Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களே சட்டத்தை கையில் எடுக்கலாமா .......

Featured Replies

அய்யாமாரே நேரடியா சொல்லபோனால் நீங்கள் எல்லோரும் சொல்லும் உயரிய சட்டம் ஐரோப்பா வந்தவுடன் எல்லோரும் கடைப்பிடிப்பதன் நோக்கம் மதித்து அல்ல பயந்து விசாவை பிடிக்கிட்டு ஊருக்கு அனுப்பினா என்கிற பயம் அதனால் பிழையை நியாயபடுத்த பழகிட்டம் அவ்வளவுதான் .

 

 


அஞ்ச்.. ஃபிரான்ஸ் ஜனாதிபதிக்கு பத்திரிகைக்காரர் அடிபோட்ட வீடியோ வெளிவந்துவிட்டதா?? :D

 

இசை கிளுகிளுப்பு கொன்னு கொன்னு :D:icon_idea:

  • Replies 138
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அய்யாமாரே நேரடியா சொல்லபோனால் நீங்கள் எல்லோரும் சொல்லும் உயரிய சட்டம் ஐரோப்பா வந்தவுடன் எல்லோரும் கடைப்பிடிப்பதன் நோக்கம் மதித்து அல்ல பயந்து விசாவை பிடிக்கிட்டு ஊருக்கு அனுப்பினா என்கிற பயம் அதனால் பிழையை நியாயபடுத்த பழகிட்டம் அவ்வளவுதான் .

இது வெறும் குறுகிய பார்வை.

சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம் என்பவை என்னவென்று தெரியாமல் பல வருடங்களாக ஊரில் வாழ்ந்தவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் வந்தால் தண்டனையைத் தாமே கொடுக்கவேண்டும் என்ற உணர்வுதான் வரும். ஆனால் மேற்கு நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் (வெள்ளையர்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள்) சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று சிறுவயதில் இருந்து பழக்கப்பட்டதால் சட்டத்தைத் தம் கையில் எடுப்பதில்லை. அதாவது Vigilane justice (கூட்டமாகச் சேர்ந்து தர்மஅடி, இருட்டடி கொடுப்பது) மேற்கு நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

இது வெறும் குறுகிய பார்வை.

சட்டம், ஒழுங்கு, நீதிமன்றம் என்பவை என்னவென்று தெரியாமல் பல வருடங்களாக ஊரில் வாழ்ந்தவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் வந்தால் தண்டனையைத் தாமே கொடுக்கவேண்டும் என்ற உணர்வுதான் வரும். ஆனால் மேற்கு நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள் (வெள்ளையர்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள்) சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்று சிறுவயதில் இருந்து பழக்கப்பட்டதால் சட்டத்தைத் தம் கையில் எடுப்பதில்லை. அதாவது Vigilane justice (கூட்டமாகச் சேர்ந்து தர்மஅடி, இருட்டடி கொடுப்பது) மேற்கு நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

 

உங்கள் நிண்ட பார்வைக்கு நன்றி ..நீங்கள் சொல்வது வெள்ளைக்கு மட்டும் பொருந்தும் எமக்கு அல்ல பாருங்கோ பத்து தலைமுறை கடந்து வாழும் அல்யிரியன்..ஆபிரிக்கன் இன்னு தன்னுடைய பண்பாட்டை பேணிவாரான் ஒரு தலைமுறை கடக்காத நாங்க வெள்ளை கூப்பிட சுகமா பெயர் வைப்பதில் இருந்தே அவனுக்கு அடிமை என்னும் எண்ணத்தை விதைக்க தொடக்கி விடுகிறோம் பிள்ளைகளிடம் என்பிள்ளை எப்படி வளர வேணும் என்று நானே முடிவு எடுப்பேன் இது என் கருந்து .

 

இங்கு வெள்ளை பொய் சொல்லது நீங்க நாட்டுக்குள் வந்தவுடன் ஆரம்பிப்பதே பொய்யும் பித்தல்ட்டமும் தானே அப்ப உங்களுக்கு சட்டம் எல்லாம் தெரியாது போல .

