Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் ராணுவவீரர்களின் மீது நடக்கும் தொடர் தாக்குதல்

Featured Replies

கனடாவில் ராணுவவீரர்களின் மீது நடக்கும் தொடர் தாக்குதல்
 
  நேற்றுமுன் தினம் மொன்றியல் நகரிலிருந்து 30 கி.மீற்றர் தொலைவில் உள்ள சென்ற் றீசெலு நகரில் இரு ராணுவத்தினர் வாகனத்தால் மோதி விபத்துக்குள்ளாக்கப்பட்டனர்.இன்றுகாலை ஒட்டாவா நகரின் மையத்தில்  நாடாளுமன்றின் அருகில் போர் நினைவுச்சின்னத்திற்கு அருகில் மீண்டும் ஒரு சிப்பாய் சுடப்பட்டார்.இவ்விருதாக்குதலும் மிகவும் கச்சிதமாக நேர்த்தியாக திட்டமிடப்பட்டுள்ளது.இத் தாக்குதலை நடத்தியவர்களில் முதலாமவர் இடையிட்டு இஸ்லாத்தில் இணைந்த கியுபெக்கர்.இன்றைய தாக்குதலில் கறுப்பு இனத்தவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதுவரை முஸ்லீம்கள் நேரடியாக சம்பந்தப்படவில்லை.இருந்தாலும் ஐஎஸ் ஐஎஸ்ன் பின் புலமிருப்பதாகத்தான் கருதுகின்றனர்.இதுவரை காலமும் கனடா ஒரு அமைதியான பாதுகாப்பான நாடு என்று தான் பல இலட்சம் மக்கள் குடியேறியிருந்தனர்.இதற்காக பெரும் பண மற்றும் பொருட்செலவு செய்துள்ளனர்.ஆனால் இது கேள்விக்குறியாகுமோ?
 
 
 
  • தொடங்கியவர்

கனடா-ஒட்டாவாவில் உள்ள தேசிய போர் நினைவகத்தில் புதன்கிழமை காலை  துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும் போர்வீரர் ஆக இருக்கலாம் என நம்பபடும் ஒருவர் தரையில் கிடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி ஏந்திய மனிதன் ஒருவர் போர் ஞாபகார்த்த சின்னத்தின் முன்னால் நின்ற காவலரை சுட்டதாகவும் மேலதிக தோட்டாக்கள் அண்மையில் உள்ள Parliament Hill-ல் சுடப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.

பொலிசார் மற்றும் அம்புலன்ஸ் சம்பவ இடத்தில் காணப்படுகின்றனர். பாராளுமன்றம் பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் காணப்பட்ட சாட்சியங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடரும்…

shot-600x400.jpg shot1.jpg shot2.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

தோள்பட்டையில் காயமடைந்த போர் வீரர் சற்று முன் மரணமடைந்துவிட்டார் என தொிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் வளர்ச்சியும்

ஆட்சேர்ப்பும்

கலப்பு மக்கள் கூட்டமும் 

என்றுமே கனடாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானவை...

 

போகப்போகத்தெரியும்...... :(

இதை ஆரம்பத்திலேயே கிள்ளி  எறியாவிட்டால்.............? :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்ட தாக்குதலில் முஸ்லிம்கள் சம்பந்தப்படவில்லையாம். ஒருவர் கறுப்பு இனத்தவர் என கூறப்படுகிறது.

சிப்பாயைக் கொன்று கனடிய நாடாளுமன்றத்தில் நுழைந்த துப்பாக்கிதாரி

 

கனடாவின் ஒட்டாவாவில் நாடாளுமன்றத்தை ஒட்டியிருந்த நினைவிடம் ஒன்றில் காவலுக்கு நின்ற சிப்பாயை துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுவிட்டு, பின்னர் பொலிசார் விரட்ட நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் அவர் நுழைந்துள்ளார்.

சிப்பாய்களாலும் பொலிசாரும் சூழ்ந்துகொள்ள நாடாளுமன்றம் அடைக்கப்பட்டுள்ளது.
 
