Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

LOK SABHA ELECTION RESULT 2014
ADMK
Party Leading Won
ADMK 30 7

CONGRESS
Party Leading Won
Congress 0 0
DMK+
Party Leading Won
DMK 0 0
MMK 0 0
PT 0 0
VCK 0 0
BJP+
Party Leading Won
BJP 1 0
DMDK 0 0
MDMK 0 0
PMK 1 0
KNMDK - Eswaran 0 0
IJK - Pachamuthu 0 0
A.C. Shanmugam 0 0

Share On Share on  Share on  Share on
TOTAL LOK SABHA SEATS = 543, SEATS NEEDED FOR MAJORITY = 272
BJP
Alliance
Leading
147
Won 185
CONGRESS
Alliance
Leading
27
Won 36
OTHERS
Leading
99
Won 49
BJP
BJP
Leading
118
Won 165
INC
INC
Leading
28
Won 17
TMC
TMC
Leading
28
Won 17
BSP
BSP
Leading
1
Won 0
AIADMK
AIADMK
Leading
30
Won 7
SP
SP
Leading
5
Won 1
TDP
TDP
Leading
15
Won 0
YSRC
YSRC
Leading
9
Won 0
BJD
BJD
Leading
20
Won 0
RJD
RJD
Leading
3
Won 0
DMK
DMK
Leading
0
Won 0
NCP
NCP
Leading
4
Won 2
JD(U)
JD(U)
Leading
1
Won 1
JD(S)
JD(S)
Leading
1
Won 1
AAP
AAP
Leading
3
Won 1

  • Replies 474
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன, மோடி..மோடின்னு 'தந்தி' சிந்து பாடுது? சரியா படலையே! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு தானும் ஒரு காரணம் என்று நடிகர் விஜய் சொன்ன போது விழுந்து விழுந்து சிரிச்சதுக்குப் பிறகு இப்பதான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வென்றதுக்கும் தானும் ஒரு காரணம் என்று சீமான் அண்ணை சொன்னதுக்கு விழுந்து விழுந்து சிரிக்கின்றன். :icon_mrgreen:

 

உங்களால் முடிஞ்சதே அவ்வளவு தான். அதுக்கு மேல முடிஞ்சா அதைச் செய்து காட்டிட்டு.. அவங்களப் பார்த்துச் சிரிக்கிறது மட்டும் தான் புத்திசாலித்தனம். மற்றும்படி நீங்க இப்ப செய்யுறதை பிறந்த குழந்தையும் செய்யும். உங்கள நினைக்க எங்களுக்கு டபிள் சிரிப்பு வருகுது. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு தானும் ஒரு காரணம் என்று நடிகர் விஜய் சொன்ன போது விழுந்து விழுந்து சிரிச்சதுக்குப் பிறகு இப்பதான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வென்றதுக்கும் தானும் ஒரு காரணம் என்று சீமான் அண்ணை சொன்னதுக்கு விழுந்து விழுந்து சிரிக்கின்றன். :icon_mrgreen:

 

 

உண்மைக்கு புறம்பான  கூற்று

வாதம்

 

இரு பெரும் மலைகள்  சரிந்ததுக்கு சீமானின் நாம் தமிழர்  கட்சியும்  ஒரு காரணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்


கூட்டணி    முடிவு
பா ஜ க                  227
காங்கிரஸ்             41
மாற்று அணி        13
மற்ற கட்சிகள்      51
ஆம் ஆத்மி             4

  • கருத்துக்கள உறவுகள்
30 ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு! - ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்த பரிசு - சீமான் 
[Friday, 2014-05-16 18:02:53]

seeman-jaya-160514-150.jpg

 

 நாட்டில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு அமைகிறது. நாடு இதுவரை 16 லோக்சபா தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இந்திரா படுகொலையால் ஏற்பட்ட அனுதாபத்தின் விளைவாக காங்கிரஸ் கட்சிக்கு 415 இடங்கள் கிடைத்தன. அதன் பின்னர் நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை.
 
