Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 4


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்   படிப்போம் தமிழ் படிப்போம் 4

வணக்கம் வணக்கம் வணக்கம்

தமிழ்மொழி எத்தனை முறை படித்தாலும் கசக்காது.
ஒவ்வொருமுறை படிக்கும்போதும் நாங்கள் புதிதாக எதாவது கற்றுக்கொள்ளலாம்.
இன்றிலிருந்து நாலாவது பகுதி ஆரம்பிக்கின்றது.

இப்போது நாங்கள் விரிவாக ஆராய்ந்து படிக்க இருப்பது வினைச்சொற்கள்.
வினைச்சொற்கள் எப்போதும் ஒரு செயலை அல்லது தொழிலை அல்லது இயக்கத்தை  உணர்த்தி நிற்கும்.

அதாவது வினைச் சொற்கள் ஒரு பொருளின் இயக்கத்தை உணர்த்தி நிற்கும்என்றும் கூறலாம்.

அடுத்து வினைச்சொற்கள் காலத்தை உணர்த்தி நிற்கும்.

இந்த வினைச்சொற்கள் ஒருபோதும் வேற்றுமை உருபை ஏற்காது.
 வினைச்சொற்களின் இயல்புகள் இவை.

வினைச்சொற்களும் பலவகைப்படும்.

இயற்கையாக ஒரு பொருளை உணர்த்தி, படிப்பவர்களுக்கு இலகுவாக விளக்கம் தரும் சொல்லை  வினை இயற்சொல் என்பர்.
உதாரணமாக வந்தான், சிரித்தான், படித்தாள், பறந்தது என்னும் வினைச்சொற்கள் இலகுவாக எல்லோராலும் விளங்கக்கூடிய  சொற்கள் ஆகும்.

ஆனால் சில வினைச்சொற்களை எல்லோராலும் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாது.

விளித்தான் என்பது ஒரு வினைச்சொல், இதன் பொருளை உடனடியாக எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடியுமா என்றால் இல்லையென்றே சொல்லலாம். ஆகவே பொருள் விளங்காதவர்கள் அதன் பொருள் விளங்கியவர்களைக் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும்.
விளித்தான் என்பதன் பொருள் அழைத்தான் என்பதாகும்.

அதேபோல புசித்தாள் என்பதும் ஒரு வினைச்சொல். இதன் பொருளும் எல்லோருக்கும் உடனே விளங்காது.அதன் பொருள் உண்டாள் என்பதேயாகும் .
இப்படி எல்லோராலும் உடனே விளங்கிக்கொள்ள முடியாத வினைச்சொல்லை வினைத் திரிசொல் என்பர்.

இந்த வினைத் திரிசொல் இரண்டு வகைப்படும்

1.ஒரு பொருள் குறிக்கும் பல வினைத் திரிசொல்

உதாரணம்
உணவை உண்டான்  என்பதற்குப்  பல வேறு வினைச் சொற்கள் உள்ளன.
அயின்றான்,மாந்தினான்,புசித்தான் என்பன அவையாகும்.
இவற்றையும் எல்லோராலும் எளிதா விளங்கிக்கொள்ள முடியாது.

2. பல பொருள் குறிக்கும் ஒரு வினைத் திரிசொல்

ஒரு வினைச் சொல் சில சந்தர்ப்பங்களில் பல பொருளை உணர்த்தி நிற்கும்.
உதாரணம் வரைந்தாள் என்ற வினைச்சொல்லுக்கு எழுதினாள், திருமணம் செய்தாள், மாற்றினாள், உறுதி செய்தாள் எனப் பொருட்கள் உள்ளன.


முற்றுப்பெற்ற வினைச் சொற்களை வினைமுற்று என்பர்.
உதாரணம்
வந்தான்,வருவான்,வருகின்றான்என்பன.

முற்றுப்பெறாத வினைச்சொற்களை வினையெச்சம் என்பர்.
உதாரணம் வந்து, சென்ற, வீழ்ந்த என்பன.

