Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனி எனக்கும் இங்கு வேலை வாய்ப்பு இருக்கும் போல.😁

  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்.... யாயினின்.... பக்கா பிளான்....

சும்மா காத்து வாங்கன, திரி..... சுவியர் ஜடியாவில பேமசா போட்டுது....😁

இனி... மட்டுக்களும்.... உதுக்க.... திரிவினம்... 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

இனி எனக்கும் இங்கு வேலை வாய்ப்பு இருக்கும் போல.😁

உங்களுக்கு வேலை சிறித்தம்பிக்கு கச்சான் உடைச்சு குடுக்கிறதும் மட்டுறுத்தினர்மார் இஞ்சால்பக்கம் வராமல் பாத்துக்கொள்ளுறதும்....😎

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

கூப்பிடனிங்களோ…..

திரி கொழுந்து விட்டு எரிய ஒரு ரேட்,

நியானிக்கு கை உழையிற மாரி எண்டால் இன்னொரு ரேட்,

புல்லா தாரை வார்த்து, மண்ணை போட்டு ஊத்தி மூடுறெண்டா (காடத்தல் சர்வீஸ்) பிரிமியம் ரேட்,

வாட் இஸ் யுவர் பிரிவேர்ட் ஆப்சன் சேர்🤣?

Negros Ataud Ataud Meme Negros GIF - NegrosAtaud AtaudMemeNegros Dance -  Discover Share GIFs | Dance memes, Memes, Gif dance

 

எங்களுக்கு, இதே மாதிரி...  டான்ஸ் ஆடி, சடங்கு செய்ய முடியுமா சார்... 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு வேலை சிறித்தம்பிக்கு கச்சான் உடைச்சு குடுக்கிறதும் மட்டுறுத்தினர்மார் இஞ்சால்பக்கம் வராமல் பாத்துக்கொள்ளுறதும்....😎

Ghana Funeral GIFs - Get the best GIF on GIPHY

குமாரசாமி அண்ணை.... நீங்கள் தந்த, கச்சான் உடைக்கிற  பொறுப்பை, 
கவனமாக பார்த்துக் கொள்ளுறன். :grin:

இன்று, கனடா நேரம்... நள்ளிரவு 12 மணிக்கு, "பாடி" எடுக்கிறதென்ற படியால்,
வரவேண்டிய ஆக்களை... வந்து பார்த்து, இறுதி மரியாதை செலுத்த சொல்லுங்கோ.  

பிறகு தாங்கள், பார்க்காமல்... 
பெட்டியை, மூடிப் போட்டாங்கள் என்று, குறை வரப் படாது கண்டியளோ.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

Ghana Funeral GIFs - Get the best GIF on GIPHY

குமாரசாமி அண்ணை.... நீங்கள் தந்த, கச்சான் உடைக்கிற  பொறுப்பை, 
கவனமாக பார்த்துக் கொள்ளுறன். :grin:

இன்று, கனடா நேரம்... நள்ளிரவு 12 மணிக்கு, "பாடி" எடுக்கிறதென்ற படியால்,
வரவேண்டிய ஆக்களை... வந்து பார்த்து, இறுதி மரியாதை செலுத்த சொல்லுங்கோ.  

பிறகு தாங்கள், பார்க்காமல்... 
பெட்டியை, மூடிப் போட்டாங்கள் என்று, குறை வரப் படாது கண்டியளோ.  🤣


மன்னிக்கணும் தமிழ்  சிறி ஊர்ல டிக்கட் போடுறது கொஞ்சம் கஸ்ட் டம் ,நமக்கு வரமுடியாத ,உங்க வந்தும் உந்த ஆட்டத்தில பங்கு பற்ற  முடியாது ,உங்க வந்தவுடனம் 20 நாளைக்கு தனிமை படுத்தல் எண்டு கொண்டே உள்ள போட்டுவிடுவான்கள் ,அதாலை இஞ்ச ,ஊரிலை ???அதையும் வெட்டி இதையும் வெட்டி ??? அதுக்குள்ளை ஊற போட்டு ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்றம் ,,என்ன ஒரு கொஞ்சம் காசு தேவைப்படும் அதை மடடம அனுப்புங்க..கனக்க வேண்டாம் ,,8a71a514077e86ed52622efa51a551bc.gif
1599 டொலர்...

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அன்புத்தம்பி said:

மன்னிக்கணும் தமிழ்  சிறி ஊர்ல டிக்கட் போடுறது கொஞ்சம் கஸ்ட் டம் ,நமக்கு வரமுடியாத ,உங்க வந்தும் உந்த ஆட்டத்தில பங்கு பற்ற  முடியாது ,உங்க வந்தவுடனம் 20 நாளைக்கு தனிமை படுத்தல் எண்டு கொண்டே உள்ள போட்டுவிடுவான்கள் ,அதாலை இஞ்ச ,ஊரிலை ???அதையும் வெட்டி இதையும் வெட்டி ??? அதுக்குள்ளை ஊற போட்டு ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்றம் ,,என்ன ஒரு கொஞ்சம் காசு தேவைப்படும் அதை மடடம அனுப்புங்க..கனக்க வேண்டாம் ,,8a71a514077e86ed52622efa51a551bc.gif
1599 டொலர்...

