Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்காததால் துரோகி ஆக்கபட்டேன்" TULF செயலாளர் வீ.ஆனந்தசங்கரி

Featured Replies

"புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்காததால் துரோகி ஆக்கபட்டேன்" TULF செயலாளர் வீ.ஆனந்தசங்கரி

 

 

"புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்காததால் துரோகி ஆக்கபட்டேன்"  TULF செயலாளர் வீ.ஆனந்தசங்கரி:-

 

விடுதலை புலிகள் தான் ஏக பிரதிநிதிகள் என கூறி இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நான் தான், அதனை சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து தலைவர் ஆகியுள்ளார் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
 
யாழில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில்,
 

கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி இந்தியாவில் இருக்கும் போதே என்னுடன் தொடர்பு கொண்டு ஆயுத வழியில் சென்ற நான் ஜனநாயக வழிக்கு திரும்ப போகின்றேன் எனக்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என கோரி இருந்தார்.

 
அவ்வேளை கருணா அம்மானை வெளியே விட்டது தவறு உடனே திரும்ப அழைத்து உங்களிடையே உள்ள வேற்றுமைகளை களையுமாறு கோரி நான் உடனே பிரபாகரனுக்கு கடிதம் எழுதினான்.
 
தற்போது கருணா வசிக்கும் வீடும் எனது வீடும் அருஅருகில் உள்ளன. அதனால் நாம் அடிக்கடி வெளியில் சென்று வரும் போது சந்திந்தித்து கொள்வோம் அப்போது பரஸ்பரம் நலன் விசாரித்து கொள்வோம். அதெல்லாம் முதலாம் கட்டம் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் அல்ல.
 
அவருக்கு என்னுடன் சேர்ந்து ஜனநாயக பாதையில் செல்ல விருப்பம் இருக்கின்றது அதனை வெளிப்படுத்தி உள்ளார். அதனை வைத்து முதலாம் கட்ட பேச்சு இரண்டாம் கட்ட பேச்சு மூன்றாம் கட்ட பேச்சு என கூறுவது அனைத்தும் முழு பொய்.
 
புதிதாக அமைப்பு ஒன்றினை தொடங்க முயற்சிக்கும் செய்தி கசிய தொடங்கியதும் அதனை இல்லாது ஒழிக்கவே இவ்வாறன திட்டமிட்ட வதந்தி பரப்பப்பட்டது.
 
இன்றைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு படிப்படியாக செல்லா காசாக போய்க்கொண்டு இருக்கின்றது. நான் எழுதிய மூன்று கடிதம் தொடர்பில் வெளிப்படுத்தி இருந்தால் என்றைக்கோ  தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்ல காசு ஆகி இருக்கும்.
 
யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்த வேளை ஏப்பிரல் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சங்கரமேனன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்திக்க அழைத்து இருந்தனர். அப்போது இவர்கள் கூறினார்கள் யுத்தத்தை நிறுத்துங்கள் சந்திக்க வருகின்றோம் என 
 
அன்று அவர்கள் போயிருக்க வேண்டும் அந்த நேரத்தில் ஏன் கூப்பிட்டு இருப்பார்கள் விருந்து கொடுக்கவா ? போயிருந்தால் இந்திய அரசாங்கம் ஏதேனும் வழி சொல்லி இருக்கும்.இந்தியா அரசாங்கமா  யுத்தத்தை நடத்தியது. யுத்தத்தை நிறுத்த, அவர்கள் அன்று போகாது விட்டது, தவறு.
 
இன்றைக்கு லட்ச கணக்கான மக்கள் செத்து இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் பொறுப்பு.
 
யுத்தம் முடிவடைந்த காலம் தொடக்கம் ,விடுதலை புலிகளை விசாரணை செய்ய கூடாது என கூறி வருகின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளையும் விசாரணை செய்ய வேண்டும் என கூறி வருகின்றது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கூறி இருந்தார் விடுதலை புலிகள் தான் பெருமளவான மக்களை கொன்றார்கள் என்று. அந்த ஒரு அறிக்கை போதும் அவர்களுக்கு வாக்களித்த  தமிழ் மக்களுக்கு அவர்கள் செய்த துரோகத்திற்கு.
 
விடுதலை புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக ஏற்றுகொள்ள முடியாது என்று நான் சொன்ன ஒரு வார்த்தையால் தான் நான் இன்று துரோகி ஆக்கப்பட்டேன்.
 
ஆனா இனப்பிரச்சனை தொடர்பில் பேச வேண்டும் என்றால் அது விடுதலை புலிகளுடன் தான் பேச வேண்டும் என நான் பலதடவைகள் கூறி இருக்கிறேன்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒரு நாள் விடுதலை புலிகளை நானும் ஏக பிரதிநிதிகளாக ஏற்கவில்லை தான் அதனை நான் வெளியில் கூறவில்லை . நீ ஏன் கூறுகின்றாய் என கேட்டார்.
 
