Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

28வது ஆண்டு கந்தன் கருணை படுகொலை நினைவு நாள்

Featured Replies

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பின் பின்னர்.

புலிகளின் தளபதி கிட்டு இரண்டாம் குறுக்குத் தெருவில் அகமுரண்பாட்டில் கிறனைட் தாக்குதலில் காலை இழந்த போது(1987 மார்ச்) யாழில் ஒரு வீட்டில் அமைந்திருந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த

57 க்கு மேற்பட்ட ஏதுமறியா அப்பாவி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட மற்றும் புளொட், ரெலோ போராளிகள் ஆதரவாளர்கள் பலர் அன்றிரவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அருணாவால் (செல்வசாமி செல்வகுமார்) சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

அந்த படுகொலை “கந்தன் கருணை” படுகொலை என அழைக்கப்பட்டது

கந்தன் கருணை படுகொலை நினைவு நாள்

.

1987ம் ஆண்டு பங்குனி 30 இல் யாழ்ப்பாணத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிறைப்படுகொலையே கந்தன்கருணை படுகொலை

1983 யூலை மாதத்தில் இல் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர், பாதுகாப்பு தரப்புக்களின் ஒத்துழைப்புடன் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்கள கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகினர். இலங்கை தமிழ் மக்களும் இன்னும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் இந்த நாளையே கறுப்பு யூலை என வருடம் தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இதனை ஒத்த ஒரு படுகொலையை புலிகள் 1987 பங்குனி 30 இல் நிகழ்த்தினார்கள். அவர்களால் சிறை வைக்கப்பட்டிருந்த 60 இற்கும் மேற்பட்டவர்கள் இதன்போது கொல்லப்பட்டார்கள். இந்த படுகொலைகள் இடம்பெறுவதற்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்பாக 1987 மார்கழி 13 இல் புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ். மீது தாக்குதல் நடாத்தி கைது செய்து தடுத்து வைத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் அநேகருடன், புளொட் ரெலோ இயக்கப் போராளிகள் சிலரும் பொதுமக்களும் கூட இந்த படுகொலை சம்பவத்தில் பலியாகினர். பணத்திற்காக கடத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண வர்த்தகர்கள் இருவரும் இதில் பலியானது பலரும் அறிந்த சங்கதியாகும்.

நல்லூர் கோவிலுக்கு பின் புறமாக கோவில் வீதியில் கந்தன் கருணை என்ற பெயரை கொண்டிருந்த இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சம்பவம் நடப்பதற்கு முன்னரே யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சமீபமாக ஒரு வீட்டிற்கு இடம் மாற்றப்பட்டிருந்தனர். அங்கேயே இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற போதும் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கந்தன் கருணை இல்லத்தின் பெயரே இந்த படுகொலையுடன் ஒட்டிக்கொண்டது.

புலிகளின் அப்போதைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு என்கின்ற சதாசிவம் கிருஷ்ணகுமார் யாழ்ப்பாணம், 2ம் குறுக்குத் தெருவில் வழங்கமாக சென்றுவரும் தனது பெண் சிநேகிதி ஒருவரது வீட்டிற்கு சென்று திரும்பும் வேளையில் அவரது காருக்கு கைக்குண்டு வீசப்பட்டு படுகாயமடைந்தார். தம்மால் தடைசெய்யப்பட்ட மேற்படி இயக்கங்களை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்ற ஊகத்தின் அடிப்படையில் புலிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த இந்த கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆனால், தமது தடுப்புக்காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதிகள் 18 பேர் தமது தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஒரு கட்டுக்கதையை ஊடகங்களுக்குத் தெரிவித்து வெலிக்கடை படுகொலையை போன்றே மிருகத்தனமான இந்தப் படுகொலையை புலிகள் மூடி மறைத்தனர்.

