Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் உணர்வின் வெளிப்பாடே வடமாகாண சபையின் இனப்படுகொலை குறித்த தீர்மானம் - ஜனாதிபதியுடனான சந்திப்பில் முதலமைச்சர்

Featured Replies

cw%20meet%20MS%20856.jpg

 

தமிழ் மக்களின் உணர்வின் வெளிப்பாடே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் . - இவ்வாறு ஜனாதிபதியிடம் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள் பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் உள்நாட்டலுவல்கள், கடற்றொழில் அமைச்சர் கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, வட மாகாண ஆளுநர் கௌரவ எச்.எம்.பி.பீ.பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர்; கௌரவ சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிபத்துறை அசைமச்சா டெனீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து அளவளாவினார். இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் வருமாறு:-
 
ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்து ஆராயப்பட்டது. இந்த முதற்கட்ட சந்திப்பின்போது இந்திய இலங்கை மீனவர்கள் விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார் வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதன் காரணமாக அப்பகுதி மீனவர்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் போது இருநாடுகளினதும் கூட்டு ரோந்தின் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் என்ற யோசனையை தான் முன்வைத்தார் என விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த சந்திப்பில் கலந்துகொண்ட வேறு பலரும் எனது யோசனையை ஏற்றுக்கொண்டனர். இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் ட்றோலர் வகைபடகுகளை தடைசெய்யவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னைய காலங்களில் இது போன்ற அத்துமீறல்கள் இடம்பெறுவதில்லை என்றும் தற்போதே இந்திய, தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை குறித்து விரைவில் நடவடிக்க எடுக்கவேண்டும் என்றும் இல்லையேல் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர் என்றும் தெரிவித்தார். இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்தார் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்
 
cw%20meet%20MS%20857.jpg
 
 
cw%20meet%20MS%20858.jpg
 
 
 
cw%20meet%20MS%20859.jpg
 
http://www.malarum.com/article/tam/2015/02/12/8574/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html#sthash.LZRaPgp4.dpuf
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக விரைவில் அது போன மாதம் இது இந்த மாதம் என்று மாறிவிடும்

உண்மையில் ஐயா விக்னேஸ்வரன் அவர்கள் தான் முறையான அரசியல் வாதியாக செயட்படுகின்றார் .
பிரேரணையை நிறைவேற்றிவிட்டுதான் சந்தித்து உள்ளார் . இதுதான் முறை அதைவிட்டுட்டு சம்பந்தன் , சுமந்திரன் இந்த இரண்டு செம்மறிகளையும் நீக்க வேண்டும் . உதவகரைகள் .உண்மையான துரோகிகள் .

உண்மையில் ஐயா விக்னேஸ்வரன் அவர்கள் தான் முறையான அரசியல் வாதியாக செயட்படுகின்றார் .

பிரேரணையை நிறைவேற்றிவிட்டுதான் சந்தித்து உள்ளார் . இதுதான் முறை அதைவிட்டுட்டு சம்பந்தன் , சுமந்திரன் இந்த இரண்டு செம்மறிகளையும் நீக்க வேண்டும் . உதவகரைகள் .உண்மையான துரோகிகள் .

உண்மையான அரசியல்வாதியாக அல்ல உண்மையான நல்ல மனிதராக அவர் செயற்பட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையில் ஐயா விக்னேஸ்வரன் அவர்கள் தான் முறையான அரசியல் வாதியாக செயட்படுகின்றார் .
பிரேரணையை நிறைவேற்றிவிட்டுதான் சந்தித்து உள்ளார் . இதுதான் முறை அதைவிட்டுட்டு சம்பந்தன் , சுமந்திரன் இந்த இரண்டு செம்மறிகளையும் நீக்க வேண்டும் . உதவகரைகள் .உண்மையான துரோகிகள் .

 

உண்மையான அரசியல்வாதியாக அல்ல உண்மையான நல்ல மனிதராக அவர் செயற்பட்டுள்ளார்.

 

விக்னேஸ்வரன் ஐயாவின்..... செயற்பாடுகளும், முக்கிய சந்திப்புக்களில் அவர் அணியும் தமிழர் பாரம்பரிய உடையும்.... அவரின் மீது உள்ள மதிப்பை, மேலும் உயர்த்துகின்றது.

