Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உ.பியில் 200 முஸ்லிம்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றிய ஆர்.எஸ்.எஸ்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மதுநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 200 முஸ்லிம்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாறியுள்ளனர். இந்து மதத்துக்கு மாறியவர்களின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தர்மா ஜாக்ரான் சம்னவா விபாக் என்ற முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது.

09-rss-rashtriya-swam-sevak-600.jpg

இது தொடர்பாக அப்பகுதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேஸ்வர் சிங் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு மாதமும் ஆயிரம் குடும்பங்களை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ50 லட்சம் செலவு செய்யப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா, பதேபூர்சிக்ரி, மதுரா, மீரட் மற்றும் உத்தர்காண்ட்டில் மொத்தம் 2.73 லட்சம் முஸ்லிம், கிறித்துவர்களை இந்து மதத்துக்கு மாற்றியுள்ளோம். வரும் கிறிஸ்துமஸ் நாளில் அலிகாரில் 5 ஆயிரம் முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்து மதத்தில் இணைந்த 76 வயதான சுபையா பேஹம் என்பவர் கூறுகையில், ஒரு நாளைக்கு 5 முறை குரான் ஓதி தொழுகையில் ஈடுபடுவேன். ஆனால் தற்போது கணேச துதிப் பாடல்களைப் பாடி வணங்குகிறேன். என்னை பொறுத்தவரை இரண்டு மதத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றார். கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்எஸ் எஸ் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் ஆன் லைன் மூலமாகவும் இணைவோர் அதிகரித்து வருவதாவும் ஆர் எஸ் எஸ். இயக்கத்தினர் கூறியுள்ளனர்.

http://tamil.oneindia.com/news/india/rss-re-converts-200-agra-muslims-says-more-line-216642.html

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து  நாட்டில்  இந்து மத சாமிஎல்லாம் புத்தனாய்  மாறுவது அவைக்கு இன்னும் தெரியலையாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை, மீண்டும் இந்துக்களாக மாற்றினாலும்....
சுன்னத் செய்ததை, மீண்டும் ஓட்ட வைக்கமுடியாது.
அது... மாறாத, வடுவாக இருக்கும்.

அவர்களை, மீண்டும் இந்துக்களாக மாற்றினாலும்....

சுன்னத் செய்ததை, மீண்டும் ஓட்ட வைக்கமுடியாது.

அது... மாறாத, வடுவாக இருக்கும்.

 

இந்துமதம் அதை எதிர்க்கவிலையே?

இந்துமதத்திற்கு அது செய்தாலும் செய்யாட்டிலும் ஒன்றுதான் ஏன் அறவே வெட்டினாலும் ஒன்றுதான்.

 

அதுவும் ஆரோக்கம்தான் சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

  ஆர்.எஸ்.எஸ் இக்கு கூப்பிட்டு சொல்லுங்கப்பு  இலங்கையில் முருகன்,பிள்ளையார், அம்மன் எல்லாரையும் சிங்களவன்  புத்தனாக்கின்றான்  என.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரையும் எப்பிடி மாத்தினாலும்!!!! உந்த ஜெகோவாக்கு மாறின எங்கடையளை மனிசராய் மாத்துங்கோ பாப்பம்.  :icon_idea:  :D

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் எப்பிடி மாத்தினாலும்!!!! உந்த ஜெகோவாக்கு மாறின எங்கடையளை மனிசராய் மாத்துங்கோ பாப்பம்.  :icon_idea:  :D

அதுகளை பார்த்தாலே கீறிக்கொண்டு வரும் சுடலையில் படுத்த பிணத்திற்க்கு   ஒப்பானதுகள்  எவன் கிட்டபோவன். எனக்கு அதுகளை பார்க்கிற நேரம் ஆங்கிலபட சோம்பிஸ் தான் நிணைவுக்கு வரும். 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுகளை பார்த்தாலே கீறிக்கொண்டு வரும் சுடலையில் படுத்த பிணத்திற்க்கு   ஒப்பானதுகள்  எவன் கிட்டபோவன். எனக்கு அதுகளை பார்க்கிற நேரம் ஆங்கிலபட சோம்பிஸ் தான் நிணைவுக்கு வரும். 

 

ஒரு தாய் வயிற்றிலை பிறந்து வளர்ந்த சொந்தச்சகோதரம் செத்துக்கிடக்க......தன்ரை மோளுக்கு கலியாண பார்ட்டி வைச்சு ஆடிப்பாடின ஜெகோவா  சகோதரங்களை என்ன சொல்லுறது..... :(  :(  :(
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை உடைக்கும் பணியை , ஆர். எஸ். எஸ்ஸின் செயல்கள் விரைவு படுத்தும்! :D

இந்தியாவை உடைக்கும் பணியை , ஆர். எஸ். எஸ்ஸின் செயல்கள் விரைவு படுத்தும்! :D

இதற்கு எப்படி இந்தியா உடையும்

என்று கூறினால் கொஞ்சம் உதவியாக இருக்கும்,இன்னமும் சொன்னால் இது இந்தியாவை பலப்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எப்படி இந்தியா உடையும்

என்று கூறினால் கொஞ்சம் உதவியாக இருக்கும்,இன்னமும் சொன்னால் இது இந்தியாவை பலப்படுத்தும்.