இந்த கொடூரச் செயலை கண்டிக்கவோ, விமர்சிக்கவோ யாரும் முன்வரவில்லை. அத்தகைய வல்லமையுடைய மனித உரிமை செயற்பாட்டாளர்களையோ, ஊடகவியலாளர்களையோ அக்காலத்தில் காணமுடியவில்லை. புலிகளின் துப்பாக்கிகளுக்கு முன்னால் அவர்கள் குரல் ஒடுங்கிப் போனது விளங்கிக் கொள்ளப்படக் கூடியதே. ஆனால், புலிகளின் அராஜகப் போக்கிற்கெதிராக சக தோழர்களை போராடுமாறு வழிநடத்தியதுடன், அதற்கு ஆதரவளிக்குமாறு மக்களை கோரியவர் இப்போது “தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை கொலை செய்த சந்தர்ப்பங்கள் ஒரு போதும் நிகழ்ந்திருக்கவில்லை” என்று கூறி தமது பிள்ளைகளை, குடும்ப அங்கத்தவர்களை புலிகளின் பாசிசப் போக்கிற்கு பறிகொடுத்து நிற்கும் அனைவரது முகத்திலும் ஓங்கி அறைந்திருக்கிறார். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இரண்டு தரப்புக்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தை ஐ.நா மன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன். வன்னியில் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பாக பலர் தமது கருத்துக்களை அச்சம் நீங்கி வெளியிட்டு வரும் நிலையில் இவ்வாறு கூறப்பட்டிருப்பது பலரையும் விசனப்பட வைத்திருக்கிறது.

புலிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த “கந்தன் கருணை” சிறைப்படுகொலையின் போது உயிரிழந்தவர்களில் பலர் புலிகளிடம் சரணடைந்தவர்கள். அவர்களை சுட்டுக்கொன்ற புலிகள் முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியுடன் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடையச் சென்றார்கள். வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டது, யுத்தக் குற்றம் இழைத்திருக்கிறது என்று கூறி நீதி கேட்பவர்கள் சரணடைந்தவர்களை புலிகள் சுட்டுக்கொன்றதையிட்டு எந்தக்காலத்திலும் வாய் பேசவில்லை.

கந்தன் கருணை படுகொலை இடம்பெற்று 27 வருடங்கள் கடந்திருக்கிறது. இதன் பின்னரும் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் பல இடங்களில் தனித்தனியாகவும், கூட்டாகவும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடியும் வரை தடுத்துவைக்கப்பட்ட யாரையும் எந்த இடத்திலும் புலிகள் விடுவிக்கவில்லை. ஸ்ரீலங்கா இராணுவமும் யாரையும் மீட்கவில்லை. ஆனால் விதம் விதமான சிறைக் கூண்டுகளுடன் புலிகளின் பல சிறைச்சாலைகளை இராணுவம் கைப்பற்றியது அனைவருக்கும் தெரியும். எனவே, இதன் மறு பகுதியை ஊகிக்க முடியாதவர்கள் யாருமிருக்க முடியாது.

புலிகளால், ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மீறப்பட்ட சந்தர்ப்பங்களில் அதற்கெதிராகப் பேசப்பட்டிருந்தால் இன்று ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்காக காத்திருக்கும் நிலை தோன்றியிருக்காது. இந்தப் படிப்பினைகள் தமிழ் மக்களின் எதிர்காலம் செம்மையுறப் பயன்பட வேண்டும். தமது உயிர்களை அர்ப்பணித்து எமக்குக் கற்றுத்தந்தவர்களின் வரிசையில் “கந்தன் கருணை” சிறைப்படுகொலையில் மாண்டவர்களும் அடங்குவர். அவர்களை இந் நாளில் நினைவு கூருவோம்.

www.eprlfnet.com
 

 

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையை விட்ட பெட்டைப்பயல் யாரு ,அகமுரண்பாட்டில் குண்டு வீசப்படவில்லை.எறிந்தவர்கள் யாரென்பது அர்ஜூன் அண்ணாவுக்கு நிச்சயமாக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு படுகொலை.. ஊதிப் பெருப்பிக்கப்பட்டது.. ஒட்டுக்குழுக்களால்.