அன்புத்தம்பி... அதென்ன, "பாட்டா" செருப்பு விலை மாதிரி, 1599 எண்டு சொல்லுறியள். 
ரவுண்டாக... 2000 அனுப்பி விடுகின்றேன். 
உங்களது வங்கி, இலக்கத்தை தாங்கோ.....

முக்கிய பிற்குறிப்பு:  
உங்கள் வங்கியில், இருக்கிற காசும்... களவு போனால்,
கம்பெனி பொறுப்பு ஏற்காது.
 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அன்புத்தம்பி... அதென்ன, "பாட்டா" செருப்பு விலை மாதிரி, 1599 எண்டு சொல்லுறியள். 
ரவுண்டாக... 2000 அனுப்பி விடுகின்றேன். 
உங்களது வங்கி, இலக்கத்தை தாங்கோ.....

முக்கிய பிற்குறிப்பு:  
உங்கள் வங்கியில், இருக்கிற காசும்... களவு போனால்,
கம்பெனி பொறுப்பு ஏற்காது.
 🤣

அது வந்து ,1 டொலர் என் கிட்ட  இருக்கு
அதுதான் ,வந்து ................

  • கருத்துக்கள உறவுகள்

யாயினியை காணவில்லை, வேற வீடு பாத்து போய்ட்டாவோ தெரியல 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்..👋✍️🙆 எனக்கு வேலை கூட அதனால் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு போவது வழக்கம்...உடனும்  எங்களுக்கு இல்லாத வேலையா உங்களுக்கு என்று கேட்க கூடாது..மற்றப்படி சொல்லும் படியாக‌ ஒண்ணும் இல்லை.👋

 

 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, யாயினி said:

இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம்..👋✍️🙆 எனக்கு வேலை கூட அதனால் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு போவது வழக்கம்...உடனும்  எங்களுக்கு இல்லாத வேலையா உங்களுக்கு என்று கேட்க கூடாது..மற்றப்படி சொல்லும் படியாக‌ ஒண்ணும் இல்லை.👋

 

 

அதெல்லாம் சரி ஆனால் தற்போது தங்களது  திரியின் கலவரம் சே.....நிலவரம் பற்றி எதுவும் சொல்லாமல் போகிறீர்கள் நியாயமா.....!  😴

Kodumai Prabhu GIF - Kodumai Prabhu Headache - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கத்தை பராமரிப்பவர் யாயினியின் அன்புத்தம்பி😂🤣

அதனால் அன்புத்தம்பிதான் இப்போது திரிக்குள் கலவரம் செய்பவர்களை களையெடுக்க வழிபார்க்கவேண்டும்😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அதெல்லாம் சரி ஆனால் தற்போது தங்களது  திரியின் கலவரம் சே.....நிலவரம் பற்றி எதுவும் சொல்லாமல் போகிறீர்கள் நியாயமா.....!  😴

Kodumai Prabhu GIF - Kodumai Prabhu Headache - Discover & Share GIFs

என்னத்த சொல்ல..மற்றப் பகுதிகள் மாதிரி தானே இதுவும்.சோ, ஒண்ணும் சொல்வதற்கு இல்லை.👋✍️🙆

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

என்னத்த சொல்ல..மற்றப் பகுதிகள் மாதிரி தானே இதுவும்.சோ, ஒண்ணும் சொல்வதற்கு இல்லை.👋✍️🙆

என்ன கொடுமை.... யாயினி😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13/11/20021
May be an image of 1 person, outdoors and text
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இராஜராஜேஸ்வரம் என்ற தஞ்சை பெரிய கோவில் - 1
 
🌷 இராஜராஜ சோழன் பற்றி அறியாதவர்கள் மிக குறைவு.
 
🌺 தனது ஆட்சியில் ஒரு போரில் கூட தோற்காத வீரப்புலி.
 
💐 பதவியேற்ற சில வருடங்களிலேயே தனது தூதனை அவமதித்து சிறையில் அடைத்ததால் சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன் மற்றும் அவனுக்கு உதவியாக வந்த பாண்டிய மன்னன் அமர புயங்கன் இருவரையும் தோற்கடித்து மும்முடி சோழன் என்ற பட்டம் பெற்றவர்.
 
🌸 முழு இலங்கை தீவையும் கைப்பற்றியதோடல்லாமல், மாலத்தீவுகள் வரை புலிக்கொடி பறக்க வைத்தவர்.
 
👑 தில்லையில் அறையில் பலவந்தமாக பூட்டப்பட்டு கரையான்களின் புற்றாகவே மாறிப்போன சைவ திருமுறைகளை பெரும்பாடு கொண்டு வெளியிலெடுத்து " திருமுறை கண்ட சோழன் " என்ற பெயர் பெற்றவர்.
 