என்ன நோக்கத்திற்காக விடுதலை புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைவதற்கு நான் அவர்களை ஏக பிரதிநிதிகளாக ஏற்க தயார் என்று கூறி இருகின்றேன்.
 
ஆனா சிலர் ஊடகங்களை நடாத்தி இல்லாத பொல்லாத செய்திகளை திரிபு படுத்தி தங்கள் எண்ணம் போல் அழிவு பாதையில் கொண்டு செல்கின்றார்கள்.
 
 தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது இருந்த நம்பிக்கையினை இழந்து விட்டேன் அதான் பல்வேறு அணிகளை ஒன்று திரட்டி புதிய அணி ஒன்றினை உருவாக்க போகின்றேன்.
 
அதற்கு பல்வேறு தரப்பினை சந்தித்து பேசியுள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட , அவ்வாறு ஒரு புதிய அணி உருவாகும் போது அதற்கு கருணா வர ஆசைப்பட்டால் அதனை நான் தடுக்க மாட்டேன்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் சேனாதிராஜா ஆகியோரை சந்தித்தால் நான் கதைக்க மாட்டேன். அவர்கள் எல்லோரும் துரோகம் செய்தவர்கள். எனக்கு அல்ல அவர்களுக்கு வாக்களித்த தமிழ் இனத்திற்கு,
 
தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது. ஒரே ஒரு சொல்லு விடுதலை புலிகள் தான் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லி இருந்தால் நான் தான் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர். சம்பந்தன் உட்கார்ந்து இருக்கும் கதிரை என்னுடையது.அதனை குறுக்கு வழியில் பறித்து அவர் இன்று இருக்கின்றார்.
 
இப்போ சொல்லுறார் அது வாய் தடுமாறி சொல்லுறாரோ அல்லது தனக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என சொல்லுறாரோ தெரியவில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது நாங்கள் என்று அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள எல்லோரும் அதனை மாறுகின்றார்கள்.
 
தங்களை வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் பிழைக்கின்றார்கள் என்பதனை புலிகள் உணர்ந்து இருக்க வேண்டும். புலி தான் செய்தது புலி தான் செய்தது என்று கூறி அவர்கள் பிழைகின்றார்கள்.
 
 இதுவரை அடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைந்த நன்மை ஆனந்தசங்கரியை துரோகி ஆக்கியது மட்டுமே, அதன் ஊடாக தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்கள். என தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு குழம்பிப் போய் இருக்கும் குட்டையை மேலும் மேலும் குழப்புறாங்கள் அப்பா.. 

இவர் போன்ற அரசியல்வாதிகள்  எல்லாம் துவண்டு போய் இருக்கும் தமிழர்களுக்கு உண்மையான அரசியல் சேவைகளை செய்வார்களாயின்???  சிங்களவர்கள் கொஞ்சமேனும் கிள்ளி தருவார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகள் உருவாக்கப்படுவதில்லை!

மாறாக......, தாங்களாகவே உருவாகின்றார்கள்!

பின்னர்... அவர்கள் மனச்சாட்சி அவர்களை உறுத்தும் போது, 'காரணம்' தேடுகிறார்கள்!

மேலே சசி சொன்னது போல.. இவர்கள் ஏதாவது பிராயச்சித்தம் செய்வதே, கொஞ்சமாவது இவர்களது 'காவி வேட்டிகளை' வெள்ளையாக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

இவரையும் இணைத்துத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானது, புலிகள் இவரை கூட்டமைப்பின் தலைவராக்கவில்லை என்றவுடன் பிரிந்து விட்டார். 

இவர்கள் எல்லாம் எப்பவோ அரசியலை தொலைத்தவர்கள் .தேர்தலில் கட்டு காசே எடுக்கமுடியாமல் தவித்தவர்கள் அவர்களை கணக்கில் எடுக்காது விட்டிருந்தால் எப்போதோ போய் தொலைந்திருப்பார்கள் .

விதி யாரை விட்டது. சும்மா கிடப்பவர்களையும் தட்டி எழுப்பி இப்ப அவர்களின் கதையை வேறு கேட்க வேண்டிக்கிடக்கு .

இவற்றை கூட விளங்காமல் செத்த பல்லியை அடிக்க வெளிக்கிட்டதால் வந்த வினை .இது சங்கரிக்கு மட்டும் அல்ல இன்னும் பலருக்கும் பொருந்தும் .

நான் இந்த மண்டபத்துக்கு வரும்போழுது எனது நண்பர் ஒருவர் சொன்னார் ஆனந்தசங்கரி ஐயாவும் இந்தக் கூட்டதுக்கை வந்து இருக்கிறார் எண்டு. அவர் வந்திருக்கிறது நல்லது .ஆனால் அவரை எங்களுக்கு ஒருக்கா அறிமுகப்படுத்தி விட்டிங்களெண்டால் ஆராவது! ஏனெண்டால் ஐயாவை ஒருக்கா கட்டிப்பிடிச்சு கொஞ்ச வேணுமெண்டு ஆசையா இருக்கு

இந்த நையாண்டியை அன்ரன் பாலசிங்கம் சொல்லும்போது லண்டன் எக்செல் மண்டபத்தில் பலத்த விசிலொலி,சிரிப்பொலி, கரகோசம் எழுந்தது.

