Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிசம்பர் 20 இற்கு பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிவரும் – மாவை சேனாதிராசா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 20 இற்கு பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிவரும் – மாவை சேனாதிராசா

Dec 06, 2014 | 2:25 by கார்வண்ணன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாது என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்த தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

“வரும் 8ம் நாள் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லை.

பல்வேறு மட்டங்களிலும் உள்ள எமது பிரதிநிதிகளைக் கலந்துரையாடி வருகிறோம்.

இந்தக் கூட்டங்கள் இன்னமும் முடிவடையவில்லை.

இந்தக் கலந்துரையாடல்களின் நிறைவில், டிசம்பர் 20ம் நாள் அளவில் எமது இறுதி முடிவை எடுப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாது.

அதேவேளை, இந்த தேர்தல் குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கலந்துரையாடல் எதையும் நடத்தவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2014/12/06/news/1489

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் முடிவெடுக்கும் தகுதி மூன்று பேருக்கு மட்டுமே உள்ளதாகக் கேள்வி

sms மூலம் எடுக்கும் முடிவுகளுக்காக எதற்குப் பல மட்டங்களிலும் ஆராய்வு ? :o

தேர்தல்  நெருங்க  சந்திரிக்கா  ரணில் சேர்த்து  ஒரு  விடியோ  வெளியிட இருப்பதா  தகவல் இறுதியா  சரணடைந்தவர்கள்  பற்றி ...ஆக  இனி  சந்திரிகா  ரணில்  தமிழர்களுக்கு  தெய்வமா  மாறி  போயிடுவினம்  அதுக்கு  பிறகு  கூட்டமைப்பு  எதுக்கு ... :rolleyes:

 

தமிழர்களுக்கு  சார்பா  யாரு  நடந்தாலும்  உடனம்  நாங்கள் அவைகளை  போற்றுவதுதான்  மரவு  :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி 9ஆம் திகதி அறிவித்தால் நல்லது.மக்களை சிந்திக்க விடுங்கள்!!!!

தேர்தல்  நெருங்க  சந்திரிக்கா  ரணில் சேர்த்து  ஒரு  விடியோ  வெளியிட இருப்பதா  தகவல் இறுதியா  சரணடைந்தவர்கள்  பற்றி ...ஆக  இனி  சந்திரிகா  ரணில்  தமிழர்களுக்கு  தெய்வமா  மாறி  போயிடுவினம்  அதுக்கு  பிறகு  கூட்டமைப்பு  எதுக்கு ... :rolleyes:

 

தமிழர்களுக்கு  சார்பா  யாரு  நடந்தாலும்  உடனம்  நாங்கள் அவைகளை  போற்றுவதுதான்  மரவு  :)

அப்ப அடுத்த நல்லூர் திருவிழாவுக்கு சந்திரிக்கா சேலை ,வளையல் எல்லாம் வாங்கலாம் என்றீங்க :)

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்  நெருங்க  சந்திரிக்கா  ரணில் சேர்த்து  ஒரு  விடியோ  வெளியிட இருப்பதா  தகவல் இறுதியா  சரணடைந்தவர்கள்  பற்றி ...ஆக  இனி  சந்திரிகா  ரணில்  தமிழர்களுக்கு  தெய்வமா  மாறி  போயிடுவினம்  அதுக்கு  பிறகு  கூட்டமைப்பு  எதுக்கு ... :rolleyes:

 

தமிழர்களுக்கு  சார்பா  யாரு  நடந்தாலும்  உடனம்  நாங்கள் அவைகளை  போற்றுவதுதான்  மரவு  :)

அது ஒரு காலம் இருந்தது. இனியும்......?

தேர்தல் வந்தால் சனங்கள் கூட்டமைப்புக்கு போடுங்கள் சரி.

 

அனால் கொட்டமைப்பு சொன்னதுக்காக எவனுக்கோ ஓட்டுப்போடுங்கள் என்று நினைப்பது தவறு.

 

முடின்ந்தால் முடிவெடுத்து மூக்குடைபடட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் இவளவு அவசரம் ....?
ஜனவரி 8மட்டும் பொறுமை காத்து ஒரு நல்ல முடிவை எடுக்க முடியாதா ?

ஏன் இவளவு அவசரம் ....?

ஜனவரி 8மட்டும் பொறுமை காத்து ஒரு நல்ல முடிவை எடுக்க முடியாதா ?

