Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அப்பா எங்களை எல்லாம் விட்டுப் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. இன்னும் இரண்டு நாளில் அப்பாவின் முப்பத்தோராம் நாட்கடன். எல்லாப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளால் வீடு நிரம்பியிருக்க அம்மா கூட சிறிது கவலையற்று இருந்தது போல் தோன்றியது.
 
ஆளாளுக்கு அப்பாவுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்து தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு இருந்தனர். அப்பா பெரிதாகக் கோவிலுக்குப் போவதே இல்லை. ஆரம்பகாலங்களில் பக்கத்து ஊரில் இருந்த கோவிலுக்குத் தனியாகச் செல்ல விருப்பமின்றி அம்மா என்னை அல்லது அப்பாவை அழைப்பார். ஆரம்பத்தில் இரண்டொருநாள் போனபின் எனக்குச் சலித்துவிட்டது. அதன்பின் மாட்டியவர் தான் அப்பா. அப்பாவும் சில நாட்கள் சென்றதன் பின் போவதற்குத் தயங்க அம்மா வேறு யாரும் கோவிலுக்குப் போபவர்களுடன் போகவேண்டியாதாகி விட, அம்மாவின் கோவிலுக்குச் செல்லும் ஆசையும் குறைந்துவிட்டது.
 
பொதுவாக அப்பாவுக்கு உந்தப் பூசை புனஸ்காரங்களில் நம்பிக்கையே இல்லை. அதற்காக அம்மாவும் அப்பாவும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்றில்லை. வீட்டில் வைத்திருக்கும் சுவாமிப் படத்தின் முன் தினமும் காலையும் மாலையும் விபூதி பூசிக் கும்பிடுவார்கள். அவர்களைப் பார்த்து நாமும் அப்படியே பழகிவிட்டோம்.
என்னைப் நண்பர்கள் பலதடவை கேட்டிருக்கிறார்கள். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா என. எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கோவிலுக்குப் போய் வணங்குவது தான் முடியவில்லை என்பேன். நான் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை. எனக்கு என்மேல் நம்பிக்கை இருக்கிறது என்றெல்லாம் எனக்குள்ளேயே சொல்லிக் கொள்வததோடு சரி. சரி அப்பாவின் விடயத்துக்கு வருகிறேன்.
அப்பா பிற்காலத்தில் தமிழ் பாடசாலைகளில் இருந்த ஈடுபாட்டைக் கூட எங்களில் காட்டவில்லை என்னும் குறை எம் எல்லோருக்குமே உண்டு. காலை எழுந்து தன் கடன்கள் முடித்து தன் மேசையில் அமர்ந்தால் நாள் முழுதும் ஏதாவது எழுதியபடி பள்ளி அலுவல் தான் பார்ப்பார். மாலையில் சிறிதுநேரம் தொலைக்காட்சியும் பார்ப்பதுண்டு.
 
அப்பாவுக்கு பேரப்பிள்ளைகள் என்றால் உயிர். ஆனால் அவர் இறப்பதற்கு ஓரிரு வாரங்கள் இருக்கும் போது அவர் கண்ணை மூடிப் படுத்திருப்பார். பெரிதாக யாருடனும் கதைப்பதும் இல்லை. அவருக்கு ஏலாமல் இருக்கிறதாக்கும் என்று நாமும் அவருடன் கதைக்காமல் பார்த்துகொண்டு இருப்போம். அவர் பேரப்பிள்ளைகளைக் கூடத் தேடாதது மனவருத்தமாக இருந்தாலும் அவரின் தவத்தைக் கலைக்க மனம் வரவில்லை.
 
ஐயர் இரண்டு நாட்கள் பூசை செய்யவேண்டும் என்று கூற எனக்குக் கடுப்பானது. எதற்கு இரண்டு நாட்கள் ??வெளிநாடு என்றதும் எம்மை நான்றாகத்தான் இவர்கள் ஏமாற்றுகிறார்கள். இலங்கையில் ஒருநாள்தானே செய்வது என்று நான் பொரிய, அங்கு கீரிமலைக்குப் போய் துடக்குக் கழித்தவுடன் வீட்டைக் கழுவி எல்லாரும் சமைக்கத் தொடங்க மற்றவர்கள் வந்தபிறகு படைத்து தானம் குடுக்கிறது என்று என் தம்பி எனக்கு விளக்கம் கூற, ஏன் இங்கும் ஐயர் வந்து துடக்குக் கழிக்க நாம் சமைக்கலாம் தானே என்றேன்.

