Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்தது இந்திய அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்தது இந்திய அரசு
வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014 16:24
index(920).jpg
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராகேஷ்சிங் கடந்த ஜூன் 5ஆம் திகதி வெளியிட்ட அரசாரணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 
 
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது. 
 
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு தெரிவித்த காரணம் சரியானதுதானா என்தை அந்த அந்த தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிரவாத இயக்கம் என்று கூறி ஒரு அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு அது சரியா என்பதை கண்டறிய இதுபோன்ற தீர்ப்பாயம் அமைக்கப்படுவது வழக்கமான நடவடிக்கைதான். 
 
இதன் மூலம், தடையை விலக்க கோரும் வாய்ப்பு சம்மந்தப்பட்ட அமைப்புக்கோ, அதன் ஆதரவாளர்களுக்கோ வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த மே 14ஆம் திகதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் விடுதலைப் புலிகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்க மத்திய அரசு சில காரணங்களை கூறியிருந்தது. 
 
அதில், விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையை மையமாக கொண்டு செயற்பட்டாலும் அதற்கு இந்தியாவில் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் உள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகும், ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் செயல்டுகிறார்கள். 
 
அதன் தலைவர்கள் ஈழம் கோரிக்கைக்காக நிதி திரட்டுதல், பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. 
 
இதனால் அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ், 2012, மே 14ஆம் திகதி முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம்வரை வழக்குகழ் வதிவு செய்யப்பட்டன. 
 
சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலை புலிகளுக்கு சாதகமாகவும், ஈழம் கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளின் வாழும் இலங்கை தமிழரக்ள் சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 
 
இலங்கையில் விடுதலை புலிகளை வீழ்த்த இந்திய மத்திய அரசே காரணம் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள், இதுபோன்ற பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையை தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 
அந்த இயக்த்தினராலும், அதன் ஆதரவாளர்களாலும் இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு நேரும் என்பதால் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிவாத அமைப்பு என அறிவித்து அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/114144-2014-06-13-10-56-26.html
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே அரசியல்தான்டா.. இல்லாத கொடுமைக்குத்தான்டா.. :D

டெயிலி மிரர் நல்லா அம்புலி மாமா கதை எழுதினம்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுமா?: ஆராய குழு அமைப்பு!

 

 

புதுடெல்லி: விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர போதுமான காரணம் உள்ளதா என்பது குறித்து ஆராய தீர்ப்பாயம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது விடுதலைப்புலிகளுக்கான இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தடையை நீடித்துக் கொண்டே வந்தது.

ஆட்சி முடியும் தருவாயில், அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகளுக்கான தடையை ஐந்தாண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள், கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, மத்தியில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி பதவியேற்றது. இந்நிலையில், விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக ஆராய தீர்ப்பாயம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அமைத்துள்ளது.

சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு, விடுதலைப்புலிகளுக்கான தடையை தொடர போதுமான காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரித்து முடிவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=28964

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் அரசு போவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவசர அவசரமாக புலிகள் மீதான தடையை 5 வருடங்களால் நீடித்து விட்டு சென்றது.... இப்பொழுது மோடி தலைமையிலான அரசு அந்த தடையை மீள் ஆய்வு செய்யுமாறு பணித்திருப்பதன் மூலம் மத்திய அரசு சிறி லங்கா விற்கு கடுமையான ஒரு செய்தியை கொடுக்க விரும்புவதாகவே என்ன தோன்றுகின்றது......

தண்ணீரே இல்லாத ஆற்றின் தடத்திற்கு அணை தேவைதானா? என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய இந்திய அரசு தீர்ப்பாயம் அமைத்தது:-

 

 

LTTE.jpg

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராகேஷ்சிங் கடந்த ஜூன் 5ஆம் திகதி வெளியிட்ட அரசாரணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 5(1) பிரிவின்படி டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது. 

