Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாம் தரப் பிரஜைகளாக தமிழ் மக்கள் வாழமுடியாது என்கிறார் சம்பந்தன்

Featured Replies

இரண்டாம் தரப் பிரஜைகளாக தமிழ் மக்கள்   வாழமுடியாது என்கிறார் சம்பந்தன்

இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாக எமது தமிழ் மக்கள் ஒருபோதும் வாழமுடியாது. எனவே, அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து எமது உரிமைகளை வென்றெடுப்போம். - இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன். நேற்றிரவு புதன்கிழமை திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரச்சினை தற்போது சர்வதேச மட்டத்தை அடைந்துள்ளது. ஆனால், இன்னும் தீர்வு கிட்டவில்லை. ஏறத்தாழ 65 வருடங்களாக எமது போராட்டம் தொடர்கின்றது. தந்தை செல்வாவால் பல அரசியல் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பின் - 1985இற்குப் பின் 30 வருடங்களாக எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி பல சாதனைகளை நிலைநாட்டினார்கள். அப்போராட்டமும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முடிவுக்கு வந்தது. யுத்தம் முடிந்து 6 வருடங்கள் கடந்தபோதும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறி பொறுப்புக்கூறும் விடயத்தில் இருந்து விலகி தமிழ் மக்களை நசுக்குவதிலே குறியாக இருந்தார்.

இந்நிலையில், 2011ஆம் ஆண்டு உலகின் வல்லரசான அமெரிக்கா சென்று அங்கு இராஜாங்க அமைச்சரை நாம் சந்தித்தோம். போர்க்குற்றங்கள் விடயத்தில் சர்வதேச விசாரணையை அதன் பின் இலங்கை எதிர்கொண்டது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரும் ஐ.நா. விசாரணை அறிக்கை இலங்கை அரசியலில் பல அழுத்தங்களை எதிர்கொள்ளலாம். எனவே, இந்நிலையில் இந்தப் பொதுத் தேர்தல் சர்வதேச ரீதியில் அதிமுக்கியமானதாகும். திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர, 5 தமிழ்க் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சியினர் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள்? இவர்கள் யாரை சந்திக்கின்றார்கள்? இவர்கள் 5 வீதமான வாக்குகளைக் கூட பெறமாட்டார்கள்.

இவ்வாக்குகள் கூட எமக்குக் கிடைக்கவேண்டும். இந்த வாக்குகள் எமக்குக் கிடைப்பதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை நாம் பெறுவதுடன் போனஸ் ஆசனத்தையும் பெறமுடியும். அபிவிருத்தி என்பது தேவைதான். ஆனால், இரண்டாம் தரப் பிரஜைகளாக எமது தமிழ் மக்கள் வாழ முடியாது. ஒருமித்த நாட்டுக்குள் இறைமை பகிர்ந்தளிக்கப்படவேண்டும். உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் காணி, பாதுகாப்பு, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், கால்நடை வளாப்பு உட்பட சகல அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கக்கூடிய தீர்வையே நாம் கேட்டு நிற்கின்றோம் - என்றார்.

http://www.malarum.com/article/tam/2015/08/06/11309/இரண்டாம்-தரப்-பிரஜைகளாக-தமிழ்-மக்கள்-வாழமுடியாது-என்கிறார்-சம்பந்தன்.html#sthash.WsrkWMCT.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

சுத்து மாத்து திலகம் சம்பந்தன்.... தேர்தல் நெருங்க, நெருங்க.... புதுப் புது தொனியில்,
தமிழ் மக்களை நோக்கி, அறை கூவல் விடுக்கிறார்.Smiley

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் முடிந்து 6 வருடங்கள் கடந்தபோதும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறி பொறுப்புக்கூறும் விடயத்தில் இருந்து விலகி தமிழ் மக்களை நசுக்குவதிலே குறியாக இருந்தார்

 

இனியும் அது தான் தொடரும். மகிந்த வந்தால் என்ன மைத்திரி வந்தால் என்ன மாற்றம் இருக்காது.

கடந்த ஆறு வருடங்களாக கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் தான் இருந்தது.அப்போ எடுக்க முடியாத உரிமைகளை இனி எப்படி எடுக்க முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் அது தான் தொடரும். மகிந்த வந்தால் என்ன மைத்திரி வந்தால் என்ன மாற்றம் இருக்காது.

