Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதே எமது குறிக்கோள் : சி.வி

Featured Replies

வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதே எமது முக்கியமான குறிக்கோள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதன் மூலமே எமக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையேல் எமக்கு விமோசனம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
Lanka_1610364f_1.jpg
 
நேற்றுக்காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிரதேச கிராமங்களுக்கு விஜயம் செய்த முதலமைச்சர், அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள்ளும் சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
 
ஒட்டுசுட்டான்-வாவெட்டி, தட்டையான், கொக்குதொடுவாய் - கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் - புளியமுனை, நாயாறு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை வடமாகாண முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
 
இச்சந்திப்பின்போது பொதுமகன் ஒருவரினால் முதலமைச்சரிடம், வடக்கில் மக்களின் பிரச்சினைகள் பல உள்ளபோதும் இராணுவத்தினரை மட்டும் வெளியேற்ற வேண்டும் என ஏன் கூறி வருகின்றீர்கள் எனக் கேட்கப்பட்டது.
 
இதற்குப் பதிலளித்த வடமாகாண முதலமைச்சர், வடக்கில் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளதால் தான் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாமல் இழுபட்டு வருகின்றது. இன்று நீங்கள் சுட்டிக்காட்டும் நில ஆக்கிரமிப்பு, மீன்பிடித் தொழில் செய்யமுடியாத தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் போன்ற பிரச்சினைகளுக்கு பின்னால் இராணுவத்தினரின் இருப்பே மூலகாரணமாகவுள்ளது.
 
வடக்கு மாகாணத்தில் இன்று பாரிய பிரச்சினையாக இராணுவ ஆக்கிரமிப்பே உள்ளது. மக்கள் மீள்குடியமர முடியாமலும் அவர்கள் தமது சொந்த நிலங்களில் தொழில்களைச் செய்ய முடியாமலும் இருக்கின்றனர். இராணுவத்தினர் மக்கள் குடியிருந்த நிலங்களுடன் தொழில்செய்யக் கூடிய வளமான நிலங்களையும் அபகரித்துள்ளனர்.
 
எனவேதான் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு முதற்படியாக இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூறுகின்றேன் என்றார்.
 
இச் சந்திப்பின்போது வடமாகாண சபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், உறுப்பினர்களான வைத்தியக் கலாநிதி சிவமோகன், ரவிகரன், சயந்தன், கனகசுந்தர சுவாமி, சிவயோகம், திருமதி. மேரி கமலா குணசீலன், அஸ்மின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
முன்னதாக இன்று காலை ஒட்டுசுட்டான் வாவெட்டி, தட்டையன் மலைப்பகுதிகளுக்கு விஜயம் செய்த முதமைச்சர் அங்குமேற்கொள்ளப்பட்டு வரும் மலையை உடைத்து கருங்கல் எடுக்கும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் நிலைமைகளையும் அவர்கள் எதிர்நோக்கி வரும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகளையும் நேரில் பார்வையிட்டார்.
 
மாலை புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்த முதலமைச்சர், புதுக்குடியிருப்பு பரந்தன்வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்கான புதிய கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஒன்றுபட்ட இலங்கை என்கிறார். நீங்கள் இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்கிறீர்கள். ஒன்றுபட்ட இலங்கை என்றால்? இராணுவம் வெளியேறி எங்கே செல்வது? முதலில் மடியில் கட்டிவைத்திருக்கும் ஓணான்களை வெளியேற்றப்பாருங்கள். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஒன்றுபட்ட இலங்கை என்கிறார். நீங்கள் இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்கிறீர்கள். ஒன்றுபட்ட இலங்கை என்றால்? இராணுவம் வெளியேறி எங்கே செல்வது? முதலில் மடியில் கட்டிவைத்திருக்கும் ஓணான்களை வெளியேற்றப்பாருங்கள். :huh:

ஒன்றுபட்ட இலங்கையும், இராணுவ ஆக்கிரமிப்பும் ஒரே விடயங்கள் அல்ல. இராணுவம் இன்று மக்கள் வாழ்விடங்களில் நிலை கொண்டுள்ளது. அரச நிருவாகத்தில் இராணுவம் தலையிடுகிறது. இவற்றில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றே முதல் அமைச்சர் தெரிவிக்கிறார். சிங்கள பகுதிகளில் இராணுவம் இவற்றை செய்வதில்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்கு மட்டுமே இந்தியா முதல் அமேரிக்கா வரை உலக நாடுகள் ஆதரவளிக்கின்றன. பிளவுபட்ட இலங்கைக்கும் தமிழீழத்துக்கும் எந்த நாடும் ஆதரவில்லை. ஆகவே ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே அங்குள்ள மக்களுக்கு தீர்வு சாத்தியமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட இலங்கையும், இராணுவ ஆக்கிரமிப்பும் ஒரே விடயங்கள் அல்ல. இராணுவம் இன்று மக்கள் வாழ்விடங்களில் நிலை கொண்டுள்ளது. அரச நிருவாகத்தில் இராணுவம் தலையிடுகிறது. இவற்றில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றே முதல் அமைச்சர் தெரிவிக்கிறார். சிங்கள பகுதிகளில் இராணுவம் இவற்றை செய்வதில்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்கு மட்டுமே இந்தியா முதல் அமேரிக்கா வரை உலக நாடுகள் ஆதரவளிக்கின்றன. பிளவுபட்ட இலங்கைக்கும் தமிழீழத்துக்கும் எந்த நாடும் ஆதரவில்லை. ஆகவே ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே அங்குள்ள மக்களுக்கு தீர்வு சாத்தியமாகும்.

 

விக்கினேசுவரன் இராணுவத்தை வெளியேற்றட்டும்

சுயாட்சிக்கு போராடட்டும்

யெயலலிதா

தமிழீழத்துக்கு வாக்கெடுப்பு போராடுகிறார்....... :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட இலங்கையும், இராணுவ ஆக்கிரமிப்பும் ஒரே விடயங்கள் அல்ல. இராணுவம் இன்று மக்கள் வாழ்விடங்களில் நிலை கொண்டுள்ளது. அரச நிருவாகத்தில் இராணுவம் தலையிடுகிறது. இவற்றில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றே முதல் அமைச்சர் தெரிவிக்கிறார். சிங்கள பகுதிகளில் இராணுவம் இவற்றை செய்வதில்லை.

ஒன்றுபட்ட இலங்கைக்கு மட்டுமே இந்தியா முதல் அமேரிக்கா வரை உலக நாடுகள் ஆதரவளிக்கின்றன. பிளவுபட்ட இலங்கைக்கும் தமிழீழத்துக்கும் எந்த நாடும் ஆதரவில்லை. ஆகவே ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே அங்குள்ள மக்களுக்கு தீர்வு சாத்தியமாகும்.

 
இராணுவ முகாம்களின் அருகில் வாழ்வதற்கு .... அதை விட கூடிய சாத்தியம் இருக்கிறதே ???
இராணுவத்தை வெளியேற சொல்லி ஏன் கேட்கிறார்கள் ?
அது இராணுவத்தினரை கோபத்திற்கு உட்படுத்தாதா ??
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ முகாம்களின் அருகில் வாழ்வதற்கு .... அதை விட கூடிய சாத்தியம் இருக்கிறதே ???

அது தான் இன்றைய நிலை.

இராணுவத்தை வெளியேற சொல்லி ஏன் கேட்கிறார்கள் ?

முதல் அமைச்சரின் பதிலை படியுங்கள். மேலே உள்ளது.

அது இராணுவத்தினரை கோபத்திற்கு உட்படுத்தாதா ??

மனிதர்களுக்கு தான் உணர்ச்சிகள் உள்ளது. அமைப்புகளுக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் இன்றைய நிலை.

 

இன்றைய நிலை அதிக சாத்தியங்கள் உள்ளதாக இருக்கும்போது ....
இன்னொரு நிலைக்கு ஏன் போராடவேண்டும்?
என்னுடைய முதல் கேள்வியும் அதுதான்.
(சாத்தியமானதை மட்டுமே வைத்திருக்க வேண்டும் எனில் ...)

முதல் அமைச்சரின் பதிலை படியுங்கள். மேலே உள்ளது.