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு தெரிவித்த காரணம் சரியானதுதானா என்தை அந்த அந்த தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிரவாத இயக்கம் என்று கூறி ஒரு அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு அது சரியா என்பதை கண்டறிய இதுபோன்ற தீர்ப்பாயம் அமைக்கப்படுவது வழக்கமான நடவடிக்கைதான். 

இதன் மூலம், தடையை விலக்க கோரும் வாய்ப்பு சம்மந்தப்பட்ட அமைப்புக்கோ, அதன் ஆதரவாளர்களுக்கோ வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த மே 14ஆம் திகதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் விடுதலைப் புலிகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்க மத்திய அரசு சில காரணங்களை கூறியிருந்தது. 

அதில், விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையை மையமாக கொண்டு செயற்பட்டாலும் அதற்கு இந்தியாவில் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் உள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒடுக்கப்பட்ட பிறகும், ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் செயல்டுகிறார்கள். 

அதன் தலைவர்கள் ஈழம் கோரிக்கைக்காக நிதி திரட்டுதல், பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. 

இதனால் அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ், 2012, மே 14ஆம் திகதி முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம்வரை வழக்குகழ் வதிவு செய்யப்பட்டன. 

சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதலை புலிகளுக்கு சாதகமாகவும், ஈழம் கோரிக்கையை ஆதரித்தும் இணையதளம் மூலம் வெளிநாடுகளின் வாழும் இலங்கை தமிழரக்ள் சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

இலங்கையில் விடுதலை புலிகளை வீழ்த்த இந்திய மத்திய அரசே காரணம் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள், இதுபோன்ற பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையை தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

அந்த இயக்த்தினராலும், அதன் ஆதரவாளர்களாலும் இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு நேரும் என்பதால் விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிவாத அமைப்பு என அறிவித்து அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108114/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆயுதப் போராட்டம், பல நூறு வருடங்களுக்கு இந்திய, சிறீலங்கா அரசுகளின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும்போல் தெரிகிறது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆயுதப் போராட்டம், பல நூறு வருடங்களுக்கு இந்திய, சிறீலங்கா அரசுகளின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும்போல் தெரிகிறது. :icon_idea:

 

தன் நலமான முடிவுகளே  குறுகிற  ஆயுள் கொண்டவை

பொது  நலன் கருதி

தலைவர் எடுக்கும் முடிவுகள்

நீண்டதூரப்பார்வை  கொண்டவை  என்பதை  நம்பபவன் நான்

அந்த நம்பிக்கைக்கு  காரணம்

அவரது பல பார்வைகள் சரியாக இருந்ததும்

காலம் கடந்தும் நிரூபித்துவருவதுமேயாகும்.

தன் நலமான முடிவுகளே குறுகிற ஆயுள் கொண்டவை

பொது நலன் கருதி

தலைவர் எடுக்கும் முடிவுகள்

நீண்டதூரப்பார்வை கொண்டவை என்பதை நம்பபவன் நான்

அந்த நம்பிக்கைக்கு காரணம்

அவரது பல பார்வைகள் சரியாக இருந்ததும்

காலம் கடந்தும் நிரூபித்துவருவதுமேயாகும்.

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

தன் நலமான முடிவுகளே  குறுகிற  ஆயுள் கொண்டவை

பொது  நலன் கருதி

தலைவர் எடுக்கும் முடிவுகள்

நீண்டதூரப்பார்வை  கொண்டவை  என்பதை  நம்பபவன் நான்

அந்த நம்பிக்கைக்கு  காரணம்

அவரது பல பார்வைகள் சரியாக இருந்ததும்

காலம் கடந்தும் நிரூபித்துவருவதுமேயாகும்.

