Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் - தலையிடாமல் நழுவினார் ஜனாதிபதி மைத்திரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
maithiri-kandy-350-news.jpg

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் காரணங்கள் நியாயமானது என்ற போதிலும், மாகாணசபை விடயங்களில் தான்ன் தலையிட விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

   

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியமைப்பது தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகர சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்திருந்தனர்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொண்டிருந்ததுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமது பக்க காரணங்களை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேசரிக்கு தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபையின் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசியிருந்தோம். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி நிலைமைகளிலும் மாறுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத்தனை காலமும் ஆளும் தரப்பாக இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதிக்கம் தற்போது குறைவடைந்து வருகின்றது. அதேபோல் கிழக்கில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு தற்போது எமக்குக் கிடைத்துள்ளது.

குறிப்பாக 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டு இலட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. அதேவேளை கிழக்கு மாகாணத்தின் ஆட்சியமைக்கும் நல்லதொரு சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது கிழக்கு மாகாண சபை முதலமைச்சு பதவியினை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் இணக்கப்பாட்டிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவே இருந்தது. எனினும் எமது கோரிக்கையினை பொருட்படுத்தாது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு எமது கோரிக்கைகளையும் நிராகரித்திருந்தனர்.

இப்போதும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி மாற்றத்திற்கான இன்னுமொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபையின் ஆதிக்கத்தை எம்வசம் படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் தொடர்ச்சியான பேச்சுகளை மேற்கொண்டிருந்தோம். எனினும் இம்முறை எம்மிடையே சில நிலைப்பாடுகள் உள்ளது. நியாயமான வகையில் இம்முறை கிழக்கு மாகாண சபையினை அமைக்க கோரியே நாம் வேண்டுக்கோள் விடுக்கின்றோம்.

கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதிக்கம் தற்போது எம்மிடம் உள்ளது. அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சு பதவியினையும் ஏற்கவில்லை. எனினும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அரசாங்கத்தின் பிரதான அங்கம் வகிக்கும் கட்சியாகவும் அமைச்சு பதவிகளையும் ஏற்றுள்ளது. இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சு பதவியினை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்துள்ளோம்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கோரிக்கைகளை நியாயம் என ஏற்றுக் கொண்டுள்ளதுடன் எமது பக்க கருத்துக்களையும் புரிந்து கொண்டுள்ளார்.எனினும் மாகாணசபை விடயங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட விரும்பவில்லை எனவும் மாகாண சபையின் கட்சிகளுக்கு இடையிலேயே பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுகமான தீர்மானம் ஒன்றினை எடுக்க கோரியும் எம்மிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத் தர கோரியும் நாம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=125155&category=TamilNews&language=tamil

 

 

 

 இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சு பதவியினை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்துள்ளோம்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கோரிக்கைகளை நியாயம் என ஏற்றுக் கொண்டுள்ளதுடன் எமது பக்க கருத்துக்களையும் புரிந்து கொண்டுள்ளார்.எனினும் மாகாணசபை விடயங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட விரும்பவில்லை எனவும் மாகாண சபையின் கட்சிகளுக்கு இடையிலேயே பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுகமான தீர்மானம் ஒன்றினை எடுக்க கோரியும் எம்மிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத் தர கோரியும் நாம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=125155&category=TamilNews&language=tamil

 

 

இங்கே என்ன நடக்குது?
 
குழந்தை அம்மாவுடம் போய் அந்த (முதலமைச்சர்) பொம்மையை (முஸ்லீம் காங்கிரசிடமிருந்து) வாங்கித்தர சொல்லி அழுவது போலல்லவா உள்ளது. எப்படி என்றாலும் மைத்திரியின் பதில் மிகவும் பிடித்திருந்தது.
இருந்தாலும் இறுதியிலும் குழந்தை முதலமைச்சர் பொம்மையை வாங்கித் தர சொல்லி கோரிக்கை வைத்து விட்டுத்தான் வந்திருக்குது.
  • கருத்துக்கள உறவுகள்

 மைத்திரியின் பதில் மிகவும் பிடித்திருந்தது.

 

எனக்கும்  தான்...

இதன் உண்மை பொய்களுக்கப்பால்....

 

இது தான் நாட்டுக்குத்தேவை..........

  • கருத்துக்கள உறவுகள்

நான் மகிந்தாபோன்று சர்வாதிகாரியல்ல.

மாகாணசபை விடயங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட விரும்பவில்லை !

 

 

நாங்கள் புலிகள்போல் தமிழரல்ல. அடிமைகள்.... அடியார்க்கும் அடியவர்கள். 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத் தர கோரியும் நாம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம். !! 
 

 

 

மக்கள் தீர்ப்பு

கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதிக்கம் தற்போது எம்மிடம் உள்ளது. ??????

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பக்கம் நியாயம் இருந்தும், கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டமைப்புக்கு, அரசியலை ஒரு பாடமாக.... படித்த ஒருவர்,
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற மாதிரி பேசக் கூடியவர் அவசரமாக தேவை.
சும்மா... வக்கீல் படித்த ஆக்கள் அரசியலில் இருப்பதால், எம்மை எல்லாரும் பேய்க்காட்டப்  பார்க்கிறார்கள்.

