Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு

Featured Replies

ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை, ரூ. 25 கோடி அபராதம்- ஜாமீன் இல்லை- உடனே சிறைக்கு செல்ல வேண்டும்

Edited by பகலவன்

  • Replies 118
  • Views 14.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாவின் அசுர வெற்றியைப் பார்த்து தமிழ்தேசிய அரசியல் எப்படி முன்னுக்கு வரும் என்று ஒருசமயம் கேட்டார்கள். காலம் ஒருபோதும் நேர்கோட்டில் பயணிப்பதில்லை. இந்த நிகழ்வு பல வாய்ப்புகளை தமிழுக்குத திறந்துவிட்டுள்ளது. இனியாவது ஒரு தமிழர் தமிழகத்தை ஆளும் நிலை வரவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு ரூ. 25 கோடி அபராதம் -

சசிகலாவுக்கும் ரூ. 25 கோடி அபராதம் -

இளவரசி, சுதாகரனுக்கும் தலா ரூ. 25 கோடி அபராதம்

-மொத்தத்தில் 4 பேருக்கும் சேர்த்து ரூ. 100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு

 

 

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html

4 வருட சிறை என்பதால் ஜெயலலிதாவுக்கு உடனடியாக ஜாமீன் இல்லை

-ஜெயா, சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே சிறைக்கு சென்றே ஆக வேண்டும்

-ஜெயலலிதாவுக்கு ரூ. 25 கோடி அபராதம் -சசிகலாவுக்கும் ரூ. 25 கோடி அபராதம்

-இளவரசி, சுதாகரனுக்கும் தலா ரூ. 25 கோடி அபராதம் -மொத்தத்தில் 4 பேருக்கும் சேர்த்து ரூ. 100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு

-10 வருடங்களுக்கு எந்தத் தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட முடியாது!

Read more at: http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html

-அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டிய முடியாது!

-ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது!!- எம்எல்ஏ பதவியும் பறிக்கப்படும்

 

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஸ்ரார் கொடுப்புக்குள் சிரித்தபடி வேட்டியை மடித்துக்கட்டுவதாக
எனக்கு ஒரு கனவு வந்தது பகல் கனவா?? தெரியவில்லை :o

செய்தி மாற்றம்


-ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம்

-சசிகலாவுக்கும் ரூ. 10 கோடி அபராதம்

-இளவரசி, சுதாகரனுக்கும் தலா ரூ. 10 கோடி அபராதம்

-மொத்தத்தில் 4 பேருக்கும் சேர்த்து ரூ. 130 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html

 

 

2G அலைகற்றை வழக்கில் கருணாநிதி குடும்பமும் உள்ளே போனால் நல்லது.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் இவாவை பாப்பேன் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்த்தது இல்லை cbuNC.jpg ....................

Edited by பையன்26

அடுத்த முதல்வர் யார் கவுண்டனா ...வன்னியரா ஆரம்பிச்சுட்டாங்க தமிழ்நாடு உருப்படும் இதில தமிழர் ஆண்டு ம்ம் .

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை: ரூ.100 கோடி அபராதம்

 

 

சரியாக மாலை 5 மணிக்கு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியை அபராதமாகவும் நீதிபதி விதித்தார். மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று காலையில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா மாலையில் தீர்ப்பளித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்கியது.

 

இதையடுத்து தீர்ப்பு விவரத்தை உணவு இடைவேளைக்கு பிறகு அறிவிப்பதாக நீதிபதி கூறினார். எனவே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரும் கோர்ட் வளாகத்திற்குள்ளேயே உள்ளனர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீர்ப்பு குறித்த விவரம் வெளியே வரும் என்பதையடுத்து அதிமுகவினரும், பொதுமக்களும், மீடியாக்காரர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தீர்ப்பில் அறிவிக்கப்படும் தண்டனையை பொறுத்துதான் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் இருப்பதால் நாடு முழுவதுமே மிகுந்த பரபரப்புடன் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தது.

 

இதனிடையே தீர்ப்பு வெளியே வந்ததும், அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால் கோர்ட் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் குவிந்திருந்த 200க்கும் மேற்பட்ட அதிமுகவினரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். கோர்ட்டை சுற்றி 1 கிலோமீட்டருக்கு போடப்பட்டிருந்த 144 தடையுத்தரவு 5 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/news/india/jayalalithaa-sentenced-four-years-imprisonment-assets-case-211837.html


அத்துடன் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோய்விட்டது. அதே நேரத்தில் அவரது எம்எல்ஏ பதவியும் விரைவில் பறிக்கப்படும்.