 

 

இது உண்மை.மேற்கு நாடுகள் தான் இதற்கு மீண்டும் உதாரணமாகிறது. சிறு கருத்து முரண்பாடுகள் (உ+ம்: மீன்பிடித்தல்) இருப்பினும் அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள். மறு பக்கம் எதிரிக்கு அடிக்க ஒன்றாகி விடுவார்கள். இவர்கள் ஒரு காலத்தில் ஒருவருக்கு ஒருவர் அடிபட்டுக்கொண்டவர்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆயுதப் போராட்டம், பல நூறு வருடங்களுக்கு இந்திய, சிறீலங்கா அரசுகளின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும்போல் தெரிகிறது. :icon_idea:

அறிவின் உச்ச கட்டம் இதுதான் .இதற்கு சிலர் விளக்கம் வேறு .

இந்திய சிறிலங்காவில் விடுதலை புலிகளை பற்றிய நிலைப்பாடு என்ன என்று தான் ஆராய்கின்றார்கள் .தங்களது அரசுகளின் செயற்பாடுகளை அல்ல .

இப்படி அறிவுள்ளவர்களை மட்டும் புலிகள் பொறுக்கியேடுத்ததை பற்றி புலிகள் பெருமை கொள்ளலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அறிவின் உச்ச கட்டம் இதுதான் .இதற்கு சிலர் விளக்கம் வேறு .

இந்திய சிறிலங்காவில் விடுதலை புலிகளை பற்றிய நிலைப்பாடு என்ன என்று தான் ஆராய்கின்றார்கள் .தங்களது அரசுகளின் செயற்பாடுகளை அல்ல .

இப்படி அறிவுள்ளவர்களை மட்டும் புலிகள் பொறுக்கியேடுத்ததை பற்றி புலிகள் பெருமை கொள்ளலாம் .

 

 

உங்களின் மெத்தப்படித்த அறிவின் படி புலிகளின் நிலைப்பாட்டை பற்றி ஆராய இன்னும்  எவ்வளவு காலம் தோராயமாக  எடுக்கும்?
 
உங்களை போன்ற அறிவாளிகளால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் எவை?? எப்படி அம்முன்னேற்றங்கள் நடை பெற்றன என தமிழ் மக்கள் அறியலாமா??
 
ஏன் இன்னும் மக்கள் முன் தோன்றாமல் மறைவாக இருக்கிறீர்கள்?? வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட செவ்விகளை ஏன் இன்னும் ஒளித்து வைத்துள்ளீர்கள்?? மக்களுக்கு போட்டுக்காட்டுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

அறிவின் உச்ச கட்டம் இதுதான் .இதற்கு சிலர் விளக்கம் வேறு .

இந்திய சிறிலங்காவில் விடுதலை புலிகளை பற்றிய நிலைப்பாடு என்ன என்று தான் ஆராய்கின்றார்கள் .தங்களது அரசுகளின் செயற்பாடுகளை அல்ல .

இப்படி அறிவுள்ளவர்களை மட்டும் புலிகள் பொறுக்கியேடுத்ததை பற்றி புலிகள் பெருமை கொள்ளலாம் .

 

ஒவ்வொருவருடைய மூளையும் அது தன் அறிவைக்கொண்டே தனது சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் வெளிப்படுத்தும். எனது அறிவும் அத்தன்மைக்கு உட்பட்டதே. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. ஆனாலும் அறிவு அதன் உச்ச கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளமை, மகிழ்சியைத் தருவதற்குப் பதிலாகக் கவலையைத் தருகிறது. காரணம், அறிவு எல்லை மீறிப் போனவர்கள் அங்கொடை போன்ற மனநல சாலைகளில் இருப்பதாக தெரியவந்தமையே :o
 
 நுணாவிலான் அவர்களும் தனது ஊட்டத்தில் "உங்களின் மெத்தப்படித்த அறிவின் படி" எனக் குறிப்பிட்டுள்ளமை மேலும் கவலையைத் தருகிறது :(   
 
அறிவுள்ளவர்களை மட்டும் புலிகள் பொறுக்கியேடுத்ததை பற்றி புலிகள் பெருமை கொள்ளலாம் - நூறு சதவிகிதம் உண்மையான வார்த்தை. :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்
நுணாவிலான் அவர்களும் தனது ஊட்டத்தில் "உங்களின் மெத்தப்படித்த அறிவின் படி" எனக் குறிப்பிட்டுள்ளமை மேலும் கவலையைத் தருகிறது  :(   

 

 

அது அவரின் கூற்றுக்கு நக்கலாக எழுதப்பட்டது. விளங்கிக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அது அவரின் கூற்றுக்கு நக்கலாக எழுதப்பட்டது. விளங்கிக் கொள்ளுங்கள்.