  
எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவுக்கும் கிடைக்கவில்லை.தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா மத்திய அரசை அமைக்கிறது. பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். தற்போது பாஜக 277 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
 
அத்துடன் தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் அல்லாத முதல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மேலும் காங்கிரஸ் அல்லாத வலிமையான தனிப்பெரும்பான்மையுடன் கூடிய முதல் மத்திய அரசையும் பாரதிய ஜனதா அமைக்கிறது.
 
மேலும் இந்தியாவில் இதுவரை இருந்து வந்த கூட்டணி ஆட்சி சகாப்தம் என்பது முடிவுக்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்த பரிசு - சீமான்
 
தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததன் மூலமாக மதவாத சக்திகளுக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.
 
ஈழத்துயரங்களுக்குத் தீர்வு கேட்டும் தனித் தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தும், மூவர் தூக்கு விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தும் தமிழர் நலன் போற்றும் முதல்வராக திகழ்ந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அபரிவிதமான வெற்றியை ஈட்டிக் கொடுத்து வரலாற்றுப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.
 
எந்தக் கட்சியையும் கூட்டணிக்கு அழைக்காமல் மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலைச் சந்தித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் நல்ல நம்பிக்கையைப் பரிசளித்திருக்கிறார்கள்.
 
மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
 
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
 
திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி
 
பாராளுமன்ற தேர்தலில் முதல்�அமைச்சர் ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் களம் இறங்கினார்கள்.
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் பிரசாரம் செய்தார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
 
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி, ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்காக மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோரும் பிரசாரம் செய்தார்கள்.
 
முதல்�அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தை தி.மு.க., தே.மு.தி.க. ம.தி.மு.க., பா.ஜனதா காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் இந்த கட்சிக்காக பிரசாரம் செய்த நடிகர், நடிகைகள் மற்றும் பேச்சாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
 
முதல்�அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்தது. மின்தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். முதல்�அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்கள்.
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதிக தூரம் பயணம் செய்து சிறப்பாக பிரசாரம் செய்தார் என்று கூறப்பட்டது.
 
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். அவருக்கு அமோக ஆதரவு இருந்தது என்று அந்த கட்சியினர் கூறினார்கள்.
 
அ.தி.மு.க., ஓரளவு தொகுதிகளை கைப்பற்றினாலும், தி.மு.க., கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றி கிடைக்கும் என்று அந்த கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தி.மு.க. கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணியில் முக்கிய கட்சியாக கூறப்பட்ட தே.மு.தி.க.வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
 
தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ம.தி.மு.க.வும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழக பா.ஜனதா, பா.ம.க.வுக்கு மட்டும் ஆதரவாக தலா ஒரு இடம் கிடைக்கும் நிலை உள்ளது. எதிர்பார்த்தபடியே காங்கிரசும் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை.

பாஜக 206 தொகுதிகளில் வெற்றி: 76 தொகுதிகளில் முன்னிலை

மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில் பாஜக 206 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்


கூட்டணி    முடிவு
பா ஜ க                  229
காங்கிரஸ்             41
மாற்று அணி        13
மற்ற கட்சிகள்      51
ஆம் ஆத்மி             4

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழககாங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் ஐந்தை தவிர, மிகுதி எல்லா தொகுதிகளிலும் நாம் தமிழர் பிரச்சாரம் செய்தது. அந்த ஐந்து தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வென்றது. மிகுது 15 தொகுதிகளிலும் தோற்றது. இது ஒரு தற்செயலான நிகழ்வு எனலாம்.
  • 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்தது நாம் தமிழர். திமுக தனது பணபலத்தால் வென்றுவிடும் (திமுக + காங்கிரஸ் வலுவான கூட்டணி) என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 200 தொகுதிகளுக்கும் மேல் வென்று ஆட்சியைப் பிடித்தது அதிமுக. இதுவும் ஒரு தற்செயலான நிகழ்வுவாகும். :D
  • 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தும், திமுக, காங்கிரஸ், தேமுதிகவை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தது நாம் தமிழர் கட்சி.. அதிமுக வரலாறு காணாத வெற்றியை கூட்டணி இல்லாமலே பெற்றுக் கொள்கிறது. காங்கிரஸ், திமுக, தேமுதிகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.. :huh:

இதிலிருந்து இரண்டு விடயங்களை சிந்திக்கலாம்.