 

சிங்கள பேரின வாதத்தின் இன அழிப்பை நிறைவேற்றவே இராணுவம் எனும் அமைப்பு அங்கு இருக்கிறது (உங்கள் பார்வையில் அதற்கு உணர்சிகளும் இல்லை). சிங்கள பேரினவாதத்தை வைத்துகொண்டு 
இராணுவத்தை வெளியேற்றுவது எந்த வகையில் சாத்தியப்படும் ? 

மனிதர்களுக்கு தான் உணர்ச்சிகள் உள்ளது. அமைப்புகளுக்கு அல்ல.

 

அமைப்புக்களில் மனிதர்கள் இல்லையா ?? அமைப்புக்களில் மனிதர்கள் இல்லையா ?? 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட இலங்கையும், இராணுவ ஆக்கிரமிப்பும் ஒரே விடயங்கள் அல்ல. 

ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே அங்குள்ள மக்களுக்கு தீர்வு சாத்தியமாகும்.

 

'சிங்கள பேரின வாதத்தின் இன அழிப்பை நிறைவேற்றவே இராணுவம் எனும் அமைப்பு அங்கு இருக்கிறது.' மருதங்கேனி அவர்களின் இந்தப் பின்னூட்டமே உங்கள் கருத்துத் தவறானது என்பதற்கும் போதுமானது. 
 
ஒன்றுபட்ட இலங்கையும், இராணுவ ஆக்கிரமிப்பும். இலங்கையைப் பொறுத்தவரையில் இரண்டும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன. ஒன்றுபட்ட இலங்கை என்ற தோற்றப்பாட்டை வைத்தே அப்பட்டமான இராணுவ ஆக்கிரமிப்பை உலகத்தின் முன் இலங்கை அரசு நியாயப்படுத்தி வருகிறது. தமிழர் நிலங்களில் சிங்களரைக் குடியேற்றி, புத்த விகாரைகளை உருவாக்கித் தமிழின அழிப்பை மேற்கொள்வதற்கும், ஒன்றுபட்ட இலங்கை என்ற தோற்றமே ஆதரவளிக்கிறது. இவை கடந்தகால வரலாற்றிலும், தற்போதும் சிங்களம் செய்யும் சூழ்ச்சிகள் எதையும் கவனத்தில் கொள்ளாத தன்மையைக் கொண்டது. 
  • கருத்துக்கள உறவுகள்

 

'சிங்கள பேரின வாதத்தின் இன அழிப்பை நிறைவேற்றவே இராணுவம் எனும் அமைப்பு அங்கு இருக்கிறது.' மருதங்கேனி அவர்களின் இந்தப் பின்னூட்டமே உங்கள் கருத்துத் தவறானது என்பதற்கும் போதுமானது. 
 
ஒன்றுபட்ட இலங்கையும், இராணுவ ஆக்கிரமிப்பும். இலங்கையைப் பொறுத்தவரையில் இரண்டும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன. ஒன்றுபட்ட இலங்கை என்ற தோற்றப்பாட்டை வைத்தே அப்பட்டமான இராணுவ ஆக்கிரமிப்பை உலகத்தின் முன் இலங்கை அரசு நியாயப்படுத்தி வருகிறது. தமிழர் நிலங்களில் சிங்களரைக் குடியேற்றி, புத்த விகாரைகளை உருவாக்கித் தமிழின அழிப்பை மேற்கொள்வதற்கும், ஒன்றுபட்ட இலங்கை என்ற தோற்றமே ஆதரவளிக்கிறது. இவை கடந்தகால வரலாற்றிலும், தற்போதும் சிங்களம் செய்யும் சூழ்ச்சிகள் எதையும் கவனத்தில் கொள்ளாத தன்மையைக் கொண்டது. 

 

 

சிலர்  நினைக்கிறார்கள்

ஏதோ தமிழன் தாயகக்கோரிக்கையை 

எந்தவித தார்ப்பரியங்களுமற்று

ஒரே நாளில் முடிவெடுத்து

ஒற்றைக்காலில் நிற்பதாக.........

 

குனிந்து 

குனிந்து

வளைந்து  வளைந்து

ஓட ஒட வெருட்டப்பட்டு

வெட்டப்பட்டு

படிப்பிழந்து

வேலையிழந்து

வீடு இழந்து

சொத்திழந்து

நிலமிழந்து

நாட்டையுமிழந்து......