முதலில் வினைமுற்றுக்களைப்  பற்றிப் பார்ப்போம்




1.தெரிநிலை வினைமுற்று  
2.குறிப்பு வினைமுற்று  


வினை, குறிப்பு என்று தொல்காப்பியர் குறிப்பிட்ட இருவகை வினைச்சொற்களைப் பிற்கால இலக்கண ஆசிரியர்கள் முறையே தெரிநிலை வினை, குறிப்பு வினை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று .
உதாரணம்
நடந்தான், நடக்கின்றான், நடப்பான்  

பொருளை அல்லது பண்பை வெளிப்படுத்தும் பெயர்ச்சொற்களை ஆரம்பமாகக் கொண்டு தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாமல்  குறிப்பால்  காலத்தைக் காட்டும் வினைகளை
குறிப்பு வினைமுற்று  என்பர்.

உதாரணம்

 

அவன் இனியன் என்ற தொடரில் இனியன் என்பது வினைச்சொல். ஆனால் இங்கு காலமோ தொழிலோ வெளிப்படையாகத் தெரியவில்லை.
அவன் இனிய பண்பை உடையவனாக வாழ்ந்தான் , வாழ்கின்றான் வாழ்வான் எனக் குறிப்பால் மட்டுமே காலத்தைக் காட்டுகின்றன.

பொருளையோ பண்பையோ உணர்த்தாத குறிப்பு வினைகளும் உண்டு.
இலன்,  அல்லன்,  இலர் போன்றவை அதற்கு உதாரணம்.

வினைச் சொற்களை இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் படிப்போம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ்   படிப்போம் தமிழ் படிப்போம் 4

வணக்கம் வணக்கம் வணக்கம்

1.தெரிநிலை வினைமுற்று  

2.குறிப்பு வினைமுற்று 

 

வணக்கம். உள்ளேன் ஐயா!

 

 

'முற்று' என ஏன் குறிக்கிறார்கள் ஐயா? :huh:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றுப்பெற்ற வினைச் சொற்களை வினைமுற்று என்பர்.

 

உதாரணம்
வந்தான்,வருவான்,வருகின்றான்என்பன.

முற்றுப்பெறாத வினைச்சொற்களை வினையெச்சம் என்பர்.
உதாரணம் வந்து, சென்ற, வீழ்ந்த என்பன.

முதலில் வினைமுற்றுக்களைப்  பற்றிப் பார்ப்போம்
 

Link to comment
Share on other sites

வணக்கம் ஐயா.. நானும் வந்துவிட்டேன்..! :D

வினைச்சொற்களில் திணை, பால், எண், இடம், காலம் என்று இருக்கே.. இவற்றையும் படிப்பிப்பீர்களா ஐயா?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையவர்கள் பலரைக் காணவில்லை. குழப்படி செய்யும் புதிய மாணவர்கள் வருகிறார்கள் போல. சகாரா எங்கே?வாரும் வகுப்புக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐயா.. நானும் வந்துவிட்டேன்..! :D

வினைச்சொற்களில் திணை, பால், எண், இடம், காலம் என்று இருக்கே.. இவற்றையும் படிப்பிப்பீர்களா ஐயா?? :D

 

திணை , பால், இடம் இல்லாமல் ஏதையா தமிழ்மொழி.

இருக்கு இருக்கு..  கட்டாயம் வரும் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையவர்கள் பலரைக் காணவில்லை. குழப்படி செய்யும் புதிய மாணவர்கள் வருகிறார்கள் போல. சகாரா எங்கே?வாரும் வகுப்புக்கு.

