Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பரை காதலனாக ஏற்றுக்கொள்ள பெண்கள் மறுப்பது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீபத்தில் மேலைநாட்டு பெண்களிடம் நீங்கள் உங்கள் நண்பரை காதலனாக ஏற்றுகொள்வீர்களா? என்று ஒரு சர்வே நடத்தபட்டது. அதில் பங்கு எடுத்த பல பெண்கள், 'முடியவே முடியாது, அதற்கு வாய்ப்பே இல்லை எல்லை' என்று பதில் தந்தனர். ஏன் அப்படி சொல்கிறீர்? என்று திருப்பி கேட்டதுக்கு அவர்கள் அத்தனைப் பேரும் கோரசாக சொன்ன பதில் 'ஷெல்லி வொயிட் ஹெட்'. சமீபத்தில் ஷெல்லியிடம் அவரது பால்ய தோழன் இவான் 'உன்னுடன் வாழ்ந்த ஏழு வருட திருமண வாழ்க்கையை  இதோடு முடித்து கொள்வோம்' என்று விலகியிருக்கிறார். அவர் விலகிய பின் ஷெல்லிவிட்ட அறிக்கைதான் பெண்களை, இனிமேல் நண்பர்களை நண்பர்களாகவே பார்ப்போம் என்று சொல்ல வைத்திருக்கிறது.

இதைப் பற்றி ஷெல்லி பேசுகையில் "நானும் இவானும் திருமணம் செய்து கொண்டு ஏழு வருடம் ஆகிறது. எங்களுக்குள் எந்த மன கசப்பும் இல்லை. எனக்கு பன்னிரெண்டு வயது இருக்கும் போது இவானை முதன் முதலில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவனது குடும்ப உறுப்பினர்களும், எங்கள் குடும்ப உறுப்பினர்களும் நல்ல நண்பர்கள். நானும் அவனும் மணிக்கணக்கில் விளையாடுவோம். அவன் அப்போதே பயங்கர அறிவாளி. ஏதாவது ஜோக் அடித்து என்னை சிரிக்க வைத்து கொண்டேயிருப்பான். சிறு வயதில் அவனோடு விளையாடிய நாட்களை என் வாழ்நாளின் சிறந்த பொழுதுகள் என்பேன்.

அவனது அம்மா தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு என் மாமாவை கல்யாணம் செய்து கொண்டார். அது எங்களை இன்னும் இனைத்தது. பள்ளியைவிட்டு நேராக அவன் வீட்டுக்கு சென்று விடுவேன். எனக்கு பதினாறு வயது இருந்த போது இவான் டிஸ்கோக்கு போகலாம் என்று அழைத்தான். அப்போது எனது பாய் ஃப்ரெண்டு மறுத்ததால் அவனுடன் போக முடியவில்லை. எனக்கு 19 வயது இருக்கும் போது சிமோன் (simon) என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக இவானின் அம்மாவிடம் சொன்னேன். 'நீ இவானைத் திருமணம் செய்து கொள்வாய் என நினைத்தேன்' என்று அழுதுவிட்டார். ஆனால் அவர் என் மேல் கோபிக்கவில்லை. அவரது வீட்டை எங்கள் கல்யாண பந்தலுக்காக கொடுத்தார். அவர் 'நீ ஏன் என் மகனை திருமணம் செய்து கொள்ளகூடாது' என்ற கேட்ட பின்புதான் முதன்முதலில் அவனை மனதில் அப்படி உருவகப்படுத்தி பார்த்தேன்.

பின்பு அவனது வீட்டிலேயே என் முதல் கல்யாணம் நடந்தது. நான் திருமண உடை அணிந்து நடந்து வந்த போது குழந்தைச் சிரிப்புடன் 'உன் கண்ணு இப்படி இருக்கு, ஹேர் கலர் சூப்பர்' என்று வர்ணித்த இவானை என்னால் மறக்கவே முடியாது. வாழ்க்கை சக்கரம் ஓடி கொண்டேயிருந்தது. என் கணவர் சிமோன் மார்க்கேட்டிங் துறையில் இருந்தார். எங்களுக்கு பணம் பிரச்னை வந்ததேயில்லை. திருமணமாகி மூன்று வருடம் கழித்து நான் கருவுற்றேன். அதனால் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலேயே தங்கினேன். எனக்கு திருமணமான பிறகு இவானால் என்னுடன் பெரிதாக பேச முடியவில்லை.