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நிண்ட பார்வைக்கு நன்றி ..நீங்கள் சொல்வது வெள்ளைக்கு மட்டும் பொருந்தும் எமக்கு அல்ல பாருங்கோ பத்து தலைமுறை கடந்து வாழும் அல்யிரியன்..ஆபிரிக்கன் இன்னு தன்னுடைய பண்பாட்டை பேணிவாரான் ஒரு தலைமுறை கடக்காத நாங்க வெள்ளை கூப்பிட சுகமா பெயர் வைப்பதில் இருந்தே அவனுக்கு அடிமை என்னும் எண்ணத்தை விதைக்க தொடக்கி விடுகிறோம் பிள்ளைகளிடம் என்பிள்ளை எப்படி வளர வேணும் என்று நானே முடிவு எடுப்பேன் இது என் கருந்து .

 

இங்கு வெள்ளை பொய் சொல்லது நீங்க நாட்டுக்குள் வந்தவுடன் ஆரம்பிப்பதே பொய்யும் பித்தல்ட்டமும் தானே அப்ப உங்களுக்கு சட்டம் எல்லாம் தெரியாது போல .

பிரான்சில் வசிப்பவர்கள் பிரஞ்சுக்காரராக தம்மை உணரவேண்டும், சமூகத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்பதால்தான் முக்காடு போடுவதைக் கூட சட்டம் வைத்துத் தடுத்துள்ளார்கள். எனவே பல்லினக் கலாச்சாரம் என்று தனித் தீவுகளாகப் பிரிவதைவிட நிரந்தரமாக வசிக்கும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் கலப்பது ஒன்றும் தப்பில்லை. என்னதான் நீங்கள்தான் உங்கள் பிள்ளை எப்படி வளரவேண்டும் என்று முடிவு எடுத்தாலும் சில விடயங்கள் கைமீறிப் போகும்போது பொத்திக்கொண்டு இருக்கவேண்டி வரும். உதாரணமாகப் பிள்ளைகளை அடித்து வளர்க்கமுடியாது. அடியாத மாடு படியாது என்று வெளிக்கிட்டால் உள்ளேதான் போய் இருக்கவேண்டி வரும்.

தமிழர்கள் ஒன்றும் அடிமை மோகத்தில் தாம் வசிக்கும் நாடுகளின் கலாச்சாரத்தை வேகமாகப் பின்பற்றுவதில்லை. அடிமட்டத்தில் இருப்பவர் நடுத்தர வாழ்வுக்கும், நடுத்தர வாழ்வில் இருப்பவர் மேல் மட்டத்திற்கும் போகவேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதால்தான் மேற்கு நாடுகளின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள். அதற்காக தமிழர்களுக்கே உரித்தான பண்பாட்டு அம்சங்களை தூர எறிந்துவிடுவதில்லை.

எமது சமூகத்தில் பொய்யும் பித்தலாட்டமும் அதிகம் என்று நாம் சொல்லுவது போன்றே மற்றைய சமூகத்தினரும் சொல்கின்றார்கள். எனவே இது தமிழர்களுக்கு என்று பிரத்தியேகமான குணமாகக் கருதப்பட எந்தத் தரவுகளும் இல்லை! மற்றது, நல்ல பண்புகள் சிறுவயதில் இருந்தே உருவாகின்றன என்பதால் புலம்பெயர்ந்தவுடன் பொய்யையும் பித்தலாட்டத்தையும் பழக வாய்ப்பில்லை. அவற்றை ஊரில் இருக்கும்போதே கற்றிருந்தால்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் பாவிக்கமுடியும்.

பிரான்சில் வசிப்பவர்கள் பிரஞ்சுக்காரராக தம்மை உணரவேண்டும், சமூகத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்பதால்தான் முக்காடு போடுவதைக் கூட சட்டம் வைத்துத் தடுத்துள்ளார்கள். எனவே பல்லினக் கலாச்சாரம் என்று தனித் தீவுகளாகப் பிரிவதைவிட நிரந்தரமாக வசிக்கும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் கலப்பது ஒன்றும் தப்பில்லை. என்னதான் நீங்கள்தான் உங்கள் பிள்ளை எப்படி வளரவேண்டும் என்று முடிவு எடுத்தாலும் சில விடயங்கள் கைமீறிப் போகும்போது பொத்திக்கொண்டு இருக்கவேண்டி வரும். உதாரணமாகப் பிள்ளைகளை அடித்து வளர்க்கமுடியாது. அடியாத மாடு படியாது என்று வெளிக்கிட்டால் உள்ளேதான் போய் இருக்கவேண்டி வரும்.