மேலும் கோவில்களில் ஓதுவார்களை பணியில் அமர்த்தி தமிழ் மறை நாடெங்கும் பரவ வழிவகுத்தவர்.
 
💎 " பின்வரும் காலத்தில் கவிநாடு ஏரியை யார் பராமரிக்கிறார்களோ அவர்களின் பாதத்தை என் தலையில் ஏந்துவேன் " என கல்வெட்டில் பதித்து மங்கா புகழ் அடைந்தவர்.
 
🛕 இப்படி பல சரித்திரப்புகழ் பெற்று இருந்தாலும் இராஜராஜன் பெயரை சொன்னவுடனே நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான் என்றால் மிகையாகாது.
 
🍁 பிற்காலத்தில் மல்லப்ப நாயக்கரின் திருப்பணிக்கு பின்னர் பெருவுடையார் ( பெரிய + உடையார் ) என்றும்,
அதுவே சமஸ்கிருதத்தில் பிரகதீஸ்வரர் (பிரஹத் (மஹா (அ) பெரிய) + ஈஸ்வரர்) என்றும் இரண்டுமே பெரிய லிங்கம் என்பதை பொருளாக கொண்டு பிற்காலத்தில் வழங்கப்பட்டதே தவிர, உண்மையில் இராஜராஜேஸ்வரம் என்பதே அதன் பெயர்.
 
🌻 இராஜராஜசோழனின் பெருமுயற்சியால், தலைமை தச்சரான குஞ்சரமல்ல இராஜராஜ பெருந்தச்சரின் கைவண்ணத்தில் உருவானதே பெரிய கோவில்
✨ காஞ்சிபுரத்தில் இராஜசிம்ம பல்லவன் அமைத்த கைலாசநாதர் கோவிலை கண்டு வியந்த இராஜராஜன் "கச்சிப்பேட்டு பெரியதளி" என மனமாற புகழ்ந்தான். அதுவே தஞ்சை கோவிலை கட்டிட இராஜராஜனை தூண்டி இருக்க வேண்டும் என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.
 
🌷 பொதுவாகவே தமிழர்கள் கலைக்கும், பக்திக்கும் அன்று பெரும் முக்கியத்துவம் கொடுத்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை
🌺 கி.பி 642-ல் வாதாபியை வென்றபின் பல்லவர்களின் கொடி தமிழகத்தில் கொடிகட்டி பறந்தது
பல்லவர்களின் கலைத்திறனுக்கு மாமல்லன் (மல்லர்களுக்கெல்லாம் மல்லன் ) என்றழைக்கப்பட்ட முதலாம் நரசிம்மவர்மன் அமைத்த மாமல்லபுரமே சாட்சி
 
🌹 கி.பி. 879 -ல் ஆதித்த சோழன் காலத்தில் திருப்புறம்பயம் போரிற்கு பின்னர் சோழர்கள் தலைதூக்க துவங்கினர்.
 
திருப்புறம்பயம் போரில் வென்றவுடன் அங்கிருந்த கோவிலையும், திருச்சிக்கு அருகில் இருக்கும் திரு எறும்பீஸ்வரர் கோவிலையும் கற்றளியாக மாற்றினான் முதலாம் ஆதித்த சோழன்.
அவரது மகனான முதலாம் பராந்தகனே தில்லைக்கு பொன்வேய்ந்தது.
 
🌺 இராஜராஜனின் தந்தையான சுந்தர சோழர் காலத்தில் கட்டப்பட்டதே இன்று திருச்சி -
 
மதுரை நெடுஞ்சாலையில் இருக்கும் கொடும்பாளூரில் அமைந்த மூவர் கோவில் ஆகும்
மேலும் திருநல்லூரில் இருக்கும் கார்கோடகேஷ்வரர் மற்றும் மீஞ்சுரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் இரண்டுமே இக்காலத்தில் கட்டப்பட்டவை தான்
🍀 அவ்வாறே இராஜராஜ சோழனின் வழியில் அவரது மகனான கங்கையும், கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழ புரத்தை நிர்மாணித்தார்.
 
( 1836 - ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இக்கோவிலின் மகா மண்டபம், முகமண்டபம் என பலவற்றை இடித்து அந்த கற்களை கொண்டு கொள்ளிடம் ஆற்றில் கீழணை கட்டினர் )
அவ்வழியிலேயே இரண்டாம் இராஜராஜன் தாராசுரம் கோவிலை கட்டினார்
(பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் இவை மூன்றும் Great Living Chola Temples என UNESCO - வால் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது)
💐 இவையெல்லாம் உதாரணங்கள் தான் பக்தியில் சிறந்த மன்னர்களால் எண்ணற்ற கற்றளிகள் கட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கழித்தும் நிற்கின்றன
 
