Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்தார்த்தனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் : மாவை எம்.பி

Featured Replies

சித்தார்த்தனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் : மாவை எம்.பி
 
 
சித்தார்த்தனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் : மாவை எம்.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தொடர்பாக விசாரணை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மவை சேனாதிராஜா தெரிவித்தார்.
 
தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிடம் கோரியுள்ளது. 
 
புளொட் அமைப்பின் தலைவர் சித்தர்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் அனுமதியின்றி அந்த அமைப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா குழம்பத்தொடங்கிட்டார்

தனது கட்சியில் தலைவர் பதிவிக்கு அடுத்த பதவியான உபதலைவரே பங்கு பற்றிய ஒரு மகாநாட்டில்

அதுவும் இவரது கட்சி சார்பாக பங்கு பற்றிய ஒரு மகாநாட்டில்

கூட்டாளிக்கட்சியின் தலைவர் பங்கு பற்றியதை விசாரிக்கணுமாம்...?

இது என் பிள்ளை செய்தால் அது குறும்பு

அதையே பக்கத்து வீட்டுக்காறனின் பிள்ளை செய்தால் குளப்படி என்பது போலிருக்கு...

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக்கட்சி சம்சும்மாவை கும்பலில் தலையிட்டார்கள் இன்னும் அரசியல்கட்சியாகப்பதிவு செய்யப்படவில்லை.அப்படி இருந்தும் முதலமைச்சரைக்கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சுமத்திரன் கூறுகிறார்.சித்தார்தனை விசாரிக்க வேண்டும் என்று மாவை கத்திறார்.நாலு படித்த மனிதர்கள் அரசியல் தீர்வில் என்ன என்ன விடயங்கள் இடம்பெற வேண்டும் ஒரு வரைபை வரையவிருக்கிறார்கள்.அதற்குள் விரும்பியவர்கள் வந்து கருத்துச் சொல்லலாம்.அரசியல் தீர்வு என்பது தமிழ்மக்களின் ஒன்று பட்ட அரசியல் விருப்பு ஆகும் சமசும்மாவை 3 பேரும் சேர்ந்து இதுதான் தீர்வு ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாது.போகிற போக்கில் இந்த 3 பேரைம்தவிர மற்றவர்கள் எல்லாம் இதை வரவேற்கபட போகிறீர்கள் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப விளங்குது போராளிகள் ஏன் துவக்கை எதிரிக்கு எதிராக மட்டுமன்றி இவர்களை நோக்கியும் நீட்டினார்கள் என்று.

தானும் படாதுகள் தள்ளியும் படாதுகள் நிலையில் சம் சும் மாவை கும்பல்.. செய்வதறியாது செல்லும் திசை அறியாது நிற்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுக்க வக்கற்று நின்றதில் இருந்து அரசியல் கைதிகள் விடுதலை.. இராணுவ அகற்றம்.. நில விடுவிப்பு என்று எங்கும் இவர்கள் மக்களை வாக்குறுதி அளித்து ஏமாற்றியதை தவிர சாதித்தது என்றால்.. ஒற்றுமையாக இருந்த தமிழ் தலைவர்களை ஒரு சிலரின் சுயநலத்துக்காக.. அவர்களின் சிங்கள விசுவாசத்தை முன்னிலைப்படுத்தி.. தமிழ் மக்களின் நலனை பின்னிலைப்படுத்தி கூட்டமைப்பில் இருந்து தூக்கி எறிந்தமை உள்ளிட்ட சர்வ நாசகாரச் செயல்களே தவிர வேறில்லை.

சம் சும் மாவை கும்பல்.. இப்படி தமிழ் மக்களின் பலத்தை சிதைக்கும் வகையில்... மக்கள் குரலை மதிக்காமல் நடக்குமானால்.. இவர்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்களால் மோசமாக தண்டிக்கப்படும் நிலைமையே தோன்றும். எப்பவும் சிங்களவன் கூட இருந்து கள்ள வாக்குச் சேகரிக்க உதவுவான் என்று நம்பி அரசியலை தமிழ் மக்களிடம் முன்னெடுக்க முடியாது என்பதை சம் சும் கும்பல் அறிந்து கொள்வது அவசியம்.

மக்கள் தங்கள் குரலை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். மாறாக சம் சும் கும்பல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு தேர்தலில் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே பெருமளவில் வாக்களிப்பர்.. தமிழ் மக்களின் வாக்கு பலம் சிதையக்கூடாது எனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துங்கள் என்ற புலிகளின் கோரிக்கைக்கு மக்கள் இன்றும் மதிப்பளிப்பதை தெரிந்து கொண்டு சம் சும் மாவை கும்பல் சிங்கள ஹிந்திய விசுவாச அம்சங்களை முக்கியப்படுத்தி.. தமிழ் மக்களிடம்.. தேர்தல் விஞ்ஞாபனம் என்று கூறித் திணித்தவற்றில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாதகமானவற்றை கொண்டு.. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற போர்வையில்..அரைகுறை விடயங்களை... அமுல்படுத்தி தமிழ் மக்களை மேலும் மேலும் இலங்கைத் தீவில் அடிமைகளாகவும் அனாதைகளாகவும் ஆக்க அனுமதிக்க முடியாது.

