Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில்.... கூட்டமைப்பு மோடி சந்திப்பு: படங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23-1408786686-modi3567-600.jpg

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு:

ஈழத் தமிழ் எம்.பி.க்களிடம் மோடி வலியுறுத்தல்!

 

டெல்லி: ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று என்று தம்மை சந்தித்த இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 

மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

 

இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டைத்தான் ஈழப் பிரச்சனையில் பாஜக அரசும் கடைபிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

 

23-1408786663-tamil-national-alliance38-

 

டெல்லியில் த.தே.கூ. குழு.

இந்த நிலையில் ஈழத் தமிழர் தரப்பாகிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் டெல்லி வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 5 எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

சுஷ்மாவுடன் சந்திப்பு.

இக்குழுவினர் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசினர். பின்னர் இன்று பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்து பேசினர்.

 

யார் யார்?

இந்த சந்திப்பில் எம்.பிக்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வராஜ், செல்வம் அடைக்கல்நாதன், சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

23-1408786704-tamil-national-alliance39-

 

கூட்டமைப்பு எம்.பிக்கள் சொன்னது என்ன?

அப்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் எடுத்துக் கூறினர்.

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள்....

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களுக்கு சுயமரியாதையுடனும் சமமாகவும் கண்ணியமாகவும் நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வாக இருக்க வேண்டும். இலங்கையின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

உதவிகள் தொடரும்..

மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடு கட்டுதல், மருத்துவமனைகள் அமைத்த, உள்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு, மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும் என்றும் மோடி உறுதியளித்தார்.

இச்சந்திப்பின் போது பிரதமரின் முதன்மைச் செயலர் நிரிபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் சுஜாதாசிங் ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்ட இலங்கைக்குள்....

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களுக்கு சுயமரியாதையுடனும் சமமாகவும் கண்ணியமாகவும் நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வாக இருக்க வேண்டும். இலங்கையின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

 

இங்கு ஏன் வந்தீர்கள்??

போய் மகிந்தவுடன் பேசப்பாருங்கள்

நன்றி  வணக்கம். :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இங்கு ஏன் வந்தீர்கள்??

போய் மகிந்தவுடன் பேசப்பாருங்கள்

நன்றி  வணக்கம். :(  :(  :(

 

 

கூட்டமைப்பு தனி  ஈழத்தையோ வடகிழக்கு இணைந்த மாநில சுயாட்சியையோ கைவிட்டு பல நாட்களாகி விட்டன.

அவர்கள் இருக்கும் வரை அனுபவித்துவிட்டுப்  போய்விடுவார்கள் .

நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன பதிலை அடுத்த தேர்தலில் கூறுவார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு தனி  ஈழத்தையோ வடகிழக்கு இணைந்த மாநில சுயாட்சியையோ கைவிட்டு பல நாட்களாகி விட்டன.

அவர்கள் இருக்கும் வரை அனுபவித்துவிட்டுப்  போய்விடுவார்கள் .

நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன பதிலை அடுத்த தேர்தலில் கூறுவார்களோ தெரியவில்லை.

 

 

தனி  ஈழம்  என்பது தான் எமது கடைசி  இலக்கு

 

அதை  நானும் நீங்களும் சொல்லக்கூடிய பகுதிகளில் இருக்கின்றோம்

அவர்கள் சொல்லமுடியாத பகுதியில் இருக்கிறார்கள்

 

ஒன்றில் நாம் அங்கிருந்து சொல்லணும்

அல்லது அவர்கள் இங்கு வந்து சொல்லணும்

 

இரண்டும் சரிவராதநிலையில் காலமே பதில் சொல்லணும்

 

நாம் எதையும் சொல்லிக்கொள்ளலாம் 

எழுதிக்கொள்ளலாம்

ஆனால் தமிழீழம்  நோக்கி  நாம் ஒடியே  ஆகணும் என்பதை தீர்மானிப்பது சிங்களம்

அது தொடர்ந்து தமிழீழம் நோக்கி  எம்மை தள்ளியபடியே  தான் இருக்கிறது

இருக்கும்

எனவே எல்லோரும் ஒரு புள்ளியில் நிச்சயம் சந்திக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவின் மொழிவாரி மாநிலங்களை அடக்கி ஆளும் தர்ப்பார் தொடரும் வரை.. ஹிந்தியாவின் ஒருமைப்பாடும்.. இறையாண்மையும்.. சிறீலங்காவின் ஒருமைப்பாட்டில் தங்கி இருப்பதான எண்ணம் உள்ளவரை.. ஹிந்தியா தமிழர்களுக்கு தனி தமிழீழம் அமைவதை ஒருபோதும் ஆதரிக்காது. அது மோடி என்ன கேடி வந்தாலும் நடக்காது. ஏனெனில் இவர்கள் எல்லாம்... ஹிந்தியா சிறீலங்காவின் ஒருமைப்பாட்டில் தான் பலமாக உள்ளதாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். உலகும் இதனை நம்ப வைக்கப் பாடுபடுகுது.

