Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்! சித்தார்த்தனை ஆதரித்து அனந்தி பேச்சு .

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்! சித்தார்த்தனை ஆதரித்து அனந்தி பேச்சு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்து அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கேட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தனை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கலந்து கொண்டார்.

இதேவேளை இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சித்தார்த்தன் பேசுகையில்:

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் பயணம் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும். தமிழ் மக்களுடைய அபிலாஷைகளையும் உணர்வுகளையும் தொடர்ந்து நசுக்கும் தென்னிலங்கைக் கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். ஏனெனில் தென்னிலங்கைக் கட்சிகள் பெரும்பான்மை இன நலன்கள், அபிலாசைகளை பிரதிபலிப்பவை. தமிழ் மக்களின் நியாயபூர்வமான உணர்வுகளை மதிப்பவை அல்ல. கடந்தகால வரலாறு இதனை நிரூபித்துள்ளது.

தேர்தல் போட்டியிடும் ஏனைய சில தமிழ் கட்சிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நோக்கோடு போட்டியிடுகின்றன. தமிழ் தேசியவாதிகள் என காண்பித்து தமிழ் மக்களின் வாக்குகளை சின்னாபின்னப்படுத்தி தமிழ் மக்களின் பலத்தை உடைத்துவிடுவதற்கு அவை செயற்படுகின்றன. இவர்கள் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாக இல்லையென்பது வெள்ளிடைமலை. இவர்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்த மாத்திரமே உதவும். எனவே இவர்களைத் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் தடையின்றி முன்னேறுவதற்கு அனைத்து தமிழ் மக்களும் கட்டாயம் வாக்களித்து ஆதரவை வழங்க வேண்டும் என்றார்.

http://www.malarum.com/article/tam/2015/08/14/11383/தமிழ்த்-தேசியக்-கூட்டமைப்பை-அமோக-வெற்றி-பெறச்-செய்யுங்கள்-சித்தார்த்தனை-ஆதரித்து-அனந்தி-பேச்சு-.html#sthash.Etzw4ACl.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

பதிவு . கொம் ,செய்தி போட்டால்தான் நம்புவோம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரனுக்கு... உள்ள மன அழுத்தங்களையும், பிறரின் நெருக்குதலையும் நாம் அறிவோம்.
இவர், பிரித்தானிய பிரதமர் கெமரூன்  ஸ்ரீலங்கா வந்த போது, இவரின் உணர்ச்சி பூர்வமான, ஆர்பாட்டங்கள்....... 
இவரின் மேல்..... நல்ல அரசியல் வாதியாக சந்தர்ப்பம் உள்ளது என்று, எதிர் பார்த்ததும் உண்மை.

இப்போ.... தேவையில்லாத, அறிக்கை. 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அனந்தி மீது தொடங்கி விட்டார்கள். அனந்தி மிக நிதானமாக குருபரனின் கருத்துக்கு செவிமடுத்து தமிழர் நலனுக்காக தன்னை மாற்றிக் கொண்டார். உண்மையில் அனந்திக்கு வாய்ப்பு தரப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் அனந்தியின் விட்டுக்கொடுப்பு பாராட்டப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியின், விட்டுக் கொடுப்பு என்று, சொல்வதை விட.... 
சும்மா.... இருந்து, சாப்பிட்டு...  திண்டு கொழுப்பெடுத்த.....  
சம், சும்  பம்மாத்து கோஸ்டியின், "பிளாக் மெயில்" என்பதாக தான் இருக்கும்.
அவங்க.... தவிச்ச  முயல் அடிப்பதில்... கை தேர்ந்தவர்கள். 

ஓ.... கதை அப்படி போகுதோ .

ஓ.... கதை அப்படி போகுதோ .

இந்த கதையை நானும் கேள்விப்பட்டிருக்கேன். :grin:

 

 

அனந்தியின், விட்டுக் கொடுப்பு என்று, சொல்வதை விட.... 
சும்மா.... இருந்து, சாப்பிட்டு...  திண்டு கொழுப்பெடுத்த.....  
சம், சும்  பம்மாத்து கோஸ்டியின், "பிளாக் மெயில்" என்பதாக தான் இருக்கும்.
அவங்க.... தவிச்ச  முயல் அடிப்பதில்... கை தேர்ந்தவர்கள். 

இவர் சோ சுப்பிமணியசுவாமி போல ஒரு கோமாளி

இவர் சோ சுப்பிமணியசுவாமி போல ஒரு கோமாளி

சோவுக்கு மண்டை இருக்கு நம்மளுக்கு?,.......  :)

நாங்கள் வரலரறு எழுதினால் நீங்கள் தாங்கமாட்டியல்.

போட வேண்டிய சிலரை விட்டுவிட்டதாகவும் சொன்னார்கள் .அது நடந்திருத்தால் போராட்டம் பயணித்திருக்கும் பாதையே வேறு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையே பிடிக்காதவர்கள் செய்தால் படுகொலை அட்டூழியம் படிக்காத கூட்டம்.
அதையே பிடித்தவர்கள் செய்தால் தீர்க்கதரிசனம்.