 

அறிவின் உச்ச கட்டத்தில் நான் இருப்பதாக அவர் என்னை நக்கல் செய்தபோது, அதற்குப் பதில் நக்கலாகவே, அது என்னை மனநல சாலைக்கு அனுப்பிவிடும் என்று நான் கவலைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். 
 
மெத்தப்படித்த அறிவின் படி என்று நீங்கள் அவரைக் குறிப்பிட்டதை விளங்கிக்கொண்டுதான்... அது அவரையும் மனநல சாலைக்கு அனுப்பிவிடுமே என்று நான் கவலைப்படுவதாக, நக்கலாகவே குறிப்பிட்டேன்
 
அறப்படித்த பல்லி கூழ்பானைக்குள் விழுவது இயல்புதானே. அவரை மன்னிப்போம். அவர்வழியில் அவர் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தருவார் என்று நம்புவோம். :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

அறிவின் உச்ச கட்டத்தில் நான் இருப்பதாக அவர் என்னை நக்கல் செய்தபோது, அதற்குப் பதில் நக்கலாகவே, அது என்னை மனநல சாலைக்கு அனுப்பிவிடும் என்று நான் கவலைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தேன்.

மெத்தப்படித்த அறிவின் படி என்று நீங்கள் அவரைக் குறிப்பிட்டதை விளங்கிக்கொண்டுதான்... அது அவரையும் மனநல சாலைக்கு அனுப்பிவிடுமே என்று நான் கவலைப்படுவதாக, நக்கலாகவே குறிப்பிட்டேன்

அறப்படித்த பல்லி கூழ்பானைக்குள் விழுவது இயல்புதானே. அவரை மன்னிப்போம். அவர்வழியில் அவர் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தருவார் என்று நம்புவோம். :icon_idea:

ஹஹா ஜோக்கடிச்சிட்டு அத நுணாவும் பஞ்சும் ஆளாளுக்கு விளங்கப் படுத்துற அழகே தனிதான் போங்கள். உங்களுக்கு ஆதரவாய் பேசும்

மற்றயவரின் நகைச்சுவையை விளங்கி கொள்ளவே இந்த பாடுபடும் நீங்கள் அர்யூனின் லாஜிக்கான கதையை விளங்கி கொள்ள காலம் எடுப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இப்படிபட்ட அறிவுக்கொழுந்துகள் ஆதரவாளராய் அமைந்திருக்காவிடால், சிலமசமயம் முள்ளிவாய்க்கால் நிகழாமலே போயிருக்கலாம்? என்றுதோன்றுகிறது.

புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய இந்திய அரசு தீர்ப்பாயம் அமைத்தது:-

 

இவர்களுக்கு இந்த ஒரு வசனத்தை விளங்கபடுத்த எவ்வளவு நேரம் வேண்டிகிடக்கு ,

 

அப்ப ரோ எவ்வளவு கஷ்டப்பட்டுஇருக்கும்  :icon_mrgreen: .