 

4 ஆண்டு சிறை தண்டனை என்பதால் இந்த நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீனும் கிடைக்காது. இதனால் நீதிமன்றத்தில் இருந்து அப்படியே சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்படுகின்றனர்.

 

இவர்கள் அடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தான் ஜாமீன் கோர முடியும். ஆனால், அடுத்த 10 நாட்கள் தசராவுக்காக உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது!

 

பெங்களூர்: நான்காண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன்படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார்.

 

இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம். எனவே ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதலையான பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டிய முடியாது.

 

ஒரு சட்டசபை அல்லது மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். எனவே 6 ஆண்டு போட்டியிட முடியாது என்றால் இரு பொதுத் தேர்தல்களில் குற்றவாளியால் போட்டியிட முடியாது என்றே அர்த்தம். எனவே ஜெயலலிதாவின் தண்டனை காலத்தை தவிர்த்து இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தாலும் கூட இன்னும் 2 சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாது.

 

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-can-t-contest-elections-6-years-211838.html

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா!

 

 

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

 

முதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். அதன் பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.

 

27-parappana-agrahara-jaya-600.jpg

 

இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அதிமுகவினர் கண்ணீர் விட்டு அழுதனர். சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து வரவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறும் வரை இந்த சிறையில் தான் ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பர். அது எத்தனை காலம் ஆனாலும்...

http://tamil.oneindia.in/news/india/jaya-locked-behind-bars-211840.html

Edited by பகலவன்

அ.தி.மு.க தலைவர் சிறையில், தி.மு.க உட்கட்சி பிரச்சனை.. தனது கட்சியை வளர்க்க காவிக்காரர்கள் (பா.ஜ.க) இதை சரியான் தருணமாக கருதி, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சியைக் கலைக்காமல் இருக்க வேண்டும். ஏற்கனவே சு.சாமி தனது திருவாயை மலர்ந்து தமிழ்நாட்டில் புலி, இஸ்லாமிய தீவிரவாதம், நக்சலைட் என சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இரண்டு வாரங்களில் ஆட்சி கலைக்கப்படும் என்று சொல்லிவிட்டார்.

சந்தோசப்படக் கூடிய ஒரு விடயம்:
குற்றவாளி தண்டிக்கப்பட்டுவிட்டார். (ஆனால் தமிழக மக்கள் அவரை குற்றம் செய்தவராக எண்ணிய நாட்கள் எல்லாம் போயி இப்பொழுது அனுதாபமாக பார்க்கிறார்கள்)

வருத்தப்படக் கூடிய விடயம்:
தமிழகத்தின் தேவைகளையும், எண்ணங்களையும் டெல்லிக்கு அஞ்சாமல் சொல்லக்கூடிய ஒரு தலைமை இல்லாமல் போய் அல்லக் கைகளின் ஆட்டம் அதிகமாகிவிடும். டெல்லிக்கு சாதகமாகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க தலைவர் சிறையில், தி.மு.க உட்கட்சி பிரச்சனை.. தனது கட்சியை வளர்க்க காவிக்காரர்கள் (பா.ஜ.க) இதை சரியான் தருணமாக கருதி, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சியைக் கலைக்காமல் இருக்க வேண்டும். ஏற்கனவே சு.சாமி தனது திருவாயை மலர்ந்து தமிழ்நாட்டில் புலி, இஸ்லாமிய தீவிரவாதம், நக்சலைட் என சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இரண்டு வாரங்களில் ஆட்சி கலைக்கப்படும் என்று சொல்லிவிட்டார்.

சந்தோசப்படக் கூடிய ஒரு விடயம்:

குற்றவாளி தண்டிக்கப்பட்டுவிட்டார். (ஆனால் தமிழக மக்கள் அவரை குற்றம் செய்தவராக எண்ணிய நாட்கள் எல்லாம் போயி இப்பொழுது அனுதாபமாக பார்க்கிறார்கள்)

வருத்தப்படக் கூடிய விடயம்:

தமிழகத்தின் தேவைகளையும், எண்ணங்களையும் டெல்லிக்கு அஞ்சாமல் சொல்லக்கூடிய ஒரு தலைமை இல்லாமல் போய் அல்லக் கைகளின் ஆட்டம் அதிகமாகிவிடும். டெல்லிக்கு சாதகமாகி விடும்.