கடந்த ஆறு வருடங்களாக கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் தான் இருந்தது.அப்போ எடுக்க முடியாத உரிமைகளை இனி எப்படி எடுக்க முடியும்??

அது... சம்பந்தனுக்கும் வடிவாய் தெரியும்.
எலெக்சன் வாற படியால், சும்மா.... "றீல்" விட்டுப் பார்க்கிறார்.:grin:

ஆமாம் சம்பந்தர் ஐயா, இப்பிடியே எங்களுக்குள்ள அடிபட்டுக்கொண்டு இருந்தால் இனியும் நாங்கள் இரண்டாம் தரப்பிரஜை களாக இருக்கமாட்டம் .
மிக விரைவிலேயே மூன்றாம் தரப்பிரசைகள்  ஆகிவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எமக்கு விருப்பமில்லயென்றாலும் ஒரே தெரிவு தமிழ்தேசிய கூட்டமைப்புதான்....

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று எமக்கு விருப்பமில்லயென்றாலும் ஒரே தெரிவு தமிழ்தேசிய கூட்டமைப்புதான்....

நான் வாயார இவர்களை திட்டினாலும் எனது தெரிவும் இவர்கள்தான்.......

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரன் இல்லாத.... கூட்டமைப்பில்..... 
பல கட்சிகளும், இணையலாம்.  
கூட்டமைப்பை.... சிதைப்பது, சம்பந்தும்...சுமந்தும் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன், சுமந்திரன் இல்லாத.... கூட்டமைப்பில்..... 
பல கட்சிகளும், இணையலாம்.  
கூட்டமைப்பை.... சிதைப்பது, சம்பந்தும்...சுமந்தும் தான்.

இவ்வளவுத்துக்கு அழிஞ்சு சிதைஞ்சு போனமாம்.....:( :( :(

இன்னுமொரு ஒரு வருசம் விட்டுப்பிடிக்கிறதிலை தப்பில்லை எண்டு என்ரை மனம் சொல்லுது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுத்துக்கு அழிஞ்சு சிதைஞ்சு போனமாம்.....:( :( :(

இன்னுமொரு ஒரு வருசம் விட்டுப்பிடிக்கிறதிலை தப்பில்லை எண்டு என்ரை மனம் சொல்லுது. :unsure:

இவையளின் ஆட்டத்தை, 2009´ம் ஆண்டிலிருந்து, அவதானித்துக் கொண்டு வருகின்றோம்.
அதில்... சுத்து மாத்துகள் தான் அதிகம்.
தமிழன் இன்னும்... காதில், பூ... வைத்துக் கொண்டிருக்கின்றான் என்று... இவர்கள் நினைத்து விட்டார்கள்.
இன்னும்... ஒரு வருசம், இல்லை.... ஒரு... நிமிடம் கூட.... சம்பந்தன், கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருக்க, அருகதை அற்றவர், 
அதை விட.... கோட்டு, சூட்டு பூட்டு... பல்லை காட்டும்.... சுமந்திரனை கண்டால்,  எனக்கு... பிரசர் ஏறி விடும் அண்ணே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவையளின் ஆட்டத்தை, 2009´ம் ஆண்டிலிருந்து, அவதானித்துக் கொண்டு வருகின்றோம்.
அதில்... சுத்து மாத்துகள் தான் அதிகம்.
தமிழன் இன்னும்... காதில், பூ... வைத்துக் கொண்டிருக்கின்றான் என்று... இவர்கள் நினைத்து விட்டார்கள்.
இன்னும்... ஒரு வருசம், இல்லை.... ஒரு... நிமிடம் கூட.... சம்பந்தன், கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருக்க, அருகதை அற்றவர், 
அதை விட.... கோட்டு, சூட்டு பூட்டு... பல்லை காட்டும்.... சுமந்திரனை கண்டால்,  எனக்கு... பிரசர் ஏறி விடும் அண்ணே.....