141022151919_canada_police_624x351_reute
இடத்தை அடைத்து சிப்பாய்கள் தேடி வருகின்றனர்
கருப்பு உடையணிந்த ஒருவர் துப்பாக்கி ஏந்தி வந்ததைப் பார்த்ததாக சாட்சிகள் கூறுகின்றனர்.
துப்பாக்கி சத்தம் தொடர்ந்து கேட்டபடி இருக்க பொலிசார் பதுங்குவதை நாடாளுமன்றத்துக்குள் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் காட்டுகின்றன.
வந்த துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவிட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
வேறு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக கட்டிடத்தை பொலிசார் தேடிவருகின்றனர்.
ஒட்டாவாவில், ஜன்னல்களை ஒட்டியும், மேற்கூரையிலும் நிற்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தலை, குறைந்த அளவில் இருந்து மத்திய அளவுக்கு அரசாங்கம் அறிவித்து சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த திங்களன்று கியுபெக் நகரில் அண்மையில் இஸ்லாத்துக்கு மாறியிருந்த நபரொருவர் கனடிய சிப்பாய்கள் இருவர் மீது காரைக் கொண்டுவந்து மோதி அதில் ஒருவரைக் கொன்றும் ஒருவரைக் காயப்படுத்தியும் இருந்தார்.
அந்நபரை பொலிசார் சுட்டுக் கொன்றிருந்தனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் மிகை படுத்தி எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவின் வளர்ச்சியும்

ஆட்சேர்ப்பும்

கலப்பு மக்கள் கூட்டமும் 

என்றுமே கனடாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானவை...

 

போகப்போகத்தெரியும்...... :(

இதை ஆரம்பத்திலேயே கிள்ளி  எறியாவிட்டால்.............? :(

 

பிரான்ஸ்சைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் விசுகர்? :)
ஒருசில வருடங்களுக்கு முன் ஆபிரிக்க வந்தேறுகுடிகளால் நடந்த எரிப்பு மற்றும் இதர அட்டூழியங்களால் ஐரோப்பாவே ஒருகணம் தடுமாறி விட்டது. :o
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்ட தாக்குதலில் முஸ்லிம்கள் சம்பந்தப்படவில்லையாம். ஒருவர் கறுப்பு இனத்தவர் என கூறப்படுகிறது.

 

சம்பந்தப்பட்டவர் கறுப்பினத்தவராக இருக்கலாம், ஆனால் அவர் இஸ்லாம் மதத்திற்கு மூளைச்ச்லவை செய்யப்பட்டு மதம் மாற்றப்பட்டவர் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 

ஏற்கனவே போதைப்பொறருள் பாவனைக்கு ஆட்பட்டிருந்த இவரை இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் இலகுவாக மதம்மாற்றி இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தூண்டியிருக்கிரார்கள்.

 

இவருடன் கூடவே இன்னும் சில பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.

 

சிரியாவிலும் ஈராக்கிலும் சுன்னியல்லாத அனைவரையும் கொன்றுகுவித்து வரும் மிருகங்களான ஐஸிஸ் பயங்கர்வாதிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்கா தலமையிலான மேற்குலக நாடுகள் அங்கே வாந்தாக்குதல்களை ஆரம்பித்து நடத்திவருவது தெரிந்ததே. இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பல நாடுகளின் தலைவர்களுக்கு கொலைப் பயமுறுத்தல் விட்டிருக்கும் ஐஸிஸ் பயங்கரவாதிகள், அந்தந்த நாடுகளில் இருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் அந்த நாடுகளில் முடிந்தவரை அனவைரையும் கொல்லவேண்டும் என்று அண்மையில் வீடியோ மூலம் அறைகூவல் விட்டது நினவிலிருக்கலாம். பொதுமக்கள் மீதான மும்பாய்ப் பாணித் தாக்குதல்கள், கழுத்தறுப்புக்கள் என்று பல்வேறுபட்ட முறைகளில் இந்தக் கொலைகள் திட்டமிடப்படவேண்டும் என்று அந்த வீடியோ கேட்டிருந்தது. அதற்கிணங்க அவுஸ்த்திரேலியாவில் பயங்கரவாதிகள் இப்படியான கொலைகளுக்கு ஆயத்தப்பட்டு வருகையில் பொலிஸார் விரைந்து செயற்பட்டு அவர்களைக் கைது செய்தார்கள். மெல்பேர்னின் பொலிஸாரைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற ஆப்கானிய வந்தேறுகுடிப் பயங்கரவாதி பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

 

இப்போது கணடாவில் நடந்திருக்கிரது. நேற்று தனது காரினால் மோதி ஒரு ராணூவ வீரனைக் கொன்ற இன்னொரு மூளைச்சலவை செய்யப்பட்ட அடிப்படைவாத இஸ்லாமியப் பயங்கரவாதி பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்னொரு மூளைச்சலவை செய்யப்பட்ட பயங்கரவாதி இந்தத் தாக்குதலை நடத்தி தானும் கொல்லப்பட்டிருக்கிறான்.