அப்போது அவனுக்கு பயணங்களிலே நாட்டம் இருந்தது. ஊர் சுற்றி கொண்டேயிருப்பான். ஆனால் அவன் எங்கு இருந்தாலும் என் பிறந்த நாளன்று எனக்கு போன் செய்து விடுவான். எனக்கும் சிமோனுடனான தாம்பதிய வாழ்க்கையில் மூன்று குழந்தைகளைப் பெற்று எடுத்தேன். மிகவும் மகிழ்ச்சியாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் விளையாடியது புற்றுநோய். சிமோன் புற்றுநோய் பாதிக்கப்பட்டு 49 வயதில் இறந்து போனார். அவர் உயிரோடு இருந்தவரை அவருக்கு நல்ல மனைவியாக இருந்தேன். வருடங்கள் ஓடின. கிறிஸ்துமஸ் தினத்தன்று இவான் போன் செய்து என்னுடன் காபி சாப்பிட வருகிறாயா? என்றான். அவனுடன் இருக்கும் போதெல்லாம்  எல்லா பிரச்னைகளையும் மறந்து ஜாலியாக இருப்பேன். இரண்டு நாட்கள் கழித்து புத்தாண்டு பார்ட்டு வீட்டுக்கு வந்துடு என்றான். அப்போது கிட்டதட்ட இருபது நண்பர்கள் என்னை புது வருட பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள். இருந்தும் நான் இவானுடன் நேரம் செலவழிப்பதே விரும்பினேன்.

சரியாக மணி 12 அடித்தது. இவான் என் முன் முட்டி போட்டு, கையில் முத்தம் கொடுத்தான். பின்பு என் கண்களைப் பார்த்து என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? இனியும் என்னால் உன்னை இழக்க முடியாது. ஏன்னென்றால் என் பள்ளி பருவத்தில் இருந்து நான் உன்னைக் காதலித்து வருகிறேன் என்றான். இதைச் சொன்னபோது அவன் கண்கள் கலங்கியிருந்தன. அவன் கேட்ட அடுத்த நிமிடமே நான் மறுக்காமல் சம்மதித்தேன். அதன் பிறகு ஏழு வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். ஒருநாள் திடீரென என்னிடம் வந்து 'நாம் பிரிந்துவிடுவோம்' என்றான்.

அன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி. அதனால்தான் என்னுடன் விளையாடுகிறான் என்று நினைத்து அதை நான் பெரிதுபடுத்தவில்லை. ஒரு வாரம் கழித்து அவனை வேறுயொரு பெண்ணுடன் பார்த்துவிட்டு கிட்டதட்ட செத்தேபோனேன். அவனிடம் எவ்வளவு கெஞ்சியும் மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்லிவிட்டான். அவனுக்கு என் மேல் எதோ வருத்தம். எனக்கு எதாவது பிரச்னை வந்தால் இவான் தோளில் சாய்ந்தே அழுவேன். நாங்கள் நல்ல நண்பர்கள்; ஆனால் தம்பதிகளா? என்பது சந்தேகேமே... என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெண்களே! நீங்கள் தயவு செய்து உங்கள் நண்பரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். எதேனும் பிரிவு நேர்ந்தால் நீங்கள் உங்கள் கணவரை மட்டும் இழக்கப் போவதில்லை. உங்கள் நண்பரையும் சேர்த்துதான் இழந்து விடுகிறீர்கள். எனக்கு இப்போது என் கணவர் இவான் வேண்டாம், ஆனால் நிச்சயம் என் நண்பன் இவான் வேண்டும். ஆனால் அவனோ இப்போது எல்லாமே முடிந்துவிட்டது என்கிறான். ஒருவர் என்ன உறவுடன் நமக்கு அறிமுகமாகிறாரோ, அந்த உறவு முறையிலேயே அவர் இருக்க வேண்டும். மாற்ற நினைத்தால் ஆபத்துதான் என்பதை இப்போது கண்டு கொண்டேன்'' எனக் கூறியுள்ளார்.

-குரு அஸ்வின்

http://news.vikatan.com/article.php?module=news&aid=38349

  • கருத்துக்கள உறவுகள்
இவான் இவருடன் இன்னமும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தால் ..................?
 
எனக்கு நண்பரே கனவாரக இருக்கிறார்.
எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்று சொல்லியிருப்பார்.

இவகளுக்கு நெடுக்கர்தான் சரி!

ஒருவரின் வாழ்க்கை அனுபவம் எப்படி பொதுவாக இருக்கும் ? . இவான் நல்ல பிகர பாத்துட்டன் அதுதான் வெட்டிட்டு ஓடிட்டான் .