உங்கள் கருத்துத்தான் எனது கருத்தாகவும் இருக்கின்றது....:)

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவர்களை ஆதரித்து தமிழர் பலத்தை காட்டவேண்டிய காலகட்டத்தில் நாம் தள்ளப்பட்டு விட்டோம். என்ன செய்வது காலத்தின் விளையாட்டு இதுவெனில் விளையாடியாகியே வேண்டும். ஒருவருடம் பொறுத்திருந்து பார்கலாமே..:)

 மற்றும்படி சுமந்திரனை எனக்கு கண்ணிலையும் காட்டப்படாது.:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எமக்கும் சண்டை பிடித்து எமது பாராளுமன்ற உறுப்பினரேன்னிக்கையை    குறைத்து, வியஜயகலா, டக்கியை அனுப்புவதை விட சம்பந்தன் சுமந்திரனை அனுப்பி பின்னர் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன்மூலம் தமிழருக்கு தீர்வு வரச்செய்யலாம். நான் சம்பந்தன் சுமந்திரனின் சில நடவடிக்கைகளுக்கு எதிரென்றாலும் விஜயகலா, டக்கி, வித்தியாதரன் போன்றவரை விட இவர்களை நம்பலாம் 

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துத்தான் எனது கருத்தாகவும் இருக்கின்றது....:)

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவர்களை ஆதரித்து தமிழர் பலத்தை காட்டவேண்டிய காலகட்டத்தில் நாம் தள்ளப்பட்டு விட்டோம். என்ன செய்வது காலத்தின் விளையாட்டு இதுவெனில் விளையாடியாகியே வேண்டும். ஒருவருடம் பொறுத்திருந்து பார்கலாமே..:)

 மற்றும்படி சுமந்திரனை எனக்கு கண்ணிலையும் காட்டப்படாது.:mellow:

அது, என்ன.... ஒரு வருட கணக்கு?
அதுக்குப் பிறகும்..... பாராளுமன்ற தேர்தல் வைக்கிறார்களா? 
Smiley

ஏமாந்தது......போதும், பொங்கி ... எழு தமிழா.....  
நம் தாகம், தீர்க்க வருவார்கள்... அவர்கள்.:)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சில ஆக்களிண்ட ஸ்ருதி மாறுது.:grin: ஸ்ருதி பெட்டி மாறிக்கீறி ஏதும் போச்சோ! அய் டோண்ட் நோ!:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எமக்கும் சண்டை பிடித்து எமது பாராளுமன்ற உறுப்பினரேன்னிக்கையை    குறைத்து, வியஜயகலா, டக்கியை அனுப்புவதை விட சம்பந்தன் சுமந்திரனை அனுப்பி பின்னர் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன்மூலம் தமிழருக்கு தீர்வு வரச்செய்யலாம். நான் சம்பந்தன் சுமந்திரனின் சில நடவடிக்கைகளுக்கு எதிரென்றாலும் விஜயகலா, டக்கி, வித்தியாதரன் போன்றவரை விட இவர்களை நம்பலாம் 

சம்பந்தன், சுமந்திரன்... போன்ற , பன்னாடைகள்.... கடந்த ஆறு வருசமாய் என்ன செய்தது?
உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தாலும், இந்த... நாதாரியள் தானே, உள் நாட்டிலும், வெளி நாட்டிலும்.... சவுண்டு விடுது.
இதுக்குள்ளை.... பலத்தை கூட்ட வேணுமென்றால், "ஹார்லிக்ஸ்" சாப்பிடுங்கள். பலம்..... ஜாஸ்தியாய்... அதிகரிக்கும்.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப சில ஆக்களிண்ட ஸ்ருதி மாறுது.:grin: ஸ்ருதி பெட்டி மாறிக்கீறி ஏதும் போச்சோ! அய் டோண்ட் நோ!:unsure:

சுருதி கிருதி எதுவும் மாறவில்லை.:)

சுமந்திரன் கோஷ்டி நாதாரி கூட்டம் நாதாரி கூட்டம்தான். :grin:

உலக அரசியல் நிமித்தம் ஒரு வருடம் இடை வேளை. :innocent:

முயல் பிடிக்கிற நாயை எங்களுக்கு நன்றாகவே தெரியும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

சம்சும், கும்பலுக்கு.....
இன்னும்... ஒரு வாரம் இருக்கு. 
அத்துடன்... தேவாரம் பாட வேண்டிய நேரம், நெருங்கிக் கொண்டுள்ளது. Smiley

  • கருத்துக்கள உறவுகள்

அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் சம்பந்தன் குழு 2016 டிசம்பருக்குள் எதுவும் செய்ய முடியாவிட்டால் மரியாதையாக அடுத்தவர்களுக்கு இடம் விட்டு ஒதுங்கிவிட வேண்டும்! இது விரும்பியோ விரும்பாமலோ இலங்கை அரசு மற்றும் குறிப்பாக சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புக்கு ஒரு அக்கினிப் பரீட்சை.  இதுவே இலங்கைப் பாராளுமன்றத்திடம் இருந்து தமிழர்கள் எதிர்பார்க்கும் கடைசி எதிர்பார்ப்பாகவும் இருக்கும். 