 

இதில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒட்டுக்குழு ஆயுததாரிகள். அப்பாவி பொது மக்கள் கிடையாது.

 

அப்பாவி பொது மக்களை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்ததையும்.. இதனையும் ஒப்பிடும்.. முட்டாள்களை என்னென்பது. 

 

ஒட்டுக்குழுக்கள்.. புளொட் உட்பட ரகசியமாகப் போட்டு புதைத்தவையை நினைவு கூற வெளிக்கிட்டால்.. தினமும் நினைவு கூறலாகவே இருக்கும்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை

மக்களுக்காக மரணித்த மாவீரர்களுக்கு ஒருமுறை தானும் அஞ்சலி செய்யாத அர்யூன் அவர்கள்

இவர்களுக்கு அஞ்சலி செய்வது

வெறும் பழிவாங்கலின் இன்னொரு சாட்சி  மட்டுமே...

Edited by விசுகு

  • தொடங்கியவர்

இதுவரை

மக்களுக்காக மரணித்த மாவீரர்களுக்கு ஒருமுறை தானும் அஞ்சலி செய்யாத அர்யூன் அவர்கள்

இவர்களுக்கு அஞ்சலி செய்வது

வெறும் பழிவாங்கலின் இன்னொரு சாட்சி  மட்டுமே...

முதலில் எமது போராட்டத்தில் நாம் விட்ட பிழைகளை அனைவரும் ஒப்புக்கொண்டு  அனைத்து போராளிகளுக்க்கும் நாம் அஞ்சலி செலுத்தும் நாள் வரட்டும் ..

 

மண்ணுக்காக அவர்கள் மட்டும் மரணிக்கவில்லை .

உங்களை மாதிரி படம் காட்ட எனக்கு தெரியாது .

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமது போராட்டத்தில் நாம் விட்ட பிழைகளை அனைவரும் ஒப்புக்கொண்டு  அனைத்து போராளிகளுக்க்கும் நாம் அஞ்சலி செலுத்தும் நாள் வரட்டும் ..

 

மண்ணுக்காக அவர்கள் மட்டும் மரணிக்கவில்லை .

உங்களை மாதிரி படம் காட்ட எனக்கு தெரியாது .

 

 

அப்படி  உண்மையிலேயே விரும்பினா?

ஊரெழுவில் புதைக்கப்பட்டவர்களிலிருந்து தொடங்கணும் அண்ணை.....

உந்தப்படம் காட்டுதல் யாழில் வேகாது

வேறு எங்காவது முயற்ச்சிக்கவும்...

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எழுதிய ஆயுத எழுத்து நூலில் இந்தப்படுகொலையைப் பற்றி ஒரு எழுத்துதானும் வரவில்லை. புளட்காரர்களும் ஒரத்தநாட்டில் சவுக்குத் தோப்பில் கொன்று புதைத்தவர்களைப் பற்றி நினைவுநாளும் கொண்டாடுவதில்லை. இன்னும் பத்து வருடத்தில் எல்லாக்கொலைகளும் புலிகளால்தான் மேற்கொள்ளப்பட்டன என்று வரலாறு எழுதப்படவும்கூடும்.

  • தொடங்கியவர்

கிருபன் ,

 

போராட்டத்தில் விட்ட பிழைகளை ஒப்புகொண்டு  அனைத்து போராளிகளுக்கும் அஞ்சலி என்றால் அதற்குள் ஒரத்தநாட்டில் நாட்டில் புதைக்கப்படவ்ர்களும் அடக்கம் .