 

மனித குலத்திற்கெதிரான இந்த இஸ்லாமிய மிருகங்கள் கொல்லப்படுவதில் எந்தத் தயவு தாட்சண்யமும் பார்க்கப்படக் கூடாது.

மேலேழுந்தவாரியாக எவரும் எதையும் எழுதிவிட்டுபோகாலாம் ஆனால் இதற்குள் பெரிய அரசியல் இருக்கு ,பல்லின கலாச்சாரத்திற்கும் இதற்கும் எதுவித தொடர்புமில்லை .

 

இது கனேடிய வெளியுறவு கொள்கை சம்பந்தப்பட்டது .முன்னாள் கனேடிய பிரதமர்களால் தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டுக்கொண்டு வந்த விடயங்கள் இவை .

 

உலகம் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை தான் முக்கியகாரணம் அதுவும் குறிப்பாக ஜோர்ச் புஷ்ஷின் இரண்டு தவணை தொடர்ந்த ஆட்சி உலக ஒழுங்கையே மாற்றிவிட்டது .

 

வியட்னாம் போரின் மூலம் பாடம் படிக்காதவர்கள் இனி படிப்பார்கள் என்று நம்பஇடமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

மேலேழுந்தவாரியாக எவரும் எதையும் எழுதிவிட்டுபோகாலாம் ஆனால் இதற்குள் பெரிய அரசியல் இருக்கு ,பல்லின கலாச்சாரத்திற்கும் இதற்கும் எதுவித தொடர்புமில்லை .

 

இது கனேடிய வெளியுறவு கொள்கை சம்பந்தப்பட்டது .முன்னாள் கனேடிய பிரதமர்களால் தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டுக்கொண்டு வந்த விடயங்கள் இவை .

 

உலகம் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை தான் முக்கியகாரணம் அதுவும் குறிப்பாக ஜோர்ச் புஷ்ஷின் இரண்டு தவணை தொடர்ந்த ஆட்சி உலக ஒழுங்கையே மாற்றிவிட்டது .

 

வியட்னாம் போரின் மூலம் பாடம் படிக்காதவர்கள் இனி படிப்பார்கள் என்று நம்பஇடமில்லை .

 

உலக மகா முட்டாளான ஜோர்ஜ் புஷ்ஷின் காலத்தில்த்தான் உலக ஒழுங்கு மாற்றப்பட்டது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அவனால் அழிக்கப்பட்ட உண்மையான சுதந்திரப் போராட்டங்களுக்கு நாம் ஒரு உதாரணம். இதில் எமது பங்கும் அடங்கியிருக்கிறதென்பது வேறு விடயம்.

அவனதும், அவனது வியாபார நண்பர்களினதும் லாபத்திற்காக ஒரே நேரத்தில் இரண்டு போர்களைத் தொடக்கி உலகில் பல இடங்களில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படக் காரணமானவன். அவனது முட்டாள்த்தனமான ஆட்சியினால் நடத்தப்பட்ட தவறுகளைத் திருத்தியெடுப்பது கடிணமான வேலை. ஒபாமா இன்று செய்துகொனண்டிருப்பது அவன் செய்த தவறுகளைத் திருத்தும் வேலைதான்.

அதன்படி முதலாவதாக அப்ப்கானிஸ்த்தான் மற்றும் ஈராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களை வெளியேற்றுவது, அந்தந்த நாடுகளிடமே அதன் அதன் அதிகாரங்களை ஒப்படைப்பது.

இரண்டாவது மத்திய கிழக்கில் இஸ்த்திர நிலையைப் பேணுவது. ஐஸிஸ் பயங்கரவாதிகளுக்கெதிரான தாக்குதலின் நோக்கமே ஈராக்கிலும் அதனைச் சுர்ற்றியுள்ள நாடுகளிலும் இஸ்திரத்தன்மைய ஏற்படுத்துவது, மத்திய கிழக்கில் தனது நண்பர்களுக்கு தைரியத்தைக் கொடுப்பதும்தான்.