முஸ்லிம்கள் தொப்பி பிரட்டுவதை பகிடி விடுபவர்கள் இங்கு தோசை பிரட்டுவது போல அடிக்கடி ஒரே பிரட்டு பிரட்டுகின்றார்கள் .

இப்படி எத்தனை பேரை பார்த்திட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யிலே... பிறந்து,  பொய்யிலே... வளர்ந்த... 
சம்பந்தன், யாழ். முனியப்பர் கோவிலில் இந்தச் சத்தியத்தை எடுப்பது. நல்லது.
அந்தச் சந்தியத்தை மீறினால்... சம்பந்தன். இரத்தம் கக்கி சாவான்.
50  வருசமாய்... அந்தாள்,  சும்மா... எங்களுக்கு, பீலா... விடுது.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தொப்பி பிரட்டுவதை பகிடி விடுபவர்கள் இங்கு தோசை பிரட்டுவது போல அடிக்கடி ஒரே பிரட்டு பிரட்டுகின்றார்கள் .

இப்படி எத்தனை பேரை பார்த்திட்டம் .

அர்ஜுன் மற்றும் வாலு, இங்கு ஒருத்தருமே தொப்பி பிரட்டவில்லை ஆனால் தமிழரின் தீர்வுக்காக நான், சிறீ, குமாரசாமி, மற்றும் புத்தன் எல்லோருமே    எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கப்பால் தான்றி கூத்தமைப்பு கூத்தாடிகளை, விஜயகலா, டக்கியை விட ஆதரிக்கலாம் என்று தான் சொன்னோம். உங்களுடைய மாதிரி புலி பிடிக்கவில்லை என்று புலிக்கு எதிராக உள்ள தமிழ் விரோத சக்திகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. படித்தவர்களுக்குத்தான் இது விழங்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

ரகா, 

அர்ஜுன் அண்ணரின் நிலைப்பாடு பற்றி நான் சொல்ல இயலாது. புலிகளை எனக்குப் பிடிக்காது என்று நீங்கள் எனது எழுத்துக்களை வைத்துத் தீர்மானித்து இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் புலிகளை வைத்து வியாபரம் செய்பவர்களின் வாயை அடைக்கவே அவ்வாறு எழுத நேரிடுகிறது. புலிகளை மனதளவில் என்றும் நான் வெறுத்தது கிடையாது. அவர்களுக்கு எனக்கும் இடையிலான உறவு நீண்டது. புலத்தில் உள்ள புலிவால்களுக்கு சும்மா உசுப்பி விடவும் விசிலடிக்கவும் மட்டுமே தெரியும். ஒரு மாபெரும் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு அவர்களும் காரணம் தான். எங்கள் போராட்டத்தின் நியாயத்தன்மையை அவரவர் வாழும்நாடுகளில் மொழிகளில் எந்த அளவில் கொண்டு சென்றார்கள். மாறாக அசைலம் அடிப்பதற்காக இராணுவத்தாலும் பிரச்சினை புலிகளும் வலுகட்டாயமாக பிடித்துப் போனார்கள் போன்ற வாக்கு மூலங்களைக் கொடுத்து புலிகள் தொடர்பில் கூடாத அபிப்பிராயத்தை ஏற்படுத்தியதும் அவர்கள்தான். இது ஒரு முரண்பாடான செயற்பாடு.  இப்போதும் தாயகத்தில் இருக்கும் மக்களின் அரசியலை இவர்கள் தீர்மானிக்க முனைகிறார்கள். அதற்கு தங்களுக்குச் சார்பான குதிரைகளில் ஏறிக்கொண்டு குழப்ப நினைக்கிறார்கள். மிக முக்கியமாக இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவின் வகிபாகம் இல்லாமல் எதுவுமே நடக்காது நடக்கவும் முடியாது. இதுதான் நடைமுறை அரசியல். எத்தனை நூற்றாண்டுகள் போனாலும் இதுதான் உண்மை. இதுதான் கற்றுக்கொண்டபாடமும் கூட. இதைப் புரிந்துகொள்ளாமல் கஜே குழுவை உசுப்பி விட்டுக்கொண்டு இருப்பதே இவர்களுக்கு இலங்கைத் தீவில் ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வு வருவதில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். புலிகளின் இடம் இனி நிரப்ப முடியாத வெற்றிடம்தான். எவருமே மாற்றாக வர முடியாது. போலிகள் வந்து புகைவண்டி ஓட்டலாம். ஆனால் மக்கள் ஏறிக்கொள்ளத் தயாரில்லை. தமிழன் கங்கை கொண்டான், இமயம் வென்றான், கடாரம் சென்றான் என்பவை எப்படி வரலாறு ஆனதோ அப்படித்தான் இனிப் புலிகளின் கதையும். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது முடியாத உண்மை. எமது போராளிகள் இறுதிவரை போராடினார்கள் ஆனால் தோற்றுப்போனார்கள். வீரர்களாகவே வீழ்ந்தனர். எமது தோல்வியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கிப் போக முடியும். அதை விட்டிட்டு இப்பவும் மக்களை மூலதனமாக்கி தாங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்தால்போதும் என நினைக்கிற விசில் குஞ்சுகளுக்கு எப்பவுமே நான் எதிரிதான். காலத்தின் தற்போதைய உடனடித் தேவை ஓரணியில் தமிழினம் நிற்பதுதான். அதை இவர்கள் எப்பவுமே செய்யத் தயாரில்லை. செய்யவும் மாட்டார்கள். 

