Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்மானத் தமிழர்கள் சலுகைகளுக்கு விலைபோகார்! வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பு சாதனை படைக்கும்!! - இரா.சம்பந்தன்

Featured Replies

தன்மானத் தமிழர்கள் சலுகைகளுக்கு விலைபோகார்! வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பு சாதனை படைக்கும்!!

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு விலைபோய் தமிழ்த் தேசியத்தை - தமிழ்க் கூட்டமைப்பை சிதைக்கமாட்டார்கள். வாக்குகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமடையச் செய்வார்கள். கடந்த தேர்தல்கள் இவற்றுக்கு உதாரணங்களாக உள்ளன. இதனை அனைவரும் உணரவேண்டும்" - என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இன்று தமிழர் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறியிருக்கின்றது. எமது மக்களுக்கிடையிலான ஒற்றுமையாலும் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த தேர்தல்களில் வழங்கிய பலத்தாலுமே தமிழர் பிரச்சினை உலக அரங்கில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இன்று சர்வதேச நாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணுங்கள் என்று இலங்கை அரசை வலியுறுத்துகின்றன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தி கூட்டமைப்புக்கான அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்தும் செயற்பாடுகளை தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும். இதனை வெளிப்படுத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எமது மக்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையாக ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமது ஏகோபித்த கட்சியாக கடந்த தேர்தல்களில் மாற்றியிருக்கும் எமது வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு 20 ஆசனங்களைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு. பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் ஆட்சிமுறை ஏற்படவேண்டும் என்று நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ளோம். அத்துடன், திட்டமிட்டுப் பிரிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்றும் நாம் கோரியிருக்கின்றோம். இது எமது திடமான - உறுதியான நிலைப்பாடு. இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை.

இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். நாடு பிரிக்கப்படாமல் - நாடு பிளவுபடாமல் தமிழர்கள் இந்த நாட்டில் சம அந்தஸ்துடைய பிரஜைகளாக, பாதுகாப்பாக சகல உரிமைகளுடனும் மரியாதையுடனும் தமது தேவைகளை நிறைவேற்றி வாழ வழி ஏற்படுத்தவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின்படி நாம் எமது சுயநிர்ணய உரிமையைக் கேட்கிறோம். தனியான கலாசாரம், பண்பாடுகளைக்கொண்ட தனித்துவமான இனம் என்ற ரீதியில் சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து எமக்கு உண்டு. அதனைத்தான் நாம் கேட்கின்றோம். எமது தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் எதிர்கால நலன் சார்ந்ததாக உள்ளது. எனவே, எமது மக்கள் எதிர்வரும் 17ஆம் திகதி 'வீடு' சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சாதனையடைச் செய்வார்கள்'' - என்றார்.

http://www.malarum.com/article/tam/2015/08/13/11377/தன்மானத்-தமிழர்கள்-எசலுகைகளுக்கு-விலைபோகார்-வடக்கு-கிழக்கில்-கூட்டமைப்புசாதனை-படைக்கும்-.html#sthash.2sHO76jw.dpuf

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். நாடு பிரிக்கப்படாமல் - நாடு பிளவுபடாமல் தமிழர்கள் இந்த நாட்டில் சம அந்தஸ்துடைய பிரஜைகளாக, பாதுகாப்பாக சகல உரிமைகளுடனும் மரியாதையுடனும் தமது தேவைகளை நிறைவேற்றி வாழ வழி ஏற்படுத்தவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின்படி நாம் எமது சுயநிர்ணய உரிமையைக் கேட்கிறோம். தனியான கலாசாரம், பண்பாடுகளைக்கொண்ட தனித்துவமான இனம் என்ற ரீதியில் சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து எமக்கு உண்டு. அதனைத்தான் நாம் கேட்கின்றோம். எமது தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் எதிர்கால நலன் சார்ந்ததாக உள்ளது. எனவே, எமது மக்கள் எதிர்வரும் 17ஆம் திகதி 'வீடு' சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சாதனையடைச் செய்வார்கள்'' - என்றார்.

