Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் காட்டுசட்டத்தை அமுல்படுத்த முடியாது - வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

Featured Replies

LTTE_CI.jpg

 நாட்டுக்கு என்று ஒரு சட்டம் இருக்கு அதனைவிடுத்து காட்டுசட்டங்களை அமுல்படுத்த முடியாது என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில், யாழில் தற்போது வாள்வெட்டு கலாச்சாரம் போதைப்பொருள் பாவனை என்பன அதிகரித்து காணப்படுகின்றது. அதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர் 

அத்துடன், விடுதலை புலிகள் காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் இல்லாமல் இருந்தது அதற்கு அவர்களின் கடுமையான சட்டங்களும் , தண்டனைகளுமே காரணம் எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் போதே சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வாள்வெட்டு கலாச்சாரம் போதைப்பொருள் விற்பனை என்பவற்றை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதற்காக நாட்டு சட்டங்களை மதிக்காது காட்டு சட்டங்களை அமுல்படுத்த முடியாது என தெரிவித்தார் 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119447/language/ta-IN/article.aspx

நீங்கள் தான் காட்டு மிருகங்கள் , மக்களை மக்களாக பார்க்க தெரியாத சிங்கள இனவாதிகள் . புலிகளின் ...... அதுக்கு நீங்கள் தகுதி ஆக மாட்டீர்கள் , 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தை அமுல்படுத்திட்டு அவர் என்ன செய்யுறது. வாங்கிற இலஞ்சம்.. கப்பம்.. இன்னும் இன்னும் இஸ்தியாதிகள் இல்லாமல் போயிடுமே. புலிகள் அமுல்படுத்திய காட்டுச் சட்டம்.. மக்களை அதிகம் பாதுகாக்கேக்க.. மக்கள் அதில் திருப்திப்பட்டு வாழ்ந்திருக்கினம் என்றால்..  மக்களைப் பாதுகாக்கத்தான் சட்டம் என்ற வகையில்.. காட்டுச் சட்டத்தை தமிழ் மக்கள்.. அமுல்படுத்த விட்டிட்டு.. இவர் சிங்கள மக்களுக்கு நாட்டுச் சட்டத்தை அமுல்படுத்தட்டும். மாதன முத்தாக்களை உருவாக்கி பாதுகாக்கட்டும். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கேட்பது மக்கள்

மக்கள் பிரதிநிதிகள்...

பதில்  சொல்கிறது

அவர்கள் எம்மவர்கள் அல்ல என்பதை....

ஒரு வளர்ச்சி அடையும். சமுதாயத்தில், வாள் வெட்டுக்கள், போதை பொருள் பாவனை, விபசாரம், சண்டியர்கள்.. இப்படி பல பிரச்சினைகள் இருக்கும். இதுக்கு உலகலாவியிரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அணுகு முறைகள், தண்டனைகள் உள்ளன.

பங்கருக்குள் போடுவதும், பச்சை மட்டை அடியும் ஆ ஊ எண்டால் மண்டையில் போடுவதும் காட்டுமிராண்டித்தனம்.

காட்டிக்கொடுப்பும், துரோகம், உள்கொலை, சுயஇனவெறுப்பு, விடுதலையில் அர்வம் இன்மை போன்ற பிரச்சினைகள் தலை தூக்க முக்கிய காரணம் இதுதான்.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

Panangkai நீங்கள் ஒரு திரியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து புகைப்பதை பற்றி விலாவாரியாய் எழுதியவர் இங்குள்ள சட்டங்களை மதியாதவர் புலியின் சட்டங்களை பற்றி கதைப்பது வேடிக்கையாய் உள்ளது . அதுக்கு ஓடிவந்து ஒருத்தர் பச்சை நடக்கட்டும்  :D

கஞ்சா வளர்ப்பதும் புகைப்பதும் ஐரோப்பிய , அமெரிக்க சட்டங்களால் அனுமதிக்கப்பட விடயம்.. முதலில் தனிமனித உரிமைகளை மதிக்கப்பழகுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா வளர்ப்பதும் புகைப்பதும் ஐரோப்பிய , அமெரிக்க சட்டங்களால் அனுமதிக்கப்பட விடயம்.. முதலில் தனிமனித உரிமைகளை மதிக்கப்பழகுங்கள்.