 
🌹இவ்வளவு ஏன் தேவாரம் பாடிய அப்பரும், சம்பந்தரும் 7ம் நூற்றாண்டிலும், சுந்தரர் 9ம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்கள். அவ்வகையில் அவர்கள் பாடிச் சென்ற ஆலயங்கள் அனைத்துமே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையானவை தான்
🛕பாடல்பெற்ற ஸ்தலங்கள், கற்றளிகள் என தமிழகத்தில் பல கோவில்கள் இருந்தாலும் தஞ்சை பெரிய கோவில் தனி இடத்தை பிடித்தது என்றால் மிகையாகாது
தஞ்சை பெரியகோவிலை பற்றி அறியாதவர்கள் மிக குறைவு அதன் ஆச்சர்யங்களை விவரிக்கும் ஒரு சிறு தொகுப்பே இது
இனிவரும் பதிவுகளில் தஞ்சை பெரிய கோவிலை பற்றி பின்வரும் சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்
13/11/21 - கட்டுமானம்
14/11/21 - கலைநுட்பம்
15/11/21 - நிர்வாகம் மற்றும் செல்வம்
16/11/21 - சிவபாத சேகரன்
உருவாக்கம் : 
உருவாக்கம் : Seetha Raman.
 
 

காண்டீபதாரி அர்ஜுனன்  முகப்பக்கத்திலிருந்து....

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பொன்னியின் செல்வன் - 01 :
 
முதலாம் பராந்தக சோழர் ஆட்சியின் பிற்காலம். சோழர்கள் பாண்டிய நாட்டை வீரபாண்டியரிடம் இழந்தனர். அதே வேளையில், இளவரசர் இராஜாதித்தர் சோழ நாட்டின் வட எல்லைப்பகுதிகளைக் காத்து வந்தார். தக்கோலம் போரில் வீரப் போர் புரிந்த இராஜாதித்தர் யானை மீதிருந்த போதே தன் இன்னுயிரை நீத்தார். வடக்கு வீழ்ந்தது. சோழர்கள் வடக்கே பெரும்பகுதியை இழந்தனர். அடுத்து இளவரசர் ஆன கண்டராதித்தர் தன் தந்தை ஆட்சி முடிந்த பின், சோழ அரசர் ஆனார். அரிஞ்சயருக்கு இளவரசப் பட்டம் சூட்டி சில ஆண்டுகள் செவ்வனே ஆட்சி செய்தார். பின் ஆட்சிக்கு வந்த சுந்தர சோழர் பாண்டிய அரசர் வீரபாண்டியரை வெற்றி கொண்டு காடுபுகச் செய்தார். இதற்கு சற்று முன்பு சோழர் குடியில், கதிரவன் என பொன்னியின் செல்வன் பிறந்தார்!
 
(பொன்னி பாயும்)
 
May be an image of outdoors and temple
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14/11/2021

  • கருத்துக்கள உறவுகள்
மனைவி இறந்ததன் பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..
"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.
அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"
இதைகேட்ட தகப்பன் கேட்டான்.
"அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"
அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் .....
"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்..
ஆனால்..
"இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!!
அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...இந்த உலகில் என் கண்களால் நான் கண்ட கடவுள் என் அம்மா மட்டுமே....
என் உயிர் என் அம்மாதான்.!!!
 
  • கருத்துக்கள உறவுகள்
மரணம் ஒரு ஆனந்தம்
🌴நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.
🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,
🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,
🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,
🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,
எல்லாம் நேரம்!
🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,
🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!
🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.
🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!
🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.
🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும்,
🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!
🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,
🌴ஒருபக்கம் தாரை தப்பட்டைஇன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?
🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!
🌴என்ன பண்றது
பொணமா பொறந்தாலே இப்படிதான்!
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்
🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!
🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!
🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும் அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.
🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!
🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன!
🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும்
70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்!
🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது .
நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?
பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக
வாழுங்கள்.....
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
💝விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கபடும் ஒரு விருது
 
💝நமது மகாபாரத #வில்வித்தை_வீரர்_அர்ஜுனன் பெயரில் வழங்கபடுகிறது.
 
💝அர்ஜுனா விருது தனிநபர் மற்றும் குழு விளையாட்டில் இடம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது 1961-ல் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
 
