Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளார்? நவீன் திஸ்ஸநாயக்க எதிர்க்கட்சிகளுடன் இணைவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri_bala_De_silva_and_naveen_thissanayak

சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 
அரசாங்கத் தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன. 

அவருக்கு எதிர்கட்சியினால் 100 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இன்றையதினம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொண்டார்.

இந்த நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த வாரம் எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

http://www.pathivu.com/news/35731/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நிமல் சிறிபால டி சில்வா விலகினால் அது ஆளும் கட்சிக்குப் பலத்த அடியாக இருக்கும். பதுளை மாவட்டத்தை இழக்க நேரிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப திரும்பவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சிதான்.மகிந்த குடும்பத்தைத் தவிர மிச்ச எல்லோரும் ஒரு பக்கம்.ரணிலுக்கு அல்வாதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நிமால் இருக்கும் போதே அண்மைய உவா தேர்தலில் பதுளை போயிற்று. மொனராகல யால்தான் மாகாண சபையே தப்பிச்சு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் காசு பணம் துட்டு மணி மணி   ......  :D

நவீன் திசநாயக்க... தகப்பனை விட 100 மடங்கு மிக மோசமான ஒரு இனவாதி. மலையகத் தமிழர்களிற்கு கிடைக்க  வேண்டிய பல விடயங்களை தடுத்த ஒரு இனவாதி. 2005 இன் முன் அவரது கூட்டங்களில் பேசப்படும் இனவாதம் மிக மோசமாக இருக்கும். தன் தந்தை புலிகளால் கொல்லப்பட்டதினால் அவர் இனவாதியாக இருக்கின்றார் என்று சப்பைக் கட்டு கட்ட ஒரு கூட்டம் வெளிக்கிடும். ஆனால் இவரது பரம்பரையே கடும் இனவாத பரம்பரை என்பது பலருக்கு தெரிந்த விடயம்.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் திசாநாயக்ககள் கடும் இனவாதிகள்தான், தகப்பனும் மகனும்.

ஆனால் தகப்பனை கொல்ல - பழிவாங்கும் உணர்வை தவிர - வேறு எந்த தந்திரோபாய காரணமும் இருந்ததில்லை.

எனக்கு ஏன் என்று இன்னும் விளங்காத கொலைகளில் இதுவும் ஒன்று.

ஆனால் தகப்பனை கொல்ல - பழிவாங்கும் உணர்வை தவிர - வேறு எந்த தந்திரோபாய காரணமும் இருந்ததில்லை.

எனக்கு ஏன் என்று இன்னும் விளங்காத கொலைகளில் இதுவும் ஒன்று.

 

யாழ் நூலக எரிப்பின் முக்கிய சூத்திரதாரியாக காமினி திசாநாயக்க தான் செயற்பட்டார் என எங்கோ வாசித்த ஞாபகம்.

சிறில் மத்தியுவும் காமினி திசாநாயக்காவும் குண்டர்களுடன் தங்கியிருந்தே யாழ் நூலகத்தை எரித்தார்கள்

கொன்றதில் எந்த தப்பும் இல்லை , யாழ் நூலக எரிப்பின் சூத்திரதாரி , கொடிய விஷம் .

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் அப்ப பழிவாங்கும் உணர்வு மட்டும்தான் காரணம் என்கிறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகள் என்று பார்த்தால் பல சிங்களவர்களைக் கொன்றிருக்க வேண்டும்.

 

நளின் சில்வா, திலக் கருணாரத்ன, சம்பிக்க ரணவக்க,  பி.ஏ.டி. சில்வா, சிறில் மத்தியூ, மாதுலுவே சோமபாலா தேரர், குணசேகர போன்றவர்கள் மிகப் பிரபலமான சிங்கள இனவாதிகள். ஆனால் இவர்களுள் யாரும் புலிகளால் கொல்லப்படவில்லை.

 

காமினி திசாநாயக்கவும் ஒரு இனவாதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர் இனவாதி என்பதற்காகத்தான் புலிகளால் கொல்லப்பட்டார் என்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை.

 

ஏனென்றால், இவர் கொல்லப்பட்டவுடன், இவரது மகன் அளித்த செவ்வியொன்றில், ' புலிகள் மட்டுமல்லாமல், இன்னும் சிலரது கைங்கரியமும் இதில் அடங்கியுள்ளது' என்றும், 'எனது தகப்பனாரிற்கு புலிகளைவிடவும் இன்னும் பல பலமான எதிரிகள் இருந்தனர்' எனவும் கூறியிருக்கிறார்.

 

ஆகவே, ஒன்றில் புலிகள் இவரது இந்தியாவுடனான நட்புப் போக்கிற்காகக் கொன்றிருக்கலாம். அல்லது அப்போதைய சனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா அம்மையார் இவரைப் போட்டுத் தள்ளியிருக்கலாம். ஆனால் இவை இரண்டிலும், புலிகளே இவரைக் கொன்றதாக நான் நினைக்கிறேன்.

 

பம்பலப்பிடியிக்கும், கொள்ளுப்பிட்டீயிக்குமிடையிலான டுபிலிக் கேஷன் ரோட்டில் அமைந்திருந்த பிரிட்டிஷ் கவுன்சிலின் கட்டிடத்திற்கு அருகில்த்தான் காமினியின் வீடு அமைந்திருந்தது. அப்போது அவர் பயணிக்கும் நிஸ்ஸான் புளூபேர்ட் கார் அடிக்கடி புலிகளின் கொழும்பு உளவாளிகளால் கண்கானிக்கப்பட்டுக் கொண்டு வந்தது. இந்தக் கண்காணிப்பு நடந்த சில வாரங்களில் அவர் கொல்லப்பட்டார்.ஆக, அவரைப் புலிகள் கொன்றிருக்கலாம் என்று நான் ஊகிக்கிறேன். காரணம், வழக்கம் போல..இதற்கும் எனக்குத் தெரியாது.

 

வெறும் பழிவாங்கலுக்காக நடத்தப்பட்ட கொலையென்றால் நாம் இதன்மூலம் அடைந்தது எதுவுமேயில்லை.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் தொலைநோக்கு ராஜதந்திர நகர்வுக்காக செய்யப்பட்ட கொலைகள்.  தமிழ் மக்களுக்கு இதன் பலன்கள் வருங்காலத்தில்தான் புரியும். அந்த வருங்காலம் எப்போது வரும் என்று சொல்வதற்கில்லை. வரும்.. ஆனா...

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் ஆடிக்காத்தில அம்மியே பறக்குதாம்.. இதுக்குள்ளை காமினி திசநாயக்கவுக்கும் ஒரு இரங்கற்பா.. :lol:

Edited by இசைக்கலைஞன்

இனவாதம் இல்லாத சிங்கள தலைவர்களை பட்டியலிட முடியுமா? அப்படி இருக நவீனுக்கு மாத்திரம் ஏன் இப்படி ஒரு இன்றோ?

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதமில்லாத விக்ரமபாகு, தேவாரப்பெரும போன்றோர் இருக்கிறார்கள் - அவர்களுக்கு சிங்களவரிடமும் தமிழரிடமும் மதிப்பில்லை.

நவீன் எல்லோரை காட்டிலும் எக்ஸ் ரா. இனவாதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.