Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கோதா முகாம்’ குறித்து விசாரிக்க அரசாங்கம் தயங்குவது ஏன்? கேள்வி எழுப்பும் சுரேஷ்

Featured Replies

 

Suresh-Premachandran-200x103.jpg

 

கோத்­தா முகாம், திரு­ம­லையில் நடை­பெற்ற முன்­னைய படு­கொ­லைகள் தெஹி­வ­ளை­யி­லி­ருந்து கடத்­தப்­பட்டு காணாமல்போயுள்ள மாணவர் விவகாரம் ஆகி­ய­வற்றின் உண்­மைகள் வெளிக்­கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டு­மாயின் புதிய அர­சாங்­க­மா­னது இவற்றை மீள் பரிசீலனை செய்து உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். என யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரிவித்தார்.

 

திரு­கோ­ண­மலை இர­க­சிய கடற்­படை முகாம் சம்பந்­த­மா­கவும் முன்­னைய படு­கொ­லைகள் தொடர்­பா­கவும் பாராளுமன்றத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரி­வித்த கருத்­து குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

 

“திரு­கோ­ண­மலை கடற்­ப­டைத்­த­ளத்தில் இயங்கி வந்­த­தாகக் கூறப்­படும் கோத்தா தடுப்பு முகாம் குறித்து எனக்கு கிடைத்த உண்மைத் தக­வலின் அடிப்­ப­டையில் நான் இத்­த­டுப்பு முகாம் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தேன்.

இது சம்பந்­த­மான எந்த விசா­ர­ணை­யையும் அர­சாங்கம் செய்­யத்­த­யா­ரா­க­வில்லை. பதி­லாக என்ன செய்­தி­ருக்­கிற தென்றால் கடற்­ப­டைத்­த­ள­ப­தியை அழைத்து திரு­கோ­ண­ம­லையில் இப்­ப­டி­யொரு சம்­பவம் நடை­பெற்­றுள்­ளதா என விசா­ரித்­துள்­ளார்கள். அதற்கு பதில் அளித்த தள­பதி அப்­ப­டி­யொரு முகாம் இருக்­க­வு­மில்லை. அப்­ப­டி­யொரு சம்­பவம் நடக்­க­வு­மில்­லை­யென்று கூறி­யி­ருக்­கிறார்.

இதை ஏற்­றுக்­கொண்ட பிர­தமர் இப்­ப­டி­யொரு சம்­பவம் நடை­பெற வில்­லை­யென பாரா­ளு­மன்­றத்தில் கூறினார்.

 

இவ்­வாறு தான் இலங்கை அர­சாங்கம் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கி­றது. பாரா­ளு­மன்­றத்தில் என்னால் மேற்­படி குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­ட­போது நம்­பத்­த­குந்த தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே முன்­வைத்தேன். கோத்­தா முகாம் பற்றி என்னால் கூறப்­பட்ட குற்­றச்­சாட்­டா­னது ஒருவர் இருவர் பற்­றி­ய­தல்ல, ஒட்­டு­மொத்­த­மாக 700 பேர் சம்­பந்­தப்­பட்­டது. இக்­குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிப்­ப­தற்கு ஏன் அரசு தயங்­கு­கி­றது என்று தெரி­ய­வில்லை. சாதா­ரண ஒரு விட­ய­மாக தட்­டிக்­க­ழிக்­கப்­ப­டு­கி­றது. இது பாரதூர­மான விட­ய­மாகும்.

 

திரு­கோ­ண­ம­லையில் கடந்த 2006 ஆம் ஆண்டு படு­கொலை செய்­யப்­பட்ட 5 மாண­வர்கள் மற்றும் மூதூரில் படு­கொலை செய்­யப்­பட்ட 17 தொண்­டர்கள் பற்­றிய கொலைகள் சம்பந்­த­மாக நானும் இரா.சம்­பந்தனும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை சந்­தித்து முறை­யிட்டோம். குறித்த கொலைகள் சம்பந்­த­மான சாட்­சி­யங்கள் இல்­லாத கார­ணத்­தினால் இரு வழக்­கு­க­ளையும் முடி­வுக்கு கொண்டு வந்­து­விட்­டோ­மென்று அவர் கூறினார். அதே ஜனா­தி­பதி 5 மாண­வர்­களின் படு­கொ­லை­யோடு சம்பந்­தப்­பட்­ட­வர்கள் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் எனக்­கூ­றினார்.

 

இந்த மாண­வர்­களின் படு­கொலை சம்பந்­தப்­பட்­ட­வர்கள் யார் என்­பது முன்னாள் ஜனா­தி­பதி முதல் அனை­வ­ருக்கும் தெரிந்த விட­ய­மாகும். ஆனாலும் கூட அப்­ப­டு­கொலை சம்­பந்­த­மாக சரி­யான முறையில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. போதிய சாட்­சி­யங்கள் இல்­லை­யென தட்டிக் கழிக்­கப்­பட்­ட­துடன் இதற்­கென நிய­மிக்­கப்­பட்ட விசா­ர­ணைக்­கு­ழுவும் இடையில் தனது விசா­ர­ணையை நிறுத்­திக்­கொண்­டது.

