Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயாவின் கைதையடுத்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைந்துள்ளது: டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயாவின் கைதையடுத்து இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைந்துள்ளது: டக்ளஸ்

 
da2(1).JPG

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைதினையடுத்து, எல்லைதாண்டிய இந்திய மீனவர்களது தொழில் நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

 

யாழ்;ப்பாணம், பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய ரீதியிலான வலைப்பந்து, கரப்பந்து, கூடைப்பந்தாட்ட மைதானங்களுக்கான சிரமதானப் பணியை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'தமிழ் நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா அதிகமான சேவைகளை செய்துள்ள போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடியால் அந்த மக்களுக்கான முன்னேற்றங்கள் தடைப்பட்டிருக்கலாமேயொழியே, இலங்கை தமிழர்களை பொறுத்தவரையில் அது இன்னும் முன்னேற்றகரமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்' என்றார் 

'எல்லை தாண்டிய தமிழ் நாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பினுள் வந்து தொழில் செய்வதனால் எம்முடைய கடற்தொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமன்றி இவ்வாறு எல்லை தாண்டிய அவர்களது தொழில் நடவடிக்கைகளால் எமது கடல் வளமும் சூறையாடப்படுகின்றது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் கைதுக்கு பின்னர் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வருவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றதென்று சுட்டிக்காட்டினார்.

  • கருத்துக்கள உறவுகள்
இந்தாளும் ஒரு நாள் அங்க அம்மாவை உள்ளுக்க சந்திக்க வேண்டி வரும்..
 
எதுக்கும் அளந்து கதைக்கிறது நல்லது.  :D
  • கருத்துக்கள உறவுகள்

பூனையில்லா வீட்டில் எலிகளுக்குக் கொண்டாட்டம். எலி ஒன்று துள்ளிக் குதிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் எல்லை மீறுவதற்கு ஜெயாவே காரணம் என்று பழிபோடுறார்.. எந்தக்காலத்தில் ஆள் இருக்குது? :D

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்கள் எல்லை மீறுவதற்கு ஜெயாவே காரணம் என்று பழிபோடுறார்.. எந்தக்காலத்தில் ஆள் இருக்குது? :D

 

 

மாமா

ஆளைத்தெரியாமல் காலை விடுகிறார்... :lol:

பாவம் டக்கிளஸ்.... நுணிலும் தன் வாயால் கெடும் என்பது, இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மாமா

ஆளைத்தெரியாமல் காலை விடுகிறார்... :lol:

 

உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனை ஆன கருணாநிதியே வாயை பொத்திக்கொண்டிருக்கிறார்......இந்தாளுக்கு தேவையில்லாத சோலி.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனை ஆன கருணாநிதியே வாயை பொத்திக்கொண்டிருக்கிறார்......இந்தாளுக்கு தேவையில்லாத சோலி.. :lol:

 

எல்லாம் சுப்பிரமணி இருக்கிற துணிவுதான்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா இன்னும்.... ஒரு மதமோ, இரண்டு மாதமோ... தான் சிறையில் இருப்பார்.
அதன் பின் எப்படியும், வெளியில் வந்து விடுவார்.
அதுக்குப் பிறகு, டக்ளஸ் வாலைச் சுருட்டிக் கொண்டுதான் இருக்க வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழக மீனவர்கள் 16பேர் சிங்களக் கடற்படையால் கைது!

 

 

navy.jpgதமிழக மீனவர்கள் 16 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 3 விசைப்படகுகளையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர்.இதேபோல், நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு விசை படகையும் அதில் இருந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்து சென்றுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களும் இலங்கை காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே தமிழக மீனவர்கள் 80 பேர் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 16 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

http://tamilleader.com/?p=42079

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் 16பேர் சிங்களக் கடற்படையால் கைது!

 

இனி  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டத்தேவையில்லை

சிங்களவன் எல்லை தாண்டி வருவான் :(

  • கருத்துக்கள உறவுகள்

MGR க்கு பிறகு இலங்கையரசிற்க்கு ஒரு மாநில அரசின் முதல்வராக இருந்து இலங்கை அரசிற்க்கு அதிக நெருக்கடிகளை கொடுத்தவர் மம்மி தான்  இதை சென்றல் ரசிக்கபோவதில்லை தெரிஞ்சும் கண்டன தீர்மாணங்களை இலங்கை இனவாத அரசிற்க்கு எதிராக இயற்றினார் இந்த வகையில் கைபுள்ளைகருநாநிதியை விட எவ்வளவோ மேல் மம்மி வெளியில் விரைவில் வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.