Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீன்பிடி அமோகம்!

Featured Replies

fish%209693.jpg

 

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் மீன்பிடி அமோகமாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக கரைவலை, மாயவலை, தோணி வலை கடல் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடி அமோகமாக இடம்பெற்றுவருவதால் கடற்றொழிலாளர்கள் புதிய ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் கீரி இன மீன் அதிகம் பிடிபடுவதால், கடுவாடு போடப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை நிந்தவூர் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியாளர்களுக்கு பல லட்சம் ரூபா பெறுமதியான கீரிமீன்கள் பிடிபட்டன. இந்த மீன்கள் உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன் கருவாடாகவும் பதப்படுத்தப்பட்டன -
 
fish%209697.jpg
 
fish%209694.jpg
 
 
fish%209696.jpg
 
fish%209695.jpg
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மீன்கள், கடலில் பல்கிப் பெருகி விட்டது போலுள்ளது.
வலை வீசாமலே... கரைக்கு வந்து, தன்னை பிடிச்சு சமையுங்கள் என்று... அடம் பிடிக்குதுகள்.
ஒளிப்பதிவிற்கு, நன்றி நுணாவிலான்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/140768-மனதை-கவர்ந்த-face-book-பதிவுகள்/page-9

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நீர் வெப்பமாதல்.. அமிலமாதல்.. பிரச்சனைகளால்.. மீன்கள் உணவு தேடி பிற இடங்களுக்கு நகர வேண்டிய தேவை ஏற்படுகிறது. மீன்கள் விரும்பி உண்ணும் நுண் பிளாங்டன் வகை உயிரிகள்.. இந்த கடல் நீர் அமிலமாதல்.. வெப்பமாதலால்.. அதிகம் பாதிக்கப்படுவதோடு.. தக்க இடம் தேடிச் சென்று பெருக வெளிக்கிடும் நிலையில்.. மீன்களும் அவற்றை இரைகொள்ள நகர வேண்டி ஏற்படுகிறது. அல்லது பிளாங்டன்களின் அழிவை அடுத்து.. மீன்கள் பிற இரைகளைத் தேடி நகர வேண்டி ஏற்படுகிறது.

 

மேலும் கடல் வற்றுப் பெருக்கு நீரோட்டம் காரணமாக மற்றும் கடற் காற்றோட்ட திசைமாற்றங்கள் காரணமாக.. கடல் நீரோட்ட திசை மாற்றங்கள் காரணமாக என்று பல்வேறு காரணங்களால்.. இந்த நிலை உருவாகி இருக்கக் கூடும்.

 

இதன் பாதக விளைவு..

 

மீன்களின் குடித்தொகையில் ஏற்படும் வீழ்ச்சி. இதன் மூலம் மீன் குடித்தொகையை நீண்ட கால மீன்பிடிக்கு பயன்படுத்துவதில் சிரமம்.

 

மீன்கள் அதிகம் எண்ணிக்கையில் பிடிபடுவதால் விலையில் வீழ்ச்சி. மற்றும் நுகர்வுக்கு அதிகமான மீன்பிடியால்.. மீன்களை பதப்படுத்தும் தேவை செலவு அதிகரிப்பு.

 

குஞ்சு மீன்களும்... இவ்வாறு பிடிபட்டுப் போவதால்.. மீன்களின் எதிர்கால.. இனப்பெருக்கத்தில் வீழ்ச்சி. இது குறித்த வகை மீன்கள் தொடர்ந்து சிலகாலத்துக்கு பிடிக்கப்படுவதில்.. சிரமம் ஏற்படலாம். இது மீனவர்களின் தொடர் வருவாயை பாதிக்கும். மக்களின் நுகர்வுத் தேவையை பாதிக்கும்.

 

எனவே இந்தப் பிரச்சனையை சரியாக ஆராய்ந்து கிழக்கு.. மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் சரியான மீன் பிடி முகாமைத்துவம் பற்றி மீனவர்களுக்கு அறிவுறுத்துவதும்.. இந்த நிலைக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து விளக்கங்களை அளிப்பதும் அவசியம். பல்கலைக்கழகங்கள் அரசியல் செயற்பாட்டிடங்களாக மட்டுமன்றி.. தன் பிராந்தியம் சார்ந்த எல்லா நிகழ்வுகளையும் கண்காணிக்கவும்.. ஆராயவும்.. பரிந்துரைகளை நல்கவும் தயாராக இருக்க வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப் பையன்களைக கொண்டு கரைக்கு வரும் மீன்களைக் கல்லெறிந்து கலைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என நினைக்கிறேன்!

 

வழக்கம் போல ஒரு ' பத்திரிகை' தன்னைப் பிரபலப்படுத்த எழுதுகின்றது போலவே உள்ளது!

 

'சூடை' மீன்கள்.. சீசனில் அனேகமாக இப்படிக் குவியல் குவியலாகத் தான் பிடிபடும்!

 

மயிலிட்டி, மன்னார், நெடுந்தீவு போன்ற இடங்களில் மீன்களைக் கரைக்கு இழுத்துவர முடியாமல், பலர் சேர்ந்து இழுத்து வருவதையும் கண்டிருக்கிறேன்!

 

இது தான் 'ஈழத்தின்' பொருளாதாரத்தின் முதுகெலும்பு!

 

பசுமைப் புரட்சியை விடவும் நீலப் புரட்சி பலம் வாய்ந்ததும், நல்ல ஒரு அத்திவாரமாகவும் அமையும்!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் இன்றும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமாக மீன்கள் பிடிக்கப்பட்டது  அள்ள முடியாமல்  கடலில் விட்டது அதிகம்  விரத காலம் என்பதால் விலை  இல்லை  பாவம் மீனவர்கள்  கன நாளைக்கு பிறகு மீன் பிடி பட்டாலும் போதிய விலை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என நினைக்கிறேன்!