 

அதற்காக நாம் எமது வரலாற்று ரீதியான உண்மைகளைப் புதைத்துவிட்டு தமிழீழத்தையோ.. தனிநாட்டுக் கோரிக்கையையோ கைவிட முடியாது. ஹிந்தியா விரும்பும் தீர்வை ஹிந்தியா சம்பந்தப்படவர்களிடம் பேசி தமிழர்களுக்கு பெற்றுக் கொடுக்கட்டும் அது பற்றி எந்தப் பிரச்சனையும் தமிழர்களுக்கு கிடையாது. அதேவேளை தமிழர்கள் தாம் விரும்பும் தீர்வை அடைய தொடர்ந்து தங்களால் இயன்றதை சர்வதேச.. பிராந்திய இராணுவ.. அரசியல்.. பொருண்மிய மாற்றங்களுக்கு ஏற்ப நகர்த்திச் சென்று அடைய நிச்சயம் தொடர்ந்து செயற்பட வேண்டும்.

 

ஒரு காலத்தில் குர்திஸ் போராளிகளை விடுதலைப்புலிகளோடு சேர்த்து பயங்கரவாதப் பட்டியலில் இட்டவர்கள் இன்று.. அதே போராளி அமைப்புக்களோடு கூடி நின்று ஐ எஸ் தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலையில் நிற்கிறார்கள். குர்திஸ்தானின் விடிவை நோக்கி குர்திஸ் மக்களும் போராளிகளும் தலைவர்களும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் அமையவே முடியாது என்ற குர்திஸ்தான்.. இன்று ஈராக்கின் வடபுலத்தே விரிந்து பரந்து தனது தர்ப்பாருடன் நிற்கிறது.

 

ஒரு காலத்தில் அமையவே முடியாது என்ற தமிழீழம்.. கடந்த தசாப்தத்தில்.. தனது தர்ப்பாருடன் இருந்த உண்மையின் அடிப்படையில் இருந்து.. தமிழர்கள் நாம் செயற்படும் அதேவேளை.. எமக்கு எமது கொள்கையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய நேச சக்திகளை கூட்டுச் சேர்த்து ராஜீய வழிகளில் முன்னகரும் ராஜதந்திரமே இன்று அவசியமாக உள்ளது.

 

ஹிந்தியாவை நம்புவர்கள் நம்பட்டும். அது பிரச்சனையே இல்லை. சிங்களவனை நம்பிறவர்கள் நம்பட்டும்.. அதுவும் பிரச்சனை இல்லை. ஆனால்.. தமிழீழம் என்ற ஒரு தேசிய சுதந்திர தேசம் அமைவதன் ஊடுதான் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தியாக முடியும் என்பதை இந்த நம்பிக்கைகள் எந்த வகையிலும் தகர்க்க முடியாது. அதற்கு இடமும் அளிக்கக் கூடாது.

 

தமிழர்கள் நாம்.. எனி.. parallel strategy கொண்டு நகர்ந்தால் அன்றி.. துரோகம்.. துரோகி என்ற உச்சரிப்புக்களோடு கூடிய ஒரு வழி அரசியலால் நாம் எதனையும் எனி சாதிக்க முடியாது. இந்த யதார்த்தத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே தமிழ் மக்களுக்கு விடிவை எட்ட முடியும்..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாகச் சொன்னீர்கள் நெடுக்ஸ்.. போர் முடிந்த காலங்களில் இதே பேன்று எழுதிய ஞாபகம். இந்தியாவுக்கு கூட்டமைப்பு. மேற்கிற்கு புலம்பெயர் அமைப்புக்கள்.. சீனாவுக்கு ஒன்றை அமைக்கவேண்டும் என்று.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மோடி சொல்வதைக் கேட்டு தலையை ஆட்டிவிட்டு வருவதற்கு அங்கு சென்றார்கள்? 13வது திருத்தச் சட்டத்தைஅமுல்படுத்தச சொல்லி சிறிலங்காவை வற்புறுத்திவது இந்தியாவின் பொறுப்பு என்று சொன்னார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் குர்திஸ் போராளிகளை விடுதலைப்புலிகளோடு சேர்த்து பயங்கரவாதப் பட்டியலில் இட்டவர்கள் இன்று.. அதே போராளி அமைப்புக்களோடு கூடி நின்று ஐ எஸ் தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலையில் நிற்கிறார்கள். குர்திஸ்தானின் விடிவை நோக்கி குர்திஸ் மக்களும் போராளிகளும் தலைவர்களும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருகாலத்தில் அமையவே முடியாது என்ற குர்திஸ்தான்.. இன்று ஈராக்கின் வடபுலத்தே விரிந்து பரந்து தனது தர்ப்பாருடன் நிற்கிறது.

 

ஒரு காலத்தில் அமையவே முடியாது என்ற தமிழீழம்.. கடந்த தசாப்தத்தில்.. தனது தர்ப்பாருடன் இருந்த உண்மையின் அடிப்படைல் இருந்து.. தமிழர்கள் நாம் செயற்படும் அதேவேளை.. எமக்கு எமது கொள்கையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய நேச சக்திகளை கூட்டுச் சேர்த்து ராஜீய வழிகளில் முன்னகரும் ராஜதந்திரமே இன்று அவசியமாக உள்ளது.