 

cw%20meet%20MS%20856.jpg

ஒரு நல்ல மனிதன் அரசியல் செய்ய வந்தால் எப்படி என்பதை எங்கள் மதிப்பிக்குரிய ஐயா விக்னேஸ்வரன் அவர்கள் செய்து காட்டுகின்றார் . எனது ஆதங்கம் என்னவென்றால் இனியும் சம்பந்தன் , சுமந்திரன் , மாவை போன்றவர்கள் திருந்த முயல வேண்டும் இல்லாவிடில் ஒதுங்குவது நல்லது. 
 
சிங்களவனின் சுதந்திர தினத்தில் பங்கு கொண்டது எவ்வளவு பெரிய துரோகம் . ஒரு மன்னிப்பை ஆவது சொன்னார்களா ? பின்கதவால் வந்த சுமந்திரன் எல்லாம் எங்களுக்கு எப்படி நல்லதை செய்வர் ? .
 
சம்பந்தன் தான்  ஒதுங்கிட்டு , ஒரு இளம் துடிப்புள்ள தமிழ் தேசியம் மீது பற்றுள்ள ஒருவரிடம் ஒப்படைக்கவேண்டும் .இல்லாவிடில் மக்கள் வெளியேற்றுவார்கள் .
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தை சர்வதேசம் இலகுவில் புறக்கணிக்க முடியாது.ஷிராணி பண்டாரநாயக்காவை நீக்கியதற்கே சர்வ அளவில் அழுத்தம் கொடுத்தவர்கள் இதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய விரைவில் விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து கட்டம் கட்டபடுவது உறுதி

கூடிய விரைவில் விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து கட்டம் கட்டபடுவது உறுதி

 

தேவையே இல்லை.

 

அரசியலில் பிரவேசிக்க மறுத்த மனிதர் விக்னேஸ்வரன். கூட்டமைப்பு கெஞ்சிக் கூத்தாடித்தான் கொண்டு வந்தார்கள் (இதில் மனோ கணேசனின் பங்கும் அதிகமானது). கூட்டமைப்பு தனக்கு எதிராக கூத்தடித்தால் தானாகவே விலகக்கூடிய  மனிதர். இதுதான் விக்னேஸ்வரனின் பலம். இதுவே கூட்டமைப்பின் பயமும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையில் ஐயா விக்னேஸ்வரன் அவர்கள் தான் முறையான அரசியல் வாதியாக செயட்படுகின்றார் .
பிரேரணையை நிறைவேற்றிவிட்டுதான் சந்தித்து உள்ளார் . இதுதான் முறை அதைவிட்டுட்டு சம்பந்தன் , சுமந்திரன் இந்த இரண்டு செம்மறிகளையும் நீக்க வேண்டும் . உதவகரைகள் .உண்மையான துரோகிகள் .

 

 

கூட்டமைப்பின் மாகாணசபை முதல்வருக்கான தெரிவில்

மாவை அவர்களா?

விக்னேஸ்வரன்  ஐயா அவர்களா? என்ற இறுதி முடிவு எடுக்கும் நிலை பற்றி  இங்கு விவாதிக்கப்பட்டபோது

மாவை அவர்கள் போட்டியிலிருந்து விலகி 

விக்னேஸ்வரன் ஐயா  அவர்களுக்கு இடம்தரவேண்டும் என எழுதியிருந்தேன்.

தேர்வு சரியானதே என்பதை நிரூபிக்கும் பொறுப்பு விக்னேஸ்வரன்   ஐயா அவர்களுக்கு உள்ளது.

முதலில் இல்லாததுகளை எழுதினார்கள் இப்போ நான் அப்பவே சொன்னேன் பார்த்தியா என்கின்றார்கள் .

 

யாழில் தாங்கள் பதிந்ததற்கு முற்றும் முழுதாக முடிவுகள் வந்தாலும் இது அப்பவே நான் சொன்னது என்று சொல்ல ஒரு கூட்டம் .

 

விக்கியை அரசியலுக்கு சம்பந்தர் தான் கொண்டுவந்தார் .அந்த நேரம் யாழில் பலர் இட்ட பின்னூட்டங்களையும் பின்னர் விக்கி பற்றி பலர் இட்ட பின்னூட்டங்கள் யாழில் இப்பவும் இருக்கு .