🏆சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்களின் நான்காண்டு கண்கவர் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளானது விருது வழங்கும் ஆண்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
🏅விளையாட்டு வீரர்களின் #தலைமைப்பண்பு,
#ஒழுக்கம் ஆகியவையும் கூர்ந்தாய்வு செய்யப்படும்.
🏅ஒரு பாராட்டுச் சுருள்,
🏅அலங்கார உடை,
💸பணமுடிப்பு (5 இலட்சங்கள்)
🏏ஷிகர் தவான் - கிரிக்கெட்
🎾அங்கிதா ரெய்னா லான்
- டென்னிஸ்
🏑சிம்ரஞ்சித் சிங்
🏑சுரேந்தர் குமார்
🏑விவேக் பிரசாத்
🏑 நீலகண்ட சர்மா
🏑சுமித்து
🏑ஹாக்கிவருண் குமார்
🏑குர்ஜன்த் சிங்
🏑சாம்செர் சிங்
🏑அர்மன்பிரீத் சிங்
🏑உருபீந்தர் பால் சிங்
🏑தில்பிரீத் சிங்
🏑இலலித் உபாத்யாய்
🏑பிரேந்திர இலாக்ரா
🏑வந்தனா கடாரியா
🏑மண்டீப் சிங்
🏑அமிட் ரோகிதாசு
🏑மோனிகா மாலிக்
🏑அர்திக் சிங்
🥊சிம்ரஞ்சித்து கவுர் பாத் -Boxing
🎯அபிசேக் வெர்மா - Shooting
🏇🏻சரத் குமார்
🏇🏻யோகேஷ் கதுனியா
🏇🏻நிசாத் குமார்
🏇🏻பிரவீன் குமார்
🤼🏻சந்தீப் நர்வால் - கபடி
🏇🏻அர்பிந்தர் சிங் - Athletics
🏸சுகாஸ் யதிராஜ் - Para-Badminton
🏋தீபக் புனியா - Wrestling
🎯சிங்ராஜ் அதான - Para-Shooting
🤸🏻 ஹிமனி உட்டம் பரப் -
🎾பவினா படேல் - Para-Table Tennis
சி🤸🏻. ஏ. பவானி தேவி - Fencing
🇮🇳இவ்விருதுகள் அனைத்தும் நவம்பர் 3 ல் குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களால் அனைவருக்கும் வழங்கபட்டது...
🏹அர்ஜுனன் விருது கிடைக்க அற்புதங்கள் செய்ய வேண்டும்😍..
 