 

முன்னாள் ஜனா­தி­பதி ஊழல் புரிந்­துள்ளார் எனக் கூறும் அர­சாங்கம் இந்த விசா­ர­ணைக்கு இந்­தியா மற்றும் உல­க­வங்கி ஆகி­ய­வற்றின் உத­வியை நாடி­யுள்­ளது. ஆனால் எம்மால் சுட்­டிக்­காட்­டப்­பட்ட குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் ஏன் மறுக்­கி­றது. என்று புரி­ய­வில்லை. இதி­லி­ருந்து ஒன்று புரி­கி­றது நாம் தெரிந்­தி­ருக்கும் குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க இலங்­கை­ அ­ர­சாங்கம் விரும்­ப­வில்லை என்­ப­தாகும்.

 

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவி­ராஜின் கொலை­யோடு சம்­மந்­தப்­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் மூன்று கடற்­ப­டை­யினர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் வசந்த கரன்ன கொடவே பல கொலை­களை செய்ய தனக்கு உத்­த­ர­விட்டார் என கடற்­ப­டையைச் சேர்ந்த லெப்­ரினன் கோமாண்­ட­ரான நிலாந்த சம்பத் முன­சிங்க குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வாக்கு மூலம் வழங்­கினார் என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராஜா நீதி­மன்றில் தெரி­வித்­தி­ருந்தார்.

 

இதே போன்றே தெஹி­வ­ளை­யி­லி­ருந்து கடத்­தப்­பட்ட 5 மாணவர் சம்பந்­த­மான விசா­ர­ணை­யின்­போது கடற்­படை அதி­காரி ஒருவர் தெரி­வித்­தி­ருக்­கிறார் 5 மாண­வர்­களை கடத்­து­வ­தற்கு தனக்கு கட்­ட­ளை­யிட்­டது கடற்­ப­டைத்­த­ள­பதி வசந்த கரன்­ன­கொ­டவே என்று இதி­லி­ருந்து ஓர் உண்மை வெளிக்­கொண்டு வரப்­பட்­டி­ருக்­கி­றது. மேற்­படி கடற்­படைத் தள­பதி பல கொலை­க­ளுக்கு கார­ண­மாக இருந்­துள்ளார் என்­பது நீதி­மன்­றி­லேயே கூறப்­பட்­டி­ருக்­கி­றது. அப்­படி இருந்­தும்­கூட அவர் ஏன் இன்னும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. விசா­ரிக்­கப்­ப­ட­வில்­லை­யென்­பது எமக்­கு­பு­ரி­யாத புதி­ரா­க­வே­யுள்­ளது.

 

இந்த சம்­ப­வங்­களின் அடிப்­ப­டையில் பார்க்­கி­ற­போது திரு­கோ­ண­மலை கடற்­படை இர­க­சியமுகாமென்­பது இப்­ப­டிப்­பட்ட தேவை­க­ளுக்­கா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் இந்த தேவை­க­ளுக்­கா­கவே கோத்­தா முகாம் பயன்­ப­டுத்­தப்­பட்­டு­வந்­தி­ருக்­கிறது என்­ப­தே­யுண்மை ஆனால் அந்த முகாம் இன்று இல்­லாமல் இருக்­கலாம். இந்தாலும் திரு­கோ­ண­மலை கடற்­படை முகா­மானது ரக­சி­ய­மான கொலை­க­ளுக்கும் கடத்தல்­க­ ளுக்கும் மறைத்து வைப்­பதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்த முகாமென்பதேயுண்மை.

 

இந்த உண்மைகள் மேலும் துலக்கப்பட வேண்டு மானால் ரவிராஜின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கடற்படை தளபதிகள் ஆகியோரை முறை யான விசாரணைகள் செய்வதன் மூலம் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியும். நல்லாட்சியை உருவாக்கியுள்ளோம் என்று கூறிவரும் இன்றைய அரசாங்கமானது நாட் டில் நடைபெற்ற இவ்வகை அநீதிகளை கண்டு பிடிக்க முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சி ஜனநாயகம் என்பது சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ்மக்களுக்கும் உண்டு என் பதை அரசு நிரூபித்துக்காட்ட வேண்டும்” என பிரேமச் சந்திரன் மேலும் தெரிவித்தார்.

 

http://tamilleader.com/?p=47825

 

Edited by கலையழகன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் சிங்களவரை காட்டிக்கொடுத்ததாக சரித்திரம் இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சுமந்திரன் அறிக்கை விடப்போறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப சுமந்திரன் அறிக்கை விடப்போறார்.