 

  • நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் ஓரளவுக்கு எடுபடுகிறது. அல்லது,
  • எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை அக்கட்சி சரியாக கணிக்கிறது. :D

 

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில்.. ரஜனி.. விஜய் அம்மாக்கு மறைமுகமாக வாக்குக் கேட்டாங்க.

 

இம்முறை.. மோடிக்கு.. பா ஜ கவிற்கு கேட்டாங்க.

 

பா ஜ க வை யாருமே எதிர்த்துப் பேசல்ல. நாம் தமிழர் மட்டும் பா ஜ கவின் தற்போதைய.. வெளிவிவாகரக் கொள்கை தமிழர்களுக்கு உகந்ததல்ல என்று வெளிப்படையாகச் சொன்னதோடு... 2009 ஈழத் தமிழ் இனப்படுகொலையில்.. அதற்கும் காங்கிரஸ் போல திமுக போல சம பங்குண்டு என்றும் சொன்னது.

 

பெரிய எதிர்பார்ப்புக்களோடு பா ஜ க கூட்டணியில் வை.கோ கூட போய் இணைந்தார்.

 

ஆனால் இறுதியில்.. அது வெறும் 2 இடங்களில் தான் வெல்ல முடிந்தது. அதில் ஒன்று பா ம க விற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வன்னியர் போட்ட வாக்கு. பா ஜ க விற்கோ... மோடிக்கோ அல்ல.

 

ஆக.. ரஜனி.. விஜய் மறைமுகமாக வலியுறுத்தியும்.. பா ஜ கவிற்கு ஏன் தமிழக மக்கள் வாக்குப் போடல்ல..?????! அதுகும் தற்செயலாகும். :lol::D

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்


கூட்டணி    முடிவு
பா ஜ க                  232
காங்கிரஸ்             41
மாற்று அணி        13
மற்ற கட்சிகள்      51
ஆம் ஆத்மி             4

  • கருத்துக்கள உறவுகள்

எம்மில் சிலருக்கு சீமான் எதனையும் சாதித்து விடக் கூடாது என்ற ஒரு உணர்வு தான் இருக்கு. இதனையே தான் ஈழப்போராட்ட ஆரம்பத்தில்.. இன்றைய ஒட்டுக்குழுக்கள் கொண்டிருந்தன. பிரபாகரன் எதனையும் சாதிக்கக் கூடாது என்று. அவர்களின் இன்றைய கருத்திலும் கூட.. அதை தான் காணவும் முடிகிறது. அதனால் தான்.. பிரபாகரன் தோற்றுவிட்டார் என்பதை மட்டுமே அவர்கள் முன்னிலைப்படுத்திக் கதைப்பார்கள்.பிரபாகரன் தவறு செய்திட்டார் என்பதை தான் சொல்வார்கள். இப்படியாப்பட்ட அரசியல் எங்களிடம் மட்டும் தான் உள்ளது. இதுவும் நாங்கள் உருப்படாததுக்கு ஒரு காரணம். சரியான தரிணத்தில் சரியானவர்களை சரியாக இனங்காணவும் பலப்படுத்தவும் தவறியமையும் கூட எமது இந்த அவல நிலைக்குக் காரணமாகும். எங்கும் சந்தேகத்தை விதைத்து சீரழிவதே எமது வேலை. அதனை கெட்டித்தனம் என்று வேற சொல்லிக்கிட்டு திரியுறது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ

 

1- காங்கிரசுக்கும்

2- திமுகவுக்கும்

3- தேமுகவுக்கும் 

ஒரு இடம் கூட  வரக்கூடாது என்றும்

 

4- பாரதீயஐனதாவை ஆதரிக்காதீர்கள் என்றும்

5- அதிமுக  எல்லா இடங்களிலும் வெல்லணும் என்றும்

உலகத்தில் எவருமே கணிக்கவில்லை

ஆனால் சீமான் சொன்னார்

அது நடந்திருக்கிறது

 

யாழில் கூட எவரும் கணிக்கவில்லை

இப்ப  வந்து அறிக்கைவிடுவது போலித்தனமானது

காலத்துக்கு ஏற்ப ஆடக்கூடாது

அது இந்தப்பழம் புளிக்கும் என்பது போன்றது

 

உங்களால் முடியாததை ஒருவர் செய்திருக்கின்றார்

வெற்றி  பெற்றிருக்கின்றார்

ஏற்றுக்கொள்ளப்பழகுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...சரியான தரிணத்தில் சரியானவர்களை சரியாக இனங்காணவும், பலப்படுத்தவும் தவறியமையும் கூட எமது இந்த அவல நிலைக்குக் காரணமாகும்...

 

அத்துடன் அவதானம் தேவை ஆனால் அவநம்பிக்கையுடன் எதையும் எதிர்க்காமல் அரவணைத்து செல்வதே தாமதத்தை / தோல்வியை தவிர்க்கும்..

 

" குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை "

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தி மு க விற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை அடுத்து தலிவிர் கலைஞர் அவர்கள் தன்னுடைய இளஞர் பட்டாலமான துறை முருகன்.....ஆர்க்காடு வீராசாமி......அன்பழகன்.......மற்றும் பொன்முடி அவர்களுடன் உல்லாச பயணம் மேற்கொண்டு மகாபலிபுரம் சென்று இருப்பதால் இளம் பெண்கள் ஈவ் டீசிங் கொடுமைக்கு ஆளாக கூடும் என்பதால் மகாபலிபுரம் கடலில் அவர்கள் குளிப்பது 3 நாட்களுக்கு தடை செய்யப்பட்டிருக்கு........

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சட்டமன்றத் தேர்தலில்.. ரஜனி.. விஜய் அம்மாக்கு மறைமுகமாக வாக்குக் கேட்டாங்க.

 

இம்முறை.. மோடிக்கு.. பா ஜ கவிற்கு கேட்டாங்க.

 

பா ஜ க வை யாருமே எதிர்த்துப் பேசல்ல. நாம் தமிழர் மட்டும் பா ஜ கவின் தற்போதைய.. வெளிவிவாகரக் கொள்கை தமிழர்களுக்கு உகந்ததல்ல என்று வெளிப்படையாகச் சொன்னதோடு... 2009 ஈழத் தமிழ் இனப்படுகொலையில்.. அதற்கும் காங்கிரஸ் போல திமுக போல சம பங்குண்டு என்றும் சொன்னது.

 

பெரிய எதிர்பார்ப்புக்களோடு பா ஜ க கூட்டணியில் வை.கோ கூட போய் இணைந்தார்.

 

ஆனால் இறுதியில்.. அது வெறும் 2 இடங்களில் தான் வெல்ல முடிந்தது. அதில் ஒன்று பா ம க விற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது வன்னியர் போட்ட வாக்கு. பா ஜ க விற்கோ... மோடிக்கோ அல்ல.

