Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:-

sithambaram_CI.jpg

ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் . ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  இது தன்னுடைய சொந்த கருத்து ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால் அரசியல் ரீதியாக நல்ல முடிவை எடுக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரிகள் மத்தியில் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104865/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

இது அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:-

 

 

தமிழக அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால் அரசியல் ரீதியாக நல்ல முடிவை எடுக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

ஈழப்பிரச்சினை  சார்ந்து

தமிழக  கட்சிகளிடையே  இன்று ஒற்றுமை  காணப்படுகிறது

 

இவரது காங்கிரசுக்கள்  தான்  அவர்களுக்கிடையிலேயே  ஒற்றுமை இல்லை

இவர் வாய் திறக்காதிருப்பது

இவரது கட்சிக்க நல்லது.....

  • கருத்துக்கள உறவுகள்

தப்பப் பார்க்கிறார்

இந்தியாவை யார் அழுகிறார்கள்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகளால் ஆளப்படும் நாடாளுமன்றமா? அல்லது ஊழலில் திளைத்திருக்கும் மேட்டுக்குடி அதிகார வர்க்கமா? தேவயாணி விடயத்தில் இருந்து இவரின் இந்தக்கருத்துவரை நடந்த விடயங்களை பார்த்தால் அதிகாரமட்டத்தின் பலம் ஓங்கி நிப்பதாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே.. இந்தச் செய்தியில்.. இந்திய வெளிவிவகாரத்துறை தான் என்னத்தை ஏன் செய்தன் என்று சொல்லுதே. சிதரம்பரம் என்ன பம்பரமா சுழற்றிக் காட்டிறார் எங்களுக்கு. பிரபாகரனை ராஜீவ் முதலமைச்சராக்க விரும்பினார் என்று கதை அளந்த சிதம்பரம் தானே இவர்.

 

 


இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஏன்
இந்தியா புறக்கணித்தது? : வெளியுறவுத்துறை விளக்கம்

 

sujatha%20-singh.jpg

 

 

மனித உரிமை மீறலை கண்டித்து, இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரித்தன.  இதனால், தீர்மானம் வெற்றிகராம நிறைவேறியது.   ஆனால் இந்த வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது.   இந்தியாவில் இந்த செயலைக்கண்டு, தமிழர்கள் கொதித்தனர்.   தமிழ்த்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில்,  இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஏன் இந்தியா புறக்கணித்தது? என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் டெல்லியில் தெரிவித்துள்ளார். 

அவர், ‘’தேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.  தமிழர்களின் நலன் கருதியே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது.  இந்தியாவின் இந்த நடவடிக்கையால் மீனவர் களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.  இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடத்தப் படும் தேதி பற்றி ஆலோசித்து வருகிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும்,  ‘’கச்சத்தீவு இந்தியாவின் பகுதியல்ல; அது இலங்கைக்கு சொந்தமானது’’ என்றூம் தெரிவித்துள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=118919

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இது அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:-

ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் . ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  இது தன்னுடைய சொந்த கருத்து ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

....

 

நேற்று எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரிகள் மத்தியில் எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104865/language/ta-IN/article.aspx

 

 

கள்ளத்தனமான நழுவல்.

 

இம்மாதிரியான உருப்படாத சுயநல தலைகள், ஈழத்திலும், தமிழகத்திலும் இருப்பதால்தான் போறவன் வாரவன் எல்லாம் மேயுமளவிற்கு தமிழர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பேசியே காலத்தை ஓட்டப்பார்க்கிரார்கள் 

சரி..சரி இதையெல்லாம் பெரிசு படுத்தாமல் கார்த்திக் சிதம்பரத்துக்கு வாக்கு போடுங்கோ என்கின்றார்.

அப்பா கார்த்திக் இம்முறை அம்மாவுக்கு வாக்குப்போடுங்கள் என்று சொல்லமாட்டார்  :D  :D

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தின் மகன் என்பதால் என்னை ஒதுக்கி விடாதீர்கள் - கார்த்திக் சிதம்பரம் 

 

//நீங்க சிதம்பரத்தின் மகன் இல்லைன்னு சொன்னா கண்டிப்பா ஜெயிக்கலாம்...!!! //

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தின் மகன் என்பதால் என்னை ஒதுக்கி விடாதீர்கள் - கார்த்திக் சிதம்பரம் 

 

//நீங்க சிதம்பரத்தின் மகன் இல்லைன்னு சொன்னா கண்டிப்பா ஜெயிக்கலாம்...!!! //

 

 

எவருடைய  மகன் என்றாலும் ஜெயிக்கலாம்

ஆனால் காங்கிரசில் நின்றால்..........?

இந்த ஜென்மத்தில் இல்லை......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.