அண்மையில் புலிகளின் மூத்த தளபதி தயாமோகன் குறிப்பிட்ட விடயம்... மென்போக்கு சிங்கள ஆட்சியாளர்கள் என்று தம்மை காட்டிக்கொள்ள விரும்புவர்கள்.. எமது மக்களின் வாக்கைக் கொண்டே தமக்கு சாதகமானவர்களை எம் மத்தியில் மக்கள் பிரதிநிதிகள் ஆக்கி... எம் மக்கள் மீது சிங்கள இனவெறி அரசுகள் மேற்கொண்ட.. இனப்படுகொலை என்பதையே நீர்த்துப்போகச் செய்யும் பயங்கரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் எடுப்பது இவ்வேளையில் மிகவும் அவசியம். இதனை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கருத்தில் கொண்டு அவதானமாக செயற்படுவதோடு..

தமிழ் மக்கள் பேரவை என்ற மக்கள் நேரடியாக கருத்துச் சொல்ல அமைக்கப்படும் சிவில் அமைப்புக்களை பலப்படுத்துவதுடன் மக்கள் அறியக் கூடிய வகையில்.. வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அரசியல் அணுகுமுறைகளை ஊக்குவிக்கவும் வேண்டும்.

ஒளிவுமறைவுச் பேச்சுக்கள்.. தமிழ் மக்களிடையே.. ஒற்றுமையை சிதைக்கும் பேச்சுக்கள்.. அறிக்கைகள்.. நடவடிக்கைகள்.. தமிழ் மக்களிடம் அவர்கள் விரும்பாததை திணிக்கும் நகர்வுகள்.. தமிழ் மக்களின் பொது விருப்புக்கு மதிப்பளிக்காத நிலைமை.. தமிழ் மக்களின் பொது நலனுக்கு எதிரான நகர்வுகள்.. தமிழர் தேசம்.. அடையாளம்.. மொழி.. பண்பாட்டை விட்டுக்கொடுக்கும் செயற்பாடுகள்.. சுயநலச் சோர அரசியல் இவை தமிழ் மக்கள் மத்தியில் வர அனுமதிக்கவே கூடாது. அதனை எவர் கொண்டு வந்தாலும் அது வன்மையாக மக்களாலும் மக்கள் சார்ந்தோராலும் எதிர்க்கப்படுவதோடு அவ்வாறு செயற்படுபவர்களை அரசியல் சமூகக் களத்தில் புறந்தள்ளி வைக்க வேண்டிய சூழலை உருவாக்க மக்கள் பின்நிற்கக் கூடாது. அதேவேளை மக்கள் விரும்பியதை வேண்டுவதை களத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்டும் ஆணித்தரமான செயற்பாடுகளும் அவசியம்.

அதுவே தமிழ் மக்கள் இவ்வளவு காலமும் தாங்கிய வேதனைகளுக்கு முடிவாகவும் தீர்வுகளை கொணரவும் சம்பந்தப்பட்ட தரப்புக்களை தூண்டும். tw_blush:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆணியை புடுங்க போறாங்கள் போல ஹி ஹி

3 minutes ago, nunavilan said:

ஆணியை புடுங்க போறாங்கள் போல ஹி ஹி

ஆணியை எப்பவோ புடுங்கீற்றாங்கள். இப்ப ஆணி குத்தின காயத்துக்கு என்ன மருந்து, யார் மருந்து போடுவது என்றுதான் அடிபிடி.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சொல்ல் வாற ஆணி வேறை பாருங்கோ

ஆக மொத்தம் தமிழர் தரப்பிற்குள் புடுங்குப்பாடு துவங்கி விட்டது. சிங்களம் வழமை போல மிகச்சாதூர்யமாக காய் நகர்த்துகிறது. 
எங்கள் தரப்பில் வழமை போல விசிலடிப்புகளும் துவங்கி விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன தங்கமலை இரகசியமோ?  கஜேந்திரன் தோற்ற பின் கொஞ்சப்பேர் விசிலடித்தால் கூட்டமைப்பில் இருந்து சிலர் பிரியும் போதும் சிலர் விசிலடிப்பார்கள் தானே??

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு படுங்குப்பாடுகளுக்கும் மூல காரணம். சம்பந்தன். தமிழர்கள் ஒற்றுமையில்லாமல் பிரிந்து நிற்பதற்குக் காரணம்(2009 பின்).சம்பந்தன் 2009 வரைக்கும் மிகப்பெரும்பாலான தமிழ்மக்கள் ஒற்றுமையாக ஓரணியில்  நின்றார்கள் அப்போ அதைக் குழப்பிக் கொண்டு நின்றவர்களேஇப்பொ சம்பந்தனுக்கு ஆதரவாக நிற்பதாகவும் ஒற்றுமையைக் குலைக்கக் கூடததென்றும் வேதம் ஓதும் சாத்தான்கள்.

2 hours ago, nunavilan said:

இதென்ன தங்கமலை இரகசியமோ?  கஜேந்திரன் தோற்ற பின் கொஞ்சப்பேர் விசிலடித்தால் கூட்டமைப்பில் இருந்து சிலர் பிரியும் போதும் சிலர் விசிலடிப்பார்கள் தானே??

ஒருவரும் பிரியமாட்டார்கள் பிறகு கட்டுகாசும் கிடைக்காது என்று அவர்களுக்கு நன்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

அதெண்டால் உண்மை தான்.குறிப்பாக பல முறை மண் கவ்விய சித்து அண்ணைக்கு வடிவாய் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பீடைகள் எல்லாம் வெளியேற்றப்பட்டு தமிழரசுக் கட்சிதான் கூட்டமைப்பு என்ற நிலைக்கு வரவேண்டும். அதன் பின்னர் இந்தப் பீடைகள் பாராளுமன்றப் போவதுக்கு தங்களுக்குள்ளேயே அடிபட்டுப் பிரிந்து நிற்கவேண்டும். <_<

  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறையில் மாறியெல்லோ நடக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.