Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று மாலை காலமான பிரபல தொழிற்சங்கவாதி பாலா தம்புவுக்கு எம் அஞ்சலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை காலமான பிரபல தொழிற்சங்கவாதி 

பாலா தம்புவுக்கு எம் அஞ்சலிகள்.

சுரண்டும் வர்க்கத்தால் விலைக்கு வாங்க முடியா சிம்ம சொப்பனமாக ஒரு காலத்தில் திகழ்ந்தார் என்பதும், கடைசிவரை தன் இன அடையாளம் தன்னை துரத்த அவர் இடம் கொடுக்க வில்லை என்பதும் இவரது பல சிறப்புக்களில் சில.

 

 

fb.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மூத்த தொழிற்சங்கவாதி பாலா தம்பு 92வது வயதில் காலமானார்! 

[Monday 2014-09-01 18:00]

bala-thambu-150-news.jpg

இலங்கையின் மூத்த தொழிற்சங்கவாதியும் லங்கா சமசமாஜ கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான பாலா தம்பு கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். குற்றவியல் வழக்கு தொடர்பான சட்டத்தரணியான அவர் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார். 1922 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பாலா தம்பு பிறந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற அவர் 1943 ஆம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழகத்திலும் பின்னர் 1944 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றார்.

 

இலங்கை விவசாய திணைக்களத்தில் பணியாற்றிய அவர் 1947 ஆம் ஆண்டு அரச சேவையில் இருந்து விலக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தில் இணைந்து கொண்டார். இலங்கையில் ஏனைய தொழிற்சங்கவாதிகளை காட்டிலும் மிகவும் திடசங்கற்ப தொழிற்சங்கவாதியாக பாலா தம்பு செயற்பட்டார். 1928 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சிஎம்யூ தொழிற்சங்கத்தில் 1948ஆம் ஆண்டு பாலா தம்பு பொதுச்செயலாளாராக நியமிக்கப்பட்டார்.1963 ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் தொழிற்சங்க போராளியாக பாலா தம்பு திகழ்ந்தார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் அவரின் தலைமையில் 1963ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் கொழும்பு துறைமுகத்தில் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு விஸ்தரிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் தொடர்ந்தும் மூன்று மாதங்களாக நீடித்த தபால்துறை பணிப்புறக்கணிப்பிலும் பாலா தம்பு முக்கிய பங்கை வகித்தார்

http://www.seithy.com/breifNews.php?newsID=116002&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.