Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியோரு சித்தார்த்தன் பிறாவாதிருக்கட்டும் இப்பூமிப் பந்தினிலே

Featured Replies

dltd86.png

 

புயல் சுழன்றடித்த பெருந்தீவின்

மாயான அமைதியில்
சலனமில்லா ஊர்களின்
நிசப்தம் தின்று மூச்சடங்கிபோன தெருக்களில்
வீடுறையும் மனிதர்கள் ஒருவரும் இல்லாது
தாழிடப்பட்ட கதவுகளுக்கு பின்னால்
முன்பொரு காலத்தில்
எந்நேரமும் விளையாட்டு சாமான்கள்
விழுந்துடையும் சத்தங்களும்
விண்ணதிரும் வாய்பாடொதும் ஒசையும்
கண்ணுறங்க வைக்கும் தாலாட்டு பாட்டும்
நினைவின் தொகுப்பாய் எஞ்சிய
ஒற்றை நிழற்படம் முன்
சிறுபிள்ளை பிரார்த்தனை

முனுமுனுப்புகளுமிருந்தன
இமைப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன
துயரிரவின் பேரமைதியில்
ஊமைநிலத்தில் ஊடுருவிய
புத்தரின் நிலைகுத்திய
காந்த விழிகளுக்கப்பால்

'புயலின் சூன்யத்தை,

கோர பசியை,

தீரா உயிர்வேட்கையை,

மாளா குரூரத்தை,

அழிவின் ஆரோகணத்தை,

ஏதொவொரு பிணத்தை புணர்ந்துவிட்ட
களிப்பின் உச்சாடணத்தை,

பால்சுரக்கும் கொங்கைகளை

உட்புறங் குழிய வைத்த கோரத்தை,

வயிற்றை கிழித்தெடுத்து சிசுவை
தறையொடறைந்து பயங்கரவாதியை
கொன்றுவிட்டோமெனும் புயலின் பிரகடனத்தை'

உங்கள் புலன்களுக்கு
புலப்படவில்லையெனில்
நூற்றாண்டு கால தவத்தின்
சாமாதான புன்னகை
உங்களுக்கே உரித்தானது!
இனி கையில் உள்ள பூக்களை
வைத்துவிட்டு வணங்கி கொள்ளுங்கள்....



~ராஜன் விஷ்வா.

Edited by ராஜன் விஷ்வா

'புயலின் சூன்யத்தை,

கோர பசியை,

தீரா உயிர்வேட்கையை,

மாளா குரூரத்தை,

அழிவின் ஆரோகணத்தை,

ஏதொவொரு பிணத்தை புணர்ந்துவிட்ட

களிப்பின் உச்சாடணத்தை,

பால்சுரக்கும் கொங்கைகளை உட்புறங் குழிய வைத்த கோரத்தை,

வயிற்றை கிழித்தெடுத்து சிசுவை

தறையொடறைந்து பயங்கரவாதியை

கொன்றுவிட்டோமெனும் புயலின் பிரகடனத்தை '

உங்கள் புலன்களுக்கு

புலப்படவில்லையெனில்

நூற்றாண்டு கால தவத்தின்

சாமாதான புன்னகை

உங்களுக்கே உரித்தானது!

~ராஜன் விஷ்வா.

 

இவற்றில் எவற்றைக் கண்டாலும் போலி சமாதானவாதிகளாககத் தம்மைக் காட்டிக் கொள்ளவேனும் தங்கள் புலனுக்கு இவை புலப்படவில்லை என்றே சொல்லும் கூட்டம் எம்மில் உள்ளது. ஒடுக்கியவனை விட ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவனை குற்றம் கண்டு பிடித்து ஒடுக்கியவன் பக்கம் சாயும் கூட்டத்திற்குத்தான் இன்று  சமாதான புன்னகை உரித்தாகின்றது.

 

கவிதைக்கு நன்றி நண்பா.

கவிதை அழைத்துச்செல்கிறது கரைகளை உடைத்து தொடருங்கள் 

  • தொடங்கியவர்

இவற்றில் எவற்றைக் கண்டாலும் போலி சமாதானவாதிகளாககத் தம்மைக் காட்டிக் கொள்ளவேனும் தங்கள் புலனுக்கு இவை புலப்படவில்லை என்றே சொல்லும் கூட்டம் எம்மில் உள்ளது. ஒடுக்கியவனை விட ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியவனை குற்றம் கண்டு பிடித்து ஒடுக்கியவன் பக்கம் சாயும் கூட்டத்திற்குத்தான் இன்று சமாதான புன்னகை உரித்தாகின்றது.

கவிதைக்கு நன்றி நண்பா.