ஐசிஸ் யாரென்றே கேள்விக்குறியாக இருக்கின்றது .

 

மேற்கைத்தைய நாடுகளின் இரட்டை முகம் கொண்ட வெளிநாட்டு கொள்கை உலகை என்றுமே அமைதியாக இருக்கவிடமாட்டாது.

 

தமக்கு சாதகமானவர்கள் வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு கொள்கை தம்முடன் ஒத்துவராதவர்களுக்கு ஒரு கொள்கை .இஸ்ரேலை விடவும் அது அவர்கள் செல்லபிள்ளை .சவூதி அரேபியா உலகில் மிக மனித உரிமை மீறல்கள் கூடிய நாடு ஆனால் அவர்கள் செய்யும் எந்த மனித உரிமை மீறலும் அவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை .சவூதி ,குவைத் ,யு ஏ ஈ  சேக்குகளின் வாழ்கையே அமெரிக்க கசினோவில் தான்  .ஈரான் ,ஈராக் ,லிபியா ,எகிப்திற்கு முதல் இவர்கள் ஆட்சியைத்தான் மாற்றியிருக்கவேண்டும் .

 

அண்மையில் ஒரு விடியோ பார்த்தேன் .சிறுவர்களை வைத்து சேக்குகள் நடாத்தும் ஒரு ஒட்டக ரேஸ் .கண் கொண்டு பார்க்கமுடியாது அவ்வளவு அவலம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸிஸ் என்னும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் உருவாக்கம் என்பது ஜோர்ஜ் புஷ் என்னும் உலக மகா முட்டாளின் பொய்யான காரணங்களைக் காட்டி தனது எண்ணெய் மற்று ஆயுத விற்பனைக்காக ஈராக் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தின் நேரடி விளைவு என்றுதான் சொல்லவேண்டும்.

 

சுன்னி முஸ்லீமான சதாமை பதவியிலிருந்து அகற்றிவிட்டு, தனக்கு விசுவாசமான சியா முஸ்லீம் ஒருவனைப் பதவியில் அமர்த்தியது புஷ்ஷின் அரசு. சியா பொம்மை அரசினால் வஞ்சம் தீர்க்கப்பட்ட சுன்னி ராணுவ அதிகாரிகளும் மக்களும் இராக்கிய அரசை விட்டு ஒதுங்கத் தொடங்கினார்கள். இவ்வாறு ஈராக் அரசு மீது அதிருப்தி கொண்டவர்களை வைத்து ஐஸிஸ் எனும் அமைப்பை ஒரு சுன்னி முஸ்லீம் கலாநிதியான பக்டாதி ஆரம்பித்து வைத்தான்.

 

சிரியாவில் ஆஸாத்தின் அரசுக்கெதிராக சுதந்திரச் சிரியா ராணுவம் எனும் அமைப்பு இரு வருடங்களுக்கு முன்னதாகப் போராடத் தொடங்கியபோது அமெரிக்கா தலமையிலான மேற்குலகு அவர்களுக்கு பண , ஆயுத உதவிகளைச் செய்ய ஆரம்பித்தது. ஆஸாத்துக்கெதிரான போரில் ஈடுபட உலகின் பல பாகங்களிலிருந்தும் முஸ்லீம் அடிப்படைவாதிகள் வந்து குவிந்தபோது ஐஸிஸும் இதில் தன்னை இணைத்துக்கொண்டது. இதன்மூலம் அமெரிக்கா தலமையிலான மேற்குலகின் உதவி ஐஸிஸுக்கும் ஆரம்பத்தில் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே சதாமின் ராணுவத்திலிருந்தபோது பெற்றுக்கொண்ட பயிற்சி மற்றும் இராணுவ உபகரணங்களைஈயக்கும் ஆற்றல் என்பவற்றினால் ஐஸிஸ் ஆசாத்துக்கெதிரான போரில் மற்றைய இயக்கங்களைவிட முண்ணனி வகித்ததுடன், சிறிது சிறிதாக மற்றைய இயக்கங்களை அழிப்பதிலும் வெற்றி கண்டது.