இந்தியா தான் ஒரு இந்து நாடு என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்!

 

காஷ்மீரில் நடைபெறுவதைக் கொஞ்சம் கவனித்தால், நான் கூறியதன் கருத்துப் புரியும்!

 

பாகிஸ்தான் பிரிந்தது கூட, மதவாத அடிப்படையிலேயே!

 

அதனால் தான் இந்தியா தனது 'பாகிஸ்தான்' எல்லையில் வயிற்றில் நெருப்பைக் கட்டிகொண்டிருக்கிறது!

 

அத்துடன் இஸ்லாமை விலத்தி வைப்பதற்குக் காலம் கடந்து விட்டது!

 

இஸ்லாம் இல்லாத இந்தியாவைக் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது!

 

இது எனது தனிப்பட்ட கருத்தே தாஸ்!

 

உங்கள் கருத்தையும் தெரியப்படுத்துங்கள்!

ஒரு தாய் வயிற்றிலை பிறந்து வளர்ந்த சொந்தச்சகோதரம் செத்துக்கிடக்க......தன்ரை மோளுக்கு கலியாண பார்ட்டி வைச்சு ஆடிப்பாடின ஜெகோவா சகோதரங்களை என்ன சொல்லுறது..... :(:(:(

உந்த ஜேகொவ என்றால் என்ன சுப்பர்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்துமதம் அதை எதிர்க்கவிலையே?

இந்துமதத்திற்கு அது செய்தாலும் செய்யாட்டிலும் ஒன்றுதான் ஏன் அறவே வெட்டினாலும் ஒன்றுதான்.

 

அதுவும் ஆரோக்கம்தான் சிறி.

 

 

உங்களுக்கு

நித்தியானந்தா மீதும்

நிழலியானந்தா மீதும் அப்படி என்ன பொறாமை.... :icon_mrgreen:

 

(நித்தியானந்தா சில நாட்களுக்கு முன்தான் ஆசிரமத்தின் முன் படங்களை  போடவேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார் :icon_mrgreen: ) 

  • கருத்துக்கள உறவுகள்

'ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!

 

புதுடெல்லி: ஆக்ராவில் உள்ள முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தி இந்து மதத்துக்கு மாற்றம் மாற்றம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டி காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.

agra%20300.jpg

மாநிலங்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

"மதமாற்றம் செய்துகொள்ள ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதேபோல அலிகாரிலும் கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப் பெரிய மத மோதல்களும் கலவரங்கள் ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர் அளிக்க வேண்டும்" என்று மேலும் கூறினார்.

இந்நிலையில் மாயாவதியின் கருத்தை காங்கிரஸ், திரிணமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

இந்த விவகாரத்தில் தலையிட்டு, பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் ஷர்மாவும் வலியுறுத்திய நிலையில், குறுக்கிட்டு பேசிய சிறுபான்மையின விவகாரங்களுக்கான முக்தர் அபாஸ் நக்வி, இந்த மதமாற்ற விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார்.

"எனக்கு தெரியவந்துள்ள தகவலின்படி இந்த பிரச்னை தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை மாநில அரசு சம்பந்தப்பட்டது. மாநில அரசுதான் அதனை பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை" என்று அவர் மேலும் கூறினார்.

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 57 இஸ்லாமிய குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறியதாக கடந்த திங்கட்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு  வறுமை கோட்டிற்கு கீழ் வாழுபவர்களுக்கான பிபிஎல் ( BPL )  ( ஏழை) அட்டை தருவதாக கூறி பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதாகவும், கட்டாயப்படுத்தப்பட்டு தாங்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் 57 இஸ்லாமிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=35996

  • கருத்துக்கள உறவுகள்

'ஏழை' என்ற அட்டை தருவதாக கூறி மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!

 

இதே  இந்தியாவிடம் தான்

எமக்கு சிங்களவன் இவ்வாறு இனி  அழிப்புச்செய்கின்றான் என கூறி ஆதரவு கேட்டுவருகின்றோம்..


:(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை, மீண்டும் இந்துக்களாக மாற்றினாலும்....

சுன்னத் செய்ததை, மீண்டும் ஓட்ட வைக்கமுடியாது.

அது... மாறாத, வடுவாக இருக்கும்.

 

இப்போது முஸ்லீம் அல்லாதவர்களும் நிறைய பேர் சுகாதாரத்திற்காக பிறக்கும் போதே சுன்னத்து செய்விக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.