Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய மெருகூட்டலுடன் யாழ் கள வாழ்த்துப்பாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே......

யாழ் கருத்து களத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஈழத்து இசை சிற்பி தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் கவிக்குயில் வல்வை சகாரா அக்காவின் கவிவரிகளில் வந்திருந்த யாழ் கள வாழ்த்துப்பாடலை யாழ் களத்தின் 16 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்னும் மெருகூட்டப்பட்டு அந்தப்பாடலை உங்கள் முன் சமர்பிக்க இருக்குன்றோம் காத்திருங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இணுவையூர் தந்த மைந்தன் சுவிஸ் நாட்டின் தமிழ்க்காவலன் மயூரன் அண்ணா அவர்களின் கைவண்ணத்தில் படக்கலவை நடந்து கொண்டு இருகின்றது ....

எங்கள் இணுவையூர் தந்த மைந்தன் சுவிஸ் நாட்டின் தமிழ்க்காவலன் மயூரன் அவர்கள் கையுறைகளை எங்கோ வைத்துவிட்டு மறந்ததால், தற்போது அவைகளைத் தேடி அலைவதால்  படக் கலவையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. கையுறைகள் கிடைத்ததும் அவற்றை அணிந்துகொண்டு கலக்கலை தொடருவார் என எதிர்பார்க்கிறோம்.  :icon_idea: 

ஏனப்பு சுண்டு ஞாமான பட்டுக்குஞ்சம் தொங்கவிட்டுக்கிடக்கு..

 

 

இன்று ஒரு நிகழ்வு முடிந்து இப்போதுதான் வீடு வந்தேன். கையுறை போட்டுக் கலக்கத் தொடங்குகின்றேன். பணியாரமா வந்தாச் சரி.

உறவுகளே இன்னும் சிறிது நேரத்தில் மிகத்தரமாக மயூரனின் கையுறை கைவண்ணத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் யாழ்கள வாழ்த்துபாடல் உங்கள் முன் ..................... :)
 
இந்த இனிய களத்தின் 16 ஆவது அகவையை ஒட்டி  இந்தப்பாடலை இன்று வெளிக்கொணர்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் ,நன்றிகள் 
  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா பாடல்? :o

 

எம்.ஜி. ஆர் படம் மாதிரி, 'வெள்ளித் திரைக்கு விரைவில் வருகிறது' எண்டு விளம்பரம் வருகுதேயொழியப், பாடலை இன்னும் காணவில்லை! :D 

 

சும்மா ஒரு பம்பலுக்குத் தான்! :icon_idea:  

 

எங்கப்பா பாடல்? :o

 

எம்.ஜி. ஆர் படம் மாதிரி, 'வெள்ளித் திரைக்கு விரைவில் வருகிறது' எண்டு விளம்பரம் வருகுதேயொழியப், பாடலை இன்னும் காணவில்லை! :D

 

சும்மா ஒரு பம்பலுக்குத் தான்! :icon_idea:  

அண்ணா நானும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன் .............. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

சனம் இன்னும்.... ஐரோப்பாவில் நித்திரைப் பாயை விட்டு எழும்பவில்லைப் போல கிடக்கு,sleeping2.gif
ஒன்றிரண்டு மணித்தியாலம் கழித்து வெளியிடுங்கள், அப்ப... கனடாச் சனமும் எழும்பியிருக்கும். :D

அப்பாடி ஒரு மாதிரி கலக்கி முடிஞ்சுது.

தரவேற்றம் நடக்குது.

இருநாள் திட்டமிடலுடன்தான் படக்கலவை செய்துள்ளேன். படக்கலவையில் எனக்கு பெரும் அனுபவம் இல்லை. முயற்சித்துள்ளேன். குறைகளை சு(கு)ட்டிக் காட்டுங்கள். இன்னும் சில மணித்துளிகளில் உங்கள் முன் பாடலோடு வருகின்றேன். வாய்ப்பைதந்த சேகர் அண்ணாவையும் களம் அமைத்துக் கொடுத்த யாழ் களத்தையும் நினைப்பில் நிரந்தரமாக்குகின்றேன். தொடர்ந்து பணயிப்போம்.

இருநாள் திட்டமிடலுடன்தான் படக்கலவை செய்துள்ளேன். படக்கலவையில் எனக்கு பெரும் அனுபவம் இல்லை. முயற்சித்துள்ளேன். குறைகளை சு(கு)ட்டிக் காட்டுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது பாடலும் இசையும். மயூரனுக்கும் வல்வை சகாராவுக்கும் தமிழ்ச் சூரியனுக்கும் வாழ்த்துக்கள்.