விசில் குஞ்சுகளை சூடு ஏற்றுவதற்கே புலிகள் தொடர்பில் சிலவற்றை எழுத நேர்கிறது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறேன். மற்றும்படி எனக்கும் என் மனச்சாட்சிக்கும் தெரியும் நான் யரென்று!  (ஒரு யாழ்கள உறவுக்கு நான் கொடுத்த வாக்குக்கு அமைய இப்போது புலிகளை வைத்து எதுவும் தவறாமல் எழுதுவது இல்லை, ஆனால் புலிவால்களை விட மாட்டேன் ஒட்ட நறுக்குவேன். ஒறிஜினல் புலிகள் வேறு புலிவால்கள் வேறு)

ரகா, 

அர்ஜுன் அண்ணரின் நிலைப்பாடு பற்றி நான் சொல்ல இயலாது. புலிகளை எனக்குப் பிடிக்காது என்று நீங்கள் எனது எழுத்துக்களை வைத்துத் தீர்மானித்து இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் புலிகளை வைத்து வியாபரம் செய்பவர்களின் வாயை அடைக்கவே அவ்வாறு எழுத நேரிடுகிறது. புலிகளை மனதளவில் என்றும் நான் வெறுத்தது கிடையாது. அவர்களுக்கு எனக்கும் இடையிலான உறவு நீண்டது. புலத்தில் உள்ள புலிவால்களுக்கு சும்மா உசுப்பி விடவும் விசிலடிக்கவும் மட்டுமே தெரியும். ஒரு மாபெரும் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு அவர்களும் காரணம் தான். எங்கள் போராட்டத்தின் நியாயத்தன்மையை அவரவர் வாழும்நாடுகளில் மொழிகளில் எந்த அளவில் கொண்டு சென்றார்கள். மாறாக அசைலம் அடிப்பதற்காக இராணுவத்தாலும் பிரச்சினை புலிகளும் வலுகட்டாயமாக பிடித்துப் போனார்கள் போன்ற வாக்கு மூலங்களைக் கொடுத்து புலிகள் தொடர்பில் கூடாத அபிப்பிராயத்தை ஏற்படுத்தியதும் அவர்கள்தான். இது ஒரு முரண்பாடான செயற்பாடு.  இப்போதும் தாயகத்தில் இருக்கும் மக்களின் அரசியலை இவர்கள் தீர்மானிக்க முனைகிறார்கள். அதற்கு தங்களுக்குச் சார்பான குதிரைகளில் ஏறிக்கொண்டு குழப்ப நினைக்கிறார்கள். மிக முக்கியமாக இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவின் வகிபாகம் இல்லாமல் எதுவுமே நடக்காது நடக்கவும் முடியாது. இதுதான் நடைமுறை அரசியல். எத்தனை நூற்றாண்டுகள் போனாலும் இதுதான் உண்மை. இதுதான் கற்றுக்கொண்டபாடமும் கூட. இதைப் புரிந்துகொள்ளாமல் கஜே குழுவை உசுப்பி விட்டுக்கொண்டு இருப்பதே இவர்களுக்கு இலங்கைத் தீவில் ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வு வருவதில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். புலிகளின் இடம் இனி நிரப்ப முடியாத வெற்றிடம்தான். எவருமே மாற்றாக வர முடியாது. போலிகள் வந்து புகைவண்டி ஓட்டலாம். ஆனால் மக்கள் ஏறிக்கொள்ளத் தயாரில்லை. தமிழன் கங்கை கொண்டான், இமயம் வென்றான், கடாரம் சென்றான் என்பவை எப்படி வரலாறு ஆனதோ அப்படித்தான் இனிப் புலிகளின் கதையும். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது முடியாத உண்மை. எமது போராளிகள் இறுதிவரை போராடினார்கள் ஆனால் தோற்றுப்போனார்கள். வீரர்களாகவே வீழ்ந்தனர். எமது தோல்வியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கிப் போக முடியும். அதை விட்டிட்டு இப்பவும் மக்களை மூலதனமாக்கி தாங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்தால்போதும் என நினைக்கிற விசில் குஞ்சுகளுக்கு எப்பவுமே நான் எதிரிதான். காலத்தின் தற்போதைய உடனடித் தேவை ஓரணியில் தமிழினம் நிற்பதுதான். அதை இவர்கள் எப்பவுமே செய்யத் தயாரில்லை. செய்யவும் மாட்டார்கள். 

