Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் இன்று ஆரம்பமாகிறது

Featured Replies

11879057_969618013060570_231260775297297

தேரடியில் காலையிலே
நான் அழுத வேளையிலே
நீ திரும்பி பார்க்கவில்லை முருகா
உன் காலடியில் நானிருந்து
கண் சொரிந்த போதினிலே
கண்டு மனம் இரங்கவில்லை முருகா
கண் திறந்து பார்க்கவில்லை முருகா
என்னை கண்டு மனம் இரங்கவில்லை முருகா

நல்லை நகர் வீதியிலே
நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லையற்று போகும் என்பார் முருகா
நான் வெள்ளை மணல் மீது
உருண்டு வேலவனே என்று அழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா

வேரிழந்து கண்களிலே
நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒழித்தாய் முருகா
நீ ஏறி வந்த தேர் இருக்கு
இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கையடா போய் ஒழித்தாய் முருகா

செந்தமிழால் வந்த குலம்
நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா
நீ வந்திருந்து பூச் சொரிந்தால்
வாசலிலே கை அசைத்தால்
வல்ல பக்தர்கள் வெல்லுமடா முருகா

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தா, ஆறு முகா....
கூட்டமைப்புக்கு.... 6´ம் இடத்தை, ஆறு வாக்குகளால்... கிடைக்காமல் செய்ததற்கு, நன்றி ஐயா. :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லைக் கந்தன் தனது தொகுதியிலும் கஜே கோஸ்டிக்கு நாமம் போட்டவன் அல்லோ! 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தன், கூட்டமைப்புக்கு... கடைசி சான்ஸ் கொடுத்துள்ளார். 
2016´க்குள் தீர்வு வரா விட்டால், 
2020´ம் ஆண்டு தேர்தலில்... கஜேந்திர குமார் அணியினர் வடக்கு, கிழக்கு தொகுதிகள் முழுக்க.... கைப்பற்றுவார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வேரிழந்து கண்களிலே
நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒழித்தாய் முருகா
நீ ஏறி வந்த தேர் இருக்கு
இழுத்து வந்த வடம் இருக்கு
எங்கையடா போய் ஒழித்தாய் முருகா

அன்றைய உன் கோவிலுக்கும்,

இன்றைய உன் கோவிலுக்கும்...,,

எத்தனை தான் வேறுபாடு முருகா?

எம்மைக் கொன்றவர்கள் ஏந்தி நிற்க..,

எம்மை வென்றவர்கள் வந்து நிற்க..,,

இன் முகத்தைக் காட்டி நின்றாய் முருகா!

நீ தின்றதுவும் எமது பணம்..,

நீ வாழ்வதுவும் எமது பணம்!

எப்படித்தான் தூங்குகிறாய் முருகா?

உப்பு உனக்கு ஒரு கேடா.. முருகா?

 

பிற்குறிப்பு: முருகா கருத்தைக் கருத்தாப் பாக்கிறதை விட்டிட்டு.. வேறு ஏதும் செய்து கிய்து போடாதையப்பு!.. தனிப்பட்ட முறையில உனக்கும் எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை!

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மதியாய் ஒளியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...!

 

பகிர்வுக்கு நன்றி நீலப்பறைவை...!

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய உன் கோவிலுக்கும்,

இன்றைய உன் கோவிலுக்கும்...,,

எத்தனை தான் வேறுபாடு முருகா?

எம்மைக் கொன்றவர்கள் ஏந்தி நிற்க..,

எம்மை வென்றவர்கள் வந்து நிற்க..,,

இன் முகத்தைக் காட்டி நின்றாய் முருகா!

நீ தின்றதுவும் எமது பணம்..,

நீ வாழ்வதுவும் எமது பணம்!

எப்படித்தான் தூங்குகிறாய் முருகா?

உப்பு உனக்கு ஒரு கேடா.. முருகா?

 

பிற்குறிப்பு: முருகா கருத்தைக் கருத்தாப் பாக்கிறதை விட்டிட்டு.. வேறு ஏதும் செய்து கிய்து போடாதையப்பு!.. தனிப்பட்ட முறையில உனக்கும் எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை!

 

 

இந்தத் திரு விழாக்காலத்தில் ஒரு முறையாவது மைத்திரியும் ரணிலும்
நல்லூர்க் கந்தனிடம் வந்து ஆசி பெற்றுச் செல்லும் காட்சியை நினைக்கவே புல்லரிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய உன் கோவிலுக்கும்,

இன்றைய உன் கோவிலுக்கும்...,,

எத்தனை தான் வேறுபாடு முருகா?