அமெரிக்காவில் கஞ்சா வளர்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.. கொலராடோ போன்ற சில மாநிலங்களில் மட்டும் மருத்துவ ரீதியில் கஞ்சா பொருள் அனுமதிக்கப்படுகிறது.

அட்லீஸ்ட் மருத்துவரீதியில் புகைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஹொலண்டில யாரும் புகைக்கலாம். மற்றைய நாடுகளிலும் தனிமனித பாவனைக்கு தண்டனைகள் இல்லை. அதிகளவு கையிருப்பு மற்றும் விற்பனைக்கு மட்டுமே தண்டம்.

அதை காட்டுமிறாண்டி சட்டங்களுடன் ஒப்பிடுவது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கஞ்சா வளர்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது..

 

புலியை தடை செய்தால் அதை வரவேற்போம் ....ஏனைய தடைகளுக்காக குரல் கொடுப்போம்

பாருங்கள்.

ஒரு சில பிழைகளை குத்திக்காட்டியவுடன் தமிழ் தேசியத்துக்கு எதிரானவனா சித்தெரிக்கிரீர்களே.. இதில் தன இருக்குது எமது பிரச்சினை.

சிங்கள போலீசிடம் போய் புலிகள் சட்டத்தை கேட்டவர் முதல் அறிவாளி. 

 

அந்த பதில் சரியில்லை என்று கருத்தெழுத மிச்ச அறிவாளி.

 

 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

அந்தகாலத்து சிங்களபொலிஸ் என்றால் பிடரியில் அடிபோட்டிருப்பார்கள்....இப்ப சிங்களபொலிஸ் ஜனநாயகத்தை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கினம் வாழ்க சிங்கள பொலிஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள போலீசிடம் போய் புலிகள் சட்டத்தை கேட்டவர் முதல் அறிவாளி. 

 

அந்த பதில் சரியில்லை என்று கருத்தெழுத மிச்ச அறிவாளி.

 

 

புலிகளது சட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் எவரிடமும் கேட்கவில்லை

அவர்களது காலத்தில் குற்றங்கள் இல்லாதிருந்தன.

இது தான் சாரம்

அதுவே உண்மையும் கூட.

 

சிங்கள சட்டங்கள் சரியன்று என்று அவர்கள் சொல்லவில்லை

அவற்றை அமுல்படுத்துங்கள்

மக்களது எதிர்கால நன்மைகருதி

புலிகளைப்போல அவற்றை அமுல்படுத்தங்கள் என்பதே வைக்கப்பட்ட வேண்டுகோள்

முறையீடுகளை வைத்தவர்கள் அதற்கு முகம் கொடுப்பவர்கள்.

அவர்களின் பிரதிநிதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான சட்டத்திற்கும் காட்டுச் சட்டத்திற்கும் வித்தியாசம் இருக்கும்.
காட்டு வாசிகளுக்குக் காட்டுச் சட்டம் தான் சரியாக வரும் :D

புலிகளது சட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் எவரிடமும் கேட்கவில்லை

அவர்களது காலத்தில் குற்றங்கள் இல்லாதிருந்தன.

இது தான் சாரம்

அதுவே உண்மையும் கூட.

 

சிங்கள சட்டங்கள் சரியன்று என்று அவர்கள் சொல்லவில்லை

அவற்றை அமுல்படுத்துங்கள்

மக்களது எதிர்கால நன்மைகருதி

புலிகளைப்போல அவற்றை அமுல்படுத்தங்கள் என்பதே வைக்கப்பட்ட வேண்டுகோள்

முறையீடுகளை வைத்தவர்கள் அதற்கு முகம் கொடுப்பவர்கள்.