தமிழர்கள் ஒன்றும் அடிமை மோகத்தில் தாம் வசிக்கும் நாடுகளின் கலாச்சாரத்தை வேகமாகப் பின்பற்றுவதில்லை. அடிமட்டத்தில் இருப்பவர் நடுத்தர வாழ்வுக்கும், நடுத்தர வாழ்வில் இருப்பவர் மேல் மட்டத்திற்கும் போகவேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதால்தான் மேற்கு நாடுகளின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள். அதற்காக தமிழர்களுக்கே உரித்தான பண்பாட்டு அம்சங்களை தூர எறிந்துவிடுவதில்லை.

எமது சமூகத்தில் பொய்யும் பித்தலாட்டமும் அதிகம் என்று நாம் சொல்லுவது போன்றே மற்றைய சமூகத்தினரும் சொல்கின்றார்கள். எனவே இது தமிழர்களுக்கு என்று பிரத்தியேகமான குணமாகக் கருதப்பட எந்தத் தரவுகளும் இல்லை! மற்றது, நல்ல பண்புகள் சிறுவயதில் இருந்தே உருவாகின்றன என்பதால் புலம்பெயர்ந்தவுடன் பொய்யையும் பித்தலாட்டத்தையும் பழக வாய்ப்பில்லை. அவற்றை ஊரில் இருக்கும்போதே கற்றிருந்தால்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் பாவிக்கமுடியும்.

 

நீங்கள கூறும் அறிவுரை என் பிள்ளையின் பிள்ளைக்கு பெருந்தும் எமக்கு அல்ல இடையில் வந்து இங்கு வசிக்க முடியாவிட்டால் இன்னொரு நாடு இப்படி மாறி மாறி திரியும் அகதிகள் எமக்கு எந்தநாட்டு சட்டமும் மதிக்க தெரிவது இல்லை என்பதே உண்மை .

இன்னும் ஏன் எங்கள் கலாச்சாரம் எல்லாம் பின்பற்றி வழுரியல் என்று புரியவில்லை எங்க இணைக்கட்டமைப்பு கூட்டுகுடும்பம் பாசம் நேசம் பந்தம் என்று வாழும் ஒரு இனம் நாங்கள் ஒரு பூசெண்டுடன் அம்மாவை அப்பாவை பார்க்க போய் வாறாக்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

 

நிஜத்தை தொலைத்து போலிகளுக்கு சாயம் அடிக்கிறம் ஒருநாள் கிட்லர் போல ஒருவன் ஐரோப்பாவில் உருவாகி அடிக்கும்போது தெரியும் எமக்கு எங்கள் வேர் எங்கு என்று எதுகும் நிரந்தரம் இல்லை உலகில் .

 

நாங்கள் நாங்களாகவே இருப்போம் அப்படி மறந்து மாறி வாழுவம் என்றால் இங்கு இருவரும் பேசிட்டு எழுதிட்டு இருக்கும் மொழிகூட இப்ப தேவையில்லை இங்கு வரவேண்டிய தேவையும் இல்லை .cnn ...டைம்ஸ் பேப்பர் படிச்சுட்டு கமென்ரு இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனிடம் 20 தமிழ் பெண்பிள்ளைகள், கும்பலாக‌ தமது கற்பை கொடுத்து இருக்கிறார்களா..
அந்த 20 பேரின் பெற்றோரும், தமது பிள்ளைகளின் நடத்தையை... கவனிக்காமல் விட்டது தான் முதல் குற்றம்.
அந்தப் பெற்றோர் வேலை, தமிழ் சினிமா, தொடர் நாடகம் என்று பார்த்து... தாம் பெற்ற பிள்ளைகளின் வாழ்வை நாசமாக்கி விட்டார்கள்.
என்னைப் பொறுத்தவரை, புலம் பெயர் தேசத்தில் பெண் எடுக்கவே.... நாலுதரம் யோசிக்க வேண்டும் போலுள்ளது.