 

மாகாணசபையில் இன அழிப்பு பிரேரணையை நிறைவேற்றியவுடன் இங்கு சந்தோஷத்தில் விக்கியை தூக்கிபிடிப்பவர்கள் நாளை அவர் சம்பந்தருடன் நின்று அறிக்கை விடும்போது குத்துக்கரணம் அடிக்கபோகின்றார்கள் விக்கியை அரசியலுக்கு கொண்டுவரும் போதே நாங்கள் சொன்னோம் என்று .

 

ஒரு கொஞ்சம் ஆவது உண்மையாக வாழ,பேச ,எழுத பழகுங்கள் உறவுகளே . :icon_mrgreen:   

இன்றைய தமிழர்களின் தலைவர்களை "செம்மறிகள்" என்று பதிவு இட்டிருக்கு ,அதைப்பற்றி எவரும் கண்டிக்கவில்லை பச்சை குத்த நிற்கின்றார்கள் ,

இதற்குள் இன்னொருவர் தான் விக்கியின் தெரிவு சரி என்று எழுதியை அவர் நிரூபிக்கவேண்டுமாம் .

 

யாழுக்கே வெட்கக்கேடு .

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தமிழர்களின் தலைவர்களை "செம்மறிகள்" என்று பதிவு இட்டிருக்கு ,அதைப்பற்றி எவரும் கண்டிக்கவில்லை பச்சை குத்த நிற்கின்றார்கள் ,

இதற்குள் இன்னொருவர் தான் விக்கியின் தெரிவு சரி என்று எழுதியை அவர் நிரூபிக்கவேண்டுமாம் .

 

யாழுக்கே வெட்கக்கேடு .

 

 

தப்பான விளக்கம்

மக்களின் தெரிவு சரி என்பதை நிரூபிக்கும் பொறுப்பு என்று விளங்கிக்கொள்ளுங்கள்

எனக்கு நிரூபிக்கணும்  என்று எங்கும் எழுதவில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பிரேரணையை திரு விக்கினேஸ்வரன் இப்போது கொண்டுவந்ததே, சம்பந்தனின் விருப்பப்படிதான்.  இதே பிரேரணை பற்றி சுரேஷ் கருத்து (இந்த பிரேரணை மைத்திரி அரசுக்கு எதிரானது அல்ல) கூறிய ஊடகவியலாளர் சந்திப்பும், சம்பந்தனின் விருப்பப்படிதான் நடந்தது.

 

இவ்வளவு நாளும் கிடப்பில் போடப்பட்டிருந்த பிரேரணையை, அரசியல் தேவை கருதி அவசர கதியில் (தமிழில் மொழிபெயர்க்கக்கூட நேரமின்றி) கொண்டுவந்தார்கள்.

 

இதில் விக்கினேஸ்வரன் வாழ்க, சம்பந்தன் ஒழிக கோஷம் எப்படி வருகிறது என்று புரியவில்லை.

Edited by sabesan36

எப்பொழுது யாழில் கருத்து எழுதினாலும் ஏதோ கொம்பு முளைத்தவர் போல் கருத்து எழுதினால் தான் பெரியவர் என்று தனக்குள்ளேயே நினைப்பில் சிலர்.

  • கருத்துக்கள உறவுகள்
 ஒருவர் சரியானதை செய்யும்போது, சரி என்று பாராட்டுவதும், அதே ஒருவர் பிழை விடும்போது, பிழை என்று சுட்டிக்காட்டுவதிலும் என்ன தவறு இருக்கிறது?
நான்  சொல்லி விட்டேன் என்பதற்காக அவர் செய்வதெல்லாம் சரி, அல்லது பிழை என்று வாதாட வேண்டுமா என்ன?
சிலர், அப்ப அப்பிடிச் சொன்னீர்கள், இப்ப இப்பிடிச் சொல்கிறீர்கள் என்று சொல்வதைப் பார்த்தால்...........???  
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரேரணையை திரு விக்கினேஸ்வரன் இப்போது கொண்டுவந்ததே, சம்பந்தனின் விருப்பப்படிதான்.  இதே பிரேரணை பற்றி சுரேஷ் கருத்து (இந்த பிரேரணை மைத்திரி அரசுக்கு எதிரானது அல்ல) கூறிய ஊடகவியலாளர் சந்திப்பும், சம்பந்தனின் விருப்பப்படிதான் நடந்தது.

 

இவ்வளவு நாளும் கிடப்பில் போடப்பட்டிருந்த பிரேரணையை, அரசியல் தேவை கருதி அவசர கதியில் (தமிழில் மொழிபெயர்க்கக்கூட நேரமின்றி) கொண்டுவந்தார்கள்.