  • கருத்துக்கள உறவுகள்

உதுங்கள கலியாணம் கட்டிறதே வேஸ்டு.. இதில உதுங்க யாரைக் கட்டினால் தான் என்ன. ஒழுங்கா வாழவா போகுதுங்க. ----- எதுக்கு மாங்கல்யம். :icon_idea::lol: :lol:

Edited by நிழலி
அநாகரீக உவமானம் அகற்றப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கேட்டால் நான் சொல்வேன் ஒரு ஆண் நண்பரோடு நன்கு பழகும் போது அவரது பலம்,பலவீனம் நன்கு தெரிந்து விடும்.பலத்தை விட பலவீனம் அதிகமாக இருக்கும் போது பெண்கள் தங்கள் ஆண் நண்பரை நிராகரித்து விடுவார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களை கணக்குப் பண்ணுற நேரத்தை பெண்கள் தங்கள் பலத்தை.. பெருக்க பாவிக்கலாம். அதைவிடுத்து ஆண்களின் பலத்தில் ஏன் பெண்கள் குளிர்காய நினைக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் காதலுக்கும் நட்புக்கும  வித்தியாசம் தெரியாமல்.. ----- வாழ்கிறார்கள். :lol::D

Edited by நிழலி
அநாகரீக உவமானம் அகற்றப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கேட்டால் நான் சொல்வேன் ஒரு ஆண் நண்பரோடு நன்கு பழகும் போது அவரது பலம்,பலவீனம் நன்கு தெரிந்து விடும்.பலத்தை விட பலவீனம் அதிகமாக இருக்கும் போது பெண்கள் தங்கள் ஆண் நண்பரை நிராகரித்து விடுவார்கள் :lol:

"நன்கு"
உங் கள் கருத்தில் இருக்கும் இந்த வார்த்தையின் பொருளை கொஞ்சம் விளக்கமாக தெரிந்து கொள்ளலாமா ? 
  • கருத்துக்கள உறவுகள்

 

"நன்கு"
உங் கள் கருத்தில் இருக்கும் இந்த வார்த்தையின் பொருளை கொஞ்சம் விளக்கமாக தெரிந்து கொள்ளலாமா ? 

 

 

கிட்ட வந்துவிட்டீர்கள் மருது....

வாழ்த்துக்கள்.... :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு கதையில் சம்மந்தப்பட்டுள்ள பெண்ணை குறைப்பட்டு விமர்சிப்பதா அல்லது இதை எழுதிய செய்தியாளர் செய்தியை எழுதிய பாணியை குறைப்பட்டு விமர்சிப்பதா என்று தெரியவில்லை.

 

ஷெல்லியின் கதையை வாசிக்கும்போது நண்பர்களை திருமணம் செய்யக்கூடாது என்பதற்கு வலுவான காரணங்கள் கூறப்படவில்லையே. மாறாக திருமணம் செய்யலாம் என்பதற்கான ஆதாரங்கள் அல்லவா மிகுந்து நிற்கின்றன.

 

-கணவர் இறந்ததும் அவளது பால்ய நண்பன் முன்வந்து இரண்டாம் தாரமாக வாழ்க்கை கொடுத்துள்ளான்.

-ஏழு ஆண்டுகள் நண்பர்கள் தம்பதியராக சந்தோசமாய் வாழ்ந்துள்ளார்கள். இப்படி ஏழு ஆண்டுகள் பிரச்சனைப்படாமல் ஒன்றாக வாழ்வது என்பது மேற்கத்தைய நாடுகளில் பெரியவிடயம்.

-ஷெல்லி முதல் திருமணம் செய்தவுடன் தனது நண்பனுடனான தொடர்பு ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது என்று கூறுவதும், பின்னர் அவனது நட்பு ஏழுவருடங்கள் அவனுடன் ஒன்றாக வாழ்ந்தபின் இல்லாமல் போய்விட்டது என்று கூறுவதும் ஒன்றுக்கொன்று முரணாய் உள்ளது. அவளது இறந்த கணவன் இறக்காமல் வாழ்ந்து இருந்தால் இவளது பால்ய நண்பன், பிற்கால கணவன் ஏறக்குறைய காணாமலே போயிருப்பான். 

 

அரைகுறை செய்தியை புனைந்து அதில் தனது குசும்பையும் காட்டியுள்ள விகடன் செய்தியாளருக்கு தலையில் ஒரு குட்டு போடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாய் எப்ப இருந்து யாழின் அவமானச் சின்னமானது.. நிழலி அண்ணர். :lol::D

மனைவி சிநேகிதியாக இருக்க வேண்டுமானால் சிநேகிதி மனைவியாவதில் என்ன தவறு ?
 
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி சிநேகிதியாக இருக்க வேண்டுமானால் சிநேகிதி மனைவியாவதில் என்ன தவறு ?

யார் மனைவியின் சிநேகிதியா? :D

 

"நன்கு"
உங் கள் கருத்தில் இருக்கும் இந்த வார்த்தையின் பொருளை கொஞ்சம் விளக்கமாக தெரிந்து கொள்ளலாமா ? 

 

 

உங்களுக்கு இந்த வாரத்தையின் பொளுளை விளக்குமாறு எடுத்து விளக்க ரதி வரப்போகிறார். :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.