Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணமேடைக்கு வந்த யுவதியை, காதலனுடன் அனுப்பி வைத்த ஹொலண்ட் மாப்பிள்ளை: கிளிநொச்சியில் பரபரப்பு சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாலிகட்ட வேண்டிய மணப்பெண்ணை வாழ்த்தி காதலனுடன் அனுப்பி வைத்துள்ளார் ஒருவர்.99933-266x179 ஆலயமொன்றில் நடக்கவிருந்த திருமணம் நின்று, மணமகளை அவர் காதலித்த வாலிபனுடன் அனுப்பி வைத்த இந்த சம்பவம் கிளிநொச்சியிப்பகுதியில் சில தினங்களின் முன்னர் நடந்துள்ளது. ஹொலண்டிலிருந்து தமது மகனிற்கு கிளிநொச்சியிலுள்ள பெற்றோர் தீவிரமாக பெண் பார்த்துள்ளனர். அவர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் கிளிநொச்சிக்குள்ளேயே மணப்பெண் கிடைத்தார். இருவீட்டாரும் கதைத்துப்பேசி திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இந்தப்பெண் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பணியிடத்தில் வாலிபர் ஒருவருடன் காதலில் விழுந்திருந்தார். எனினும் அதனை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார். திருமணப்பேச்சு தீவிரம் பெற்றதும், திருமணம் வேண்டாம் என வீட்டில் அடம்பிடித்துப் பார்த்தார். எனினும்,அப்பொழுதும் காதல் விவகாரத்தை வீட்டில் சொல்ல அவருக்கு துணிவிருக்கவில்லை. விபரத்தை வீட்டில் சொல்லி, திருமண ஏற்பாட்டை நிறுத்துமாறு காதலன் வற்புறுத்தியிருக்கிறார். அவரிடம் சம்மதித்த யுவதி, வீட்டில் சொல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்திருக்கிறார். இந்த இழுபறியில் திருமண நாளும் வந்துவிட்டது. வீட்டில் விபரத்தை சொல்லி, திருமணத்தை நிறுத்துமாறு காதலன் தொலைபேசியில் வற்புறுத்தி வந்தபோதும், யுவதி செய்வதறியாமல் கடைசிநிமிடம் வரை இழுத்துக் கொண்டு சென்றிருக்கிறார். இதற்குள் மணப்பெண் அலங்காரமெல்லாம் முடிந்துவிட்டது. கிளிநொச்சியின் புறநகரிலுள்ள பிரபலமான சிவன் ஆலயமொன்றில் திருமணமும் நடக்கவிருந்தது. மாப்பிள்ளை தரப்பினர் ஆலயத்திற்கு சென்று சேர்ந்த சமயத்தில், யுவதியின் காதலன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தானே களமிறங்கி, சீதையை மீட்பதென அவர் கங்கணம் கட்டிவிட்டார். முதலில் மணப்பெண்ணின் தந்தையை தொலைபேசியில் அழைத்து விடயத்தை கூறியிருக்கிறார். யுவதியின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து வைக்க முயன்றால், அவர் விபரீதமான முடிவை எடுப்பார் என எச்சரித்துவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டார்.இந்த தகவலால் வீட்டில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் காதலன் நேரடியாக ஆலயத்திற்கே சென்றார். அங்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை சந்தித்து விடயத்தை புரிய வைத்துள்ளார். சந்தேகமிருந்தால் தனது தொலைபேசியிலேயே யுவதியிடம் பேசிப்பாருங்கள் என, அந்த இடத்திலிருந்தே யுவதிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். யுவதியும் விடயத்தை சொல்லியுள்ளார். இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் இவ்வளவு சிக்கல்களில்லையே என கடிந்த, நம்ம ஹொலண்ட் வாசி, மணக்கோலத்திலேயே காதலனது மோட்டார் சைக்கிளில் ஏறி, மணப்பெண் வீட்டிற்கு சென்றார். அங்கு மணப்பெண்ணின் தந்தையுடன் பேசி, யுவதியுடன் தனிமையில் கதைக்க அனுமதி பெற்றார். யுவதியுடன் பேசியபோது, அவர்கள் காதலிற்கு வாழ்த்து தெரிவித்து,இனியும் தாமதிக்காமல் காதலனை திருமணம் செய்து கொள்ள வற்யுறுத்தியுள்ளார். பின்னர் பெண்ணின் பெற்றோருடன் பேசியபோது, சிறிய சச்சரவு தோன்றியுள்ளது. மாப்பிள்ளையின் திட்டமிட்ட நாடகமிது என பெண்ணின் பெற்றோர் சர்ச்சையிலீடுபட்டதால் வீட்டில் குழப்பநிலையேற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிலிருந்து இரகசியமாக வெளியேறிய யுவதி, வெளியில் காத்திருந்த காதலனுடன் ஏறி சென்று விட்டார். தமது மகளை காணவில்லையென பெற்றோர் கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளனர். http://lankaone.com/

  • கருத்துக்கள உறவுகள்

இதன் பின் நடக்கப் போவது..