நன்றி  விக்கி  ஐயா....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவுடன் பிரச்சாரக் கூட்டங்கள் முடிவடைய இருக்கின்றன.
 சுய நிர்ணய உரிமை என்ற வார்த்தையை சம்மந்தர் உச்சரிக்க வெளிக்கிட்டுவிட்டார்.
 தனி ஈழமே எங்கள் தீர்வு என ஒரு பெரிய வெடியை இன்று  கூட்டமைப்பு கொழுத்திவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரும் சுயநிர்ணய உரிமைக்கு வந்திட்டார்.

ஆகா... சம்பந்தர் வாலுகள் என்ன செய்யப்போகினம்? 

கஜேந்திரகுமாரினது சுயநிர்ணய உரிமை சாத்தியமாகாது என்பவர்கள் குறிப்பாக கோசான் இது தொடர்பாக என்ன சொல்கிறீர்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப விக்கினஸ்வரன் இவர்களுக்குத்தான் வாக்களிக்கச் சொன்னவராக்கும். அதற்குள் கரி, நிழலி, அர்சுன் எல்லோருமே குய்யோ முறையோ என்று கத்தி அப்பப்பா ஒரே ரகளையாய் போய்விட்டது. 

முன்னரும் இதை பதிந்தேன் .சுயநிர்ணய உரிமை என்ற சொல்லை இஞ்ச கனபேர் இப்பதான் கேள்விப்படுகினம் போலிருக்கு .

எழுபதுகளில் தமிழர் விடுதலை கூட்டணியின் கேட்ட தீர்வு அதுதான் .

இங்கு வந்து பதிவிட முதல் எமது வரலாற்றை கொஞ்சம் வாசியுங்கோ பிள்ளைகள் .

அப்ப விக்கினஸ்வரன் இவர்களுக்குத்தான் வாக்களிக்கச் சொன்னவராக்கும். அதற்குள் கரி, நிழலி, அர்சுன் எல்லோருமே குய்யோ முறையோ என்று கத்தி அப்பப்பா ஒரே ரகளையாய் போய்விட்டது. 

குசும்பு?  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் 70 களிலும் 80 களிலும் இப்பவும் நிக்கினம். இப்போ 2015.

 

எழுபதுகளில் எமக்கு தெரிந்தது 2015 இலும் தெரியாமல் இன்னும் பலர் இங்கு இருக்கினம் .

என்ன சிவாஜி செத்துட்டாரா கேசுகள் போலிருக்கு ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுபதுகளில் எமக்கு தெரிந்தது 2015 இலும் தெரியாமல் இன்னும் பலர் இங்கு இருக்கினம் .

என்ன சிவாஜி செத்துட்டாரா கேசுகள் போலிருக்கு ?

என்ன எழுபதுகளில் உங்களுக்கும் தெரிஞ்சுட்டுதா????? :shocked:


அப்ப ஏனண்ணை எண்பதுகளில் கட்டுத்துவக்கோடை ரெயினிங்குக்கு போனனீங்கள்? :grin: :grin:

  • கருத்துக்கள உறவுகள்

70 தெரிந்தவர்கள் 80 இல் தமிழீழம் கேட்டவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினார்கள் 

அப்துல் கலாமே செத்துட்டார் இதுகூட தெரியல 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

70 தெரிந்தவர்கள் 80 இல் தமிழீழம் கேட்டவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடினார்கள் 

அப்துல் கலாமே செத்துட்டார் இதுகூட தெரியல 

முடியல......:grin:

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே, இங்கே சுரேஷ் பிரேமாச்சந்திரன்:  அடுத்த ஆயுத போராட்டமாம் ....!!!

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/08/150814_lankavt

திங்கள்கிழமை காலமை, "கூட்டமைப்பும்-தமிழ் தேசிய முன்னணியும் இணைந்தன...கஜேந்திரகுமார் இணைத்தலைவர்" என்று உதயன் செய்தி வராவிட்டாலே ஆச்சரியம் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப விக்கினஸ்வரன் இவர்களுக்குத்தான் வாக்களிக்கச் சொன்னவராக்கும். அதற்குள் கரி, நிழலி, அர்சுன் எல்லோருமே குய்யோ முறையோ என்று கத்தி அப்பப்பா ஒரே ரகளையாய் போய்விட்டது. 