 

நான் பேசுவது "தமிழ் மக்கள் " செய்ய வேண்டியது பற்றி, நீங்கள் சொல்வது உருவழிந்து புளொட் என்ற பெயரில் இருக்கும் நாலு ஆட்கள் பற்றி .

எஞ்சி இருக்கும் அந்த நாலு பெயர்களால் புதியதோர் உலகம் எழுதப்படவில்லை .அவர்கள் தாம் விட்ட பிழைகளை ஒப்புக்கொள்ளபோவதும் இல்லை .

அனைத்து இயக்கங்ககளில் இருக்கும் அந்த நாலு பேர்கள் பற்றி அக்கறைப்படதேவையில்லை .


அண்ணை ஊரேழுவில் என்ன நடந்து ?

 

யாழில நீங்கள் தான் பருப்போ ?

  • கருத்துக்கள உறவுகள்
மண்ணுக்காக அவர்கள் மட்டும் மரணிக்கவில்லை 

 

 

புளட் நிச்சயமாக மரணிக்கவில்லை.

 

 நாலு ஆட்கள் பற்றி 

 

 

இதை தானே அண்ணைக்கு பல மாதிரி விளங்கப்படுத்தியாச்சு. புலிகளில் உள்ள நாலு பேரால் செய்யப்பட்டவைகளுக்கு மிகுதிப்பேர் பொறுப்பு ஏற்ற முடியாது.

 

மேற்படி செய்தியை இணைத்த செய்தியின் மூலம் என்ன? அல்லது உங்களின் ஆக்கமா? செய்தி மூலம் குறிப்பிடப்படாத செய்திகள் நீக்கப்படும் என்பது களவிதிகளில் ஒன்று. நீங்கள் அறியாததும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

 அண்ணை ஊரேழுவில் என்ன நடந்து ?

 

யாழில நீங்கள் தான் பருப்போ ?

 

வேண்டுமென்று தான் எழுதினேன்

உண்மையைப்பேசும் அக்கறையிருந்தால்

அது உரும்பிராய் என்றிருப்பீர்கள்

அதை விடுத்து

என்னைக்கேலி  செய்வதனூடாக

தப்பிலிருந்து ஒழிக்கப்பார்ப்பீர்கள்

திசைதிருப்பப்பார்ப்பீர்கள் என்பது தெரியும்... :(  :(  :(

  • தொடங்கியவர்

வேண்டுமென்று தான் எழுதினேன்

உண்மையைப்பேசும் அக்கறையிருந்தால்

அது உரும்பிராய் என்றிருப்பீர்கள்

அதை விடுத்து

என்னைக்கேலி  செய்வதனூடாக

தப்பிலிருந்து ஒழிக்கப்பார்ப்பீர்கள்

திசைதிருப்பப்பார்ப்பீர்கள் என்பது தெரியும்... :(  :(  :(

நாட்டில் பிரச்சனை என்றவுடன் ஓடி வந்து வியாபாரம் தொடங்கிய அண்ணைக்கு போராட்டத்தில் நடந்த விடயங்கள் தெரிய நியாயம் இல்லை .யாழில் நீங்கள் வைக்கும் பதிவுகள் வாசித்துக்கொண்டே தான் வருகின்றேன் .

 

தேசியம் என்று படம் போட்டு பிழைக்கும் பல பேரை பார்த்துவிட்டோம் .

 

தெரியாது அல்லது பிழையாக எழுதிவிட்டேன் என்று உண்மை எழுதும் பக்குவம் முதலில் வரவேண்டும் .