ஆனந்தசங்கரி ஐயா கொழும்பிலை சொன்னாராம் நான் இந்த உலகமெல்லாம் சுத்திக்கொண்டு திரியிறன், என்ரை ஊர் சொந்த ஊர்,கிளிநொச்சிக்குப் போக முடியேல்லையெண்டு!
அவர் ஏன் கிளிநொச்சிக்குப் போக அந்தரப்படுறார் எண்டு எங்களுக்குத் தெரியும்

கிளிநொச்சிலை புளியம் பொக்கணை எண்டு கிராமம் இருக்கு. அங்கை இவருக்குத் தெரிஞ்ச கிழவியள் இருக்கினம். இவர் அங்கை போய் உடும்பு றைச்சி திண்றவராம். அதுக்காவண்டித்தான் அங்கை போக அந்தரப் படுகிறார் போலை கிடக்கு.

நாங்கள் அவருக்குச் சொல்ல விரும்பிறம் ஐயா நீங்கள் கிளிநொச்சிக்கு எப்பவும் வரலாம்.அங்கை பைவ் ஸ்ரார் கொட்டல் ஒண்டு பொட்டம்மான் கட்டி வச்சிருக்கிறார். அங்கை வந்தால் நல்ல சாப்பாடு கிடைக்கும்.

பாலசிங்கத்தின் அசிங்கமான இந்தப் பேச்சுக்கு எத்தனை கரகோஷம், கைதட்டல் ,சிரிப்பொலி, ஹரி ஆனந்தசங்கரியின் பெற்ற தந்தையை அவமதிக்கும் இந்தக் கூட்டத்துக்கு அவரது மகன் தனது எம்பி பதவிக்காக ஆதரவளிக்கிறார்.

கிளிநொச்சிக்கு செல்ல முடியாதிருந்த ஹரியின் தந்தையார் கிளிநொச்சிக்கும் சென்று தனது சொந்த வீட்டிலிருந்து கொண்டு இன்று மரணமடைந்த புலி உறுப்பினரான தமிழினிக்கும் பரந்தனுக்குச் சென்று அஞ்சலி செய்திருக்கிறார்..ஆனால் அனரன் பாலசிங்கம் இன்று உயிரோடு இல்லை.

சங்கரி ஐயா தனது சொந்த ஊரான கிளிநொச்சிக்குச் செல்லும் ஆசையை நிறைவேற்றி வைத்தவர் மாண்புமிகு மகிந்த ராஜபக்ச. சங்கரி ஐயா மகிந்தவுக்கு ஆயுள் பூராவும் கடமைப் பட்டவர்

-

இவரை விட ஆனந்தசங்கரி நூறு மடங்கு திறம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில சனம் கீறின கோட்டைத்தாண்டி இன்னும் வெளியிலை வரேல்லை எண்டது நல்லவடிவாய்த்தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி ஏன் தமிழினிக்கு அஞ்சலி செலுத்தினார் என்று விளங்காத கூட்டங்கள். வளர அறிய இன்னும் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி சனம் ஏன் ஐயாவை இன்னமும் பாராளமன்றம் அனுப்பவில்லை.சரியான மொக்கு கூட்டம்

பாவனைக்காலம் தாண்டி கனகாலம், இதுக்கெல்லாம் மைக் பிடிக்க ஒரு கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் எண்ணத்தையும் வெட்டிப் பிளக்கலாம். ஜனநாயகத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டால், அதுவும் பல முறை, அதற்கு காரணம் உண்டு.

ஆசையை நிறைவேத்தி வைத்தவரே  ஜனநாயகத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு அவலப் பட்டுக் கொண்டு திரியிறார்.... 

சங்கரியும் சரி, மாண்பு மிகு மகிந்தரும் சரி... மக்கள் உணர்வு என்ன என்று புரியாமல் அரசியல் செய்தவர்கள். 

இருவர் அரசியலுக்கும் புலிகள் தேவைப் பட்டார்கள். ரணிலின் சமீப கதைப் படி, மகிந்தருக்கு மிக அதிகமாக தேவை இருந்தது... தேர்தலில் வெல்வதற்க்கு.

பொதுக் குழுக் கூட்டத்தினைக் கூட்டினால். தனது தலைவர் பதவியினை  பறித்து விடுவர் என்று, வம்படி பண்ணி கூட்டாமலே இருந்ததால், இருப்பதால், கூட்டமைப்பு உருவானது. இன்னும் கூட்டாமலே, சாகும் வரை தலைவர் என்னும் தந்தை செல்வா காலத்து விதியினை வைத்து அருமையான, மக்கள் அறிந்த கட்சியினை தன்னுடன் புதை குழிக்கு கொண்டு செல்லப் போகும் ஒருவர் சங்கரி.

சங்கரி, ஹரிக்கு தந்தையாக எந்தக் கடமையையும் செய்யவில்லையே..

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.