தம்பி என்றே கூப்பிடுங்கள். வாழ்த்திற்கு நன்றிகள் அண்ணா.
  • தொடங்கியவர்

கவிதை அழைத்துச்செல்கிறது கரைகளை உடைத்து தொடருங்கள்

மண்ணின் வலிகளே எழுத வரிகள் தருகின்றன. வாசிப்பிற்கும் வரவிற்கும் நன்றிகள் அண்ணா...

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

----

சலனமில்லா ஊர்களின்

நிசப்தம் தின்று மூச்சடங்கிபோன தெருக்களில்

வீடுறையும் மனிதர்கள் ஒருவரும் இல்லாது

தாழிடப்பட்ட கதவுகளுக்கு பின்னால்

முன்பொரு காலத்தில்

எந்நேரமும் விளையாட்டு சாமான்கள்

விழுந்துடையும் சத்தங்களும்

விண்ணதிரும் வாய்பாடொதும் ஒசையும்

கண்ணுறங்க வைக்கும் தாலாட்டு பாட்டும்

நினைவின் தொகுப்பாய்

------

 

~ராஜன் விஷ்வா.

 

வேண்டாம்..... இனியொரு புத்தன், பிறவாதிருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் இவ்வுலகில் ஞானிகளும் ,மனிதசாமிகளும்......அவர்களை தூக்கிபிடிக்கும் மக்கள்கூட்டமும்....கவிதைக்கு நன்றிகள் ராஜன்விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள் தொடருங்கள்
புத்தர்கள் பிறந்துகொண்டேஇருப்பார்கள்
அவர்களுக்குப் பக்தர்கள் இருக்கும்வரை
 

ஒற்றை நிழற்படம் முன்
சிறுபிள்ளை பிரார்த்தனை முன்முனுப்புக்களுமிருந்தன
கணப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன.

 

வலிகள் தான் வாழ்க்கை என்றாகி போகுது கவிதை தொடருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி, விஸ்வா.

  • தொடங்கியவர்

வேண்டாம்..... இனியொரு புத்தன், பிறவாதிருக்கட்டும்.

 அதுவே நம் அனைவரின் வேண்டுதலாக உள்ளது... வரவிற்கு நன்றிகள் சிறியண்ணா...

வேண்டாம் இவ்வுலகில் ஞானிகளும் ,மனிதசாமிகளும்......அவர்களை தூக்கிபிடிக்கும் மக்கள்கூட்டமும்....கவிதைக்கு நன்றிகள் ராஜன்விஷ்வா

கருத்திற்கும் வரவிற்கும் நன்றிகள் புத்தன் அண்ணா.... 

கவிதைக்கு நன்றிகள் தொடருங்கள்

புத்தர்கள் பிறந்துகொண்டேஇருப்பார்கள்

அவர்களுக்குப் பக்தர்கள் இருக்கும்வரை

 

தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது காசாவிலும்....   மனித உயிர்கள் மலிவாய் போய்விட்டது... கையாலகாத ஐ.நா சபை செத்த பின்பு பால் ஊற்ற தான் ஆகும் போல...

 

வரவிற்கு நன்றிகள் வாத்தியார் அண்ணை ...

ஒற்றை நிழற்படம் முன்

சிறுபிள்ளை பிரார்த்தனை முன்முனுப்புக்களுமிருந்தன

கணப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன.

 

வலிகள் தான் வாழ்க்கை என்றாகி போகுது கவிதை தொடருங்கள் .

எப்போதாவது தான் எழுதுகிறேன்... பொதுவாக எழுதும் ஆற்றல் எனக்கிருப்பதாக தோன்ற வில்லை.. எப்போதாவது மனம் அதிகம் கணக்கும் போதே எதையாவது எழுத வருகிறது....
 
வரவிற்கு நன்றிகள் அஞ்சரன் அண்ணை .. :)
 
எழுத்துப்பிழை சரி செய்து விட்டேன். 

Edited by ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்

கவிதைக்கு நன்றி, விஸ்வா.

வாழ்த்தியமைக்கு நன்றிகள் நுணா அண்ணை .. :)

அருமை

கருத்திட்டமைக்கு நன்றிகள் ....

  • கருத்துக்கள உறவுகள்

கனமான  வலி  சுமந்த விதைக்கு நன்றி, தம்பி விஸ்வா.

  • கருத்துக்கள உறவுகள்

பல வலிகலின் ஊடே ஒரு பிரசவம்  நிகழ்ந்துள்ளது...!

  • தொடங்கியவர்

கனமான  வலி  சுமந்த விதைக்கு நன்றி, தம்பி விஸ்வா.

நன்றிகள் அண்ணா... 

பல வலிகலின் ஊடே ஒரு பிரசவம்  நிகழ்ந்துள்ளது...!

தாமாதமாகவேனும் நீங்கள் வருவீர்கள் எனன்று நினைத்திருந்தேன். வரவால் மகிழ்ச்சி சுவியண்ணா... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.