 

இந்த வகுப்பில் புதிய மாணவர்களைப் பழைய மாணவர்கள்

பகிடி வதை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அப்படி ஏதும் நடந்தால் மேசை மீது முழங்காலில் நிற்க வேண்டும். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வகுப்பில் புதிய மாணவர்களைப் பழைய மாணவர்கள்

பகிடி வதை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அப்படி ஏதும் நடந்தால் மேசை மீது முழங்காலில் நிற்க வேண்டும். :D:lol:

 

பெண்களுக்கு ஏதும் சலுகை உண்டா ???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வகுப்பில் புதிய மாணவர்களைப் பழைய மாணவர்கள்

பகிடி வதை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

அப்படி ஏதும் நடந்தால் மேசை மீது முழங்காலில் நிற்க வேண்டும். :D:lol:

 

முழங்கால் ஆபரேசன், செய்த முதியவர்களுக்கும்..... இந்த தண்டனை உண்டா... ஐயா ? :o  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் ஏற்கனவே வீட்டுப்பாடம் செய்யேல்லை என்று நீங்கள் தலைமை ஆசிரியரிடம் அனுப்பியபோது அவர் என்னை முழங்காலில் நிற்கவைத்து தண்டனை கொடுத்தார் அதனால் என் முழங்கால்கள் இரண்டும் கருமை படர்ந்து காய்த்துப்போயுள்ளன. இமமுறை எங்கள் அழகு குலையாமல் வேறு ஏதாவது தண்டனை தாருங்கள்... சேர் எங்களால் பகிடி பண்ணாமல் இருக்கமுடியாதே...என்ன செய்ய?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.தெரிநிலை வினைமுற்று

 

காலத்தைத் தெளிவாகக் காட்டுவது தெரிநிலை வினைமுற்று என்று படித்தோம்.
இன்னும் சற்று ஆழமாக நோக்கினால் தெரிநிலை வினைமுற்று காலத்தை மட்டும் உணர்த்தாமல் செய்யப்படும் செயலின் பல முதல் நிலைகளைக் காட்டும்.

 

இந்த முதல் நிலைகள் எட்டுவகைப்படும்.

 

அதாவது உழவன்  வயலை உழுதான் என்ற தொடரில் உழுதான்  என்பது தெரிநிலை வினைமுற்று.

இங்கே
1.வினை
2. வினை முதல்
3. செயப்படுபொருள்
4.நிலம்
5. காலம்
6.கருவி
7.இன்னதற்கு
8. பயன்
ஆகிய எட்டு முதல் நிலைகளையும் உழுதான் என்ற வினை முற்றுக் காட்டி நிற்கின்றது.

எப்படி எனக் கேட்டால்
உழுதான் என்ற தெரிநிலை வினைமுற்றை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

 

1. உழுதல் ஒரு செயல் அதாவது வினை
2.உழுபவன் யார்?  உழவன் -  செயலைச்  செய்பவன்-அதாவது  வினைமுதல்
3.என்ன செய்யப்படுகின்றது - மண் பதப்படுகின்றது இது செயப்படுபொருள்
4.எங்கே உழப்படுகின்றது ? வயலில்- இது நிலம்
5.  உழுதான் என்றால் இறந்த காலம் உழுவான் என்றால் எதிர்காலம் -காலம்  
6.  எதனால் உழுதான்?  கலப்பை அதற்கு உதவியாக எருதுகள் - ஆகவே கருவி
7.எதற்காக உழுதான் - பயிர் செய்வதற்காக உழுதான் - இன்னதற்காக
8. உழுவதால் என்ன பயன் - கூலி கிடைக்கும் அல்லது  வருமானம் கிடைக்கும் அதாவது  பயன்

 

இப்படி உழுதான் என்ற தெரிநிலை  வினைமுற்று பல விளக்கங்களைத் தருகின்றது.

ஆகவே உங்களுக்கு இப்போது தெரிநிலை வினைமுற்று எந்தளவிற்கு
ஒரு செயலை விளக்கமாக உணர்த்தி நிற்கும் என விளங்கியிருக்கும்
என நினைக்கின்றேன்.

 

 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் வாத்தியார்,
இடம் பெயர்ந்து வந்தோர் பட்டியலில் இருந்து இன்னும் ஒரு புதிய மாணவன்.
கடைசி பென்ஜில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது, நன்றி.
வகுப்பை 'கட்' பண்ணாமல் வருவதற்கு முயற்சி செய்கிறேன்...
 