தமிழன் நிர்க்கதியாக நிற்பதற்கு எவன் காரணம்......???

 

அவனிடதிருந்து

நியாயம் கேளாது

அவனிடம் உரிமை கேளாது

எம்மையே  நாம் சொறிந்து வரும்வரை.....

தமிழனுக்கான நீதி..........??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

'சிங்கள பேரின வாதத்தின் இன அழிப்பை நிறைவேற்றவே இராணுவம் எனும் அமைப்பு அங்கு இருக்கிறது.' மருதங்கேனி அவர்களின் இந்தப் பின்னூட்டமே உங்கள் கருத்துத் தவறானது என்பதற்கும் போதுமானது.

இலங்கையில் ஜே வி பி கிளர்ச்சி இடம் பெற்ற காலத்தில் சிங்கள பகுதிகளில் இராணுவம் பெரும் தொகையான இளையோரை கொன்று வீதியோரங்களில் போட்டு எரித்தது. கிளர்ச்சி மீளவும் தோன்றலாம் என கருதப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் நிலை கொண்டது. ஜே வி பி தலைவர் ரோகன விஜேவீரா வின் குடும்பம் இன்றும் இராணுவ முகாமிற்குள் கட்டுப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகிறது. இது இன அழிப்பு அல்ல.

ஜே வி பி கிளர்ச்சி போல விடுதலை புலிகளின் கிளர்ச்சி ஏற்பட்ட பகுதிகளிலும் இன்று இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளது. ஆனால் விடுதலை புலிகளின் கிளர்ச்சி மிகப் பெரிய அளவிலானதும் சர்வதேச மயப்பட்டதுமாகும். சாதாரண நிலை ஏற்பட இராணுவம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். இதையே முதல் அமைச்சர் கேட்கிறார். கிளர்ச்சி செய்தவர்கள் தமிழர்கள் ஆவதால் இந்த இராணுவ நடவடிக்கையை இன அழிப்பு என்று சொல்வது சாத்தியமாக இருக்கிறது. அதே நேரம், தமிழர்களை தமிழ் ஆயுதக் குழுக்கள் பெருமளவில் கொன்றுள்ளன. இன்றும் கொன்று வருகின்றன. இதை எப்படி இன அழிப்பு என்று சொல்ல முடியும்?

 

ஒன்றுபட்ட இலங்கையும், இராணுவ ஆக்கிரமிப்பும். இலங்கையைப் பொறுத்தவரையில் இரண்டும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன.

அது தான் இன்றைய நிலை. அதை மாற்றி அமைக்க உலக மற்றும் இந்திய ஆதரவு உள்ளது. சிங்கள மக்களில் நியாயமான பார்வை கொண்ட தலைவர்களின் ஆதரவும் அதற்கு உண்டு. இதையே தமிழ் தலைவர்களான சம்பந்தனும் முதல் அமைச்சரும் மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஜே வி பி கிளர்ச்சி இடம் பெற்ற காலத்தில் சிங்கள பகுதிகளில் இராணுவம் பெரும் தொகையான இளையோரை கொன்று வீதியோரங்களில் போட்டு எரித்தது. கிளர்ச்சி மீளவும் தோன்றலாம் என கருதப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் நிலை கொண்டது. ஜே வி பி தலைவர் ரோகன விஜேவீரா வின் குடும்பம் இன்றும் இராணுவ முகாமிற்குள் கட்டுப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகிறது. இது இன அழிப்பு அல்ல.

ஜே வி பி கிளர்ச்சி போல விடுதலை புலிகளின் கிளர்ச்சி ஏற்பட்ட பகுதிகளிலும் இன்று இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளது. ஆனால் விடுதலை புலிகளின் கிளர்ச்சி மிகப் பெரிய அளவிலானதும் சர்வதேச மயப்பட்டதுமாகும். சாதாரண நிலை ஏற்பட இராணுவம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். இதையே முதல் அமைச்சர் கேட்கிறார். கிளர்ச்சி செய்தவர்கள் தமிழர்கள் ஆவதால் இந்த இராணுவ நடவடிக்கையை இன அழிப்பு என்று சொல்வது சாத்தியமாக இருக்கிறது. அதே நேரம், தமிழர்களை தமிழ் ஆயுதக் குழுக்கள் பெருமளவில் கொன்றுள்ளன. இன்றும் கொன்று வருகின்றன. இதை எப்படி இன அழிப்பு என்று சொல்ல முடியும்?