அண்ணைக்கு உரும்பிராயும் தெரியாது ஊரேழுவும் தெரியாது என்றும் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணைப் படுகொலைகள் புலிகளின் தலைமைப் பீடத்தால் திட்டமிடப்பட்டோ அல்லது தலைமைபீடத்திற்குத் தெரிந்தோ நடந்ததாக அறியவில்லை. உங்கள் பதிவிலும் அப்படியில்லை. கிட்டுவின் மேலான விசுவாசத்தால் அருணா அவசரப்பட்டுச் செய்தது என்பதுதான் பொதுவான தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் பிரச்சனை என்றவுடன் ஓடி வந்து வியாபாரம் தொடங்கிய அண்ணைக்கு போராட்டத்தில் நடந்த விடயங்கள் தெரிய நியாயம் இல்லை .யாழில் நீங்கள் வைக்கும் பதிவுகள் வாசித்துக்கொண்டே தான் வருகின்றேன் .

 

தேசியம் என்று படம் போட்டு பிழைக்கும் பல பேரை பார்த்துவிட்டோம் .

 

தெரியாது அல்லது பிழையாக எழுதிவிட்டேன் என்று உண்மை எழுதும் பக்குவம் முதலில் வரவேண்டும் .

அண்ணைக்கு உரும்பிராயும் தெரியாது ஊரேழுவும் தெரியாது என்றும் தெரியும் .

 

 

முதலில் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள்

போராட்டத்தில் ஆயுதத்தை தூக்கிவர்கள் மட்டும் தான் என்றில்லை

அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள்

பங்களித்தவர்கள்

சாதாரண மக்கள் என்று பல பகுதிகளுண்டு

ஒரு போராட்டத்தை மதிப்பீர்களாக

ஒரு விடுதலை வேட்கையை மதிப்பவராக இருந்தால்..

இதனைப்புரிந்து நடப்பீர்கள்

இவ்வகையானவர்களையுமம் சேர்த்த நடக்கமுயல்வீர்கள்...

 

இவ்வாறு 30 வருடங்களுக்கும  மேலாக உழைத்தவர்களை 

தமது இன்னல்இகளுக்கும் நடுவில் போராட்டத்துக்கு துணையாக நின்றவர்களை

போற்றாது விட்டாலும் கேவலப்படுத்தமாட்டீர்கள்

இது தான் ஆகக்குறைந்த விடுதலை உணர்வு

அது என்னிடம் தாராளமாக உண்டு

நீங்கள் பூச்சியம்..

இப்பவாவது அது சுழிபுரம் அண்ணை என்றிருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணைப் படுகொலைகள் புலிகளின் தலைமைப் பீடத்தால் திட்டமிடப்பட்டோ அல்லது தலைமைபீடத்திற்குத் தெரிந்தோ நடந்ததாக அறியவில்லை. உங்கள் பதிவிலும் அப்படியில்லை. கிட்டுவின் மேலான விசுவாசத்தால் அருணா அவசரப்பட்டுச் செய்தது என்பதுதான் பொதுவான தகவல்.

இந்த கொலைவெறியாட்டத்தை நடத்தியவருக்கு அமைப்பு என்ன தண்டனை கொடுத்தது? மேஜர் எனும் பட்டத்தை தவிர? சந்தேகம் வந்தாலே கட்டித்தூக்கும் இயக்கம், தண்ணுள் இருந்த கறுப்பாட்டை ஏன் விட்டு வைத்தது.

இதற்கும் இலங்கை பொன்சேகாவை பீல்ட் மார்சல் ஆக்கி அழகு பார்பதற்க்கும் என்ன வித்தியாசம்?

நீங்கள் சொல்வது போல பதவி உயர்ந்திருக்கலாம் ஆனால் நிச்சயமாக கூலி கிடைத்திருக்காது

சரி கோசான் பொன்னருக்கு பீல்மாஷல் குடுத்தது ஏன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் கருணைப் படுகொலைகள் புலிகளின் தலைமைப் பீடத்தால் திட்டமிடப்பட்டோ அல்லது தலைமைபீடத்திற்குத் தெரிந்தோ நடந்ததாக அறியவில்லை. உங்கள் பதிவிலும் அப்படியில்லை. கிட்டுவின் மேலான விசுவாசத்தால் அருணா அவசரப்பட்டுச் செய்தது என்பதுதான் பொதுவான தகவல்.