வந்த முதல் நாளே உங்களிடம் இரு கேள்விகள். (உதவிகள்)
 
1. புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் (தமிழ் பேச மாட்டாத) குழந்தைகள் அடிப்படையாக தெரிந்து வைத்து இருக்கவேண்டும் என நீங்கள் நினைக்கும் (தமிழ் மூலம் உரையாடல்) கேள்விகள் , பதில்கள் எவை? Basic Tamil.
உதாரணம் - உங்கள் பெயர் என்ன? நீங்கள் எந்த பாடசாலையில் படிக்கிறீர்கள்? உங்கள் அப்பா எங்கே வேலை செய்கிறார்? இன்று என்ன கிழமை?... 
(பரீ ட்சார்த்தமாக என் குழந்தைகளுக்கு இவற்றை சொல்லிதர நினைக்கிறேன்) உங்கள் உதவி தேவை.
 
2. இங்கு வளரும் தமிழ் பேச முடியாத குழந்தைகள் (அடிப்படையாக) தெரிந்து வைத்து இருக்க வேண்டிய சொற்கள், சொற்றொடர்கள் எவை?
உதாரணம் - பால், பாடசாலை, உறவு முறைகள், ...
 
என்னுடைய கேள்விகளுக்கு இந்த வகுப்பில் ஆர்வத்தோடு வந்து பயிலும் மூத்த மாணவர்களும் பதில் தராளாம் ... வாத்தியார் கோவிக்க மாட்டார்.
 
(வாத்தியார் உங்கள் வகுப்பை குழப்பியதாக நினைக்க வேண்டாம் தமிழ் பயில்வது சம்மந்தமான கேள்விகள் என்றபடியினாலும் நீங்கள் எங்கள் வாத்தியார் என்ற  உரிமையிலும் இங்கே இதை பதிந்துள்ளேன்)
 
  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரே பிள்ளையுடன் தினமும் உரையாடுவதன் மூலம் தமிழைப் பயிற்றுவிக்கலாம். பிள்ளையுடன் சேர்ந்து ஒவ்வொன்றையும் செய்யும் போது அது எதுவானாலும் சரி தாயோ தந்தையோ பிள்ளையுடன் தமிழில் உரையாடுவது  முதல் பாடமாகிறது. வீட்டில் உள்ள பொருட்களை, அந்தப் பொருட்களுக்குரிய நிறங்களை, அதன் எண்ணிக்கையை என்று காட்சியுடன் நாம் அறிமுகம் செய்யும் போது அது பிள்ளையின் மனதில் இலகுவாகப் பதிந்து விடும். எடுத்துக்காட்டு மரக்கறிகள், பழங்கள், பொருட்கள், தளபாடங்கள், உணவுகள், செயல்கள், உறவுமுறை,  எல்லாமே பிள்ளையிடம் இலகுவாகச் சென்றடையக் கூடியன.

 

ஆரம்பத்தில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள் 18, ஆய்த எழுத்து 1 - மொத்தம் 49 எழுத்துக்களை மாத்திரம் அறிந்திருந்தால் போதுமானது. இவற்றை மட்டும் தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ அட்டவணையாகத் தயாரித்துப் பிள்ளையின் கண்முன்னே படும்படி வைத்தாலே அவை பிள்ளையின் மனதில் பதிந்துவிடும்.

 

முக்கியமாகப் பிள்ளைக்கு ஒரு சொல்லையோ அல்லது எழுத்தையோ அறிமுகம் செய்யும் போது சரியான பலுக்குதல் அவசியம்.

 

ஆரம்பத்தில் ட ப ம போன்ற இலகுவான எழுத்துக்களை அறிமுகம் செய்து படிப்படியாக மற்றைய சொற்களை அறிமுகப்படுத்தலாம். தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினரின் நூல்களை வாங்கிப் பயன்படுத்தினால் அவை உங்களுக்கு இலகுவாகவே வழிகாட்டக் கூடியது. 


வாத்தியார்! தெரிநிலை வினை முற்றை அறிந்து கொள்வதற்கு கட்டாயம் இந்த எட்டு நிலைகளையும் அறிந்திருக்கத்தான் வேண்டுமா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்! தெரிநிலை வினை முற்றை அறிந்து கொள்வதற்கு கட்டாயம் இந்த எட்டு நிலைகளையும் அறிந்திருக்கத்தான் வேண்டுமா ??