ஐயருக்கு நாள் முழுதும் எமது வீட்டில் நிக்கச் சரிவராது. அதுதான் இரண்டுநாள் வருவது என்றான். ஒருநாள் வருவதற்குக் காசு வாங்குவதில்லையா என்றேன். முதல் நாள் ஒரு நூறு யூரோவும் அடுத்த நாளுக்கு நூற்றைம்பது யூரோவும் தான் என்றான் தம்பி. நல்ல பிழைப்புத்தான் இவங்களுக்கு என்று முனுமுனுத்தபடி நான் நகர்ந்தேன்.

 
முதல் நாள் அந்தியோட்டிக் கிரியைக்கு பெரிதாக பொருட்கள் இல்லை மரக்கறிகள், வீபூதி, சந்தனம் போன்றவையும் ஒரு இருபது பொருட்களுடன் ஐயர் பூசை செய்து தீபம் காட்டி ஒரு மணித்தியாலத்துள் எல்லாவற்றையும் முடித்துக்கொள்ள எனது தம்பிமார் இருவரும் வேட்டிகட்டி பவ்வியமாக ஐயருக்கு முன் அமர்ந்திருக்க அவர் துடக்கைக் கழித்துவிட்டார்.

அதன்பின் எல்லோருக்கும் விபூதி சந்தனம் குங்குமம் வழங்கப்பட அம்மா வீபூதி வைத்துச் சந்தானம் வைத்து குங்குமம் வைக்கக் கையைக் கொண்டு போகத் தம்பி உடனே பின்னுக்கு இழுத்து வைக்கக் கூடாது என்று அம்மாவை உறுக்குவதுபோல் சொன்னான். எனக்குக் கோவம் வர ஏன் வைக்கக் கூடாது என அவனை உறுக்க, பார்த்துக்கொண்டு நின்ற ஐயர் விடுங்கோ நிவேதா என்றவுடன் நானும் எதற்கு அவரின் முன்னால் என்று பேசாமல் சென்றுவிட்டேன்.

 
என்னுள்ளே கோபம் சுடர்விட்டு மேலெழுந்தது. ஐயர் போனபின் உடனேயே அம்மாவுக்குக் குங்குமத்தை வைத்துவிட்டு, அம்மா நீங்கள் விரும்பினால் பொட்டு வையுங்கள் என்றேன். அம்மாவுக்கு எது விருப்பமோ அதை செய்யட்டும். நீங்கள் யாரும் அம்மாவைக் கொமான்ட் செய்ய வேண்டாம் என மற்றவர்களுக்கும் கூறிவிட்டு அலுவலைப் பார்க்கத் தொடங்கினேன். மற்றச் சகோதரர்கள் என்னை  ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இருந்தாலும் அவர்கள் ஆதரிக்காதது எனக்கு மனதுக்குச் சங்கடமாகத்தான் இருந்தது.
 
இத்தனைக்கும் என் தம்பி பத்து வயதில் எம்முடன் புலம்பெயர்ந்து வந்து ஐரோப்பியச் சூழலில் வளர்ந்தவன். அவனா இப்படி என என்னால் ஆச்சரியப்படாது இருக்க முடியவில்லை.
 
அடுத்த நாள் என்ன பொருட்கள் வேண்டும் ? எல்லாம் வாங்கிவிட்டாயா என்று கேட்டேன் தம்பியிடம். இந்தாங்கோ லிஸ்ட். எல்லாம் வாங்கிவிட்டேன். ஏதும் தவறிவிட்டதா என்று ஒருக்கா செக் செய்யுங்கள் என்று பொருட்கள் வைத்திருந்த அறைக்குக் கூட்டிப்போனான். லிஸ்டை விரித்துப் பார்த்த எனக்குத் தலை சுற்ற என்னடா ஐயர் ஒரு மாதத்துக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம்  எழுதிவிட்டிருக்கிறாரா என்று கேட்க எதுவும் கூறாமலே தம்பி சென்றுவிட்டான். பாகற்காய் பயிற்றங்காய் தொடக்கம் அத்தனை மரக்கறிகள், தேங்காய்கள், மஞ்சள், எள்ளு இப்படி நீண்டுகொண்டே போனது பொருட்களின் எண்ணிக்கை. போதாததற்கு பாய், தலையணை, குடை, செருப்பு என இதெல்லாமா கொடுப்பார்கள் என்று நான் பொருட்களைச் சரிபார்த்து முடித்தேன்.
 