Edited by தமிழ் சிறி

எவன் குடும்பம் எப்பிடிப் போனா எமக்கென்ன. எங்கடை குடும்பங்களுக்கை இப்பியொண்டு நடந்தா நாங்கள் எல்லாரும் முன்னுதாரணமா சட்டத்தை கையிலை எடுக்காமல் எங்கடை பிரச்சனையை சட்டத்தின் கையிலை குடுத்திட்டு சட்டம் அது பிழையில்லை எண்டு சொன்னா அதையும் ஏற்றுக் கொள்ளுவம். இப்ப எல்லாருக்கும் சந்தோசமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா துளசிய காணோம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு கேக்கிறன் எண்டா அவர் தான் என்னோட பிரான்ஸ் பிரதிநிதி அவருக்கு நிறைய விடையங்கள் தெரிந்திருக்கும் அதான்

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் சொல்றதைப் பார்த்தா, பாகிஸ்தான் காரங்கள் (அ)கௌரவக் கொலை செய்யுறது, ஆபிரிக்கர்கள் பெண்களுக்கு "சுன்னத்" என்ற பெயரில கிளிட்டோரிசை வெட்டுறது, எங்கட ஆட்கள் தங்கள் பிள்ளைகளை பாலியல் விடயங்களில் வழி நடத்துறதை விட்டுப் போட்டு மற்றவனுக்கு இருட்டடி குடுக்கிறது, இவையெல்லாம் போற்றிக் காக்கப் பட வேண்டிய கலாச்சார விழுமியங்கள் போல இருக்கு! நிறையத் தமிழர்கள் உள்ள நாட்டில் என் பிள்ளை வளருதில்லையே எண்டு எனக்கு ஒரு கவலை இருந்தது! இன்று அந்தக் கவலை அடியோடு இல்லாமல் போனது எனக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்.. நீங்கள் இன்னும் போகேல்லையா?? :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்.. நீங்கள் இன்னும் போகேல்லையா?? :unsure::lol:

 

எங்க?

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின்.. நீங்கள் இன்னும் போகேல்லையா?? :unsure::lol:

 

 

இது தான் தமிழர்கள்

இழுத்து வைச்சு அறுப்பார்கள்

கெஞ்சினாலும் விட மாட்டார்கள்

அப்புறம்

கையை  வச்சுட்டான்

காலை தூக்கிட்டான்

கத்தியை  காட்டிட்டான்

அவனவனுக்கு தெரிந்ததைத்தானே  செய்யமுடியும்

அவனவனது மூளையின் ஓடர்படி தானே இயங்கமுடியும்

அது கொடுத்தா

வெட்டினால் என்ன?

இங்க எழதினால் என்ன?

எல்லாம் ஒன்று தான்...

 

(அத்தனையும்  பகிடிக்கு :lol:  :D  :D )

இசைக்கு நன்றி

இது அவர் சொல்லித்தந்தது :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்க?

வேறை எங்கையாவது.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ ரஞ்சிதா நித்தியிடம் போய் சரணடைந்தால்.. அது யார் குற்றம்..??! ரஞ்சிதாவிடதா.. நித்தியுடையதா..??! முதலில தமிழ் பொண்ணுங்க வருமுன் காக்கப் பழகனும். இல்ல.. வந்த பின் வந்ததை அனுபவிக்க வேண்டியான்.

 

இதில பிரஞ்சு காவல்துறை.. ஒன்றும் பண்ண முடியாது. 16 வயதுக்கு அப்புறம்.. ஒரு பொண்ணு தான் விரும்பின ஆளோடு.. உடலுறவு கொள்ளலாம் என்று சட்டம் உள்ள போது.. காவல்துறை என்ன செய்ய முடியும். அவன் விரித்த வலையில்.. போய் விழுந்தது யார் குற்றம்..????!

 

வன்புணர்வு என்று நிரூபிக்கப்பட்டால் அன்றி.. அவர்களா போய் வலையில் வீழ்ந்தால்.. அது குறித்த பெண்களின் அறியாமை. அல்லது அவர்களின் விருப்புக்கு நடந்த சம்பவம் என்றே கொள்ள வேண்டும். அதற்கான பரிகாரத்தை அவர்கள் தான் தேடிக்கொள்ள வேண்டும். நீதி அங்கு வேலை செய்ய முடியாது.