தமிழ் மக்கள் மகிந்தவுக்கு தான் வாக்கு போட வேண்டும். என் என்றால் Known Devil is better than an unknown angel !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதே லாஜிக்கை பாவித்து 2005 இல் known devil ஆன ரணிலுக்குப் போட விட்டிருக்கலாமே? ஏன் unknown angel ! மகிந்தவை வெல்ல வச்சனிங்கள்?

நீங்கள் இப்போ சொல்வதை 2005 இல்,செய்திருக்கோணும். அப்போ செய்ததை இப்போ செய்யணும்.

சரியான தருணங்களில், தவறான முடிவெடுப்பதில் உங்களை அடிக்க ஆளில்லை.

மகிந்தவுக்கு தமிழர் வாழும் பகுதியில் அதிக வாக்கு விழுந்தால் - போர்குற்ற விசாரணை, மேற்குலகு அனைத்தையும் மகிந்த இலகுவாக கையாளுவார்.

பார்த்தீர்களா தமிழர்க்கே ஒரு பிரச்சினையும் என்னுடன் இல்லை, கூட்டமைப்புச் சொல்லியும் எனக்கு வாக்களித்துளனர் என்று சொல்லி மேற்குலகின் மூக்கை உடைப்பார்.

எமது போராட்டம், அதன் தார்மீக கோரிக்கை, எம் பக்க நியாயம், எம்மக்களின் தீர்க்கமான அறைகள் நிலைப்பாடு, எல்லாத்தையும் விபச்சாரம் செய்வதற்க்கு ஒப்பானது, மகிந்தவுக்கு வாக்குப் போடும் படி சொல்வது.

பயங்கரவாதிகளை தோற்கடித்து, சமாதானத்தை நிலைநாட்டிய ஜனாதிபதியை தமிழர்கள் பெருவாரியாக ஆதரித்தார்கள் என்றுதான் இதன் முடிவு எழுதப்படும். தமிழருக்கு சுயாட்ட்சியும் வேண்டாம், சம்ஸ்டியும் வேண்டாம், 13 ம் வேண்டாம், டக்லசும் சந்த்ஹிரசிறியும் போதும். என்று சொல்லவே இப்படி ஒரு முடிவு பயன்படும்.

இதுவா உங்களுக்கு வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

2005 இல் புலிகள் சொல்லி மக்கள் மகிந்தவுக்குப் போட்டு வெல்லப் பண்ணினார்கள் என்பது ஏற்புடையதல்ல.. புலிகளுக்கு மக்கள் ஆதரவு இருந்ததில்லை என்பதை இக்களத்தின் ஊடாக நான் அறிந்து கொண்டிருக்கிறேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை நீங்க என்னத்த அறிஞ்ச்சிங்களோ.

புலிகள் இருக்கும் வரை யாழில் வன்னியில் 85-90 சதவீத வாக்காளரும், எனைய இடங்களில் 75 க்கு மேலான வாக்காளரும் புலிகள் சுட்டிக் காட்டுபவர்க்கே வாக்களித்தார்கள். இதை நான் எப்போதும் எழுதியே வந்த்ஹுள்ளேன். 2005 இல் அவர்கள் மகிந்தவுக்கு வாக்குப் போடவில்லை.

மகிந்த வெல்ல வேண்டும் என புலிகள் விரும்பினார்கள் ஆனால் அவரை நேரடியாக ஆதரிக்க முடியாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கச் சொல்ல, மக்களும் மறு கேள்வி இன்றிச் செய்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரை 2005ம் ஆண்டு நாங்கள் ரணிலுக்குத்தான் பாேடுவதாக இருந்தாேம் ஆனால் மிலிந்த மாெறகாெடவும், சஜித் பிறேமதாசவும் ஒரு தோ்தல் மேடையில் சிங்கள வாக்காளா்களைக் கவா்வதற்காக தமது இரகசியத்திட்டத்தைப் பாேட்டுடைத்தாா்கள். நுணலும் தன்வாயால் கெடும் எனபாா்கள். அதனாற்தான் இந்த அரக்கனுக்கும் ஒரு சந்தா்ப்பம் காெடுக்கப்பட்டது. அவா்கள் எதைச்சாென்னாா்களாே அதையே இவன் செய்து காட்டினான். அவ்வளவுதான். ஒருதனுக்கு ஒருதன் சளைத்தவனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்பாவிகளா, சஜித்தும், மிலிந்தவும் சொல்லும்வரை, கருணாவை பிரித்தது ரணில்தான் எனும் விசயம் கூடத் தெரியாதா அப்பிராணிகளா இருந்திருக்கீங்களே!