 

இல்லை, யாரும்  தெரிந்திருக்காவிட்டாலும்  தெரிநிலை வினைமுற்று அவைகளைக் காட்டி நிற்கும்

வகுப்பிற்கு வருகை தந்த தமிழ் சிறி அண்ணை, வல்வை அக்கா

(சரி முழங்கால் தண்டனை வாபஸ்)   :D

மற்றும் சசி அனைவருக்கும் வணக்கம்.

 

Link to comment
Share on other sites

இல்லை, யாரும்  தெரிந்திருக்காவிட்டாலும்  தெரிநிலை வினைமுற்று அவைகளைக் காட்டி நிற்கும்

வகுப்பிற்கு வருகை தந்த தமிழ் சிறி அண்ணை, வல்வை அக்கா

(சரி முழங்கால் தண்டனை வாபஸ்)   :D

மற்றும் சசி அனைவருக்கும் வணக்கம்.

 

 

நான் பாஞ் உள்ளேன் ஐயா....  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாபஸ்சை வாபஸ் வாங்குங்கோ வாத்தியார்,.. விசயம் புரியாமல் ஆபத்துக்களுடன் (பன்மை) விளையாடாதையுங்கோ...! பிறகு வருத்தப் படுவீங்கள்...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ, வாத்தியார்..

குறிப்பு வினைமுற்று பற்றிய விளக்கம் எப்பொழுது வரும்? :o

 

 

("ஸ்.ஆ..! வாத்தியார், பின் வாங்கிலிருந்து யாரோ நுள்ளுறாங்கள்..!!  யாரென்று கவனியுங்கள்." :( .)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு வினைமுற்று

பொருளை அல்லது பண்பை வெளிப்படுத்தும் பெயர்ச்சொற்களை ஆரம்பமாகக் கொண்டு தொழிலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாமல்  குறிப்பால் காலத்தைக் காட்டும் வினைகளை
குறிப்பு வினைமுற்று  என அழைப்பர்  என முன்னர் படித்தோம்.

உதாரணமாக
 ஓவியன் இனியன் என்ற தொடரில் இனியன் என்ற சொல் குறிப்பு வினைமுற்றாகும். இங்கே காலம் வெளிப்படையாகத் தெரியவில்லை.
தொழிலும் தெரியவில்லை.இனிமை என்ற பண்பு தெரிகின்றது.

 

ஆனால் ஓவியன் ஒருகாலத்தில் இனியவனாக இருந்தான். அல்லது இப்போது இனிமையானவனாக இருக்கின்றான் அல்லது  இனிமேலும் இனிமையானவனாக   இருப்பான் என்று சற்றுப் பின்னர் எங்களால் விளங்கிக்கொள்ள முடிகின்றது. இப்படிச் செய்பவனை முன்னிறுத்தி மற்றையவற்றைக் குறிப்பால் உணர்த்துகின்றது.


இவை ஆறுவகையான பெயர்களின் அடிப்படையில் உருவாக்கப்படும்.

1. பொருட்பெயர்- அவன் அமுதன்
2. இடப்பெயர்-  முருகன் கதிர்காமத்தான்
3. காலப்பெயர்- வேலன்  கார்த்திகையான்
4. சினைப்பெயர்- தலைவன்  செங்கண்ணன்
5. பண்புப்பெயர்- எழிலன் இனியன்
6. தொழிற்பெயர்- கமல் நடிகன்

இவ்வாறு குறிப்பு வினைமுற்று ஆறு வகையான பெயர்களை முன்னிறுத்திப் பிறக்கின்றன.