இதையே பிடிக்காதவர்கள் செய்தால் படுகொலை அட்டூழியம் படிக்காத கூட்டம்.
அதையே பிடித்தவர்கள் செய்தால் தீர்க்கதரிசனம்.

எனது பதிவுகள் பல வாசிக்கவில்லை போலிருக்கு .எந்த இடத்திலும் எக்காலமும்  அவர்களை  நியாயப்படுத்தவில்லை .

நியாயம்  கேட்டு நான்  உயிர் தப்பியதே  பெரியவிடயம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பதிவுகள் பல வாசிக்கவில்லை போலிருக்கு .எந்த இடத்திலும் எக்காலமும்  அவர்களை  நியாயப்படுத்தவில்லை .

நியாயம்  கேட்டு நான்  உயிர் தப்பியதே  பெரியவிடயம் .

 எல்லாம் வாசித்து கருத்தெழுதினாலும் உங்கள் பதில் கருத்து இதுவன்றி வேறுண்டோ..

ஒழுங்காக வாசிக்கவில்லை......இன்னொருதடைவை படியுங்கள்.....பள்ளிக்கூடம் போங்கள்.....இன்னும் திருந்தவில்லை....இன்னும் பல..

அதனால்  குருடன் பொண்டாட்டிக்கு அடித்தது போல் குருட்டுவாக்கில் எழுதி தாக்கவேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வரலரறு எழுதினால் நீங்கள் தாங்கமாட்டியல்.

ஏன்? அப்பு......:innocent:

கடைசியாய்.... கட்டின கோவணமும், இல்லாமல்.. ஓட ... ரெடியா?:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம் கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக் காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ உலகு.  :) 

  • கருத்துக்கள உறவுகள்

போட வேண்டிய சிலரை விட்டுவிட்டதாகவும் சொன்னார்கள் .அது நடந்திருத்தால் போராட்டம் பயணித்திருக்கும் பாதையே வேறு .

உண்மை தான், கூட்டமைப்பில் சம்பந்தரும் மாவையும் தான் மிஞ்சி இருப்பினம்.:)

எது எப்பிடியோ அறிவாளிகளை கண்டால் எங்களுக்கு பிடிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்பிடியோ அறிவாளிகளை கண்டால் எங்களுக்கு பிடிக்காது.

 என்ன செய்வது வரலாறு அதைத்தானே சொல்கிறது

படித்தவுடன் பசையுடன் ஒட்டிக்கொள்கிறார்கள்...:(:(

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தனுக்கு இரட்டை நாக்கு என்று அனந்தி கூறியதாக ஜேவிபி நியூஸ் இணையதளத்தில் சில வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

சித்தார்த்தனுக்கு அனந்தி ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பது சிறீதரனுக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே தமிழ்வின்னில் இவ்வாறான செய்திகள் போட முடியாது என்பதனால் தமிழ்வின் குழுவினர் நடத்தும் ஜேவிபி நியூஸ் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

தமிழ்வின் இணையத்தளம் நடத்துபவர் சிறீதரனின் சொந்த தம்பி என்பது செய்திகளை ஒழுங்காக படித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரிந்த விடயமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இந்தத் தேர்தலில் சித்தார்த்தனை நோக்கி புலம்பெயர் புலி இணையத் தளங்கள் கடுமையாக விமர்சித்து தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். சித்தார்த்தனுக்கு சாதாரணமாகவே மக்களின் ஆதரவு யாழ்ப்பாணத்தில் உள்ளது.

அவரும் அவரது லண்டன் வாழ் சகோதரியும் இணைந்து மக்களுக்கு பயன்பட தமது காணிகளை இலவசமாக கொடுத்தது தொடக்கம் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்தளவிலான பொருள் உதவி தொடக்கம் பண உதவி செய்து வருகின்றார்.

முன்னரும் இதில் குறிப்பிட்டிருக்கின்றேன் என நினைக்கின்றேன். தனக்கு மாகாண சபையால் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை அனைத்து ஊர் ஒன்றியங்களுக்கும் சமமாக பிரித்து கொடுத்து உள்ளார். மிக சாதாரணமாகவே அவர் மக்களோடு வாழ்ந்தும் நடமாடியும் வருகின்றார்.

அவரும் அவர் சார்ந்த புளொட் இயக்கம் கடந்த காலங்களில் விட்ட பிழைகளை சரி என்று அவர் எந்த இடத்திலும் வாதாடவில்லை. மாறாக, அவர் தனது மக்களுக்கு தன்னால் இயன்றளவில் ஏதாவது செய்ய விரும்புகின்றார்.

உண்மையினை கூறுவதனால், தற்போது இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்குள் சித்தார்த்தன் நேர்மையானவராகவே செயற்படுகின்றார். இதனை அங்கே உள்ள மக்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த காலங்களை மட்டும் விமர்சித்துக் கொண்டு இருப்பதால் நிகழ்காலத்தில் ஒருவன் செய்கின்ற நல்லவற்றை நாமே கொச்சைப்படுத்துகின்றோம்.