 

வழக்கம் போல ஒரு ' பத்திரிகை' தன்னைப் பிரபலப்படுத்த எழுதுகின்றது போலவே உள்ளது!

 

'சூடை' மீன்கள்.. சீசனில் அனேகமாக இப்படிக் குவியல் குவியலாகத் தான் பிடிபடும்!

 

மயிலிட்டி, மன்னார், நெடுந்தீவு போன்ற இடங்களில் மீன்களைக் கரைக்கு இழுத்துவர முடியாமல், பலர் சேர்ந்து இழுத்து வருவதையும் கண்டிருக்கிறேன்!

 

இது தான் 'ஈழத்தின்' பொருளாதாரத்தின் முதுகெலும்பு!

 

பசுமைப் புரட்சியை விடவும் நீலப் புரட்சி பலம் வாய்ந்ததும், நல்ல ஒரு அத்திவாரமாகவும் அமையும்!

வணக்கம் புங்கையூரான், படத்தில் காணப்படும் மீன்கள் சூடை மீன் கிடையாது, கீரி மீன் இது இலங்கையின் பலபாகங்களிலும் குறிப்பாக கொண்டால் காற்று வீசும்போது அதிகமாக வடமராட்சி வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதிகளவில் பிடிபடுவதுண்டு மாரி காலத்தில் தீவுப்பகுதிகளிலும் குறிப்பாக குறிகட்டுவான் போன்ற பகுதிகளில் பெருமளவு பிடிபடுவதுண்டு ...

கீரி மீன் பொரியலுடன் கோதுமை மா புட்டு சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். :wub:  :)  

கீரி மீன் சூடை மீனை விட முள்ளுக் கூட, ஆனால் சுவை அதிகம். இதை குளம்பு வைத்து சாப்பிடுவதை விட பொரித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். சிங்களப் பகுதிகளில் 'ஹுறுலோ' என்று இடை அழைப்பர். ஊரில் மென்ரிஸ் ஸ்பெசலுக்கும், இங்கு St Remy brandy க்கும் தோதான சூப்பர் சாமான் இது.

  • கருத்துக்கள உறவுகள்

கீரி மீன் சூடை மீனை விட முள்ளுக் கூட, ஆனால் சுவை அதிகம். இதை குளம்பு வைத்து சாப்பிடுவதை விட பொரித்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். சிங்களப் பகுதிகளில் 'ஹுறுலோ' என்று இடை அழைப்பர். ஊரில் மென்ரிஸ் ஸ்பெசலுக்கும், இங்கு St Remy brandy க்கும் தோதான சூப்பர் சாமான் இது.

நிழலியில் பிடித்தது இதுதான், என்னத்தை என்னத்துடன் சாப்பிட்டால் நல்ல இருக்கும் என்பதை சரியாக சொல்வார்.  :)
 
 
நல்ல ரசனை உள்ளவர் .... :D   

கீரி மீனை விட கீரி மீன் கருவாடு சூப்பர் சின்ன வெங்காயத்துடன் பொறித்து கள்ளு குடிக்கும்போது எடுத்துக்கொள்வார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு, சாப்பாட்டு விஷயம் எல்லாம் தெரியுது,
ஆனால்... இந்தப் பிக்கு, ஏன்.... என்னத்துக்கு சவுண்டு கொடுக்கிறார் எண்டு மட்டும், தெரியலை.
அதையும்... நிழலி வாயால்... தமிழில், கேட்க ஆசையாய் உள்ளது. :D  :lol:  :icon_mrgreen:

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/147923-புத்தம்-சறணம்-கச்சாமி/page-1

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலப்பகுதியில் இவ்வகையான மீன்கள் எனது ஊரில் அதிகம் பிடிபடுவதனால்

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிமிருந்தும் மீனவர்கள் வந்து குடிசை போட்டு சில மாதங்கள் தங்கி  மீன் பிடிப்பது வழமை.

உண்மையில் இதுவும் ஒவ்வொருவருடமும் வழமையாக நடப்பதா??

அல்லது அன்றாடம்  பொன்முட்டையிடும்  வாழ்த்தை கொன்று எடுக்கும் அவசரமா?? :(

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புங்கையூரான், படத்தில் காணப்படும் மீன்கள் சூடை மீன் கிடையாது, கீரி மீன் இது இலங்கையின் பலபாகங்களிலும் குறிப்பாக கொண்டால் காற்று வீசும்போது அதிகமாக வடமராட்சி வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதிகளவில் பிடிபடுவதுண்டு மாரி காலத்தில் தீவுப்பகுதிகளிலும் குறிப்பாக குறிகட்டுவான் போன்ற பகுதிகளில் பெருமளவு பிடிபடுவதுண்டு ...

கீரி மீன் பொரியலுடன் கோதுமை மா புட்டு சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். :wub:  :)  

சரி...சரி... சகோதரா!

 

கண்ணாடி போடக் கெளரவம் விடுகுதில்லை... அது தான்...! :o

  • கருத்துக்கள உறவுகள்

கீரி மீன் பொரியலுக்கு சொத்தையே எழுதித்தராலம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பேவரிட் கீரி மீன்...பொரியல்,பொரிச்சுப் போட்டு குழம்பு வைக்க அந்த மாதிரி இருக்கும்.வெள்ளைப் புட்டுடன் சாப்பிட சொர்க்கம் தான்:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.