 

இதில் விக்கினேஸ்வரன் வாழ்க, சம்பந்தன் ஒழிக கோஷம் எப்படி வருகிறது என்று புரியவில்லை.

 

*********

இதையெல்லாம். சம்பந்தன், எங்களிடம் சொல்லி விடச் சொல்லி... உங்களை... தூது அனுப்பி விட்டாரா?

வடமாகாண முதல்வர், விக்னேஸ்வரனின் கால் செருப்புக்கும், சம்பந்தன் இணையாக மாட்டார். :)

 

 

நியானி: ஒருமையில் விளித்து எழுதியது நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*******

இதையெல்லாம். சம்பந்தன், எங்களிடம் சொல்லி விடச் சொல்லி... உங்களை... தூது அனுப்பி விட்டாரா?

வடமாகாண முதல்வர், விக்னேஸ்வரனின் கால் செருப்புக்கும், சம்பந்தன் இணையாக மாட்டார். :)

மதிப்புக்குரிய தமிழ் சிறி அண்ணை,

 

உங்களிடம் சொல்லச்சொல்லி சம்பந்தன் ஏன் தூது விடவேண்டும். நீங்கள் என்ன வோட்டா போடப் போகிறீர்கள். சவுண்டுதானே.

 

இல்லை ஐயா. நான் எழுதியதை திரு விக்கினேஸ்வரனே அவரை நேற்று சந்தித்தபோது என்னிடம் ** நேரில் சொன்னார்.

 

 

நியானி: திருத்தப்பட்ட மேற்கோளைச் சுட்டிய பதில் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய தமிழ் சிறி அண்ணை,

 

உங்களிடம் சொல்லச்சொல்லி சம்பந்தன் ஏன் தூது விடவேண்டும். நீங்கள் என்ன வோட்டா போடப் போகிறீர்கள். சவுண்டுதானே.

 

இல்லை ஐயா. நான் எழுதியதை திரு விக்கினேஸ்வரனே அவரை நேற்று சந்தித்தபோது என்னிடம் ** நேரில் சொன்னார்.

 

தமிழரை

ஒருபக்கம் அடித்துக்கொண்டு

இன்னொரு பக்கம் அணைக்கும் இந்த முறையை  தாங்கள் ஆதரிக்கிறீர்களா???

 

 

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மகிந்தவே ஒரு சாதகமான அறிக்கையை வெளியிட்டாலும் அதை வரவேற்கவேண்டும். யார் என்ன சொல்கிறார்கள் என்பதைவிட என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதே முக்கியம்.. வரவேற்கின்ற அதேவேளையில் நம்பி ஏமாறவும் கூடாது.

முக்கிய புள்ளிகள் கூறும் கருத்துக்கள் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வகையில் தமிழரால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி சொல்லும்போது அதற்கு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் கிடைக்கிறது. ஜெயாவின் இன அழிப்பு தீர்மானத்தையும் இந்நேரத்தில் நன்ியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.. (அவர் முன்பு அதைச்சொன்னார், அரசியலுக்காக இதைச் செய்தார் என்பனவெல்லாம் ஒரு பொருட்டல்ல.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரை

ஒருபக்கம் அடித்துக்கொண்டு

இன்னொரு பக்கம் அணைக்கும் இந்த முறையை  தாங்கள் ஆதரிக்கிறீர்களா???

 

 

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

இல்லை விசுகு. ஆதரிக்கவில்லை. இது அவர்கள் (த.தே.கூ.) அரசியல் செய்யும் ஸ்டைல்.

 

நான் கூட்டமைப்பு ஆதரவாளன் அல்ல. மாகாணசபை தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்தேன். காரணம் எனக்கு தெரிந்தவர்கள் கூட்டமைப்பில் போட்டியிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிக்க போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை விசுகு. ஆதரிக்கவில்லை. இது அவர்கள் (த.தே.கூ.) அரசியல் செய்யும் ஸ்டைல்.

 

நான் கூட்டமைப்பு ஆதரவாளன் அல்ல. மாகாணசபை தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்தேன். காரணம் எனக்கு தெரிந்தவர்கள் கூட்டமைப்பில் போட்டியிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிக்க போவதில்லை.

 

நன்றி  ஐயா

நாம் மிகமிக அவதானமாக இருக்கவேண்டிய காலம்  மற்றும் விடயம் இது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.