 

அதிமுக  உடைவு

கருணாநிதியின் ஊழல் மற்றும் தமிழ்த்துரோகப்போக்கு

காங்கிரசின் அழிவு...

 

எல்லாவற்றையும் கணக்கிட்டு

தமிழ்  உணர்வாளர்கள்  ஒன்றாகி  பலமானால்

தமிழக மக்கள் இவர்கள் பக்கம் திரும்பும் வாய்ப்புள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படி ஒரு எதிர்ப்பை.. முள்ளிவாய்க்காலில் எம்மினம் கருணாநிதியின் நயவஞ்சக யுத்த நிறுத்த அறிவிப்பால் அழிந்து கொண்டிருந்த போது.. அதிமுக வினர் செய்திருந்தால்.. இப்ப மனசு ஜெ வுக்காக கொஞ்சம் கசியும். ஆனால்...????????????????! :icon_idea::rolleyes:

அதிமுக  உடைவு

கருணாநிதியின் ஊழல் மற்றும் தமிழ்த்துரோகப்போக்கு

காங்கிரசின் அழிவு...

 

எல்லாவற்றையும் கணக்கிட்டு

தமிழ்  உணர்வாளர்கள்  ஒன்றாகி  பலமானால்

தமிழக மக்கள் இவர்கள் பக்கம் திரும்பும் வாய்ப்புள்ளது

 

 

கொஞ்சமேனும் கொள்கைக்காக கட்சி நடக்குதேன்றால் அது ம.தி.மு.க தான். மற்றபடி தே.மு.தி.க, பா.ம.க அனைவரும் ஒரு ராஜ்யசபா இருக்கை கொடுத்தால் போதும் என்று இருப்பவர்கள். இவர்களால் உருப்படியாக யோசிக்கவும் முடியாது.. செய்யவும் முடியாது.

தமிழ் உணர்வாளர்கள்... ??!! இவர்கள் கருத்துக்களை விதைக்கலாம்.. அதன் மூலம் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்  சாமானியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு (சுப்புக்கு) புலியை இழுக்காட்டி.. மகிந்த பிச்சை போடமாட்டார் போல. :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமேனும் கொள்கைக்காக கட்சி நடக்குதேன்றால் அது ம.தி.மு.க தான். மற்றபடி தே.மு.தி.க, பா.ம.க அனைவரும் ஒரு ராஜ்யசபா இருக்கை கொடுத்தால் போதும் என்று இருப்பவர்கள். இவர்களால் உருப்படியாக யோசிக்கவும் முடியாது.. செய்யவும் முடியாது.

தமிழ் உணர்வாளர்கள்... ??!! இவர்கள் கருத்துக்களை விதைக்கலாம்.. அதன் மூலம் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்  சாமானியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய முடியாது.

 

சாமானியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய.. ஒரு தகுந்த புறக்காரணி தேவையாக‌ இருக்கிறது.. :rolleyes:

 

பின்புலத்தில் இராணுவ உடையில் யாரோ வந்து போகிறார்கள்??

சாமானியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய.. ஒரு தகுந்த புறக்காரணி தேவையாக‌ இருக்கிறது.. :rolleyes:

 

 

 

அந்தப் புறக்காரணி அவர்களின் அப்போதைய தேவைகளையும்/ உணர்வுகளையும்  சார்ந்தது...

ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது -திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது -திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

பிறகு நான் உள்ளே போதும்போது அவர்களும் கொண்டாடிவிடுவர்கள்.. (சொல்லாமல் விட்டது)

சரி... மேன்முறையீடு, உச்ச நீதி மன்றம், அதி உச்ச நீதிமன்றம்...என்றெல்லாம் இனி இழுத்தடிப்பு செய்ய முடியாதா? இந்திய அரசியல் வாதிகளில் இதில் கை தேர்ந்தவர்களாயிற்றே.......

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது -திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்.

 

மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது என்பது போல் உள்ளது.  நன்றாகப் பட்டாசு வெடுத்துக் கொண்டடுங்கள் என ஞாபகப் படுத்துகின்றார்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.