விசில் குஞ்சுகளை சூடு ஏற்றுவதற்கே புலிகள் தொடர்பில் சிலவற்றை எழுத நேர்கிறது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறேன். மற்றும்படி எனக்கும் என் மனச்சாட்சிக்கும் தெரியும் நான் யரென்று!  (ஒரு யாழ்கள உறவுக்கு நான் கொடுத்த வாக்குக்கு அமைய இப்போது புலிகளை வைத்து எதுவும் தவறாமல் எழுதுவது இல்லை, ஆனால் புலிவால்களை விட மாட்டேன் ஒட்ட நறுக்குவேன். ஒறிஜினல் புலிகள் வேறு புலிவால்கள் வேறு)

இந்த களத்துக்கு மீண்டும் வருவதில்லை என நினைத்திருந்தேன், இருந்தாலும் உங்கள் நிலைப்பட்டிக்கு எனது ஆதரவை தெரிவிக்க மீண்டும் இணைந்தேன்.

வெறுமனே புலிகளை வைத்து பிழைக்கும் கூட்டத்துக்குள் நடைமுறைக்கு சாத்தியமான தீர்வை யோசிபவர்கள் குறைவு. 

 

 

நன்றி வாலி.

என்னால் பச்சை குத்த முடியவில்லை.

என்போன்றோரது கருத்துக்களை உங்கள் கருத்தாக வெளிப்படுத்தியமைக்கு.

சூறாவளி உங்கள் வரவு நல்வரவாகட்டும். 

 

தேர்தலின்போது வாக்களிக்கும் உரிமை இல்லாவிட்டாலும் தாயகத்தில் நிற்பேன். அனுபவங்களை முடிந்தளவு கள உறவுகளுடன் பகிர முயற்சிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகா, 