அவர்களின் பிரதிநிதிகள்.

 

நீங்கள் அதையா சொல்லுறிங்க? நானும் எதோ இதையாக்கும் என்று நினைச்சிட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் வீட்டில் கஞ்சா வளர்க்க.. வாள் வைச்சிருக்க.. சுத்தியலால் தலையில் குத்த.. எல்லாம்.. பிரிட்டன் பொலிஸ் அனுமதிக்குது. ராணியிடம் இருந்து விசேட அனுமதி கொடுத்திருக்கினம். :lol::D

 

புலிகள் என்றாலும் பங்கர்.. பச்சை மட்டை தான். வளர்ந்த அமெரிக்காவில்.. எடுத்ததும் சூடு. அண்மைய கலவரங்கள் பனங்காய்க்கு தெரியவாய்ப்பில்லை. கஞ்சா வளர்ப்பில் அதைக் கவனிக்கல்லப் போல. அதேபோல்.. மத்திய கிழக்கு நாடுகளில்.. கல்லெறி கொலை. அதுவும் பனங்காய்க்குத் தெரியல்ல.

 

சிங்கள காவல்துறை.. ஊழல்.. லஞ்சம்.. கப்பம்.. என்று வாங்கி வளரும் காவல்துறை.. அதனிடம் போய் நீதியை நிலைநாட்டு என்றால் நடக்கிற காரியமா. ஏதாவது நடக்கிற காரியமா கதையுங்க மக்களே. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

யாழ்ப்பாணத்தில் இப்போது பலராலும் விமர்சிக்கப்படுவது இந்த வாள் வெட்டுக் கலாச்சாரம்தான். இதில் மகிந்தவின், இராணுவத்தின் கைகள் மறைமுகமாக இருந்தது ஒன்றும் இரகசியமானதல்ல.
 
புலிகளின் காலத்தில் இவை அறவே இல்லாதிருந்தது உண்மை. அதற்குக் காரணம் புலிகளின் தண்டனை முறைகள் மட்டும் இல்லை. மக்களுடன் கலந்திருந்த புலிகளால் இலகுவாக குற்றவாளிகளை இனம் காணக்கூடியதாக இருந்தது. அதிகபட்ச தண்டனைகளும் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது காவல்துறை மொழி, கலாச்சார, இன ரீதியில் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டே உள்ளது. இந்த காவல்துறையால் இராணுவத்தையும் பகைக்காமல் எதையுமே செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இப்போதைய அரசு ஏதோ செய்ய முயற்சிக்கின்றது. ஆனாலும் ஒரு தீர்வு என்று வரும்போது பொலிஸ் அதிகாரம் எமக்கு வேண்டும். அதுவும் தமிழ் பொலிஸார் பெரும்பாண்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த கேவலமான வாள் வெட்டுக் கலாச்சாரம் எம்மைவிட்டு அகலும்.
 

Edited by ஜீவன் சிவா

சட்டங்கள் எப்பவுமே இறுகமாகவே இருக்கவேண்டும் . அதென்ன காட்டு சட்டம் , நாட்டு சட்டம் என்று .
நீதி நிலைக்க வேண்டுமென்றால் கடுமையான சட்டங்கள் வேண்டும் . இல்லாவிட்டால் தப்பினை செய்து விட்டு எப்படி வெளி வரமுடியும் என்பதனை அவர்கள் இலகுவில் பயன்படுத்துவார்கள் ...
 
அதிகமான ஜனநாயகம் உள்ள நாடுகள் எல்லாம் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றன ....
சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் .இதற்கு புலிகளின் ஆட்சி தான் இந்த உலகத்திக்கே ஒரு முன் உதாரணம் ... 
 
வெகு விரைவில் பாருங்கள் தங்கையை அண்ணன் கட்பளித்தான் என்ற கேவலமும் நடக்கும் ....மன்னிப்பும் குறைந்த தண்டனைகளும் இதனை தான் வளர செய்யும் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.