 

ஆசாத்துக்கெதிராக ஆரம்பத்தில் ஐஸிஸ் தொடங்கிய போர் பின்னர் ஈராக், குர்திஸ்த்தான் என்று திரும்பவே சுதாரித்துக்கொண்ட அமெரிக்கா அதனை எப்படியாவது அழிக்கத் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

 

1980 களில் அப்கானிஸ்த்தானில் சோவியத் ஆக்கிரமிற்கெதிராகப் போராடிய முஜாகிதீன்களுக்கு ஆயுதமும், பணமும் தார்மீக உதவியும் வழங்கிய அமெரிக்க இறுதியில் அவர்களுக்கெதிராகவே போராடியதுபோலவே ஐஸிஸின் கதையும் இருக்கிறது.

 

இவை எல்லாமே அமெரிக்காவின் முட்டாள்த்தனமான வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த பரிசுகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரான்ஸ்சைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் விசுகர்? :)
ஒருசில வருடங்களுக்கு முன் ஆபிரிக்க வந்தேறுகுடிகளால் நடந்த எரிப்பு மற்றும் இதர அட்டூழியங்களால் ஐரோப்பாவே ஒருகணம் தடுமாறி விட்டது. :o

 

 

 

அண்ணா

பிரான்சின் அனுபவத்தின் அடிப்படையில் தான் அதை நான் எழுதினேன்

 

பிரான்சின் மாநகரங்களே மக்கள் குடியிருப்புக்களை  தீர்மானிக்கின்றன

குடிப்பரம்பல் குறித்து

மிகவும் அவதானமாகவும் ஒரே இன  மக்கள் ஒரே இடத்தில் அதிகமாகிவிடாதபடியும் பார்த்துக்கொள்வார்கள்

ஆனால் அதையும் தாண்டி

பரிசில் சில பகுதிகளிலும் (18,19, 20)

அதனை அண்டிய St. Ouen, St. Denis போன்ற பகுதிகளிலும் அதினுடன் இணைந்த 93  பகுதியிலும் வெளிநாட்டவரின் முக்கியமாக இசுலாமியர்களின் (கறுப்பு - வெள்ளை)அடர்த்தி அதிகரித்துவிட்டது.

நடந்த அசம்பாவிதங்களின் பின்

அவற்றை நிவர்த்தி  செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன(இவை எமது கண்களுக்கு தெரியாது)

 

இந்த அனுபவத்தில் பார்க்கும் போது

கனடாவில் நான் பார்த்த கேட்ட அளவில்

அவரவர்  தத்தமது பகுதிகளை உருவாக்கி

அங்கே அரசியல் உட்பட எல்லாவற்றையும் தனித்தனியே  தொடங்கி

ஆட்சிகளையும்  தீர்மானிப்பவர்களாக வளர்ந்து

தற்பொழுது அந்தந்த இடங்களில் ஆட்சிகளை நடாத்துபவர்களாக வந்திருக்கிறார்கள்

 

இதேநிலை யேர்மனியில் சில இடங்களில் துருக்கி மக்கள் சார்ந்தும்

டென்மார்க்கில் இசுலாமியர்கள்  சார்ந்தும் ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்....

டென்மார்க்கில்

அந்த பகுதிகளுக்கு காவல்துறையினர் செல்லமாட்டோம்

நாம் வேலைக்குத்தான் வந்தோம்

சாக அல்ல என ஒரு பேட்டியை  நானே பார்த்தேன்.......

ஒரு ஐம்பது வருடத்துக்குள்

டென்மார்க்

இசுலாமிய  நாடாக வாய்ப்புள்ளதாக தகவல்கள்  கூறுகின்றன....

இசை கனடாவை பொறுப்பெடுக்க இதுதான் சரியான தருணம் ..சிங்கம் இரண்டு சூர்யா போல  :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை கனடாவை பொறுப்பெடுக்க இதுதான் சரியான தருணம் ..சிங்கம் இரண்டு சூர்யா போல :D

அப்ப சிங்கம் - 2 பார்த்திட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான். :lol:

சூடு நடாத்தியவர் மொன்றியலை சேர்ந்தவர் .இவர் கடந்த பத்துவருடங்களில் களவு ,கொள்ளை ,கஞ்சா கேசுகள் என்று பதின்மூன்று தடவைகள் பிடிபட்டவர் .இதில் பன்னிரண்டு கேசுகளில் குற்றவாளியாக காணப்பட்டவர்.ஒரு கொள்ளை கேசில் இருவருடங்கள் உள்ளே வேறு இருந்தவர் .