இந்தக் கூட்டத்துக்குள், நிழலி எப்படி சேர்ந்தார்?:shocked:
"பன்றியுடன் சேர்ந்த... பசுவும், பவ்வி தின்னும்...." என்ற பழமொழி உண்மை போலுள்ளது.:grin: (பகிடிக்கு, யாரும் கோவிக்காதீங்க):)

சம்பந்தர் வேலை  மினக் கெட்டு... அறிக்கை விட,
அதை யாரும், சீரியசாக எடுக்காமல்... பகிடி விட்டுக் கொண்டு இருப்பது... வேதனை அழிக்கின்றது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

கஜே கோஸ்டியை வெல்ல வைப்பதற்கு..........

இனிப் பிரசாரம் செய்ய முடியாத நிலையில் விசில் குஞ்சுகளும் புலிவால்களும் தேர்தல் நாள்வரை புலத்தில் உள்ள தம் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தொலைபேசி மற்றும் தொடர்பாடல் கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு கஜே கோஸ்டிக்கு வாக்களிக்குமாறு கோரலாம். இதை ஒரு தடவை செய்யாமல் நாளொன்றுக்கு 3 தரம்  சாப்பிட்டுவிட்டு  அதன் பின்னர் செய்யவேண்டும். அப்படி கேட்டும் கஜே தோல்வியுற்றால் உங்களுக்கே அங்கு மதிப்பில்லை எண்டு ஆகி விடும். எப்பாடுபட்டாவது போடவையுங்கள். அட எங்கட சொந்தக்காரங்கள் எல்லாம் கனடாவுக்கும் யூரோப்புக்குமல்லோ எடுத்திட்டம் எண்டு அங்கலாய்ப்பது தெரிகிறது. :grin::cool:

எழுபதுகளில் எமக்கு தெரிந்தது 2015 இலும் தெரியாமல் இன்னும் பலர் இங்கு இருக்கினம் .

 

 

அண்ணா,  இதற்காகவா 70களை சொன்னீர்கள்?

சம்பந்தரும் சுயநிர்ணய உரிமைக்கு வந்திட்டார்.

ஆகா... சம்பந்தர் வாலுகள் என்ன செய்யப்போகினம்? 

கஜேந்திரகுமாரினது சுயநிர்ணய உரிமை சாத்தியமாகாது என்பவர்கள் குறிப்பாக கோசான் இது தொடர்பாக என்ன சொல்கிறீர்கள் ? 

உதுக்கு மேலால், வட்டுக்கோட்டை கேள்விப்படவில்லையா? சுயநிர்ணய உரிமைக்கு மேலால் தனிநாடு? தெரியாதா? அதுவும் இந்த தமிழரசு கட்சி சார்ந்த கூத்தமைப்புகள் தான்! 

உதனால்தானே, நாமெல்லாம் கடல் கடந்தோம்? 

70ம், 2015ம் தான் ஞாபகம் இருக்கும், 80களை தெரியாது இருப்பார்கள் என்று நினைத்து விட்டீர்களா?:grin:

வித்தாகிப்போன மாவீரர் தியாகங்களை மதித்து அரசியல் பலத்தை நிரூபிப்போம்

http://www.tamilwin.com/show-RUmtyISVSVlo4J.html

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு வெல்லும்

20 தொகுதிகளாவது கிடைக்கும்

கிடைக்கணும்

ஆனால் தமிழர்களது மனங்கள் கூட்டமைப்பிலிருந்து விலகி நிற்கிறது
ஒற்றுமை என்கின்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே தமிழர்கள் இந்தமுறை கூடடமைப்புக்கு வாக்களிப்பர்.  ஆனால் கூட்டமைப்பில்  உள்ளவர்களுக்கு ஒற்றுமை என்றால் என்னவென்றே தெரியாது.

அதைப்புரிந்து கொண்டு 

விட்ட தவறுகளை உணர்ந்து

புதியவர்கள்

மக்களுக்காக உழைக்க விரும்புவோர்

மக்கள் நலன்விரும்பிகள்

இளையவர்களை இணைத்துக்கொண்டு

தமிழர்களுக்கு ஒரு தீர்வைப்பெற முயலணும்

இதுவே தமிழர்களின் எதிர்பார்ப்பு

அதேநேரம் காலம் சில கசப்புக்களை தந்திருப்பதால்

பின்னால் சிலர் வளர்ந்திருப்பர்

அதையும் மக்கள் இந்தமுறை உணர்த்துவர்...

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.