இராஜராஜேஸ்வரம் என்ற தஞ்சை பெரிய கோவில் - 2
🌹 முதல் பதிவில் பெரிய கோவிலின் கட்டுமானம் எப்படி பட்டது என காண்போம்
👑 2000 ஆண்டுகளுக்கு முன் சோழப்பேரரசனான கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையே பலமுறை காவிரியின் வெள்ளத்திற்கு போக்கு காட்டி நிற்கையில் 1000 வருடங்களுக்கு முன் இராஜராஜ சோழன் அமைத்த தஞ்சை பெரிய கோவில் கம்பீரமாய் நிற்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை
👑 முழுக்க முழுக்க இராஜ ராஜ சோழனின் கற்பனையாலும், அவரின் குருவும், சித்தர்களில் ஒருவரான கருவூராரின் அறிவுரையாலும் உருவானதே பெருவுடையார் கோவில்
🐯 இத்தனை காலம் கோவில் கம்பீரமாக நிற்பதற்கு முதன்மை காரணம் அஸ்திவாரம்
சரி கோவிலின் அஸ்திவாரம் எப்படிப்பட்டது...?
🌺 2010-ம் ஆண்டு கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவிற்காக கோவில் வளாகத்திலேயே ஆழ்கிணறு தோண்டினர்.
கோவில் அமைந்திருக்கும் பகுதி சுக்கான் பாறை பகுதியாகும். ஆனால் ஆச்சரியமாக அங்கு தோண்ட தோண்ட கிடைத்தது பருமணல் தான், 350 அடிகளுக்கு மேல் தான் களிமண் வந்தது ( பரு + மணல் இது மலைப்பகுதியில் கிடைக்கும், ஆற்று மணலை விட அளவில் பெரிய துகள்களை கொண்டது )
உடனடியாக அப்பணி நிறுத்தப்பட்டது, இன்றும் கோவிலை சுற்றி போர் போட சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
🌸 அதாவது கோவிலை அமைக்கும் முன் பெரிய குழி தோண்டி அதில் பருமணலை கொட்டி நிரப்பி இருக்கிறார்கள்.
🌷சாதாரணமாக மணலில் கட்டப்பட்டால் வேறு அதுவே பாத்திரத்தில் மணலை இடும்போது அதன் குணம் மாறும்
நில அதிர்வுகளை அது மேலே அனுப்பாது, மேலும் அது எவ்வளவு பெரிய கட்டுமானம் என்றாலும் இறுக்கி பிடிக்கும்
சரியாக சொன்னால் அரிசி மற்றும் பென்சிலை வைத்து சிறுவயதில் நாம் செய்த உராய்வு சம்மந்தப்பட்ட சோதனை தான்
பென்சில் மற்றும் அரிசி சோதனை
🌻 இத்தகைய கட்டுமானத்தை தாங்க குறைந்தது ஒரு கோடி கன அடி பரு மணல்கள் கோவிலின் கீழ் கொட்டப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றன
🌺 சரி அடுத்து சுற்றுவட்டாரத்தில் மலைகளே இல்லாத தஞ்சையில் எப்படி இத்தனை பாறைகள்
🌸 1,50,000 டன்‌ எடை கொண்ட கருங்கற்கள்‌ அதாவது தற்போதைய கணக்குப்படி 50 ஆயிரம்‌ லாரிகளில்‌ கொண்டு வந்து இருக்கவேண்டிய பெரும் கற்பாறைகளை எப்படியோ கொண்டுவந்து பிரம்மாண்டமாக செதுக்கி இருக்கிறார்கள்
🌹 கோவிலில் பயன்படுத்திய அனைத்து கற்களுமே அளவில் பிரம்மாண்டமான பெரிய கற்களே குறிப்பாக சொன்னால் கோயிலின் வாயில்களான கேரளாந்தகன் வாயில் மற்றும் இராஜராஜன் வாயிலில் 4 அடி நீளம் , 3 அடி அகலம் கொண்ட 40 அடி உயர ஒரே கல்லில்‌ ஆன தூண்கள்‌ பயன்படுத்தப்பட்டுள்ளன
(கேரளா + அந்தகன் அதாவது சேரர்களுக்கு எமனை போன்றவன் இது இராஜராஜசோழனின் மற்றொரு பெயர்)
🍀 மலைகள் அற்ற காவிரி டெல்டாவான தஞ்சையில் எப்படி இத்தனை கிரானைட் கற்கள் என ஆய்வாளர்கள் யோசிக்கையில் அவர்கள் கூறிய இடம் தஞ்சையிலிருந்து பல மைல் தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றான்டார் கோவில் தான். கிட்டதட்ட தஞ்சையில் உள்ள கல்லையும் சோதித்ததில் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதை கண்டறிந்தனர்
மேலும் தஞ்சைக்கு அருகில் அம்மாப்பேட்டை சாலையில் உள்ள உடையார் கோவில் கல்வெட்டில் " நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்து சிலை கொண்டு வந்து " என்ற வரிகள் இதை உறுதிப்படுத்தின.
சரி இத்தனை கற்கள் செதுக்கப்பட்டால், எவ்வளவு கழிவு வந்து இருக்கும் அவை எங்கு சென்றன..?
🌻 மேலும் முக்கியமான விஷயம் என்றால் தஞ்சை பெரியகோவிலில் சிமெண்ட மற்றும் சுண்ணாம்பு போன்ற இருகற்களை இணைக்கும் கலவை எதுவும் உபயோகப்படுத்தப்படவில்லை
🌸 அனைத்துமே குழி (ம) குமிழ் அமைப்பு அதாவது Interlocking Stones system, கிட்டத்தட்ட Puzzle போன்றது.
ஒரு கல்லை சமன்படுத்தி அதோடு இணையும் சரியான வடிவத்தில் உள்ள கல்லை குழி-குமிழ் முறையில் இணைப்பது, இது தான் கோபுரத்தில் துவங்கி சுற்றுசுவர் வரை கடைபிடிக்கப்பட்ட நுணுக்கம் ஆகும்.