 

இந்த தாக்குதல் நடத்திய அருணாவுக்கு தண்டனை கொடுத்ததாக அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலைவெறியாட்டத்தை நடத்தியவருக்கு அமைப்பு என்ன தண்டனை கொடுத்தது? மேஜர் எனும் பட்டத்தை தவிர? சந்தேகம் வந்தாலே கட்டித்தூக்கும் இயக்கம், தண்ணுள் இருந்த கறுப்பாட்டை ஏன் விட்டு வைத்தது.

இதற்கும் இலங்கை பொன்சேகாவை பீல்ட் மார்சல் ஆக்கி அழகு பார்பதற்க்கும் என்ன வித்தியாசம்?

அருணாவுக்கு மேஜர் பதவி கொடுக்கப்பட்டது 1986ல் இந்தியாவில் இருந்து திரும்பி வரும்போது இலங்கை கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடந்ததாக நம்பப்பட்டு இப்பதவிநிலை கொடுக்கப்பட்டது.ஆனால் இவர் கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ் கோட்டை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.1987ல் கைதிகள் கைதிகள் பரிமாற்றத்தின் போது அருணாவுடன் காமினி என்ற போராளியும் விடுதலை செய்யப்பட்டனர்.காமினி சிறிது காலத்தில் இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்தார்.இதன் பின்னரான காலத்திலேயே கந்தன்கருணை சம்பவம் இடம்பெற்றது.இந்திய இராணுவத்தடனான மோதலில் இவர்கொல்லப்பட்டபோது.புலிகளால் எந்த பதவி நிலையும் வழங்கப்படவில்லை ,மாவீரர் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி நந்தன். இது நீங்கள் சொல்வதால் உறுதிப்படுத்த பட்ட தகவல் என கருதுகிறேன்.

ஆத்திர மிகுதியால் 59 கைதிகளை கொன்றவருக்கு பதவி இறக்கம் மட்டும் போதுமான தண்டணையாக எனக்குத்தெரியவில்லை.

நாளைக்கு சவேந்திர சில்வாவை மற்றும் தளபதிகளை ஒரு சிப்பாய் என்று அறிவித்து விட்டால் - நாம் போர்குற்ற விசாரணையை கைவிட்டு விடுவோமா?

சேவயர் - இதில என்ன இருக்கு எல்லாம் அரசியல் பம்மாத்து. பொன்னருக்கு சிங்கப்பூர் ஒப்பரேசனிலயே எல்லா பதக்கங்களையும் கழட்டியாச்சு. இனி செத்த கிழிக்கு சிங்காரம் பண்ணும் கதைதான் :)

சேவயர் - இதில என்ன இருக்கு எல்லாம் அரசியல் பம்மாத்து. பொன்னருக்கு சிங்கப்பூர் ஒப்பரேசனிலயே எல்லா பதக்கங்களையும் கழட்டியாச்சு. இனி செத்த கிழிக்கு சிங்காரம் பண்ணும் கதைதான் :)

சரியாக சொன்னீர்கள், என்னும் உள்ளே சென்று பாத்தால் அவரை தொடர்ந்தும் சாகடிப்பது விளங்கும்

  • தொடங்கியவர்

கிட்டுவிற்கு குண்டு எறிந்ததற்காக (தீப்பொறி ) அறுபது கைதிகளாக இருந்த அறுபது பேர்கள் வரை கொன்றவருக்கு மாவீரர் பட்டம் கொடுக்கவில்லையாம் ,

 

விபுசாவின் தாயாரை அரசு விடுதலை செய்ததற்கு இங்கு பலர் கொடுத்த வியாக்கியானம் தான் நினைவு வருகின்றது .

