையே தேடிப் போய் விழுந்திருப்பார் போல! :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது.. அந்த சில பெண்களும் நெடுக்கை மட்டும் தேர்ந்தெடுத்து நொங்கு எடுத்துப்போட்டினம்?! :blink::D

நொங்கு எடுத்த பெண்களா..??! அப்படி யாருமே இல்லையே..??! நம்மல்ல நொங்கெடுக்க.. சும்மா வேடிக்கை பார்த்திட்டு இருப்பம் என்று நினைக்கிறீங்கள்..??! பதிலுக்கு நோண்டி நூடில்ஸ் ஆக்கிடுவம்.  :lol:  :D

நெடுக்கரும் sado -masochism ஓ ஏதோ இழவு மாதிரி அந்த வகையான பெண்களையே தேடிப் போய் விழுந்திருப்பார் போல! :lol:

 

நாங்க பெண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யுறதில்லை அண்ணா. பொதுவாக அவங்க குணாம்சத்தை வைச்சுத் தான் அவங்க மனசின்.. தோல் வகையைச் சொல்லுறம்.  :D

அருமையான கவி தந்திர்கள் கவிதை நன்றி .

 

நெடுக்கு அண்ணே இப்ப புரியுது உங்க பெண் எதிர்ப்பு எங்க ஆரம்பம் ஆகியது என்று :D :D

  • கருத்துக்கள உறவுகள்
எந்த ஒரு ஆணும் பெண்களை வெறுப்பதற்கும் குற்றம் சொல்வதற்கும் காரணம் அவர்கள் மீது அவன் வைத்த அதீத அன்பும் அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்பும் பொய்த்து போக செய்யும் போது தான் .ஒரு பெண் இன்னொரு பெண்ணின் மேல் பொறாமை கொள்வதை போல் எந்த ஆணும் பொறாமை கொள்வதில்லை மாறாக அதிக மரியாதை தான் தருகிறான் 
 
எல்லா ஆண்களும் தன் வாழ்க்கையை எதொ ஒரு பெண்ணால் தான் மாற்ற முடியும் என்று நம்பிக்கையோடு அவர்களுக்காக வருகைக்காக காத்து இருக்க தொடங்குகிறான் யார் யாருக்கு என்பது புரியாத புதிர் தான் ஆனால் எல்லா புதிருக்கும் விடை நிச்சயம்....
 
காத்திருங்கள் உங்களுக்கான தேவதை on the way ல கூட இருக்கலாம் 
 
அப்போது உங்கள் வாழ்வும் மாறும் கவலைகள் கலையும் .....  :)

கவிதை அருமை நண்பா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.