 

 சுமந்திரன் அறிக்கை விடமாட்டார் .அவர் கட்சிகளுக்குள்ளை மாற்றுக்கருத்துக்கள் ஆரோக்கியமானதெண்டு சொன்னவர். அதோடை அதுதான் ஜனநாயகமெண்டும் சொன்னவர்

நான் யாரெண்டு சொல்லமாட்டேன்.ஆனால் யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும்போது என்ன நடக்கும் என்று சிலருக்கு பயம்.
 
பாவம் சுமந்திரன்
 
  • கருத்துக்கள உறவுகள்

 

நான் யாரெண்டு சொல்லமாட்டேன்.ஆனால் யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும்போது என்ன நடக்கும் என்று சிலருக்கு பயம்.
 
பாவம் சுமந்திரன்

 

 

சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்)

ஈ. சரவணபவன்(கட்சி தெரியாது)

மாவை சேனாதிராஜா (இதக)

சி. சிறீதரன்( எந்தக்கட்சி இவர்)

அ. விநாயகமூர்த்தி (காங்கிரஸ்)

செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ)

சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்)

வினோ நோகராதலிங்கம் (ரெலோ)

இவர்களில் ஒருவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு சுமந்திரனுக்கு இருக்காது.

மீண்டும் பின் கதவால் எந்தக்கட்சியாலும் வருவார்.

 

அவர் பாவமில்லை கொடுத்து வைத்தவர்.சம்பந்தரின் வாரிசல்லோ :D

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வாத்து யாழ் தேர்தல் மாவட்டத்தையும் வன்னி தேர்தல் மாவட்டத்தையும் போட்டு குழப்பி அடிக்கிறியள் :)

பின் கதவால் வந்தவர் எப்படி இனி வருவார் என்று பார்ப்பம் . ஒருவேளை முகட்டினை பிரித்து இறங்குவரோ ?

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா முகாம் பற்றி அரசியல் செய்யாமல்.. அது பற்றிய விடயங்களை ஐநா மற்றும் சர்வதே ஊடகங்கள் மற்றும் சர்வதே மனிதாபிமான அமைப்புக்களிடம் கையளியுங்கள். சும்மா.. கதை பேசி காலத்தை கழிக்காமல்.. நீங்களும்.  :icon_idea:


சிங்களவன் எங்களுக்கு நீதி தருவான் என்றிருந்தால் எதுக்கு ஆயுதம் தூக்கிப் போராடி.. இத்தனை சாவுகளை வாங்கினம். தரமாட்டான் என்று தெரிந்து கொண்டும்.. அவனிடம் கெஞ்சிக் கொண்டிருப்பது நாடகம்.  :(  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா முகாம் பற்றி அரசியல் செய்யாமல்.. அது பற்றிய விடயங்களை ஐநா மற்றும் சர்வதே ஊடகங்கள் மற்றும் சர்வதே மனிதாபிமான அமைப்புக்களிடம் கையளியுங்கள். சும்மா.. கதை பேசி காலத்தை கழிக்காமல்.. நீங்களும்.  :icon_idea:

சிங்களவன் எங்களுக்கு நீதி தருவான் என்றிருந்தால் எதுக்கு ஆயுதம் தூக்கிப் போராடி.. இத்தனை சாவுகளை வாங்கினம். தரமாட்டான் என்று தெரிந்து கொண்டும்.. அவனிடம் கெஞ்சிக் கொண்டிருப்பது நாடகம்.  :(  :rolleyes:

கோத்த முகாம் மாதிரி அமைத்து 
அதுக்குள்ளே வைத்து போட்டு தள்ளுங்கள் என்று ஐடியா கொடுத்ததே அவர்கள்தான்.
 
வெளியில் தெரிந்தால் பிரச்சனை ...
தெரியாமல் பார்க்க வேண்டும் என்பதுதான் அவர்கள் ஆலோசனை. 
  • கருத்துக்கள உறவுகள்

 

கோத்த முகாம் மாதிரி அமைத்து 
அதுக்குள்ளே வைத்து போட்டு தள்ளுங்கள் என்று ஐடியா கொடுத்ததே அவர்கள்தான்.
 
வெளியில் தெரிந்தால் பிரச்சனை ...
தெரியாமல் பார்க்க வேண்டும் என்பதுதான் அவர்கள் ஆலோசனை. 

 

 

ஐநாவை மேற்குலக நாடுகள் சிலவற்றை முழுமையாக நம்ப முடியாத படியால் தான்.. சர்வதே ஊடகங்கள்.. மற்றும் மனிதாபிமான.. மனித உரிமை அமைப்புக்களையும் துணைக்கிழுத்திருக்கிறம்.. மருதங்கேணி.  சனல் 4 ஏற்படுத்திய அழுத்தம் தான்.. பிரிட்டன் ஆட்சிப் பீடம் கொஞ்சம் என்றாலும் எங்கள் மீது கருசணை காட்டினம். இல்ல பயங்கரவாத ஒழிப்புக்குள் எல்லாம் ஒளிக்கப்பட்டிருக்கும்.  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.