அடுத்தநாள் காலை ஏழுமணிக்கு நாம் எல்லாம் தயாராய் இருக்க ஐயர் முன்னே வர அவரின் பின்னால் ஒரு வயோதிக ஐயரும் அவரின் பின் இன்னும் ஒருவரும் வந்தார்கள். உவர் யார் என்று மூன்றாவதாக வந்தவரைக் காட்டிக் கேட்க, எம்மைக் காரில் கூட்டி வந்தவர் என்று ஐயர் சொல்லிவிட்டு தன் அலுவல்களைப் பார்க்கத் தொடங்கினார்.
 
முதலே ஐயர் எழுதியிருந்த அகலமான பிளாஸ்டிக் பாத்திரத்தைக் கொண்டுவர ஐயர் அதற்குள் அரிசிமா, சர்க்கரை, நெய், தேன், வாழைப்பழம்,பால், கருப்பு எள் என்பவற்றைப் போட்டுக் கலந்து குழைத்து அதை உருண்டைகளாகப் பிடிக்கிறார். கட்டாயம் இவ்வளவும் போடவேண்டுமோ ஐயா என ஒன்றும் தெரியாததுபோல் கேட்க்கிறேன். ஓம் இது பிதிர்களுக்குப் பிடித்தமானது என்று அவர் கூற அக்கா பேசாமல் இரேன் என்பதாய் என் மூத்த தம்பி என்னை  ஒரு பரிதாபப் பார்வை பார்க்கிறான். சரி எனக்கு என்ன என்பதுபோல் நான் அதன் பின் ஒன்றும் கதைக்கவில்லை.
 
நீங்கள் அப்பாவுக்காக மூன்று தானங்கள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஆத்மா சாந்திபெறும். முப்பது முக்கோடி தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மாட்டித்தான் தேவர்களாக நினைப்பார்கள். இங்கு மாடு இல்லையே. எந்தத் தடையுமின்றி அப்பாவின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என்றபடி ஏகாதிஸ்டம், சமிண்டி, மாசியம் என்று ஏதேதோ எமக்கு விளங்காதது எல்லாம் ஐயர் சொல்லிக்கொண்டு இருந்தார்.
பின்னர் அவர் கூட்டிக்கொண்டு வந்த வயோதிகக் குருக்களையும் ஒரு துண்டை விரித்து இருத்தி இவர்தான் உங்கள் அப்பா என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அப்பாவுக்குச் செய்ய வேண்டியது எல்லாவற்றையும் அவருக்குச் செய்யுங்கள் என்றபடி மந்திரங்களைச் சொல்லி ஆரம்பித்தார்.

உங்கள் அப்பா நிட்சயமாய் சுவர்க்கத்துக்குத்தான் போவார். அவரை வடிவா வழியனுப்பி வையுங்கோ என்றுவிட்டு மரக்கறிகள் , அரிசி தானியங்கள் என்பவற்றைக் கொடுக்கச் சொல்லி, அப்பா சொர்க்கத்துக்குப் போகும் போது பசிக்கும் நேரம் சமைத்துச் சாப்பிட இது என்று அவற்றை அந்த வயோதிபரிடம் கொடுக்கச் சொல்ல தம்பி எடுத்து பவ்வியமாய்க் கொடுத்தான். சமைக்கப் பாத்திரம் வேணுமெல்லோ என்று என் மனதில் எழுந்த கேள்வியை என்னுள்ளேயே அமுக்கிவிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தன்.