கூட்டமைப்புக்கு, அரசியலை ஒரு பாடமாக.... படித்த ஒருவர்,

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற மாதிரி பேசக் கூடியவர் அவசரமாக தேவை.

 

 

தமிழ் சிறீ நாங்கள் இருக்கும் சமுதாயத்தை மறந்துவிட்டீகளா?
நாங்கள் பிள்ளைகளை வைத்தியராக்குவோம், பொறியியலாளர்களாக்குவோம் இல்லை கணக்காளராக்குவோம். சமூக விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம் தத்துவார்த்தவியல் எல்லாம் படிக்கவும் மாட்டோம் படிக்க விடவும் மாட்டோம் என்ற சமுதாயம். அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள் ஏதோ ஊரோடு ஒத்துவராத பிள்ளையாக இதை கற்றார் என்றால் மற்றவரகளிடமும் இதை எதிர்பார்ப்பது சரியா? இன்றைய புலம்பெயர் சமுதாயத்தில் பலர் கற்கிறார்கள், கற்றுள்ளார்கள். தாயகத்தை புரட்டிப் போட்டாலும் கிடைப்பது அரிது. என்ன செய்வது சட்டியில் இருந்தாத்தானே கரண்டியில் வருவதற்கு. நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனை பண்ணிறம்.
 
 
 
இது எனது ஆதங்கமே தவிர உங்களுக்கான பதில் கருத்தல்ல. 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் சிறீ நாங்கள் இருக்கும் சமுதாயத்தை மறந்துவிட்டீகளா?
நாங்கள் பிள்ளைகளை வைத்தியராக்குவோம், பொறியியலாளர்களாக்குவோம் இல்லை கணக்காளராக்குவோம். சமூக விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம் தத்துவார்த்தவியல் எல்லாம் படிக்கவும் மாட்டோம் படிக்க விடவும் மாட்டோம் என்ற சமுதாயம். அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள் ஏதோ ஊரோடு ஒத்துவராத பிள்ளையாக இதை கற்றார் என்றால் மற்றவரகளிடமும் இதை எதிர்பார்ப்பது சரியா? இன்றைய புலம்பெயர் சமுதாயத்தில் பலர் கற்கிறார்கள், கற்றுள்ளார்கள். தாயகத்தை புரட்டிப் போட்டாலும் கிடைப்பது அரிது. என்ன செய்வது சட்டியில் இருந்தாத்தானே கரண்டியில் வருவதற்கு. நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனை பண்ணிறம்.
 
 
 
இது எனது ஆதங்கமே தவிர உங்களுக்கான பதில் கருத்தல்ல. 

 

 

நன்றி, ஜீவன்சிவா. :rolleyes: 

நீங்கள் யாழ்களத்தில் இணைந்த, ஐந்து கிழமைகளில்.....

64 கருத்துக்களை எழுதி, 25 பச்சைப் புள்ளிகளைப் பெற்றதிலிருந்தே....

உங்கள் திறமையை, எம்மால் ஊகிக்க முடிந்தது.

உங்கள் கருத்துக்களை, விரும்பி வாசிப்பேன்.

யாருக்கும்.... அச்சப் படாமல், தொடருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, ஜீவன்சிவா. :rolleyes: 

நீங்கள் யாழ்களத்தில் இணைந்த, ஐந்து கிழமைகளில்.....

64 கருத்துக்களை எழுதி, 25 பச்சைப் புள்ளிகளைப் பெற்றதிலிருந்தே....

உங்கள் திறமையை, எம்மால் ஊகிக்க முடிந்தது.

உங்கள் கருத்துக்களை, விரும்பி வாசிப்பேன்.

யாருக்கும்.... அச்சப் படாமல், தொடருங்கள். :)

 

 

அது......... :icon_idea:

நன்றி உங்கள் ஊக்கத்திற்கு.

கூட்டமைப்பு பக்கம் நியாயம் இருந்தும், கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

கூட்டமைப்புக்கு, அரசியலை ஒரு பாடமாக.... படித்த ஒருவர்,

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற மாதிரி பேசக் கூடியவர் அவசரமாக தேவை.

சும்மா... வக்கீல் படித்த ஆக்கள் அரசியலில் இருப்பதால், எம்மை எல்லாரும் பேய்க்காட்டப் பார்க்கிறார்கள்.

வக்கீலை படிக்கலாமோ தெரியாது, ஆனால் படித்தால் தான் வக்கிலாக முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி, ஜீவன்சிவா. :rolleyes: 

நீங்கள் யாழ்களத்தில் இணைந்த, ஐந்து கிழமைகளில்.....

64 கருத்துக்களை எழுதி, 25 பச்சைப் புள்ளிகளைப் பெற்றதிலிருந்தே....

உங்கள் திறமையை, எம்மால் ஊகிக்க முடிந்தது.

உங்கள் கருத்துக்களை, விரும்பி வாசிப்பேன்.