Link to comment
Share on other sites

வினை தீர்ப்பவன் முருகன், வினை அறுப்பவன் வேலன் என்றுதான் சைவப்பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லித்தந்தவர். ஆனால் வாத்தியார்... நீங்கள் முருகவேலன் வினையை முற்றவைப்பதாகச் சொல்லித்தருகிறீர்கள். வினையை முற்றிப் பழுக்கவைத்தால் இனிக்குமா...??  :D  :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினை தீர்ப்பவன் முருகன், வினை அறுப்பவன் வேலன் என்றுதான் சைவப்பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லித்தந்தவர். ஆனால் வாத்தியார்... நீங்கள் முருகவேலன் வினையை முற்றவைப்பதாகச் சொல்லித்தருகிறீர்கள். வினையை முற்றிப் பழுக்கவைத்தால் இனிக்குமா...??  :D  :lol:  

 

பழுக்க வைச்சுப் பாக்கிறதுதானே பாஞ்ச

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்தான் வன்னியனை பிஞ்ச் பண்ணியிருக்கின்றார். அதுதான் இடக்கு முடக்காய் கேள்வி கேட்டு சமாளிக்கின்றார்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர் வரவிற்கும் நன்றியும் வணக்கமும் உரித்தாகுக


அடுத்து நாங்கள் படிக்க இருப்பது வியங்கோள் வினைமுற்று


வியங்கோள் வினைமுற்று

வினைமுற்றுக்களில் இன்னொன்று வியங்கோள் வினைமுற்று
இவை வாக்கியங்களில் நான்கு விதமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

 பொருள் ஒன்றை  
1)வாழ்த்தும் போதும்
2)திட்டும்போது

பொருள் ஒன்றிற்குக்
3)கட்டளையிடும் போதும்

எதாவதை யாரிடமாவது
4)வேண்டி அல்லது
யாசித்து நிற்கும் போதும்
வியங்கோள் வினைமுற்றை வாக்கியங்களில் பயன்படுத்தலாம்.

உதாரணமாக
மன்னன் வாழ்க
குடி உயர்க
தலைவன் வெல்க
என்ற தொடர்களில்  வாழ்க, உயர்க, வெல்க ஆகிய வியங்கோள் வினைமுற்றுக்கள் 

மன்னனையும் குடியையும் தலைவனையும் வாழ்த்தி நிற்கின்றன.

இதேபோல
வீழ்க, ஒழிக, அழிக போன்ற சொற்கள் திட்டுவதற்கு அல்லது

யாரையாவது வையும் போது பயன்படுத்தப்படுகின்றன.

உண்க , அமர்க ,வருக , அருந்துக , போன்ற சொற்கள்

யாருக்காவது கட்டளையிடும் போது பயன்படுத்தப்படுகின்றன.

தருக , புரிக , இடுக போன்ற சொற்கள் எதையாவது 

வேண்டி நிற்கும்போதும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆகவே வியங்கோள் வினைமுற்றுக்கள்
வாழ்த்தல், வைதல் , விதித்தல் , வேண்டுதல் என்ற நோக்கில்

வாக்கியங்களில் பயன்படுகின்றன.

 
 

Link to comment
Share on other sites

பாஞ்ச்தான் வன்னியனை பிஞ்ச் பண்ணியிருக்கின்றார். அதுதான் இடக்கு முடக்காய் கேள்வி கேட்டு சமாளிக்கின்றார்...! :)

 

'விநாயகனே வினை தீர்ப்பவனே!' சுவி, நீங்கள் வாத்தியாரையும் தெய்வத்திற்குச் சமமாக மதிக்கவேண்டும். வாத்தியாரும் எங்கள் வினைதீர்க்கவே வினைபற்றிப் பாடம் நடத்துகிறார். குழப்படி கூடாது. கைகட்டி, வாய்பொத்திப் பக்குவமாக பக்தியோடு கேட்கவேண்டும். இல்லையென்றால் வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்திவிடுவேன். நான்தான் மொனிற்றர். நினைவிருக்கட்டும். <_<  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வகுப்பில இருக்கிறன் வாத்தியார். ஆனால் என்னைக் கேள்வி மட்டும் கேட்டுவிடாதைங்கோ வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்... இஞ்ச பாருங்கோ....
என்ரை மேசையில, ஆரோ... "ஐ லவ் யூ"  என்று எழுதியிரிக்கினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.