 

அது தான் இன்றைய நிலை. அதை மாற்றி அமைக்க உலக மற்றும் இந்திய ஆதரவு உள்ளது. சிங்கள மக்களில் நியாயமான பார்வை கொண்ட தலைவர்களின் ஆதரவும் அதற்கு உண்டு. இதையே தமிழ் தலைவர்களான சம்பந்தனும் முதல் அமைச்சரும் மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள்.

 

யே.வீ.பி ஆட்சிமாற்றம் தேடி, அதிகாரம் தேடிக் கிளர்ச்சி செய்தது. அதற்காக அவர்களுடைய இனம், மொழி, மத, கலாச்சாரங்கள் அழிக்கப்படவில்லை. 
 
தமிழர்கள் விடுதலை வேண்டிப், பாதுகாப்புத் தேடிப் போராடியவர்கள். அதற்காக அந்த இனமே அழிக்கப்படுகிறது.
 
அதிகாரம் தேடி கிளர்ச்சி செய்வதற்கும். விடுதலை வேண்டிப் போராடுவதற்கும் வேறுபாடுகள் நிறையவே உண்டு,
 
உங்களுக்கு விளங்கவில்லை என எண்ணி நான் இங்கு விளக்கம்தர முற்படவில்லை. உங்களுக்குத் தெளிவான விளக்கம் உள்ளதை உங்கள் ஊட்டங்களில் கண்டுள்ளேன். உங்கள் எழுத்துத் தோற்றுவிடக் கூடாது என்ற கவலையே உண்மையை எழுதவிடாது உங்களைத் தயங்கவைப்பது போல் தெரிகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஜே வி பி கிளர்ச்சி இடம் பெற்ற காலத்தில் சிங்கள பகுதிகளில் இராணுவம் பெரும் தொகையான இளையோரை கொன்று வீதியோரங்களில் போட்டு எரித்தது. கிளர்ச்சி மீளவும் தோன்றலாம் என கருதப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் நிலை கொண்டது. ஜே வி பி தலைவர் ரோகன விஜேவீரா வின் குடும்பம் இன்றும் இராணுவ முகாமிற்குள் கட்டுப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகிறது. இது இன அழிப்பு அல்ல.

ஜே வி பி கிளர்ச்சி போல விடுதலை புலிகளின் கிளர்ச்சி ஏற்பட்ட பகுதிகளிலும் இன்று இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளது. ஆனால் விடுதலை புலிகளின் கிளர்ச்சி மிகப் பெரிய அளவிலானதும் சர்வதேச மயப்பட்டதுமாகும். சாதாரண நிலை ஏற்பட இராணுவம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். இதையே முதல் அமைச்சர் கேட்கிறார். கிளர்ச்சி செய்தவர்கள் தமிழர்கள் ஆவதால் இந்த இராணுவ நடவடிக்கையை இன அழிப்பு என்று சொல்வது சாத்தியமாக இருக்கிறது. அதே நேரம், தமிழர்களை தமிழ் ஆயுதக் குழுக்கள் பெருமளவில் கொன்றுள்ளன. இன்றும் கொன்று வருகின்றன. இதை எப்படி இன அழிப்பு என்று சொல்ல முடியும்?

 

.

 

அந்த இராணுவத்தில் தமிழர்களின் வீதாசாரத்திற்கு ஏற்றவகையில் தமிழர்கள் இராணுவத்தில் இருந்திருந்தால் நீங்கள் சொல்வதை ஒரளவுக்கு ஏற்கமுடியும்.....

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இராணுவத்தில் தமிழர்களின் வீதாசாரத்திற்கு ஏற்றவகையில் தமிழர்கள் இராணுவத்தில் இருந்திருந்தால் நீங்கள் சொல்வதை ஒரளவுக்கு ஏற்கமுடியும்.....