 

 

 

இந்த முடிவை முதலில் உறுதிப்படுத்தியவர்  பிரெஞ்சு ஐனாதிபதியாவார்

அவருடன் தமிழருக்கம் நல்ல  தொடர்புகள் உண்டு

 

எமக்கான காலம் வரும்

 

நன்றி  நெடுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நாங்கள் பேர்ம் பேசவேண்டும்.எங்களுக்கு நிரந்தரமான சுயநிர்ணய அடிப்படையிலான நியாயமான தீர்வைப்பெற்றுத்தருபவருக்கு 100 வருடங்களுக்கு திருமலைக் துறை முகத்தைப் பாவிப்பதற்கு அனுமதிப்போம்.அமெரிக்கா பேரத்திற்கு பணியாவிட்டால் சீனா அல் அலது ரசியவுடன் பேசுவோம். டீலா?நோ டீலா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நாங்கள் பேர்ம் பேசவேண்டும்.எங்களுக்கு நிரந்தரமான சுயநிர்ணய அடிப்படையிலான நியாயமான தீர்வைப்பெற்றுத்தருபவருக்கு 100 வருடங்களுக்கு திருமலைக் துறை முகத்தைப் பாவிப்பதற்கு அனுமதிப்போம்.அமெரிக்கா பேரத்திற்கு பணியாவிட்டால் சீனா அல் அலது ரசியவுடன் பேசுவோம். டீலா?நோ டீலா?

 

உங்களிடம் இன்று இல்லாத திருமலையை எப்படி தருவீர்கள்? சீனா இன்று கேட்டாலும் கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா தயாராக இருக்கும் போது சீனா ஏன் உங்களுடன் உடன்பாட்டுக்கு வரப்போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் இன்று இல்லாத திருமலையை எப்படி தருவீர்கள்? சீனா இன்று கேட்டாலும் கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா தயாராக இருக்கும் போது சீனா ஏன் உங்களுடன் உடன்பாட்டுக்கு வரப்போகிறது?

 

 

அதைத்தான் அவரும் கொஞ்சம்  சூடாக சொல்லவாறார்.....

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்.

கூட்டமைப்பை மோடி சந்திக்கவே பெரும் பாடு பட்டிருப்பார்கள். இதுக்க புலம் பெயர்ஸ் வந்து மோடிக்கு இடித்து உரச்சீங்களா? கடிச்சு உரச்சீங்களா? எண்டு காமடி பண்ணிட்டு இருக்கினம்.

இலங்கை தமிழரது வரலாற்றிலேயே மிகவும் பலவீனமான புள்ளிவரை எம்மை இழுத்துச் சென்று முள்ளிவாய்காலில் நட்டாற்றில் விட்டுப்போனபின், எந்த பலமுமற்ற கூட்டமைப்புக்கு இந்தியாவுக்கு இடித்த்துரைக்கும் பலம் இல்லை என்பது அரசியல் பாலபாடம்.

இந்தியாவுடன் பணிந்து போய், இலங்கையின் முரண்டுப் பிடிவாதத்தை வெளிப்படுத்தி, இலங்கை-இந்திய உறவில் விரிசலை ஏற்ப்படுத்தி அதனால் பலனடையும் ராஜதத்திரமே கூட்டமைப்பு முன் உள்ள ஒரே வழி.

அதுக்கான நல்ல ஆரம்பமாக இது அமையட்டும்.

உலகத்தால் பயங்கரவாதம் என்று சொல்லபட்ட எமது ஆயுத போராட்டம் முடிவுற்று இன்று ஒரு அரசியல் தீர்வை நோக்கி முன்னர்கின்றது .

அதற்கு ஏன் ஐந்து எடுத்தது என்றால் இந்தியாவில் ஆட்சியில்  இருந்தது எங்களால் கொலை செய்யப்பட்ட ராஜீவின் குடும்ப ஆட்சி .

விடிவிற்கான சிறு வெளிச்சம் தெரிகின்றது அதை ஊதி அணைக்காமல் தமிழர்பிரதேசங்களில் ஒளியை ஏற்றுவோம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள்....

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஈழத் தமிழர்களுக்கு சுயமரியாதையுடனும் சமமாகவும் கண்ணியமாகவும் நீதியானதுமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வாக இருக்க வேண்டும். இலங்கையின் 13வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

 

இங்கு ஏன் வந்தீர்கள்??

போய் மகிந்தவுடன் பேசப்பாருங்கள்

நன்றி  வணக்கம். :(  :(  :(

 

 

உதைத்தான் டக்ளஸ் அண்ணையும் கூத்தமைப்புக்கு சொன்னவர்  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக தேர்தலில் யாழ்பாணத்தில் ஒரு சீட் (10%) வாங்குமளவுக்கு டக்கருக்கு யாழ்மக்கள் மத்தியில் செல்வாக்கிருக்கு.

எகோபித்த தீர்வென்றால் 10% மக்களின் பிரதிநிதியையும் சேர்த்துதான் செய்யணும். நினைச்சபடி சட்டம் வைக்க இதென்ன பிரபாவின் காட்டுத் தர்பாரே?

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.