நன்றாக உள்ளது. இப்பாடலை உருவாக்கிய வல்வை சகாரா, தமிழ்சூரியன், மயூரன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

மயூரன் நன்றாக இருக்கிறது.

செயற்கைதனமான காட்சிகளை தவிர்த்து இன்னும் தாயகம் சம்பந்தமான இயற்கை காட்சிகளை காட்டி இருக்கலாம்.

சில படங்களை போடும் போது அதில் இருக்கும் Watermarks இணை தவிர்க்க பாருங்கள். அல்லது Watermarks இல்லாத படங்களை போடுங்கள்.

நாங்கள் வீணாக அவர்களை விளம்பரம் செய்வது போல ஆகிவிடும்.

நன்றாக செய்துள்ளீர்கள். Edius மற்றும் Pinnacle போன்ற Editing மென்பொருள்களை பாவியுங்கள். நல்லா வருவீங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்வரிகளும்,இசையும், படக்கலவையும் அருமை. இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா , சூரியன் , மயூரன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது...! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் மிக அருமை. ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஐந்து நிமிடமும்... விரைந்து சென்று விட்ட மாதிரி இருந்தது. :)

 

பாடல் வரிகளை உருவாக்கிய வல்வை சகாறாவுக்கும், பாடிய நாதனுக்கும், இசையமைத்த தமிழ்ச்சூரியனுக்கும், அழகிய படங்களை இணைத்து... முழுப்பாடலாக்கிய மயூரனுக்கும் பாராட்டுக்கள்.smileyvault-cute-big-smiley-animated-024

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்வரிகளும்,இசையும், படக்கலவையும் அருமை. இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பைவிட இசையால் மெருகேற்றி இருக்கிறீர்கள் தமிழ் சூரியன். ஆரம்ப வரிகளில் கடைசி வரியை பாடகர் பாடும்போது சிறிது திணறுவதுபோல் தோன்றுகிறது.

 

"நாமொளிரக் களமுவந்த யாழ் அணங்கே" என்று எழுதியிருந்தேன் பாடகர் களமுவந்த என்னும்போது அவருக்கு அது இலாவகமாக இல்லை என்பது எனக்குப் புரிகிறது. களமுவந்த என்பதை களம் தந்த என்று மாற்றியிருந்தால் பாடுபவருக்கு இலகுவாக இருக்கும். மாற்றியிருக்கலாம் தமிழ்சூரியன். இது குறை சொல்லும் நோக்கல்ல... இவ்விடயம் அதாவது இவ்வாழ்த்துப்பா தொடர்பாக மாற்றம் செய்ய எனது பூரண அனுமதியுண்டு ஏனெனில் நானும் இசையை ஆழமாக நேசிப்பவள். 

 

மீள மீள போட்டு இரசிப்பதோடு மட்டுமல்லாமல் என்னுடைய பிள்ளைகளுக்கும் போட்டுக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறேன். அவர்களும் கிண்டல்களூடாக இரசிக்கிறார்கள். அலுக்காமல் இருக்கிறது... அத்தோடு மயூரனின் கைவண்ணமும் அற்புதமாக இருக்கிறது. தமிழ்சூரியனின் இசைக்கு தன்னுடைய நேரத்தை ஒதுக்கிப் பாடிய நாதனுக்கும் நாம் நன்றி உரைக்கவேண்டும். குரலும் , இசையும், காட்சிப்படுத்தலும் நன்றாக உள்ளன.. பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி உறவுகளே.....! இப்பாடலை  எழுதி இசையமைத்து ஒலி,ஒளி வடிவமைத்த உறவுகளுக்கு என் வாழ்த்துக்கள்! தொரடட்டும் உங்கள் பணிகள் விடுதலைநோக்கியே பயணிப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

யாழ்கள வாழ்த்துப்பாடலை பாடிய நாதன் அண்ணாவை யாழ்கள உறவுகளுக்கு அறிமுகப்படுத்தவதில் மகிழ்ச்சி அடைகிறோம் 1655550_237744799761095_1879630403_o.jpgஇவர் ஓர் இளையராஜா ரசிகன் .........இளையராஜாவின் குரலிலும் பாடுவார் 

Edited by தமிழ்சூரியன்

தமிழிதழ் ஊடக ஆதரவில் யாழ் களத்தின் 16வது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்புப் பாடல்.

 

yaal_a8c39898e875b4411a7d9a34f500fb7e.jp

தமிழிதழ் ஊடக ஆதரவில் யாழ் களத்தின் 16வது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்புப் பாடல்.