தமிழர் தலைவர்கள் தமிழ் இளையோர் இராணுவத்தில் சேர்வதை என்றும் ஊக்குவிக்கவில்லை. மாறாக அவ்வாறு சேர்வது இன துரோகமாக காட்டப்பட்டது. அதே நேரம் கிளர்ச்சி அமைப்புகளில் தமிழ் இளையோர் சேர்வதை தமிழர் தலைமைகள் ஊக்குவித்து வந்தனர். இவற்றை மீறி இராணுவத்தில் இணைந்து உயர் பதவிகளில் தமிழர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் விகிதாசாரப்படி பெரும்தொகையில் இணைந்திருக்க மக்கள் தலைவர்களின் ஆதரவு தேவை.

கிளர்ச்சிக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கும் இன அழிப்புக்கான இராணுவ நடவடிக்கைக்கும் வேறுபாடு இருக்கிறது.

யூதர்களுக்கு எதிரான நாசி இராணுவ நடவடிக்கையே இன்றும் இன அழிப்புக்கான இராணுவ நடவடிக்கைக்கு உதாரணமாக கொள்ள படுகிறது. இந்த நடவடிக்கையில் நீங்கள் ஒரு யூதராக பிறந்திருந்தால் அதுவே உங்களை அழிக்க போதுமானது. மேலும் இவ்வாறாக ஒரு யூதரும் தப்பிவிடாதபடி அனைவரும் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டனர்.

இலங்கையில் இன்றும் தமிழர் பலர் செல்வந்தர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் வசதியாகவும் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றனர். இதனாலேயே உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையில் இடம்பெறுவது இன அழிப்பு என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

அதே நேரம் இலங்கையில் இன பாகுபாடு, இன கலவரங்கள், இன படுகொலைகள், அரசியல் படுகொலைகள், போரின் இறுதி நாளில் பெருமளவிலான இன படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என்பதை உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

யே.வீ.பி ஆட்சிமாற்றம் தேடி, அதிகாரம் தேடிக் கிளர்ச்சி செய்தது. அதற்காக அவர்களுடைய இனம், மொழி, மத, கலாச்சாரங்கள் அழிக்கப்படவில்லை.

 

இலங்கையில் தமிழர்களும் அதிகாரம் தேடியே கிளர்ச்சி செய்தனர். தனி நாடு என்பது தனியான ஆட்சி செய்யும் அதிகாரத்துக்கான அமைப்பாகும்.

தமிழர்கள் விடுதலை வேண்டிப், பாதுகாப்புத் தேடிப் போராடியவர்கள். அதற்காக அந்த இனமே அழிக்கப்படுகிறது.

பாதுகாப்பு தேடிய போராட்டம், பாதுகாப்பு தேடுவதில் மட்டும் கவனம் செலுத்தி அமைந்திருந்தால் உங்கள் கருத்து சரியானதாக இருந்திருக்கும். தனி நாடு ஒன்றை ஒரு இனத்துக்காக உருவாக்க நடந்த ஆயுதப்போராட்டம் ஆட்சி செய்யும் அதிகாரத்துக்கான போராட்டமாகும். அதில் ஒரு இனம் ஈடுபட்டதனால் உண்டான அழிவுகள் அந்த இனத்துக்கு ஏற்பட்டது.

விக்கினேஸ்வரன் சொன்னதில் விளங்க என்ன இருக்கு ?எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே ?

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கையில் தமிழர்களும் அதிகாரம் தேடியே கிளர்ச்சி செய்தனர். தனி நாடு என்பது தனியான ஆட்சி செய்யும் அதிகாரத்துக்கான அமைப்பாகும்.

பாதுகாப்பு தேடிய போராட்டம், பாதுகாப்பு தேடுவதில் மட்டும் கவனம் செலுத்தி அமைந்திருந்தால் உங்கள் கருத்து சரியானதாக இருந்திருக்கும். தனி நாடு ஒன்றை ஒரு இனத்துக்காக உருவாக்க நடந்த ஆயுதப்போராட்டம் ஆட்சி செய்யும் அதிகாரத்துக்கான போராட்டமாகும். அதில் ஒரு இனம் ஈடுபட்டதனால் உண்டான அழிவுகள் அந்த இனத்துக்கு ஏற்பட்டது.