 

ஒருவரை.. நாமாக குற்றவாளின்னு சிந்திச்சு.. தண்டிக்க எமக்கு அருகதை இல்லை. அந்த வகையில்.. சுய விருப்புக்கு அப்பால்.. உறவு கொள்ளாமல்.. குறித்த பெண்கள்.. பாதிக்கப்பட்டிருந்தால்.. ஆதாரங்களோடு.. காவல்துறையில் முறைப்பாடு செய்திருக்கலாம். அதனை பாதிக்கப்பட்ட பெண்கள் தான் செய்யனும். அவர்கள் சார்ப்பாக அண்ணனோ.. தம்பியோ.. கத்தியை தூக்க முடியாது. அது வன்முறை..! அதனை தடுக்க தனியான சட்டம் உள்ளது.

 

இங்கு விடுதலைப்புலிகளை சிலர் இழுத்தார்கள். அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.. புலிகள் சிவில் குற்றவாளிகளை.. விசாரணையின்றி தண்டித்ததாக அறியவில்லை.

 

மேலும்.. புலிகள் காலத்தில் இப்படியான சம்பவங்கள்.. அவர்களுக்கும் சமூகத்திற்கும் தெரியாமல் நடந்திருக்கலாமே தவிர.. சமூகம் ஒன்று அச்சப்படும் அளவிற்கு நடக்கவில்லை. பல காலம் முன்.. அப்படி நடந்த ஓரிரு சம்பவங்களின் போதும் தமிழீழ காவல்துறை மெச்சத்தக்க வகையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டித்தும் இருந்தது.

 

சட்டத்தை மதிக்கத் தெரியனுமே தவிர சட்டத்தை கையில் எடுக்க முடியாது. தற்காப்புக் கலையைக் கூட...... மற்றவரை பலமாக காயப்படுத்தாத.. வழிகளை பிரயோகிக்கும் உரிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களுக்கே...உள்ளதே அன்றி மற்றவர்களுக்கு அல்ல..!

 

இந்தப் பெண்கள் விளிப்போடு நடந்து கொண்டிருந்தால்.. இந்தப் பிரச்சனையையே வந்திராது. அதனை இளம் பெண்கள்.. சமூகத்திற்கு ஊட்ட வேண்டிய பொறுப்பு.. பிரான்ஸ் மற்றும் புலம்பெயர் தமிழர்களை சாரும். அது தப்பல்ல. ஆனால் சட்டத்தை தாங்கள் கையில் எடுத்து குற்றவாளி என்று தாங்கள் சுயமாக தீர்மானித்து ஒருவரை முகநூலில்.. அசிங்கப்படுத்துவதோ.. வன்முறையால் தண்டிப்பதோ.. தண்டனைக்குரிய.. சட்டத்திற்குப் புறம்பான செயல்களாகும். முகநூல் இவற்றை அறியாததால்.. அனுமதித்துள்ளது. முகநூல் நிர்வாகம்.. இவற்றை அறிந்தால்.. இப்படியான செயல்களுக்கு இடமளிக்காது. பின்னர் அவர்கள் தான் நீதிமன்றங்களுக்கு பதில் சொல்ல நேரிடும். :icon_idea:

 

இது முழுக்க முழுக்க.. பெண்களின் சுய விளிப்புணர்வற்ற.. மோசமான.. நடத்தைகளால் உருவான பிரச்சனை. அதனை தடுக்க வக்கில்லாமல்.. சட்டத்தை கையில் எடுப்பது மகா தவறு. இது தவறான உதாரணமும் ஆகும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கேன்  உலகத்தில்  யாருக்கும் இல்லாத அக்கறை  என்று கேட்பீர்கள்....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படத்தை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றால் சட்டப்படி குற்றம் ப்ரோ நாங்களும் இருக்கிறம் என்ன படம் எடுத்திட்டா திரிறம் அப்பிடி எடுத்தால் அதை அவர் வைச்சிருக்கணும் இங்கே அதை காசாக்க வெளிக்கிட்டது தான் தப்பு அதை விட தப்பு வீடு புகுந்து அடி போட்டது