அர்ஜுன் அண்ணரின் நிலைப்பாடு பற்றி நான் சொல்ல இயலாது. புலிகளை எனக்குப் பிடிக்காது என்று நீங்கள் எனது எழுத்துக்களை வைத்துத் தீர்மானித்து இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் புலிகளை வைத்து வியாபரம் செய்பவர்களின் வாயை அடைக்கவே அவ்வாறு எழுத நேரிடுகிறது. புலிகளை மனதளவில் என்றும் நான் வெறுத்தது கிடையாது. அவர்களுக்கு எனக்கும் இடையிலான உறவு நீண்டது. புலத்தில் உள்ள புலிவால்களுக்கு சும்மா உசுப்பி விடவும் விசிலடிக்கவும் மட்டுமே தெரியும். ஒரு மாபெரும் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு அவர்களும் காரணம் தான். எங்கள் போராட்டத்தின் நியாயத்தன்மையை அவரவர் வாழும்நாடுகளில் மொழிகளில் எந்த அளவில் கொண்டு சென்றார்கள். மாறாக அசைலம் அடிப்பதற்காக இராணுவத்தாலும் பிரச்சினை புலிகளும் வலுகட்டாயமாக பிடித்துப் போனார்கள் போன்ற வாக்கு மூலங்களைக் கொடுத்து புலிகள் தொடர்பில் கூடாத அபிப்பிராயத்தை ஏற்படுத்தியதும் அவர்கள்தான். இது ஒரு முரண்பாடான செயற்பாடு.  இப்போதும் தாயகத்தில் இருக்கும் மக்களின் அரசியலை இவர்கள் தீர்மானிக்க முனைகிறார்கள். அதற்கு தங்களுக்குச் சார்பான குதிரைகளில் ஏறிக்கொண்டு குழப்ப நினைக்கிறார்கள். மிக முக்கியமாக இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவின் வகிபாகம் இல்லாமல் எதுவுமே நடக்காது நடக்கவும் முடியாது. இதுதான் நடைமுறை அரசியல். எத்தனை நூற்றாண்டுகள் போனாலும் இதுதான் உண்மை. இதுதான் கற்றுக்கொண்டபாடமும் கூட. இதைப் புரிந்துகொள்ளாமல் கஜே குழுவை உசுப்பி விட்டுக்கொண்டு இருப்பதே இவர்களுக்கு இலங்கைத் தீவில் ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வு வருவதில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். புலிகளின் இடம் இனி நிரப்ப முடியாத வெற்றிடம்தான். எவருமே மாற்றாக வர முடியாது. போலிகள் வந்து புகைவண்டி ஓட்டலாம். ஆனால் மக்கள் ஏறிக்கொள்ளத் தயாரில்லை. தமிழன் கங்கை கொண்டான், இமயம் வென்றான், கடாரம் சென்றான் என்பவை எப்படி வரலாறு ஆனதோ அப்படித்தான் இனிப் புலிகளின் கதையும். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது முடியாத உண்மை. எமது போராளிகள் இறுதிவரை போராடினார்கள் ஆனால் தோற்றுப்போனார்கள். வீரர்களாகவே வீழ்ந்தனர். எமது தோல்வியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கிப் போக முடியும். அதை விட்டிட்டு இப்பவும் மக்களை மூலதனமாக்கி தாங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்தால்போதும் என நினைக்கிற விசில் குஞ்சுகளுக்கு எப்பவுமே நான் எதிரிதான். காலத்தின் தற்போதைய உடனடித் தேவை ஓரணியில் தமிழினம் நிற்பதுதான். அதை இவர்கள் எப்பவுமே செய்யத் தயாரில்லை. செய்யவும் மாட்டார்கள். 

விசில் குஞ்சுகளை சூடு ஏற்றுவதற்கே புலிகள் தொடர்பில் சிலவற்றை எழுத நேர்கிறது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறேன். மற்றும்படி எனக்கும் என் மனச்சாட்சிக்கும் தெரியும் நான் யரென்று!  (ஒரு யாழ்கள உறவுக்கு நான் கொடுத்த வாக்குக்கு அமைய இப்போது புலிகளை வைத்து எதுவும் தவறாமல் எழுதுவது இல்லை, ஆனால் புலிவால்களை விட மாட்டேன் ஒட்ட நறுக்குவேன். ஒறிஜினல் புலிகள் வேறு புலிவால்கள் வேறு)

வாலி உங்கள் விழக்கத்திற்கு நன்றி. நான் நாட்டிலிருந்த புலிகளை மட்டுமே நம்பியவன், ஒரு நாளும் புலத்தில் தன்னை புலி என்று இனம்காட்டியவர்களை நம்புவதில்லை. ஆனால் புலத்தில் தன்னை புலி என்றோ புலி ஆதரவாளர் என்றோ இனம்காட்டாமல் போராட்டத்திற்கு உதவிய பலர் இருப்பார்கள் (நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கலாம்) ஆனால் புலி வால் என்று எல்லோரையும் விளிப்பதனால் பிழை செய்யாதவர்களையும் உங்கள் பட்டியலில் சேர்கிறீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.