 

 

மிகவும் தத்தரூபமான உண்மை.
அதிகாரத்திற்காக ஒரு இனம் போராடியபோது ... அதை கட்டுபடுத்த  அரசு சில  குண்டுகளை வீசியது  குண்டுகளுக்குள் இருந்த வெடிமருந்து வெடித்து. அதிகாரத்திற்காக போராடிய இனத்தின் 
சொத்துகள் உடைமைகள் உயிர்கள் சேதமாகின.
போராடியவர்கள் மிகவும் கவன குறைவாக இருந்திருக்கிறார்கள் என்பது என்னுடைய தனிபட்ட கருத்து.
உடைமைகள் உயிர்களை வேறு பாதுகாப்பான இடத்தில் கொண்டுசென்று வைத்திருக்கலாம். 
இப்போ அரசை பிழை சொல்வது எனக்கு சரியாக படவில்லை.
 
ஆனால் எமது அரசின் இராணுவத்தை எமது நாட்டின் ஒரு பகுதியில்  இருந்து வெளியேறும்படி ஏன் கேட்கிறார்கள் சில கிளர்ச்சியாளர்கள்? என்பது மட்டும் சரியாக புரியவில்லை.
மீண்டும் எமது அரசு அந்த கிளர்ச்சியாளர்களை அடக்க அந்த கிளர்ச்சியாளர்களின் இனத்தின் மீது வெடிமருந்து நிரம்பிய குண்டுகளை வீசாதா ?
  • கருத்துக்கள உறவுகள்

போராடியவர்கள் மிகவும் கவன குறைவாக இருந்திருக்கிறார்கள் என்பது என்னுடைய தனிபட்ட கருத்து.

உடைமைகள் உயிர்களை வேறு பாதுகாப்பான இடத்தில் கொண்டுசென்று வைத்திருக்கலாம். 

இப்போ அரசை பிழை சொல்வது எனக்கு சரியாக படவில்லை.

அது உங்களுடைய தனிப்பட்ட கருத்து.

 

ஆனால் எமது அரசின் இராணுவத்தை எமது நாட்டின் ஒரு பகுதியில்  இருந்து வெளியேறும்படி ஏன் கேட்கிறார்கள் சில கிளர்ச்சியாளர்கள்? என்பது மட்டும் சரியாக புரியவில்லை.

முதல் அமைச்சர் அதை விளக்கி இருக்கிறார். இந்த திரியின் ஆரம்பத்தில் உள்ளது.

 

மீண்டும் எமது அரசு அந்த கிளர்ச்சியாளர்களை அடக்க அந்த கிளர்ச்சியாளர்களின் இனத்தின் மீது வெடிமருந்து நிரம்பிய குண்டுகளை வீசாதா ?

நிச்சயமாக குண்டுகளை வீசி மீதமுள்ளவர்களையும் அழிக்கும். அதை தடுக்கத்தான் கிளர்ச்சி இல்லாத போர் இல்லாத தீர்வு தேவை. அது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள்ளேயே அமைய முடியும்.
  • கருத்துக்கள உறவுகள்
அப்போ இப்படியே அவர்களை பேசாமல் இருக்க விடுவதுதான் உத்தமம்.
ஒரு காலத்தில் அவர்களுக்கு போர் அடிக்கும்போது சில வேளைகளில்  விட்டு விட்டு போய்விடுவார்கள்.
 
இப்போ இந்த திரியின் எனது முதலாவது கருத்தை சென்று வாசியுங்கள் .....
 
உங்களை இந்த இடத்திற்கு கூட்டிவர வேண்டும் என்று தான் திரும்ப திருப்ப எழுதினேன்.
  • கருத்துக்கள உறவுகள்
அதிகாரத்தை தவிர ஏனையவை அமுலாகும் என்றும் நம்பவில்லை. ஆனால், ஜனநாயக அரசியல் பரப்பில் எமது பரப்புரைகளை விட்டுகொடுக்காமல் முன் கொண்டு சென்றால்தான், பொதுஜன கருத்தோட்டங்களை உருவாக்கினால்தான், சளைக்காமல் போராடினால்தான், இன்றில்லாவிட்டால், நாளை அல்லது நாளை மறுநாள், ஒருநாள் விடிவு வரும் என நம்புகிறேன். இப்படி நல்லது நடக்கும் என சளைக்காமல் நம்பும் என்னை நான் நம்புகிறேன். வேறு எதையும், எவரையும் நான் நம்புவது இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக அரசியல் பரப்பில் எமது பரப்புரைகளை விட்டுகொடுக்காமல் முன் கொண்டு சென்றால்தான், பொதுஜன கருத்தோட்டங்களை உருவாக்கினால்தான், சளைக்காமல் போராடினால்தான், இன்றில்லாவிட்டால், நாளை அல்லது நாளை மறுநாள், ஒருநாள் விடிவு வரும் என நம்புகிறேன். இப்படி நல்லது நடக்கும் என சளைக்காமல் நம்பும் என்னை நான் நம்புகிறேன். வேறு எதையும், எவரையும் நான் நம்புவது இல்லை.