அதுவரை ரணிலுக்கு போட இருந்தோம் ஆனால் சஜித்தும் மிலிந்தவும் சொன்னதும், உசாராகி மகிந்தவுக்குப் போட்டோம் என்று சொலவ்து அரவரிப் பிள்ளையும் சொல்லாத விளக்கம்.

அட அப்பாவிகளா, சஜித்தும், மிலிந்தவும் சொல்லும்வரை, கருணாவை பிரித்தது ரணில்தான் எனும் விசயம் கூடத் தெரியாதா அப்பிராணிகளா இருந்திருக்கீங்களே!

அதுவரை ரணிலுக்கு போட இருந்தோம் ஆனால் சஜித்தும் மிலிந்தவும் சொன்னதும், உசாராகி மகிந்தவுக்குப் போட்டோம் என்று சொலவ்து அரவரிப் பிள்ளையும் சொல்லாத விளக்கம்.

 

சொன்னால் என்ன?

 

இப்பிடித்தாங்க எங்க சீவியம் பலகாலமா ஓடிக்கிட்டிருக்கு.

யாரும் வந்து சொல்லாட்டில் எங்களுக்கு எப்படித்தெரியும்?

  • கருத்துக்கள உறவுகள்

அட அப்பாவிகளா, சஜித்தும், மிலிந்தவும் சொல்லும்வரை, கருணாவை பிரித்தது ரணில்தான் எனும் விசயம் கூடத் தெரியாதா அப்பிராணிகளா இருந்திருக்கீங்களே!

அதுவரை ரணிலுக்கு போட இருந்தோம் ஆனால் சஜித்தும் மிலிந்தவும் சொன்னதும், உசாராகி மகிந்தவுக்குப் போட்டோம் என்று சொலவ்து அரவரிப் பிள்ளையும் சொல்லாத விளக்கம்.

 

அவா்கள் அப்படிச்சாெல்லவில்லை தாேழரே, நானும் அப்படிச் சாெல்லவில்லை. அவா்கள் சாென்னது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எமது இராணுவம் புலிகளாேடு பாேரிடாது, அமெரிக்க, இந்திய இராணுவம்தான் புலிகளுடன் பாேரிடும். மகிந்தவுக்கும் நாங்கள் பாேடவில்லை. நான் நாங்கள் என்று சாென்னது எனது உறவுகளை. உங்கள் கருத்துப்படியே சாெல்லுங்கள், கருணாவைப்பிரித்து இயக்கத்தைப் பிளவுபடுத்திய ரணிலுக்கு பாேட்டிருக்கலாமா? தமிழீழம் தந்திருப்பாரா? 

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்குப் போட்டிருந்தா தமிழ் ஈழம் தந்திரார், ஆனால் நாங்கள் நிண்ட ஆயுத சமநிலையை ஒரு பேரம் பேசு பொருளாக்கி - சமஸ்டியை அடைந்திருக்கலாம்.

நாளைக்கே சஜித்து செவ்வாய் கிரகத்தில் இருந்து சிப்பாய்களை இறக்குவோம் எண்டா அதையும் நம்புறதே? அரசியல்வாதி ஆயிரம் சொல்குவான் நமக்கு எங்க போச்சு மூளை?

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்குப் போட்டிருந்தா தமிழ் ஈழம் தந்திரார், ஆனால் நாங்கள் நிண்ட ஆயுத சமநிலையை ஒரு பேரம் பேசு பொருளாக்கி - சமஸ்டியை அடைந்திருக்கலாம்.

நாளைக்கே சஜித்து செவ்வாய் கிரகத்தில் இருந்து சிப்பாய்களை இறக்குவோம் எண்டா அதையும் நம்புறதே? அரசியல்வாதி ஆயிரம் சொல்குவான் நமக்கு எங்க போச்சு மூளை?

அதைதான் நானும் சொல்கிறேன் 1994 இல் சந்திரிக்காவை  தோற்கடித்து இருந்தால் 
சமஸ்டி என்ன   சாம்ராஜிமே அடைந்திருக்கலாம். 

அப்ப இதே லாஜிக்கை பாவித்து 2005 இல் known devil ஆன ரணிலுக்குப் போட விட்டிருக்கலாமே? ஏன் unknown angel ! மகிந்தவை வெல்ல வச்சனிங்கள்?

நீங்கள் இப்போ சொல்வதை 2005 இல்,செய்திருக்கோணும். அப்போ செய்ததை இப்போ செய்யணும்.

சரியான தருணங்களில், தவறான முடிவெடுப்பதில் உங்களை அடிக்க ஆளில்லை.