அப்பா போட்டுக்கொண்டு போக வேட்டி சேட். அப்பாவுக்குக் குளிர்ந்தால் போர்க்க ஒரு  துணி. பாயும் தலையணையும் இரவில படுக்க. அடடா பெட்சீற்றை மறந்துவிட்டமே வாங்க என்றேன் நான். பரவாயில்லை என்றுவிட்டு ஐயர் தொடர்ந்தார். குடை ஒன்று வெயில் மழைக்குப் பிடிக்க. செருப்பு ஒருசோடி அப்பா சொர்க்கத்துக்குப் போற வழியில முள்ளுக் குத்தாமல் இருக்க என்றவுடன் என் வாய் என்னையறியாமல் சொர்க்கம் எண்டுறியள். பிறகு எப்பிடி கல்லு முள்ளு எல்லாம் அங்கே இருக்கும் என்று கேட்டுவிட்டது. அது அப்பிடித்தான் அம்மா நிவேதா என்றார் ஐயர். அம்மா திரும்பி பேசாமல் இரு என்றவுடன் வேறுவழியின்றி நான் பார்வையாளராக ஆனேன். 

Link to comment
Share on other sites

ம்ம்ம்... விளங்குது!  உங்கள் புண்ணியத்தால் ஐயர்மாரின் குடும்பம் ஒரு மாதம் சீவித்திருப்பினம். :) 

எழுதிய விதம் அருமை! ஏன் இப்ப கதைகள் எழுதுவதில்லை?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த பிதேசத்தில் அரசுக்கு வரிகட்டாத பிழைப்பு ஐயர் பிழைப்பு.......இவ்வளவும் கொடுத்து ஐயரின்ட காலில் விழந்து கும்பிட வேணும் என்றும் சில சனம் அடம்பிடிக்கும்.....

ஏன் இப்ப கதைகள் எழுதுவதில்லை?? 

கதை வாசிப்பதற்கு  யாழில் ஆட் கள் குறைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் சிக்கலான விடயம்தான்...!

ஆத்திக சம்பிதாயங்களை நீங்கள் விரும்பவில்லை...,  சரி நாத்திகமாய் இருக்கவும் உங்களால் முடியவில்லை...!!

Link to comment
Share on other sites

 

கதை வாசிப்பதற்கு  யாழில் ஆட் கள் குறைவு 

புத்தனுக்கு ஏன் இந்தக் கொலை வெறி???:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்து கருத்தைப் பகிர்ந்த உறவுகள் மீனா, புத்தன், சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி.

இந்தக் கதையை வாசித்துப் பலர் எதிர்மறைக் கருத்துக் கூறுவார்கள் என எண்ணினேன். இதுதான் இன்றைய யாழ் இணையத்தில் உள்ளோர்  நிலை.

புத்தன் கூறுவதில் உண்மை இருந்தாலும் நான் மனம் இல்லாமல் எழுதுவதில்லை. இனிமேல் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன் என நினைக்கிறேன் மீனா .

இது கொஞ்சம் சிக்கலான விடயம்தான்...!

ஆத்திக சம்பிதாயங்களை நீங்கள் விரும்பவில்லை...,  சரி நாத்திகமாய் இருக்கவும் உங்களால் முடியவில்லை...!!

நாத்திகராய் இருக்கவேண்டியதில்லை அண்ணா. சில மூடத்தனமான எமாற்று வேலைகளையும் செய்கைகளையும் தான் மனம் ஏற்றுக்கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலையும் உந்த ஐயர்மார்ரை போக்கு ஓவராய்த்தான் போய்க்கொண்டிருக்கு.......கொஞ்சம் பொறுங்கோ......அவையள் அடக்கி வாசிக்கவேண்டிய காலம் கிட்டடியிலை வரும். :innocent:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு,.. சுமே!

நீண்ட காலங்களின் முன்னர் சிட்னியில் ஒரு சம்பவம் நடந்தது!

ஊரில் ஐயர் மாருக்குப் பசுவைத் தானமாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு!

இங்கும் ஒருவர் தனது தந்தையாரின் திவசத்தைப் பெரிதாகச் செய்தார்! அவர் ஐயருக்குப் பசுவையும் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார்!

எங்கட சனங்களுக்கு.. எதிலும் குறை வரக்கூடாது பாருங்கோ!