சித்தார்த்தரன் சார்ந்த புளொட் இயக்கம் செய்த பல பகிரங்கமாக உங்களுக்குத் தெரிவதால் அவரை அனைவரும் தாக்குகின்றீர்கள்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மாவை, சம்பந்தன், சுரேஸ் போன்றவர்கள் இயக்கம் இருந்த காலத்தில் அதாவது, 2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடேசன் அவர்கள் இந்தியாவுக்கு அவர்களை செல்ல வேண்டாம் என்று கூறியும் இந்தியா சென்று இந்திய கொள்கை வகுப்பாளர்களை சந்தித்த விடயத்தினை அனைவரும் இலகுவில் மறந்து விடக்கூடாது.

இங்கே அனைவரும் ஒன்றை மறக்காதீர்கள். அதாவது, சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் சுமந்திரனை விட மிகவும் விசம் வாய்ந்த பாம்பு ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தனுக்கு இரட்டை நாக்கு என்று அனந்தி கூறியதாக ஜேவிபி நியூஸ் இணையதளத்தில் சில வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

சித்தார்த்தனுக்கு அனந்தி ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பது சிறீதரனுக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே தமிழ்வின்னில் இவ்வாறான செய்திகள் போட முடியாது என்பதனால் தமிழ்வின் குழுவினர் நடத்தும் ஜேவிபி நியூஸ் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

தமிழ்வின் இணையத்தளம் நடத்துபவர் சிறீதரனின் சொந்த தம்பி என்பது செய்திகளை ஒழுங்காக படித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரிந்த விடயமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இந்தத் தேர்தலில் சித்தார்த்தனை நோக்கி புலம்பெயர் புலி இணையத் தளங்கள் கடுமையாக விமர்சித்து தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். சித்தார்த்தனுக்கு சாதாரணமாகவே மக்களின் ஆதரவு யாழ்ப்பாணத்தில் உள்ளது.

அவரும் அவரது லண்டன் வாழ் சகோதரியும் இணைந்து மக்களுக்கு பயன்பட தமது காணிகளை இலவசமாக கொடுத்தது தொடக்கம் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்தளவிலான பொருள் உதவி தொடக்கம் பண உதவி செய்து வருகின்றார்.

முன்னரும் இதில் குறிப்பிட்டிருக்கின்றேன் என நினைக்கின்றேன். தனக்கு மாகாண சபையால் ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை அனைத்து ஊர் ஒன்றியங்களுக்கும் சமமாக பிரித்து கொடுத்து உள்ளார். மிக சாதாரணமாகவே அவர் மக்களோடு வாழ்ந்தும் நடமாடியும் வருகின்றார்.

வரும் அவர் சார்ந்த புளொட் இயக்கம் கடந்த காலங்களில் விட்ட பிழைகளை சரி என்று அவர் எந்த இடத்திலும் வாதாடவில்லை. மாறாக, அவர் தனது மக்களுக்கு தன்னால் இயன்றளவில் ஏதாவது செய்ய விரும்புகின்றார்.

உண்மையினை கூறுவதனால், தற்போது இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்குள் சித்தார்த்தன் நேர்மையானவராகவே செயற்படுகின்றார். இதனை அங்கே உள்ள மக்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த காலங்களை மட்டும் விமர்சித்துக் கொண்டு இருப்பதால் நிகழ்காலத்தில் ஒருவன் செய்கின்ற நல்லவற்றை நாமே கொச்சைப்படுத்துகின்றோம்.

சித்தார்த்தரன் சார்ந்த புளொட் இயக்கம் செய்த பல பகிரங்கமாக உங்களுக்குத் தெரிவதால் அவரை அனைவரும் தாக்குகின்றீர்கள்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மாவை, சம்பந்தன், சுரேஸ் போன்றவர்கள் இயக்கம் இருந்த காலத்தில் அதாவது, 2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடேசன் அவர்கள் இந்தியாவுக்கு அவர்களை செல்ல வேண்டாம் என்று கூறியும் இந்தியா சென்று இந்திய கொள்கை வகுப்பாளர்களை சந்தித்த விடயத்தினை அனைவரும் இலகுவில் மறந்து விடக்கூடாது.

இங்கே அனைவரும் ஒன்றை மறக்காதீர்கள். அதாவது, சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் சுமந்திரனை விட மிகவும் விசம் வாய்ந்த பாம்பு ஆகும்.

நன்றி  கருத்துக்கு..

சித்தார்த்தனின் தற்போதைய சேவைகள் பற்றி காலம் பதில் சொல்லட்டும்

ஆனால் கூட்டமைப்பிலுள்ளவர்கள் பற்றி தாங்கள் சொல்வது உண்மை

அதை தாண்டியே நாம் செல்லவேண்டியுள்ளது

அதனாலேயே கூட்டமைப்பிலுள்ள இவர்கள் சார்ந்து எழுதவேண்டி வந்தது

மற்றும்படி தேர்தலில் கூட்டமைப்பு வெல்லணும் என்பதற்கு மக்களிடமிருக்கும் ஒரேயொரு காரணமான ஒற்றுமை என்பதற்கும்

கூட்டமைப்பிலுள்ளவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.