 

ஹாலண்ட் மாப்பிள்ளை.. ஹொலிடே முடித்து வீடு திரும்பினார். பொலிஸார் சம் திங் சம் திங் பெற்று பைலை மூலையில் போட்டுவிட்டு... குறட்டை.கிளிநொச்சி யுவதி கர்ப்பமானர். குழந்தை பெற்றார். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஹாலன்ட் மாப்பிள்ளை  பெண்பிள்ளையை பெடிப்பிள்ளையுடன் சேர்த்து வைத்து  கமுகம் பிள்ளையாய் உயர்ந்து நிக்கின்றார்...!

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிப் போட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் பெண்டாடடியைக் காணோம் என்று தேடுவதை விட இது பரவாயில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

//காதலன் நேரடியாக ஆலயத்திற்கே சென்றார். அங்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை சந்தித்து விடயத்தை புரிய வைத்துள்ளார். சந்தேகமிருந்தால் தனது தொலைபேசியிலேயே யுவதியிடம் பேசிப்பாருங்கள் என, அந்த இடத்திலிருந்தே யுவதிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். யுவதியும் விடயத்தை சொல்லியுள்ளார். இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் இவ்வளவு சிக்கல்களில்லையே என கடிந்த, நம்ம ஹொலண்ட் வாசி, மணக்கோலத்திலேயே காதலனது மோட்டார் சைக்கிளில் ஏறி, மணப்பெண் வீட்டிற்கு சென்றார். அங்கு மணப்பெண்ணின் தந்தையுடன் பேசி, யுவதியுடன் தனிமையில் கதைக்க அனுமதி பெற்றார். யுவதியுடன் பேசியபோது, அவர்கள் காதலிற்கு வாழ்த்து தெரிவித்து,இனியும் தாமதிக்காமல் காதலனை திருமணம் செய்து கொள்ள வற்யுறுத்தியுள்ளார். பின்னர் பெண்ணின் பெற்றோருடன் பேசியபோது, சிறிய சச்சரவு தோன்றியுள்ளது. மாப்பிள்ளையின் திட்டமிட்ட நாடகமிது என பெண்ணின் பெற்றோர் சர்ச்சையிலீடுபட்டதால் வீட்டில் குழப்பநிலையேற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிலிருந்து இரகசியமாக வெளியேறிய யுவதி, வெளியில் காத்திருந்த காதலனுடன் ஏறி சென்று விட்டார். தமது மகளை காணவில்லையென பெற்றோர் கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளனர். //

 

பயங்கர திரில் நிறைந்த, திருப்பங்களுடன்... இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சினிமாவாக தயாரித்தால்....  150 நாளுக்கு மேலை ஓடும். :) 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பயங்கர திரில் நிறைந்த, திருப்பங்களுடன்... இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சினிமாவாக தயாரித்தால்....  150 நாளுக்கு மேலை ஓடும். :) 

 

இப்படியான கருவை வைத்து நிறையத் தமிழ் சினிமாக்கள் ஏற்கனவே வந்து விட்டன சிறி அண்ணை.

இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இப்படி நடப்பது குறைவு.

கடைசி நிமிடம் வரை பயத்தில் இருந்த பெண் பிள்ளை தான் பாவம்

அந்த இரு மண மக்களுக்கும் வாழ்த்துக்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும் உள்ளம் கொண்ட அப்பனுக்கு வாழ்த்துக்கள்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

விசர்ப்பெட்டை சும்மா காலடியில வந்து விழுந்த வெளிநாட்டு, அதுவும் கொலண்ட் வாழ்க்கையை விட்டிட்டு காதலிச்சவனுக்கு கழுத்து நீட்டீட்டாள்! காதலாவது கத்தரிக்காயாவது! சீமாட்டிக்குப் போகப் போகப் புரியும்:D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருவை வைத்து நிறையத் தமிழ் சினிமாக்கள் ஏற்கனவே வந்து விட்டன சிறி அண்ணை.

இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இப்படி நடப்பது குறைவு.

கடைசி நிமிடம் வரை பயத்தில் இருந்த பெண் பிள்ளை தான் பாவம்

அந்த இரு மண மக்களுக்கும் வாழ்த்துக்கள்

 

 

வாத்தியார்...

வீட்டில் இருந்த குழப்ப நிலையை... தனக்குச் சாதகமாக பயன் படுத்தி,

தாய், தகப்பனுக்கும், மணமகனுக்கும்... "அல்வா" கொடுத்துவிட்டு....

"நைசாக..." காதலனின் மோட்டார் சைக்கிளில், தப்பிய மணமகளின் புத்தி சாதுரியத்தை நினைக்க... எனக்கு ஆச்சரியமாய் இருக்கு. :D  :lol:  

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு வந்த பின்பு எல்லா பெடியளும் இளிச்சவாயனாய் போட்டாங்கள்......எங்கன்ட காலத்து பெடியள் என்றால் தாலியை கட்டி போட்டு காதலனுக்கு அரிவாளை காட்டியிருப்பாங்கள் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.