நானும் ஒவ்வொரு நாளும் கடவுளை வழிபடுகின்றேன் கண்ணை திறக்காமல் விடுவாரா என்ன . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
இருந்தால் திறப்பார் ...............
இல்லாதவர் ??
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஒவ்வொரு நாளும் கடவுளை வழிபடுகின்றேன் கண்ணை திறக்காமல் விடுவாரா என்ன . :icon_mrgreen:

 

உங்களைப்போலை ஆக்களுக்கு கடவுள் 2009ம் ஆண்டே கண்ணை திறந்துட்டார்  :lol:  .......இன்னும் பத்தியப்படேல்லையே?  :icon_mrgreen:

இப்போது இராணுவத்தினரை வடக்கு கிழக்கில் வைத்திருப்பது புலிகள் மீண்டும் உருவாகிவிடுவார்கள் என்ற பயத்தில் அல்ல. இன்றைய தமிழ் மக்களின் போக்கை புரிந்து கொண்ட சிங்களத்துக்கு இது நடக்க சாத்தியம் மிகக் குறைவு என்று நன்கு தெரியும்.ஒற்றுமை அற்ற ஒரு இனத்துக்கு பிரபாகரன் ஒரு வரலாற்று விபத்து என்று அவர்களுக்குத் தெரியும்.   ஆனால் இன்னும் இராணுவத்தினரை வைத்திருப்பதன் முக்கிய காரணமே வடக்கின் முக்கிய பகுதிகள், வடக்கு கிழக்கு நிலத் தொடர்ச்சியை பேணும் பிரதேசங்கள் அனைத்திலும் சிங்கள குடியேற்றங்களையும், இராணுவ குடும்பங்களின் குடியேற்றங்களையும் தம் சிங்கள மேலாதிக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மேற்கொள்ளுவதற்கே.

 

இலங்கை முழுதும் தமிழ் மக்களின் எண்ணிக்கையை சிதறடித்து, வன்னிக் காடுகள், கேந்திர முக்கியத்துவமிக்க இடங்கள் அனைத்தும் சிங்கள மயமாக்கி வரலாற்று விபத்தாக இன்னுமொரு பிரபாகரன் தோன்றக் கூடாது என்பதில் சிங்களம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது.

 

இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மக்கள் பெரும்பான்மையான வசிக்கும் இடம் என்றது இல்லாமல் போய்விடும். இது மகிந்த இருந்தாலென்ன, ரணில் வந்தாலென்ன, இந்த நிகழ்ச்சி நிரல் மாறப்போவதில்லை. அது வரைக்கும் இராணுவ வெளியேற்றம் நடக்க சாத்தியமில்லை.

 

இதே போன்று, சாதி, மதம், பிரதேசவாதம், வர்க்க முரண்பாடுகள் அனைத்தையும் கடந்து தமிழ் இன அடையாளத்தின் கீழ் தமிழர்கள் ஓரணியில் திரள்வதற்கும் அவ்வாறு திரண்டு சிங்கள நிகழ்ச்சி நிரலை சாத்தியமற்றதாக்குவதற்கும் வாய்ப்பு இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒவ்வொரு நாளும் கடவுளை வழிபடுகின்றேன் கண்ணை திறக்காமல் விடுவாரா என்ன . :icon_mrgreen:

 

 

கடைசி உமா தண்டவாளத்தில் கிடந்த போதாவது உங்களுக்கு அறிவு கண்ணை கடவுள் திறந்திருக்க வேண்டும். :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.