எம்மைக் கொன்றவர்கள் ஏந்தி நிற்க..,

எம்மை வென்றவர்கள் வந்து நிற்க..,,

இன் முகத்தைக் காட்டி நின்றாய் முருகா!

நீ தின்றதுவும் எமது பணம்..,

நீ வாழ்வதுவும் எமது பணம்!

எப்படித்தான் தூங்குகிறாய் முருகா?

உப்பு உனக்கு ஒரு கேடா.. முருகா?

பிற்குறிப்பு: முருகா கருத்தைக் கருத்தாப் பாக்கிறதை விட்டிட்டு.. வேறு ஏதும் செய்து கிய்து போடாதையப்பு!.. தனிப்பட்ட முறையில உனக்கும் எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை!

எனக்கும் தான்..

பிற்குறிப்பு: முருகா கருத்தைக் கருத்தாப் பாக்கிறதை விட்டிட்டு.. வேறு ஏதும் செய்து கிய்து போடாதையப்பு!.. தனிப்பட்ட முறையில உனக்கும் எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை!

இப்போ அண்டிப்பிழைப்போரே வாழ்வார்

மற்றவரெல்லாம்

காற்றே இல்லாமல் வீழ்வார்:grin:

நல்லூர் திருவிழா  என்றால் எனக்கு முதல் நினைவு வருவது அரை தாவணிகள் தான் .நம்மட பெட்டைகளை அரை தாவணியுடன் பார்க்கும் அழகு வேறு எந்த உடையிலும் இல்லை .எத்தனைகளுக்கு பின்னால் அலைந்தோம் .அது ஒரு கனாக்காலம் .

.எத்தனைகளுக்கு பின்னால் அலைந்தோம் .அது ஒரு கனாக்காலம் .

அண்ணை, எதாவது மாட்டினதோ இல்லை சும்மா திரிஞ்சு டயர் தேஞ்சதுதான் மிச்சமோ?

அரை தாவணி, சேலையின் அழகுக்கு ஈடேதும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய உன் கோவிலுக்கும்,

இன்றைய உன் கோவிலுக்கும்...,,

எத்தனை தான் வேறுபாடு முருகா?

எம்மைக் கொன்றவர்கள் ஏந்தி நிற்க..,

எம்மை வென்றவர்கள் வந்து நிற்க..,,

இன் முகத்தைக் காட்டி நின்றாய் முருகா!

நீ தின்றதுவும் எமது பணம்..,

நீ வாழ்வதுவும் எமது பணம்!

எப்படித்தான் தூங்குகிறாய் முருகா?

உப்பு உனக்கு ஒரு கேடா.. முருகா?

 

பிற்குறிப்பு: முருகா கருத்தைக் கருத்தாப் பாக்கிறதை விட்டிட்டு.. வேறு ஏதும் செய்து கிய்து போடாதையப்பு!.. தனிப்பட்ட முறையில உனக்கும் எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை!

 

 

நானும் உப்படிதான் ஒரு துணிவில கடவுளை திட்டிப்போட்டு .....பிறகு அவனிட்டையே பாவமன்னிப்பு கேட் கிறனான்:mellow:

நல்லூர் திருவிழா  என்றால் எனக்கு முதல் நினைவு வருவது அரை தாவணிகள் தான் .நம்மட பெட்டைகளை அரை தாவணியுடன் பார்க்கும் அழகு வேறு எந்த உடையிலும் இல்லை .எத்தனைகளுக்கு பின்னால் அலைந்தோம் .அது ஒரு கனாக்காலம் .

இப்பத்தய ஊர் பெடியள் சொல்லுறாங்கள் சுரிதார் போட்டு ஸ்கூட்டியில் போறதுகளை பார்க்கும் அழகே அழகு எண்டு

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உப்படிதான் ஒரு துணிவில கடவுளை திட்டிப்போட்டு .....பிறகு அவனிட்டையே பாவமன்னிப்பு கேட் கிறனான்:mellow:

 

மன்னிப்புக் கேட்காவிட்டால் இரவில் கெட்ட கெட்ட கனவுகள் வருமாம்.
முருகன் வேலுடன் ஆவேசமாக வந்து குத்திறதாகவும் கனவு வருமாம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்புக் கேட்காவிட்டால் இரவில் கெட்ட கெட்ட கனவுகள் வருமாம்.
முருகன் வேலுடன் ஆவேசமாக வந்து குத்திறதாகவும் கனவு வருமாம்.:grin:

உந்தச் சின்ன விசயத்துக்கெல்லாம் முருகனோ வேலோ வரமாட்டினம்...! சேவல் அல்லது பாம்புதான் வரும்...!  :unsure:  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.