🍀 கோவிலின் விமானம் இதுபோன்று கற்களை இம்மி பிசகாமல் அடிக்கி கட்டப்பட்டதே பிறகு இந்த வடிவம் சிதறாமல் இருக்க மேலே ஒரு பெரிய எடையை வைத்தார்கள்
கிட்டதட்ட 10 டன் எடையுள்ள 8 நந்திகள் மற்றும் 80 டன் எடையுள்ள கலசத்தை தாங்கும் உச்சிக்கல்
( இந்தக்கல் ஒரே கல் என சொல்லப்பட்டாலும் உண்மையில் 8 கற்களை கொண்டு ஆரஞ்சு பழம் போல இணைக்கப்பட்டு உருவாக்கியதே
Ref : குடவாயில் பாலசுப்பிரமணியன்)
🌹 கோவிலுக்கு சற்றுதூரத்தில் உள்ள சாரப்பள்ளம் எனும் ஊரிலிருந்து சாரம் அமைத்து இக்கல் ஏற்றப்பட்டதாகவும் கூறுவர்
ஆனால் கோவில் சுருள்தள வடிவில் சாரம் அமைத்து கட்டப்பட்டதே. சாரம் கட்ட மணல் தோண்டப்பட்ட இடமாதலால் சாரப்பள்ளம் என மருவி இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து, மேலும் அவ்வூர் 7 கி.மீ தள்ளி இருக்கும் ஊராகும்.
தற்போது பெரிய கோயிலுக்குத் தென்புறம் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுவரை நீண்ட மேடாகக் காட்சியளிப்பது அப்படிச் சுருள் சாய்வுதளம் அமைக்கப்பட்டதற்கான மண் தான் என்பது குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கருத்து.
💐 சரி மற்றகோவில்களை போல விமானம் சிறிதாக இல்லாமல் 216 அடி பிரம்மாண்ட விமானம் ஏன் அமைக்கப்படவேண்டும்..?
( அக்காலத்தில் வாயில் கோபுரங்கள் பெரிதாக கட்டும் வழக்கமும் இல்லை, பெரிய கோவிலின் வாயில் கோபுரங்கள் தான் மற்றவற்றிற்கு அடிப்படை )
🕉️ கைலாய யாத்திரை பற்றி நம்மில் பலரும் அறிவோம் ஈசனின் இருப்பிடமான மலையை லிங்கமாகவே பாவித்து அதை வணங்குவதில் முடிகிறது கைலாய யாத்திரை
இன்றும் பல ஸ்தலங்கள் தென்கயிலாயம் என்று போற்றப்பட்டாலும் கைலாயத்தை பிரதிபலிக்கும் எதுவும் இல்லை என இராஜராஜன் நினைத்தார் போலும்
கல்வெட்டின்படி இவ்விமானத்தின் பெயர் " தட்சிணமேரு " அதாவது தென்திசையில் உள்ள மேரு
💐 ஈசன் வாசம் செய்யும் மேரு மலையின் ரூபமாக அமைந்ததே இந்த பிரம்மாண்ட விமானம் இதையே ஈசனின் வடிவமாகவும் வடிவமைத்தார் இராஜராஜ சோழன்
🌷 கைலாய மலை சூர்ய உதயத்தின் போது பனியில் ஒளி எதிரொளிப்பால் தங்கமலை போன்று பிரகாசிக்கும் ஆனால் தட்சிணமேரு என்றுமே பிரகாசிக்கவேண்டும் என விமானம் முழுதும் தங்க தகடுகளை பதித்தார்
இராஜராஜசோழன் கயிலாயத்தையே பெரும்முயற்சியால் தஞ்சையில் அமைத்தார் என்றால் அது மிகையாகாது
🔱 கோவிலின் சுற்றுப்பாதையை பொறுத்தவரை அதை அமைத்தவர் இராஜராஜனின் சேனாதிபதியான கிருஷ்ணன் ராமன் ஆவார்
🏆 திருச்சுற்று மாளிகை என அழைக்கப்படும் சுற்றுப்பாதையில் மொத்தம்‌ 36 பரிவார ஆலயங்கள்‌ இருக்கின்றன. இவைகளில் அஷ்டதிக் பாலகர்களின் ஆலயங்கள் மட்டும் தற்போது சிதைந்த நிலையிலாவது உள்ளன. இவை தவிர எட்டு பிரகார தெய்வங்களின் ஆலயங்களும் உள்ளன ஆனால் அனைத்துமே படையெடுப்புகளால் சிதைந்துவிட்டன
மேலும் " திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி " என்ற வரி அம்மன் கோவில் வெளியே திருச்சுற்று மாளிகையில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன
ஆலயங்களில் சிலைகளின் கீழ் இருந்த நவமணிகளை கொள்ளையடிக்க இந்த ஆலயங்களில் இருந்த சிலைகள் உடைத்து எடுக்கப்பட்டன.
🌺 ஆய்வாளர்களின் கருத்துப்படி திருச்சுற்று மாளிகை இரண்டு அடுக்கு கொண்ட மாடியாக இருந்து பின்னாளில் அழிக்கப்பட்டு இருக்க வேண்டும் ஏனென்றால் அதன் மேல் தளத்தில் அதற்கான கூறுகள் இன்றும் உள்ளது
🎉 கி.பி 750-ல் இரண்டாம்‌ நந்திவர்ம பல்லவன்‌ சோழநாட்டில்‌ நந்திபுரத்து ஆயிரத்தளி எனும் ஆயிரம்‌ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து பெருங்கோவில் ஒன்று எழுப்பினார் ஆனால் மாலிக்காபூர் படையெடுப்பில் அவை அழிய அதில் 108 லிங்கங்களை மீட்டு பிரகாரத்தில் 1801 ஆம் இரண்டாம் சரபோஜி மன்னர் பிரதிஷ்டை செய்தார்
☔ ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இரண்டு வடிகால்கள் அமைத்து கட்டப்பட்ட கோவில் பெரிய கோவில்
அபிசேகம் செய்யப்பட்ட நீரும், தூசியாக வரும் நீரும் தெற்கு பக்கம் வழியாக நந்தவனத்திற்கும், மழையினால் வரும் அதிகபடியான நீர் வடக்கு பக்கம் மூலமாக சிவகங்கை குளத்திற்கும் செல்கின்றன