அதை விட அவுசில் பசுக் கன்றை மிகவும் மலிவாக வாங்கலாம்!

அவர் பசுவை ஐயருக்குக் கொடுக்க... ஐயர் .. வேண்டாம் தம்பி.. இதை இஞ்சை வச்சுப் பராமரிக்கிறது எனக்குக் கஷ்டம்.. கவுன்சில் அது.. இது எண்டு இழுபட வேண்டி வரும்.. பக்கத்து வீட்டுக்காரனோட பிரச்சனை வரும்.. என்று இழுக்க...பெரியவர்கள் ..தம்பி நீ பசுவைக் கட்டாயம் குடுக்க வேணுமெண்டில்லை.. ஒரு பேப்பரில.. பசுவின்ர படமொண்டைக் கீறிக் கொடுத்தால்.. அது ஒரு பசுவைத் தானம் செய்ததற்குச் சமனாகும் என்று கூற...

வீட்டுக்காரருக்கு வந்ததே கோபம்..!

அப்படியென்றால் நானும் பேப்பரில ஒரு இருநூறு டொலர் எண்டு எழுதித் தட்டில வைச்சு ஐயருக்குக் கொடுக்கட்டா எண்டு கேட்க.....

ஐயரும் பறுவாயில்லைத் தம்பி.. நீ துண்டில எழுதித் தந்தாலும் பரவாயில்லை.. இப்ப அந்த மாட்டுக்கன்றை  அங்கால கொண்டு போனால் போதுமப்பு...!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டியள். ஐயருக்குப் பதிலா நீங்கள் வாங்கிக் கொண்டுபோய் வளர்த்திருக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமாரசாமி, புங்கை.

வெளிநாடுகளிலையும் உந்த ஐயர்மார்ரை போக்கு ஓவராய்த்தான் போய்க்கொண்டிருக்கு.......கொஞ்சம் பொறுங்கோ......அவையள் அடக்கி வாசிக்கவேண்டிய காலம் கிட்டடியிலை வரும். :innocent:

 

 

 

எழிய தமிழன் உலகத்தில இருக்கும் வரைக்கும் உது மாறப்போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து எழிய தமிழன் என்று பொத்தாம் பொதுவாய் எழுதுவது அழகல்ல. மல்லாந்து கிடந்து கொண்டு அண்ணாந்து உமிழ்வது போல் இருக்கு. அதுவும் நீங்கள் எழுத்தாளர் வட்டத்துக்குள் நிக்கும் ஒருவர். பேச்சிலும் எழுத்திலும் அவதூறு இல்லாமல் நாகரீகம் காக்க வேண்டும்.

 பி. கு:  உங்கள் தாயார் குங்குமம் எடுக்க ,தம்பி தடுத்ததும் தப்பில்லை.

பொதுவாக திவசத்துக்கு இரண்டு ஐயர்தான் வந்து செய்வினம். அதுதான் நடைமுறை. ( தட்சனையை ஐயர் உங்களிடமிருந்து வில்லங்கமாய்க் கேட்டுப் புடுங்கினார் என்டால் அவர் பிராமணரே இல்லை).

 

 

Link to comment
Share on other sites

தயவு செய்து எழிய தமிழன் என்று பொத்தாம் பொதுவாய் எழுதுவது அழகல்ல. மல்லாந்து கிடந்து கொண்டு அண்ணாந்து உமிழ்வது போல் இருக்கு. அதுவும் நீங்கள் எழுத்தாளர் வட்டத்துக்குள் நிக்கும் ஒருவர். பேச்சிலும் எழுத்திலும் அவதூறு இல்லாமல் நாகரீகம் காக்க வேண்டும்.

 பி. கு:  உங்கள் தாயார் குங்குமம் எடுக்க ,தம்பி தடுத்ததும் தப்பில்லை.

பொதுவாக திவசத்துக்கு இரண்டு ஐயர்தான் வந்து செய்வினம். அதுதான் நடைமுறை. ( தட்சனையை ஐயர் உங்களிடமிருந்து வில்லங்கமாய்க் கேட்டுப் புடுங்கினார் என்டால் அவர் பிராமணரே இல்லை).