இசை: சேகர் (ஒல்லாந்து), 

வரிகள்: வல்வை சகாரா (கனடா), 

பாடியோர்: நாதன் (ஒல்லாந்து) 

படக்கலவை: இணுவையூர் மயூரன் (சுவிற்சர்லாந்து) 

வெளியீடு: யாழ் கருத்துக்கள உறவுகள். 

ஊடக அனுசரணை: தமிழிதழ்

 

 யாழ் மண்ணின் அழகை இயற்கையின் காட்சிகளோடும் வரிகளோடும் வாழ்த்தும் அழகான இசையில் இன்று வெளியாகிருக்கிறது. (30-03-2014)

 

தீந்தமிழாய் பொங்கும் இசை யாழ்லொலிரும்

திசை வெளிகள் எங்கும் உன் உறவு ஒளிரும்

வாரோளிரும் பருவமது பதினாறின் பேரழகும்

நாமஒளிர களமுகந்தை யாழ் களமே..!

என்று அமைதியாக தொன்மை சார்ந்த பெருமையான வாழ்த்துபாடளாக ஆரம்பிக்கிறது,

இப்பாடலின் இசையமைப்பாளர் சேகர் அவர்களின் இசை விறு விறுப்பாக காட்சிகளையும் வரிகளையும் நகர்த்தி செல்கிறது..!

முதல் வரிகளிலே தட்டி எழுப்புகிறது பாடகர் நாதன் அவர்களுடைய குரல் வளம். கேட்டு பழகிய குரலாக இருந்தாலும், பாடலின் ரசனையை மெருகூட்டிய வண்ணம் பாடியிருப்பது சிறப்பு.

 

 பிள்ளை மனம் கொண்ட பிள்ளை கூட்டங்க்கள் வேடிக்கை கதைகள் பேச பேச கள்ள சிரிப்புடன் கன்னித்தமிழும் துள்ளும் குமரியாய் கொள்ளை கொள்ள..!

 

போன்ற வரிகள் யாழ் மண்ணின் அழகான வர்ணனையும், செந்தமிழின் வெள்ளை மனதையும் ஒன்றிணைத்து  உணர்த்துகிறது

 

 தகவலும் தொழிலும், தளராத நுர்பமும் தாயக மீற்புக்கு வழிமூட்ட... அகவல் பல தோன்றம் ஆதி பொருளாகி அனைத்தும் வழி செல்லும் பெரும் தளமாய் யுகங்கள் பல சூடும் மேன்மை மான்பர்கள் மீட்டும் விரல் கட்டும் யாழ் நரம்பாய்..!

 

 நவீனத்துவ எதிர் கால உலகை கை வசப்படுத்தும் வரிகள், மெல்லியதாய் தட்டும் புரட்சிகரமான பாடலாய் அமைந்திருப்பது, யாழ் களத்தின் 16 வது அகவைக்கு பெருமை சேர்க்கும் முகமாக இப்பாடல் வெளி வந்துள்ளது.

 தொடர்ந்து யாழ் களம், யாழின் விம்பங்களை உலகிற்கு நவீன காவியமாய் மலர 16 வது அகவையை முன்னிட்டு தமிழிதழ் சார்பாக தளத்தின் அனைத்து தொழிநுட்ப கலைஞர்கள், மற்றும் இப்பாடலை அழகாய் வரியமைத்து, வருடும் இசையமைத்து, பாடிய அனைத்து கலைஞர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

 

http://tamilithal.com/index.php/en/news/item/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-16%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D

 

 

இணைப்பிற்கு நன்றி மயூரன் .லைக் காத்திருக்கிறேன் .இதை முகப்புத்தகத்தில் பதிவிடுகிறேன் .அழகான ஓர் விமர்சனம் .உண்மையில் யாழ்கள உறவுகள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விமர்சனம் 

வணக்கம் உறவுகளே......

யாழ் கருத்து களத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஈழத்து இசை சிற்பி தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் கவிக்குயில் வல்வை சகாரா அக்காவின் கவிவரிகளில் வந்திருந்த யாழ் கள வாழ்த்துப்பாடலை யாழ் களத்தின் 16 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்னும் மெருகூட்டப்பட்டு அந்தப்பாடலை உங்கள் முன் சமர்பிக்க இருக்குன்றோம் காத்திருங்கள்...

4.gifமுதலில் இந்த திரியை ஆரம்பித்த சகோதரன் சுண்டலுக்கு என் நன்றிகள் .

Edited by தமிழ்சூரியன்

நன்றாக இருக்கின்றது பாடலும் இசையும். மயூரனுக்கும் வல்வை சகாராவுக்கும் தமிழ்ச் சூரியனுக்கும் வாழ்த்துக்கள்.

/thanks-tamil2.gifநன்றி சுமே அக்கா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.