 

கந்தன் கருணை நான் எழுதிய கிரிக்கெட் பைத்தியம் வரும் பயிற்சியாளரின்(அத்தான் )  தம்பியின் வீடு .அந்த மேல்வீட்டை அடாவடித்தனமாக எடுத்து வைத்திருந்தார்கள் .அருணா அறுபது பேரை சுட்டது அந்த வீட்டில் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் அர்ஜூனின் கோபத்தை நாம் புலி எதிர்ப்பாகப் பார்க்காமல் நியாயமான ஒன்றாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்பது என் கருத்து! ஒரு ரூபாய் கணக்கில் குறைந்தாலே பங்கரில் போடும் அளவு கட்டுப் பாடு கொண்ட புலிகள், அருணாவுக்கு இந்த ஈனச் செயலுக்காகத் தண்டனை கொடுக்காதது தவறு!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் அர்ஜூனின் கோபத்தை நாம் புலி எதிர்ப்பாகப் பார்க்காமல் நியாயமான ஒன்றாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்பது என் கருத்து! ஒரு ரூபாய் கணக்கில் குறைந்தாலே பங்கரில் போடும் அளவு கட்டுப் பாடு கொண்ட புலிகள், அருணாவுக்கு இந்த ஈனச் செயலுக்காகத் தண்டனை கொடுக்காதது தவறு!

அருணா புலிகளால் தண்டிக்கபட்டார் தளபதி நிலையில் இருந்தவரை போராளியே இல்லாது ஆக்கினார்கள்.
அருணா மாவீரர் பட்டியலிலேயே சேர்க்க படவில்லை.
அவரையும் சுட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் கூறலாம் ....
ஆம் சுடிருக்கலாம் ....... உங்களை எப்போதும் உங்கள் அம்மா பாதுகாக்கத்தான் செய்வார்.
 
இதை மாற்றி மாற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.
 
அங்கே 28 பேர் இருந்தார்கள் எனபதை புலிகள்தான் வெளிபடுத்தினார்கள்.
அது ஒரு அவாமான செயல் என்பது புலிகள் ஏற்றுக்கொண்டார்கள்.
 
 
ஓநாய்களின் ஊளையிடுவது .....
இதுதான் முதல் தடவை அல்ல 
அவர்களுக்கு இவர்கள் உயிர் முக்கியமல்ல .... இவர்கள் உயிரை மதித்திருந்தால் இந்திய இராணுவத்துடன் வந்து அப்பாவி இளைஞர்களை 
கேவலாமாக கொன்று இருக்க மாட்டார்கள்.
இவர்களுக்காக் கடந்த 28 வருடத்தில் இந்த ஓநாய்கள் செய்தது என்ன ?
 
இந்த ஓநாய்களின் கவனம் எல்லாம் மாவீரர் நாளில்தான் 
அதை எய்த்துபோக செய்து ஒரு விஷ நாளை உருவாக்க வேண்டும் என்பதுதான் 
ஓநாய்களின் நீலி கண்ணீர்.
கார்த்திகை 27இல் தாயக கனவுடன் இறந்த அனைத்து போராளிகளையும் மக்களையும் நினைவு கூறிய தமிழன் வருகிறான்.
1989இல் தலைவர் யாவருக்குமகவே பொதுநாளாக அதை அறிவித்து மாவீரர் அறிக்கையும் விட்டார்.
எனது சகோதரர் ஒருவரின் (டெலோ) நினைவாகவே நான் மாவீரர் நாளுக்கு செல்வதுண்டு 
பின்பு போர்தொடர பல உறவுகள் ஒன்றாக படித்த நண்பர்கள் என்று இப்போ பல நூறு பேர்கள். 
 
முதலில் ஓநாய்கள் ......
உமாமகேஷ்வரன் தாட்டவர்கள்  உமாவை தாட்டவர்கள்  உமாவை தாட்டவர்களை தாட்டவர்கள் 
எல்லோருக்குமாக முதலில் ஒரு பொது அஞ்சலியை செய்ய சொல்லுங்கள்.
அந்த பட்டியலை முதலில் வெளியிட்டு பகிரங்கமாக அறிவிக்க சொல்லுங்கள்.
மற்றதை மக்கள் செய்வார்கள்.
 