 

தேவராம் பாடுபவருக்கு என்ன எழுதியிருக்கு என்பதை விட புலி என்று அச்சடித்திருந்தால் காணும் விழுந்து கும்பிடுவார் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஹஹா ஜோக்கடிச்சிட்டு அத நுணாவும் பஞ்சும் ஆளாளுக்கு விளங்கப் படுத்துற அழகே தனிதான் போங்கள். உங்களுக்கு ஆதரவாய் பேசும்

மற்றயவரின் நகைச்சுவையை விளங்கி கொள்ளவே இந்த பாடுபடும் நீங்கள் அர்யூனின் லாஜிக்கான கதையை விளங்கி கொள்ள காலம் எடுப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இப்படிபட்ட அறிவுக்கொழுந்துகள் ஆதரவாளராய் அமைந்திருக்காவிடால், சிலமசமயம் முள்ளிவாய்க்கால் நிகழாமலே போயிருக்கலாம்? என்றுதோன்றுகிறது.

 

மாலைதீவில் நடந்தது என்ன பகிடிக்கோ ?? :lol:  :lol:

புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய இந்திய அரசு தீர்ப்பாயம் அமைத்தது:-

 

இவர்களுக்கு இந்த ஒரு வசனத்தை விளங்கபடுத்த எவ்வளவு நேரம் வேண்டிகிடக்கு ,

 

அப்ப ரோ எவ்வளவு கஷ்டப்பட்டுஇருக்கும்  :icon_mrgreen: .

 

தேவராம் பாடுபவருக்கு என்ன எழுதியிருக்கு என்பதை விட புலி என்று அச்சடித்திருந்தால் காணும் விழுந்து கும்பிடுவார் . :lol:

 

உங்களின் திறமையை மாலைதீவில் கண்டோம். சும்மா கெட்டிக்காரன் என புழுகி தள்ள வேண்டாம். உங்களை பற்றி அனைவரும் அறிவோம்.

சிறி லங்கா சில்லறைகள் மோடி வந்தபின் கண்டபடி சலசலக்கிறார்கள்.

கொங்கிரஸ் பாதுகாப்பு இல்லாமல் எல்லாவற்றையும் மாதானமுத்தா மோடைய கூட்டமே யோசித்து கவிழ்த்துகொட்டவேண்டும் என்ற கோபமோ என்னவோ!

பாவம் வெற்றியோ வெற்றி பெற்ற சூரிய சந்திர சக்கரவத்தி இந்தியா போக பயம்.

பாவம்... சில்லறைகள் ...

சிறி லங்கா சில்லறைகள் மோடி வந்தபின் கண்டபடி சலசலக்கிறார்கள்.

கொங்கிரஸ் பாதுகாப்பு இல்லாமல் எல்லாவற்றையும் மாதானமுத்தா மோடைய கூட்டமே யோசித்து கவிழ்த்துகொட்டவேண்டும் என்ற கோபமோ என்னவோ!

பாவம் வெற்றியோ வெற்றி பெற்ற சூரிய சந்திர சக்கரவத்தி இந்தியா போக பயம்.

பாவம்... சில்லறைகள் ...

 

மோடி வந்தவுடன் சிங்களவனுடைய ஆட்டம் குலோஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஹஹா ஜோக்கடிச்சிட்டு அத நுணாவும் பஞ்சும் ஆளாளுக்கு விளங்கப் படுத்துற அழகே தனிதான் போங்கள். உங்களுக்கு ஆதரவாய் பேசும்

மற்றயவரின் நகைச்சுவையை விளங்கி கொள்ளவே இந்த பாடுபடும் நீங்கள் அர்யூனின் லாஜிக்கான கதையை விளங்கி கொள்ள காலம் எடுப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை.

இப்படிபட்ட அறிவுக்கொழுந்துகள் ஆதரவாளராய் அமைந்திருக்காவிடால், சிலமசமயம் முள்ளிவாய்க்கால் நிகழாமலே போயிருக்கலாம்? என்றுதோன்றுகிறது.

 

என் கருத்துக்கான உங்கள் பின்னூட்டம் என்னைக் கவலையடைய வைத்துள்ளதை நான் மறுக்கவில்லை. உங்கள் பின்னூட்டத்தில் உள்ள நியாயங்களை கள உறவுகளும், அதனைப் படிக்கும் மற்றோரும் எடைபோட்டுக்கொள்வார்கள்.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.