யாருக்கும்.... அச்சப் படாமல், தொடருங்கள். :)

நல்ல பல கருத்துக்கள். ஆனால் பின்நாட்களில் கொஞ்சம் கஷ்டப்படுவீர்கள். எதிர்க்கருத்து எழுதுவது யார் என்று பார்த்து avoid  பண்ணவும். இந்த தளத்தில் ரியாலிட்டி தெரிந்த ஆட்களும் உள்ளார்கள். உங்கள் ரேஞ்ச் ஆட்கள் இல்லாவிட்டால் பதிலளிக்க வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்

வக்கீலை படிக்கலாமோ தெரியாது, ஆனால் படித்தால் தான் வக்கிலாக முடியும்.

 

இது, பழைய..... காமெடி.

என்றாலும், ரசித்தேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பல கருத்துக்கள். ஆனால் பின்நாட்களில் கொஞ்சம் கஷ்டப்படுவீர்கள். எதிர்க்கருத்து எழுதுவது யார் என்று பார்த்து avoid  பண்ணவும். இந்த தளத்தில் ரியாலிட்டி தெரிந்த ஆட்களும் உள்ளார்கள். உங்கள் ரேஞ்ச் ஆட்கள் இல்லாவிட்டால் பதிலளிக்க வேண்டாம். 

 

ஒரு மனுசன்

அங்கால  இங்கால கொஞ்சம் அரக்கமுடியாது.... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

16dddc54853ce843f24b1a4b18cb2869

அரசியலை ஒரு பாடமாக.... படித்த ஒருவர்,

 

 

தமிழ் சிறீ நீங்கள் தேடிய ஒருவர். ஆனால் கூட்டமைப்பில் இல்லை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக. ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தில் தத்துவார்த்தவியல், பொருளாதாரவியல் மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வாலி திண்ணையில் இவர் புலோலியைச் சேர்ந்தவர் என்றார். இவர்கூட சிங்கப்பூர் பிரஜாவரிமை உள்ளவர். உங்களைவிட மைத்திரியின் வேகம் அதிகமாக உள்ளது - முந்தி விட்டார்.

 

மூலம்: http://www.reuters.com/article/2015/01/15/sri-lanka-cenbank-governor-idUSL3N0UU4G820150115

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம் இல்லாத மாகாணசபையை யார் ஆளவேண்டும் என்பதற்கு மத்தியஸ்த்தம் செய்ய ஜனாதிபதைக் கேட்கும் நிலையென்றால் அதிகாரம் கிடைத்தால் என்ன செய்வார்கள்?

இதைவிடப் பேசாமல் சிங்கள ஆளுநர்களையே ஆளச் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மனுசன்

அங்கால  இங்கால கொஞ்சம் அரக்கமுடியாது.... :lol:  :D

நீங்கள் அரக்கலாம். மிக மிக நேர்மையான கருத்துக்கள், மற்றும் உண்மையான அக்கறை  உங்களிடம் உண்டு என்பதை நீங்கள் எழுதும் கருத்துக்களில் பார்த்திருக்கிறேன். சிலருக்கு பதிலளிக்கும்போது சந்தோஷமாக இருக்கும். அப்படியானவர்களில் ஒருவர் நீங்கள்.

1957ம் ஆண்டில் பாதயாத்திரை சென்று தமிழரசுக்கட்சியினர் பாரிய கூட்டமொன்றை திருகோணமலையில் நடத்தினர்.அப்போது அவர்களுடன் இருந்த ஒரு முஸ்லீம் அமைச்சர் மன்சூர் அல்லது மயீத் சரியான பெயர் தெரியவில்லை அச் சந்தர்பத்தில் மேடையிலிருந்தவாறே முஸ்லீம்களுக்கு தனி அலகைக் கேட்டுள்ளார்.உடனே தந்தைச் செல்வா தன்னைச் சுதாகரித்து கொண்டு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்தி.
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரக்கலாம். மிக மிக நேர்மையான கருத்துக்கள், மற்றும் உண்மையான அக்கறை  உங்களிடம் உண்டு என்பதை நீங்கள் எழுதும் கருத்துக்களில் பார்த்திருக்கிறேன். சிலருக்கு பதிலளிக்கும்போது சந்தோஷமாக இருக்கும். அப்படியானவர்களில் ஒருவர் நீங்கள்.

 

யாழுக்கு நான் வருவதற்கும்

இவ்வளவு நேரத்தை செலவிடுவதற்கும் ஒரு காரணம் உண்டு என்று எழுதுவதுண்டு..

அதை நிரூபிக்கிறது தங்களது இந்த வரிகள்.

அதற்கு அர்யூன் அண்ணா ஒரு பச்சை போட்டிருப்பது மேலும் நம்பிக்கை தருகிறது.

 

அந்த மக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வு

இதுவே எமது எல்லோரது அக்கறை.

எனது தாயை  

எந்தநிலையிலும் நினைப்பேனோ

பாதுகாப்பேனோ

கைவிடேனோ

அதே நிலை தான் தாயகம் சார்ந்தும் எனது நிலை.

 

நன்றி  ஐயா

தொடர்ந்து பயணிப்போம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.