 

ஆக.. ரஜனி.. விஜய் மறைமுகமாக வலியுறுத்தியும்.. பா ஜ கவிற்கு ஏன் தமிழக மக்கள் வாக்குப் போடல்ல..?????! அதுகும் தற்செயலாகும். :lol::D

 

 

இப்பிடி பலவகைப்பட்ட தற்செயல் நிகழ்வுகள் நடந்துவிட்டன.. :D இன்னமும் வரும்..  :lol:

வாரணாசியில் மோடி- கெஜ்ரிவால் பெற்ற ஓட்டுவிவரம்

வாரணாசி: உ. பி., மாநிலம் புனித நகரான வாரணாசியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 5 லட்சத்து 16 ஆயிரத்து 593 ஓட்டுக்கள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 1லட்சத்து 79 ஆயிரத்து 739 ஓட்டுக்கள் பெற்றார்.

 

dinamalar

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நாட்டில் இறுதி முடிவுகள்:

அதிமுக - 37,

பிஜேபி - 1

பாமக - 1
என்.ஆர் காங் -1

54 தொகுதிகள் இருந்தால் மட்டுமே உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சித் தலைவர் பதவி காங்கீரசிற்குக் கீடைக்கும்.

இல்லாவிட்டால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்க மாட்டார்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்


கூட்டணி    முடிவு
பா ஜ க                  251
காங்கிரஸ்             45
மாற்று அணி        13
மற்ற கட்சிகள்      58
ஆம் ஆத்மி             4

  • கருத்துக்கள உறவுகள்

2009 இதே நேரம் கலைஞர் டில்லிக்கு விமானம் ஏறுகிறார். தனது பிள்ளைகளுக்கு அமைச்சு பதவி கேட்டு. என்ன விந்தை உலகம், அன்று நாம் அழுதோம், துரோகிகளும் காட்டி கொடுத்தவர்களும் எதிரியை விட கூடுதலாக சிரித்தார்கள். இன்று சத்திய மூர்த்தி பவனும் அறிவாலயமும் ஒப்பாரி வைக்கிறது. இவர்களை துரத்தினதிக்கு சீமானின் நாம் தமிழரும், மாணவர்களும் மற்றும் தமிழக மக்களுக்கும் மிக பெரும் பங்குண்டு

  • கருத்துக்கள உறவுகள்

2009 இதே நேரம் கலைஞர் டில்லிக்கு விமானம் ஏறுகிறார். தனது பிள்ளைகளுக்கு அமைச்சு பதவி கேட்டு. என்ன விந்தை உலகம், அன்று நாம் அழுதோம், துரோகிகளும் காட்டி கொடுத்தவர்களும் எதிரியை விட கூடுதலாக சிரித்தார்கள். இன்று சத்திய மூர்த்தி பவனும் அறிவாலயமும் ஒப்பாரி வைக்கிறது. இவர்களை துரத்தினதிக்கு சீமானின் நாம் தமிழரும், மாணவர்களும் மற்றும் தமிழக மக்களுக்கும் மிக பெரும் பங்குண்டு

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தர்மபுரி தொகுதியில் அன்புமணி (பா.ம.க) வெற்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்


கூட்டணி        முடிவு
பா ஜ க                  267
காங்கிரஸ்             48
மாற்று அணி        13
மற்ற கட்சிகள்      69
ஆம் ஆத்மி             4

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் 44 இடங்களை தான் மொத்தமாக வெல்லும். ஆனால் அதன் கூட்டணி.. 62 இடங்களை வெல்லலாம். இந்த நிலையில்.. காங்கிரஸ் கூட்டணி எதிர்கட்சி ஆகுமா..??! அல்லது அதிமுக உள்ளிட்ட 3ம் அணி எதிர்க்கட்சி ஆகுமா..???!

 

ராஜவன்னியன் அண்ணா.. உங்கள் அபிப்பிராயம் என்ன..??!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கூட்டணிக் கட்சிகளுக்கென மொத்தமாக எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்க வழியில்லை.

 

55 தொகுதிகளை எந்த தனிக்கட்சியும் வெல்லவில்லையெனில், எதிர்க்கட்சியே இல்லாமல்தான் இந்தமுறை பாராளுமன்றம் அமையும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.