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைக் காட்டி காசு பறிக்கிறார் என்றால்..blackmail.. அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள்.. முறையிடலாம். ஆனால்.. அவர் கூட விரும்பிப் போய் படம் எடுத்திட்டு.. அதனை blackmail என்று சொல்ல இவர்களுக்கு போதிய ஆதாரம் தேவை. அந்த வகையில்.. இந்தப் பெண்கள்.. தாங்களா போய் வலையில் வீழ்ந்திட்டு.. இப்ப சிக்கல் வந்ததும்.. பிரச்சனையை பழியை ஒருவன் மீது போட்டு.. அவனை முடிச்சுக்கட்ட பார்ப்பதாகவே இங்கு நோக்க வேண்டும். இந்த 20 பேருக்கும்.. தவறு செய்யும் போது.. கூடப் படம் பிடிக்கும் போது எங்க போய் இருந்தது புத்தி. அப்ப என்ன சுதந்திரம் என்று நினைத்து கட்டிப்புரண்டார்களோ. இப்போ அதே சுதந்திரத்தின் இன்னொரு பக்கத்தை அனுபவிக்கட்டும். சுதந்திரம் அளித்த பெற்றோரும் சேர்ந்து அனுபவிக்கட்டும். அதற்காக.. சட்டத்தை இவர்கள் கையில் எடுத்து அந்த இளைஞனை தண்டிக்க முடியாது. அப்படி தண்டிக்கனுன்னா நீதிமன்றம் போய் தண்டனை பெற்றுக் கொடுக்கட்டும். தங்கள் தவறுகளையும் ஒத்துக் கொண்டு.

 

இது தங்கள் தவறை மறைத்து குறுக்கு வழியில்.. தங்களை காப்பாற்றிக்க எம்மவர்கள் செய்யும் கூத்தே எம்மவர்களின் இந்த சுயாதிபத்திய வன்முறை. இதுவே பின்னர்.. குழுச் சண்டைகளாக பரினாம வளர்ச்சி அடையும். தொடர்கொலைகளில் போய் முடியும். தீராத பகைகளை எம்மவரிடையேயே வளர்க்கும். இத்தனைக்கும் தங்களை சுயமாகக் கட்டுப்படுத்த வக்கற்ற ஒழுக்க நெறி அறியாத..பெண்களும் அவர்களின் நடத்தைகளுமே முக்கிய காரணம். ஒருவன் 20 பேரை மேயுறானுன்னா.. அது யாரின் அறியாமை..????! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதையே தான் நாங்களும் சொல்லுறம் ஆனால் சிலர் தமிழ் ஈழ சட்டக்கோவை பிரகாரம் தான் தண்டனை கொடுக்கணுமாம் எங்க இருந்தாலும்

  • கருத்துக்கள உறவுகள்

அதையே தான் நாங்களும் சொல்லுறம் ஆனால் சிலர் தமிழ் ஈழ சட்டக்கோவை பிரகாரம் தான் தண்டனை கொடுக்கணுமாம் எங்க இருந்தாலும்

 

 

ஏன் ராசா  இதற்குள் தமிழீழம்??

 

அதைப்பற்றி   எவர் பேசினார்?

தமிழருடைய  சில நடவடிக்கைகள்

மற்றும் அவர்களது மனநிலை சார்ந்தே இங்கே பேசுகின்றோம்

அண்ணை அது சினிமா ,சினிமாவில் பார்த்ததை நடைமுறையில் செய்ய வெளிக்கிட்டால் மரத்தை சுற்றி எல்லாம் பாட்டு பாடவேண்டிவரும் .

 

அவர்களை இழுத்ததற்கு காரணம் -  புலம்பெயர்நாடுகளில் எத்தனை அடாவடிகள்  ,வெருட்டுக்கள் விட்டு பணம் சேர்த்தார்கள் .Human Rights Watch பதிவுகள் வேணுமென்றால் தரலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ சட்டக் கோவை.. அதன் நில.. பண்பாட்டியல்.. நாகரிக.. சமூக வரம்புக்கு உட்பட்டது. அதனால் தான் நாட்டுக்கு நாடு சட்டங்கள் வேறுபடுகின்றன. இன்றேல் உலகம் முழுவதற்கும்.. ஒரு சர்வதேச சிவில்.. கிரைம் சட்டத்தை எடுதி வைச்சு அமுல்படுத்திட்டு இருக்கலாம். இதில் தமிழீழச் சட்டக் கோவையை 20 தறிகெட்ட பெண்களுக்காகவும்.. ஒரு தறிகெட்ட ஆணுக்காகவும்.. துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். இதில்.. சபேசன் அநாவசியமாக விடுதலைப்புலிகளை கொண்டு வந்ததையும் கண்டிக்கிறேன். இவர்கள் எல்லாம் விடுதலைப்புலிகளிடம் சொல்லிட்டு வந்தா பொய் சொல்லி அசைலம் அடித்தார்கள் இல்லையே. அந்தப் பொய்கள் கூட தமிழீழ சட்டக்கோவைக்கு புறம்பானவை. அந்த வகையில் இவர்களை தண்டிக்க முற்பட்டிருந்தால்..????! ஆக.. உது தேவையற்ற விவாதம். பிரதான பிரச்சனையை திசை திருப்பும் விவாதம்.