 

 

வர வர சுமேக்கு எழுத்தில் நாகரீகம் தெரியாமல் வருகுது என்பது உண்மை :shocked: வந்து நொண்டிச் சாட்டுச் சொல்லாமல் திருந்துங்கள் சகோதரி:grin:

கணவர் இறந்த பின் கறுப்புப் பொட்டுப் போடுபவர்களைத் தான் கண்டிருக்கிறேன். 

பொதுவாகப் பிராமணர் புடுங்கச் சந்தர்ப்பம் கிடைத்தால் புடுங்குவது தானே :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டியள். ஐயருக்குப் பதிலா நீங்கள் வாங்கிக் கொண்டுபோய் வளர்த்திருக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமாரசாமி, புங்கை.

எழிய தமிழன் உலகத்தில இருக்கும் வரைக்கும் உது மாறப்போவதில்லை

எழிய தமிழனெண்டு ஆரை சொல்ல வாறியள்? கூட நிண்டு தானம் குடுத்திட்டு வெளியிலை வந்து எரிஞ்சு காறித்துப்புறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ...:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழிய தமிழனெண்டு ஆரை சொல்ல வாறியள்? கூட நிண்டு தானம் குடுத்திட்டு வெளியிலை வந்து எரிஞ்சு காறித்துப்புறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ...:mellow:

பிள்ளை 'எளிய'  (சாதரணமான..ஆடம்பரமில்லாத) தமிழன் எண்டு எழுதப்போக... மவ்வழவு (ழி) குறுக்கால வந்து கருத்தை மாத்திப்போட்டுது போல கிடக்குது!

அனேகமாய்க் கூகிள் தான் மாத்தி எழுதியிருக்கும்!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இது  போன்ற சந்தர்ப்பங்களில் 

கடமைக்கும்

பகுத்தறிவுக்கும் போட்டி வருவதுண்டு

அண்மையில் கூட அத்தாரின் துவசத்தில்

மருமகள் எல்லாவற்றையும் கொடுக்க

ஐயர் திருப்தியா என்று கேளுங்கோ என்று சொல்ல

அது பற்றி ஒன்றுமே தெரியாத எனது மருமக்கள் திருப்தியா ஐயா எனக்கேட்க

அவரும் திருப்தி என்று ஏதோ புரியாத மொழியில் ஏதோ எல்லாம் சொல்லிவிட்டு வாங்க

எனக்கு எதைப்பார்த்து திருப்தி என்றார்

பொருளையா பணத்தையா?

என வழமைப்படி சந்தேகம் எழ....

இப்படியே போகுது...

ஆனாலும் எனது இறப்புக்கு பின்னாலும்

எனது பிள்ளைகளும் என்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக

இதைத்தொடரத்தான் போகிறார்கள் என்பது மட்டும் என்னையும் எனது மருமக்களையும் பார்த்ததில் புரிந்தது...

 

நல்லதொரு விடயத்தைத்தொட்ட சுமேக்கு நன்றிகள்

மீண்டும் மீண்டும் தம்பி அக்கா சிக்கலையும் அம்மாவையும் இழுக்காமல் இருத்தல் நன்று.

பிள்ளை 'எளிய'  (சாதரணமான..ஆடம்பரமில்லாத) தமிழன் எண்டு எழுதப்போக... மவ்வழவு (ழி) குறுக்கால வந்து கருத்தை மாத்திப்போட்டுது போல கிடக்குது!

அனேகமாய்க் கூகிள் தான் மாத்தி எழுதியிருக்கும்!:grin:

உங்கள் பாதுகாப்பு வேலி பொருந்தவில்லையே..

எப்பொழுதும் எளிய (வறுமை) மக்கள் இது போன்று செய்வதில்லையே:shocked:

(ஏதோ நம்மால முடிந்தது):grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழிய தமிழனெண்டு ஆரை சொல்ல வாறியள்? கூட நிண்டு தானம் குடுத்திட்டு வெளியிலை வந்து எரிஞ்சு காறித்துப்புறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ...:mellow:

என்னையும் சேர்த்துத் தான் சொன்னது.