 

எனது நண்பர் ஒருவரை இந்தியாவில் சந்தித்தேன் .ஒரு சேரி போன்ற இடத்தில் வசித்துவந்தார். தமிழ்நாட்டுகாரர்களுக்கு எந்த வித அறிவும் இல்லை என்று குறைப்பட்டார்,அதில் அவர்களுக்கு ஆங்கிலம் வேறு தெரியாது என்று  சொன்னார் .அவர் பழகி வந்தது சேரி நண்பர்களுடனும் ஆட்டோகாரர்களுடன் தான் .

அவரில் பிழையில்லை அவரின் வட்டம் அந்த அளவுதான் .

 

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

10354895_817315541643965_129291600509949

DAILY POLL: What do you think motivated the terrorist attack on Parliament Hill?

1) Mental illness

2) Politics

3) Religion 

4) Exclusion

VOTE on our homepage: http://www.sunnewsnetwork.ca

GUNTER: Only Muslims can solve this problem: http://ow.ly/Ddkut

 

அண்ணா

பிரான்சின் அனுபவத்தின் அடிப்படையில் தான் அதை நான் எழுதினேன்

 

பிரான்சின் மாநகரங்களே மக்கள் குடியிருப்புக்களை  தீர்மானிக்கின்றன

குடிப்பரம்பல் குறித்து

மிகவும் அவதானமாகவும் ஒரே இன  மக்கள் ஒரே இடத்தில் அதிகமாகிவிடாதபடியும் பார்த்துக்கொள்வார்கள்

ஆனால் அதையும் தாண்டி

பரிசில் சில பகுதிகளிலும் (18,19, 20)

அதனை அண்டிய St. Ouen, St. Denis போன்ற பகுதிகளிலும் அதினுடன் இணைந்த 93  பகுதியிலும் வெளிநாட்டவரின் முக்கியமாக இசுலாமியர்களின் (கறுப்பு - வெள்ளை)அடர்த்தி அதிகரித்துவிட்டது.

நடந்த அசம்பாவிதங்களின் பின்

அவற்றை நிவர்த்தி  செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன(இவை எமது கண்களுக்கு தெரியாது)

 

இந்த அனுபவத்தில் பார்க்கும் போது

கனடாவில் நான் பார்த்த கேட்ட அளவில்

அவரவர்  தத்தமது பகுதிகளை உருவாக்கி

அங்கே அரசியல் உட்பட எல்லாவற்றையும் தனித்தனியே  தொடங்கி

ஆட்சிகளையும்  தீர்மானிப்பவர்களாக வளர்ந்து

தற்பொழுது அந்தந்த இடங்களில் ஆட்சிகளை நடாத்துபவர்களாக வந்திருக்கிறார்கள்

 

இதேநிலை யேர்மனியில் சில இடங்களில் துருக்கி மக்கள் சார்ந்தும்

டென்மார்க்கில் இசுலாமியர்கள்  சார்ந்தும் ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்....

டென்மார்க்கில்

அந்த பகுதிகளுக்கு காவல்துறையினர் செல்லமாட்டோம்

நாம் வேலைக்குத்தான் வந்தோம்

சாக அல்ல என ஒரு பேட்டியை  நானே பார்த்தேன்.......

ஒரு ஐம்பது வருடத்துக்குள்

டென்மார்க்

இசுலாமிய  நாடாக வாய்ப்புள்ளதாக தகவல்கள்  கூறுகின்றன....

 

விசுக்கு இப்படி இருந்தால் தான் தமிழர்களும் நாடாளுமன்றம்/ உள்ளூர் ஆட்சியமைப்புகளில் பிரதிநித்துவம் பெறமுடியும்.....இப்போது சொல்லுங்கள் அப்படி இருப்பது சரிதானே.......

 

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரவாதம் உலகில் இருந்து களையப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இதை சார்ந்து பாதுகாப்புத் துறை நிறுவனங்கள், ஆயுத உற்பத்தித் துறை என்று பணம் பார்க்கும் ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. தீவிரவாதம் பற்றி பலதடவைகள் கூறி இருக்கிறேன். இது எதிர்காலத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது நான் எதிர்பார்த்தது தான். நாங்க தான் அப்பவே சொன்னமே :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.