 

உண்மையில்.. இந்தப் பெண்கள் அவனோடு.. விரும்பிப் போய்.. செய்வதை எல்லாம் செய்திட்டு.. அவன் இவர்களின் பலவீனத்தை தனது பலமாக்கிக் கொண்டான். இப்போ அதில் இருந்து விடுபட தங்களை தூய்மையாகக் காட்டிக் கொள்ள அவனை குற்றவாளியாக்கி சுயமாக தண்டிக்க விளைகிறார்கள். இது தமிழர்கள் மத்தியில் உள்ள ஒழுக்கக் குறைவான.. குழுப் பிரச்சனை சார்ந்தது. இதற்குள் தமிழீழ சட்டக்கோவை.. விடுதலைப்புலிகள் போன்ற விடயங்களைக் கொண்டு வருதல் தவறு. முந்தி கள்ள மட்டை போட்டது எங்கட சனம்.. ஓடி வந்த ஒட்டுக்குழு ஆக்கள். போதைப்பொருள் கடத்தினது.. புளொட். பிடிபட்டதும் பழி போட்டது புலி மேல. இப்படித்தான் எம்மவர்கள் செய்த அநியாயங்களுக்கு எல்லாம்.. பழி முழுக்க புலிகள் மீது. கனடாவில லண்டனில பெட்டைக்கு சண்டை போட்டது எங்கட ஆக்கள்.. பழி முழுக்க புலிகள் மேல. அதனையே இங்கும் திணிக்க விரும்புகிறார்கள் சிலர். அது கண்டிக்கத்தக்கது. அநாகரிமானது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் எல்லாம் பொட்டு வைச்சு பூ வேண்டிய ஆக்கள் உயிரோட விட்டமே என்று சந்தோஷ படுங்க பாஸ் எங்களுக்கு எப்பவும் தமிழீழ சட்டக்கோவைதான் தெரியும் இருக்கும் நாட்டு சட்டம் என்னை பாதுகாக்கும் என்று நினைப்பில் விட்டால் அதிகமான தவறுகள் எம் இனத்தில் வேகமா வளரும் .

வந்த நாட்டு சட்டபடி வாழ்வது என்றால் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சாமத்திய சடங்கு எல்லாம் செய்வது கூட கூடாது பாருங்கோ .

எங்க வாழ்த்தாலும் எங்கள் இன விழுமியம் காக்கப்பட வேணும் என்பதே எனது கருத்து இதை செய்ததில் எந்த தவறும் இல்லை .

வடிவா வாசிக்கலியா விசு அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா வாசிக்கலியா விசு அண்ணா

 

அது

அவரின் தனிப்பட்ட கருத்து

அதிலும் அவர் இப்படித்தான் சொல்கிறார்

 

எங்களுக்கு எப்பவும் தமிழீழ சட்டக்கோவைதான் தெரியும் 

 

அடுத்து

இதில் அஞ்சயனின் கருத்துக்களை  வாசித்ததிலிருந்து

இது சம்பந்தமாக அவருக்கு முழுவிபரமும் தெரியும் 

அல்லது இதில் சம்பந்தப்பட்டவர்களை  அவருக்கு தெரியும் என்று தோன்றுகிறது

அதை இங்கு எழுத அவர் விரும்பாதிருக்கலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீடு புகுந்து அடித்தவர்கள் அந்த பெண்களையும் வீடு புகுந்து அடித்து வீடியோ போட்டிருந்தால் வரவேற்று இருக்கலாம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.