👑 " சோழநாடு சோறுடைத்து " என்பதற்கு முக்கிய காரணம் சோழர்களின் நீர் மேலாண்மையே. சோழர்கள் காலத்தில் வெட்டப்பட்ட வாய்க்கால்கள், ஏரிகள் எண்ணிலடங்காதவை
📖 இந்தியாவின் நீர் பாசன தந்தை என அழைக்கப்படுபவரான சர் ஆர்தர் காட்டன் கரிகாலன் அமைத்த கல்லணையை கண்டு பிரமித்து ஆங்கிலத்தில் " Grand anicut " என பெயரிட்டார்.
கோதாவரி நதியில் தவ்லேஸ்வரம் அணை , தமிழகத்தில் மேலணை மற்றும் கீழணையை கரிகாலனின் நுட்பத்தை பின்பற்றியே அமைத்தார்.
இதனால் செலவுகள் பல குறைந்து மேலணை என்றழைக்கப்படும் முக்கொம்பை 2 லட்ச ரூபாயில் கட்டி முடிக்க முடிந்தது
🏆 ஆந்திராவில் மட்டும் 3000 சிலைகள் உள்ள இந்திய நீர் பாசன தந்தையான இவருக்கே கரிகால சோழன் தான் குரு
🔍 கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது என சிலர் சொன்னாலும் காலையிலும், மாலையிலும் நிழல் விழும் இது வதந்தி என கூறுவோறும் உண்டு
உண்மையில் நண்பகல் அதாவது 12 மணிக்கு விமானத்தின் நிழல் கீழே விழாது இதிலென்ன ஆச்சர்யம்
ஒரு கட்டிடம் 0.0 டிகிரி நேராக அதாவது துளி கோணம் கூட சாயாமல் செங்குத்தாக இருந்தால் மட்டுமே அதன் நிழல் உச்சிவேளையில் கீழ் விழாது
🎁 ஒரு கட்டுமானம் 0.0° நேராக கட்டுவது உண்மையில் பெரும் சாதனை தான் அதுவும் 1000 வருடங்கள் கழித்தும் தனது காலத்தில் 1679-ல் துவங்கி இன்றுவரை பத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களை சந்தித்தும் துளிகூட மாறாமல் இருக்கும் தஞ்சை பெரிய கோவில் சாதனையின் உச்சம்
🌏 தற்போது சுரங்கத்தில் மெட்ரோ போவது ஆச்சர்யமாக இருக்கலாம், ஆனால் அன்று இராஜராஜன் குதிரையில் சுரங்கத்தின் வழியை பீரகதீஸ்வரரை தரிசனம் செய்தார்
இன்றும் நூற்றுக்கணக்கான சிக்கல்களை கொண்ட சுரங்கபாதைகள் தஞ்சை பெரியகோவிலில் காணப்படுகின்றன ஆனால் அவை ஆபத்து மிகுந்தவை என்பதால் மூடப்பட்டுள்ளன
💐 பொதுவாகவே அக்காலங்களில் சுரங்கபாதைகள் முக்கிய பங்கு வகித்தன பயணம் எளிது என்பது முதன்மை காரணமாக இருந்தாலும் சுரங்களினால் ஆபத்து காலங்களில் எளிதாக வெளியேற முடியும்
🌸 மிகவும் சிக்கலான அமைப்பாக இருப்பதால் பாதை தெரியாதவர்கள் உள்ளே நுழைந்தால் விஷவாயு, விஷஜந்துக்கள் முதல் பல இடர்களில் சிக்கி மரணமடைவார்கள்
🌷 ஆபத்து காலங்களில் முதலில் பெண்கள் வெளியேற வேண்டும் என்பதால் பெரும்பாலும் இவை அந்தப்புறத்திலிருந்தே துவங்கும்
🍀 அவ்வாறே கோட்டை எதிரிகளிடம் சிக்கிவிட்டால் கஜானாவில் உள்ள செல்வங்களை வெளியிலிருந்தே மீட்கலாம் என்பதால் அந்நாட்டின் செல்வங்களும் பெரும்பாலும் இந்த சுரங்கபாதைக்கு அடியிலேயே இருக்கும். சுரங்க பாதைகளின் ரகசியம் அரசன் முதலிய முக்கியமானவர்களுக்கு மட்டுமே தெரியுமென்பதால் இப்படி வைப்பது பாதுகாப்பானது
🌹 முக்கிய பாதைகள் ஆறுகள் குளங்களுக்கு அடியிலும் அமைக்கப்பட்டு இருக்கும். எதிரிகள் சுரங்க பாதைகளின் ரகசியம் அறிந்தால் ஒரு பாறையை குறிப்பிட்ட இடத்தில் உருட்டி விடுவதாலேயே அந்த சுரங்கபாதைகளில் நீர் புகுந்து உபயோகமற்றதாகிவிடும்
🏆 பொதுவாகவே நமது கோவில்கள் கம்பீரமாக கோட்டை போல் இருப்பதால் ஆங்கிலேயர்கள் முதல்கொண்டு பலர் சிப்பாய்களின் கூடாரமாகவும் பாதுகாப்பு அரண்களாகவும் போர்களில் பயன்படுத்தினர் அப்படி விற்களில் துவங்கி பீரங்கி வரை எதிர்த்தும் இன்னும் அழகு குறையாமல் நிற்கின்றது இராஜராஜேஸ்வரம்
🌺 அடுத்த பதிவில் கோவில் கட்ட பயன்படுத்திய அளவுகள் என்ன மேலும் கோவிலில் அமைந்த ஓவியங்கள், கரண சிற்பங்கள் மற்றும் சிலைகளை பற்றி பார்ப்போம்
உருவாக்கம் : Seetha Raman
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 21 தொடக்கம் 27 வரை மாவீரர் வாரம் ✍️

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருக்க முடியாம இந்த சுத்து மாத்து கனடா வந்து எல்லாரையும் குழப்பிட்டு போறது தான் மிச்சம்..சோ இனி எல்லாரும் பேசாதீஙகோ எழுதி தாங்கோ என்றல்லா கேட்க போயினம்.🤔👋✍️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.