தயவு செய்து எழிய தமிழன் என்று பொத்தாம் பொதுவாய் எழுதுவது அழகல்ல. மல்லாந்து கிடந்து கொண்டு அண்ணாந்து உமிழ்வது போல் இருக்கு. அதுவும் நீங்கள் எழுத்தாளர் வட்டத்துக்குள் நிக்கும் ஒருவர். பேச்சிலும் எழுத்திலும் அவதூறு இல்லாமல் நாகரீகம் காக்க வேண்டும்.

 பி. கு:  உங்கள் தாயார் குங்குமம் எடுக்க ,தம்பி தடுத்ததும் தப்பில்லை.

பொதுவாக திவசத்துக்கு இரண்டு ஐயர்தான் வந்து செய்வினம். அதுதான் நடைமுறை. ( தட்சனையை ஐயர் உங்களிடமிருந்து வில்லங்கமாய்க் கேட்டுப் புடுங்கினார் என்டால் அவர் பிராமணரே இல்லை).

 

 

சரி மன்னிச்சுக் கொள்ளுங்கோ அண்ணா.ஆனால் அன்றே எல்லாருக்கும் முன்னால வைத்து நான் சொல்லிவிட்டேன் நான் இறந்ததும் என் உடல் உறுப்புக்களை தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்குமாறும் எனக்கு எக்காரணம் கொண்டும் ஐயரைக் கூப்பிட்டு ஒன்றும் செய்யக் கூடாது என்றும்

நன்றி விசுகுஅண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை 'எளிய'  (சாதரணமான..ஆடம்பரமில்லாத) தமிழன் எண்டு எழுதப்போக... மவ்வழவு (ழி) குறுக்கால வந்து கருத்தை மாத்திப்போட்டுது போல கிடக்குது!

அனேகமாய்க் கூகிள் தான் மாத்தி எழுதியிருக்கும்!:grin:

அதுதான் எல்லாம் கூகிளால வந்த வினை  :oO:

Link to comment
Share on other sites

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு,.. சுமே!

நீண்ட காலங்களின் முன்னர் சிட்னியில் ஒரு சம்பவம் நடந்தது!

ஊரில் ஐயர் மாருக்குப் பசுவைத் தானமாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு!

இங்கும் ஒருவர் தனது தந்தையாரின் திவசத்தைப் பெரிதாகச் செய்தார்! அவர் ஐயருக்குப் பசுவையும் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார்!

எங்கட சனங்களுக்கு.. எதிலும் குறை வரக்கூடாது பாருங்கோ!

அதை விட அவுசில் பசுக் கன்றை மிகவும் மலிவாக வாங்கலாம்!

அவர் பசுவை ஐயருக்குக் கொடுக்க... ஐயர் .. வேண்டாம் தம்பி.. இதை இஞ்சை வச்சுப் பராமரிக்கிறது எனக்குக் கஷ்டம்.. கவுன்சில் அது.. இது எண்டு இழுபட வேண்டி வரும்.. பக்கத்து வீட்டுக்காரனோட பிரச்சனை வரும்.. என்று இழுக்க...பெரியவர்கள் ..தம்பி நீ பசுவைக் கட்டாயம் குடுக்க வேணுமெண்டில்லை.. ஒரு பேப்பரில.. பசுவின்ர படமொண்டைக் கீறிக் கொடுத்தால்.. அது ஒரு பசுவைத் தானம் செய்ததற்குச் சமனாகும் என்று கூற...

வீட்டுக்காரருக்கு வந்ததே கோபம்..!

அப்படியென்றால் நானும் பேப்பரில ஒரு இருநூறு டொலர் எண்டு எழுதித் தட்டில வைச்சு ஐயருக்குக் கொடுக்கட்டா எண்டு கேட்க.....

ஐயரும் பறுவாயில்லைத் தம்பி.. நீ துண்டில எழுதித் தந்தாலும் பரவாயில்லை.. இப்ப அந்த மாட்டுக்கன்றை  அங்கால கொண்டு போனால் போதுமப்பு...!:grin:

நேரம் கிடைக்கும் போது

இவை பற்றி கொஞ்சம் விளக்கம் தரலாமே அண்ணா

எம் போன்றோர்களுக்கும்

எதிர்கால சந்ததிக்கும் பயன் தரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.