மகிந்தவுக்கு தமிழர் வாழும் பகுதியில் அதிக வாக்கு விழுந்தால் - போர்குற்ற விசாரணை, மேற்குலகு அனைத்தையும் மகிந்த இலகுவாக கையாளுவார்.

பார்த்தீர்களா தமிழர்க்கே ஒரு பிரச்சினையும் என்னுடன் இல்லை, கூட்டமைப்புச் சொல்லியும் எனக்கு வாக்களித்துளனர் என்று சொல்லி மேற்குலகின் மூக்கை உடைப்பார்.

எமது போராட்டம், அதன் தார்மீக கோரிக்கை, எம் பக்க நியாயம், எம்மக்களின் தீர்க்கமான அறைகள் நிலைப்பாடு, எல்லாத்தையும் விபச்சாரம் செய்வதற்க்கு ஒப்பானது, மகிந்தவுக்கு வாக்குப் போடும் படி சொல்வது.

பயங்கரவாதிகளை தோற்கடித்து, சமாதானத்தை நிலைநாட்டிய ஜனாதிபதியை தமிழர்கள் பெருவாரியாக ஆதரித்தார்கள் என்றுதான் இதன் முடிவு எழுதப்படும். தமிழருக்கு சுயாட்ட்சியும் வேண்டாம், சம்ஸ்டியும் வேண்டாம், 13 ம் வேண்டாம், டக்லசும் சந்த்ஹிரசிறியும் போதும். என்று சொல்லவே இப்படி ஒரு முடிவு பயன்படும்.

இதுவா உங்களுக்கு வேண்டும்?

அப்ப எழுதுறவன் .....
புலிகளை பயங்கரவாதி என்றவனும் சொந்தமா மூளை இல்லை ?
 
இந்த அலுகோசுகள் சொன்னதை கேட்டுதான் 
நீங்கள் புலிகளை சர்வதேசமே பயங்கரவாதிகள் என்று சொன்னதா பெருமிதம் கொண்டு எழுதி வாறீங்களோ ? 

மைத்திரியா?மகிந்தவா? யார் வந்தாலும் தமிழர்களை அழிக்கவே முடியாது.

அதுதான் எல்லாத்தையும் அழிச்சாச்சே

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியா?மகிந்தவா? யார் வந்தாலும் தமிழர்களை அழிக்கவே முடியாது.

அதுதான் எல்லாத்தையும் அழிச்சாச்சே

 

 

அப்போ

எதுக்கு  தமிழருடன் ஒட்டுமில்லை உறவுமில்லை என இரு பகுதியும் குத்திமுறிகிறார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தலைக்குத்தன நிண்டிருந்தாலும்94 இல் சந்திரிக்காவ தோக்கடிச்சிருக்க முடியாது, தெற்கில் அத்தனை செல்வாக்கு அவவுக்கு அப்போ இருந்தது. 2005 நிலமைமை அப்படி இல்லை. கிங் மேக்கராக தமிழ் வாக்காளர் இருந்தனர்.

புலிகள் பயங்கரவாதிகள் எனும் தீர்ப்பை சர்வதேசம் எழுதி பல வருசமாச்சு. இப்போ நாம் மகிந்தவுக்கு வாக்களித்தால் - தமிழர்களும் இந்த முடிவை ஆதரிக்கிறார்கள் என்றாகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்குப் போட்டிருந்தா தமிழ் ஈழம் தந்திரார், ஆனால் நாங்கள் நிண்ட ஆயுத சமநிலையை ஒரு பேரம் பேசு பொருளாக்கி - சமஸ்டியை அடைந்திருக்கலாம்.

நாளைக்கே சஜித்து செவ்வாய் கிரகத்தில் இருந்து சிப்பாய்களை இறக்குவோம் எண்டா அதையும் நம்புறதே? அரசியல்வாதி ஆயிரம் சொல்குவான் நமக்கு எங்க போச்சு மூளை?

 

அரசியல்வாதி ஆயிரம் பேசுவான். நம்பாமல் ரணிலுக்கே பாேட்டிருக்கலாம். ரணில் ஒரு அப்பாவி ஆயுதத்தைக் கண்டாலே அவருக்குச் சரியான பயம் இதை நம்புகிறேன். கருணாவையே பிரித்தவா் ஏனெண்டா கருணாதானாம் சமஸ்டிக்கு எதிா்ப்பாம் எண்டாெரு கேள்வி. உங்களைப்பாேல மூளைசாலிகளுடன் கலந்தாலாேசித்திருந்தா இன்று சமஸ்டியை கண்டிருக்கலாம். தப்பு பண்ணிட்டாேம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.