மக்களுக்கு நாட்டில் என்ன நடந்தது என்பது தெரியும்.
மக்கள் சோபா சுத்தியின் புத்தகம் படித்து தெரிந்துகொள்ள தேவையில்லை 
எல்லாம் அவர்கள் கண்முன்தான் நடந்தது.
புலிகள் விட்ட பிழைகள் காரணங்கள் மக்களுக்கு தெரியும் 
ஓநாய்கள் ஊளையிட்டு யாரும் ஏதும் அறிந்ததாக 30 வருடத்தில் ஒன்றும் இல்லை.
 
நாளைக்கு இன்னொரு திரியில் ஓநாய்கள் வந்து எழுதும் ...
மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் மக்கள் முடிவெடுப்பார்கள் என்று.
அப்ப பொத்திக்கொண்டு இருக்கலாமே ......?
மக்கள் முடிவு எடுப்பர்கள்தானே.
 
40 ஆயிரம் தன்னலமற்ற தமிழ் உயிர்கள் தங்கள் உதிரத்தால் வரைந்த 
புலிக்கொடியையும் ........
அவர்கள் நினவு நாளையும் இல்லாது போக செய்ய இந்த ஓநாய்கள் ஊளையிடுவது.
உங்களுக்கு புரியாமல் இருப்பது வேடிக்கை.
 
இந்த ஓநாய்களை நாங்கள் பக்கத்தில் படுத்திருந்து பார்த்தவர்கள்.
ஊளை இடுவது  தமிழனிடம் சுட்டு பறிப்பது தவிர்த்து 
இதுவரை செய்தது என்று ஏதும் இல்லை.
வவுனியா மண்ணில் தமிழின் இரத்த வாசம் இன்னமும் உறைந்து கிடக்கிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மருது

நான் நேரத்தை மிச்சப்படுத்த உதவியமைக்கு......

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
ஓநாய்கள் ஊளையிட போகுது என்றால் 
ஒரு 8 ஓநாய் கூடும் ......
முகத்திற்கு நேரே வந்து கேட்கிறது என்று முகம் சுழிக்காமல் ஒன்னுமொரு 4 பேர்கள் போவார்கள் 
14 பேர்கள் மேல் கூடி இதுவரை ஓநாய்கள் ஊளையிடுதலை கேட்க யாரும் போனதில்லை.
 
16 பேருக்கு மேல் என்றால் ...
அங்கே புலிக்கொடி வேண்டும்.
இது நிதர்சனம்.
இதை ஓநாய்கள் புரிந்து கொள்ள இன்னும் 60 வருடம் தேவை.
 
சுவிசில் வீரமக்கள் தினத்திற்கு நண்பர்களுடன் 5 பேருடன் 
3வருடங்கள் போயிருக்கிறேன்.
நல்ல ரோல்  டீ குடிக்க.
எல்லாம் ப்ரீ (நல்ல கஸ்டமர் செர்விஸ் )
 
(பாவி புலிகள் மாவீரர் நாளுக்கு போனால் எல்லாம் காசு)
  • கருத்துக்கள உறவுகள்

:D தலை இடிக்குது மருது வாசிச்சு! மேலே கோசான் கூறியிருக்கும் ஒப்பீட்டைப் பார்த்தீர்களா? புலிகளின் மற்றைய தண்டனைகளைக் கருத்தில் எடுத்தால் அருணாவுக்குக் கிடைத்தது மயிலிறகால் அடிப்பது போல இல்லையா? சில சமயங்களில் தவறுகளை ஏற்றுக் கொள்வது தான் நாற்பதினாயிரம் பேருக்குச் செய்யும் கௌரவமாக அமையும் என நினைக்கிறேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.