Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்

Featured Replies

Tamil_Daily_News_25716364384.jpg

 

சென்னை: பழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சலி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளா

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான நடிகை ,ஆழ்ந்த இரங்கல்கல் ...!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி சென்னையில் காலமானார்! 
[Monday, 2014-01-13 18:35:37]
anjsalidevi-130114-150.jpg
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி உடல் நலக்குறைவுகாரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சலி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். "கணவனே கண்கண்ட தெய்வம்'' என்ற மெகாஹிட் படத்தில், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக நடித்தது நடிகை அஞ்சலிதேவி வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆந்திராவில் ஏற்கவே பிரபலமாகியிருந்தவர், தமிழ்ப்பட உலகிலும் பானுமதி, பத்மினி வரிசையில் இடம் பெற்றார்.
  
சிவாஜியுடன் "முதல் தேதி'', "நான் சொல்லும் ரகசியம்'' படங்களிலும், எம்.ஜி.ஆருடன் "சக்ரவர்த்தி திருமகள்'', "மன்னாதி மன்னன்'' ஆகிய படங்களிலும் நடித்தார்.ஜெமினி கணேசனுடன் இவர் நடித்த "காலம் மாறிப்போச்சு'' சிறந்த படம் என்ற பெயருடன் வசூலையும் குவித்தது. மற்றும் "இல்லறமே நல்லறம்'', "பூலோக ரம்பை'', "வீரக்கனல்'' முதலான படங்களில் ஜெமினிகணேசனுடன் நடித்தார். தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார்.
 
தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது "லவகுசா''. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. ராமராவ் ராமராகவும், அஞ்சலிதேவி சீதையாகவும் நடித்தனர்.பிற்காலத்தில், அண்ணி, அம்மா வேடங்களிலும் அஞ்சலிதேவி நடித்தார். ஸ்ரீதர் தயாரித்த "உரிமைக்குரல்'' படத்தில், எம்.ஜி.ஆருக்கு அண்ணியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. "அன்னை ஓர் ஆலயம்'' படத்தில், ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடித்தார்.தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் அஞ்சலிதேவி நடித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிதேவிக்கு அஞ்சலி ...!

நடிகை அஞ்சலி தேவி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

 

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி மறைவுக்கு இரங்கல் தெவித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கற் செய்தி வருமாறு:-

பழம்பெரும் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான அஞ்சலி தேவி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று தனது 86-வது அகவையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

நாடகத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த அஞ்சலி தேவி, திரைப்பட இயக்குநர் பி. புல்லையாவால் “கொல்லபாமா” என்னும் தெலுங்கு திரைப்படத்தில் மோகினி கதாப்பாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். “கணவனே கண்கண்ட தெய்வம்” என்ற திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களிலும் இவரது ஆதிக்கம் கொடிகட்டிப்பறந்தது.

“சக்கரவர்த்தி திருமகள்”, “மன்னாதி மன்னன்”, “நான் சொல்லும் ரகசியம்”, “பக்த பிரகலாதா”, “பூலோக ரம்பை”,“அனார்கலி”, “மணாளனே மங்கையின் பாக்கியம்”, “லவகுசா”, “அடுத்த வீட்டுப் பெண்”, “சர்வாதிகாரி” உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழக ரசிர்களின் மனங்களைக் கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, கன்னடம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. நான்கு முறை சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றவர். தெலுங்கு திரைப்பட உலகில் நீண்ட நாள் பணியாற்றியதற்காக ரகுபதி வெங்கைய்யா விருது 2005-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

அஞ்சலி தேவியின் மறைவு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைக்கு மட்டுமல்லாமல் எனக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 

http://www.maalaimalar.com/2014/01/13200009/Actress-Anjali-Devi-death-TN-C.html

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிதேவிக்கு அஞ்சலி ...!

 
 

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்!

 

அஞ்சலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆத்ம சாந்திக்கு... பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.