Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்காதீர்கள்'

Featured Replies

'முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்காதீர்கள்'
 

article_1453723787-aaaaaaaaaaaa.jpg

-ஏ.எம்.ஏ.பரீத்

தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சரிடமும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரிடமும் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். வடமாகாணத்தில் முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, சுமார் 25 வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் மீளக்குடியேற இங்கு வரும்போது எத்தனை தடைகள், எதிர்ப்புக்கள், சவால்கள் ஆகியவற்றுக்கு முகம்கொடுக்கின்றார்கள் என்பதை உங்களில் மனச்சாட்சி உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால்,  அந்த மக்கள் இங்கு குடியேற வரும்போது முஸ்லிம்கள் காணியைப் பிடிக்கின்றார்கள், காட்டை அழிக்கின்றார்கள், பிற மாவட்டத்திலிருந்து குடியேற வருகின்றார்கள் என்று கூறும் சில அரசியல்வாதிகள் இந்த மண்ணில் போற்றப்படுகின்றார்கள், பாராட்டப்படுகின்றார்கள். இதுவே எனக்கு வேதனையாக இருக்கின்றது. நாம் காணி பிடிக்கும் சமூகம் அல்ல.

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு வவுனியாவுக்கு ஓடோடி வந்தவர்களை அரவணைத்து மெனிக்பாமில் குடியேற்றியவன் நான். அரசாங்க அதிபர்களான வேதநாயகமும் பத்திநாதனும் எனக்கு இந்த விடயத்தில் கைகொடுத்து உதவினர். அப்போது எந்த இணைத்தலைமையும் இருக்கவில்லை.தன்னந்தனி தலைமையாகவே அரசாங்கத்தின் கொள்கையை நான் செயற்படுத்தினேன்.

உடைந்த கட்டடங்களையே கொண்டிருந்த அந்தப் பிரதேசத்தில் நாம் பத்தாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுத்தோம். ஆனால், இந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேற வந்தபோது, ஓரங்குலக் காணியேனும் நீங்கள் விட்டுக்கொடுத்தீர்களா? என்பதை மனசாட்சியைத் தொட்டுக் கேளுங்கள். முஸ்லிம் கிராமமான தண்ணீரூற்றில் உள்ள பாடசாலை வளவில் இன்னும் பல தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றனர். நாம் அவர்களை பலாத்காரமாக வெளியேற்ற விரும்பவில்லை. அவர்களுக்கு மாற்றுக் காணிகளைக் கொடுத்துவிட்டு எமக்கு பாடசாலையைத் தாருங்கள் என்றே இன்னும் கேட்கின்றோம்.

நான் ஒருபோதும் தமிழரின் போராட்டத்துக்கு இடைஞ்சலாக பேசியதில்லை. அது தொடர்பில் எந்தப் பதிவும் இல்லை. அபிவிருத்தி, காணிகள் தொடர்பான பிரச்சினை, இராணுவத்தின் ஆக்கிரமிப்பு ஆகியவை பற்றியே நாம் பேசுகின்றோம். அது தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான ஒன்று.

ஒற்றுமையாக இருந்த தமிழ், முஸ்லிம் சமூக உறவு இன்று ஆயுதத்தினால் பிரிக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் ஐயா, தமிழர்களின் உரிமை, சமஷ்டி ஒற்றையாட்சி, அரசியல் தீர்வு, என்றெல்லாம் நீங்கள் பேசுகின்றீர்கள். தமிழர், முஸ்லிம் என்று பிரித்துப் பேசாமல் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடைமொழிக்குள் நம்மை இணைத்துக்கொண்டால் நாம் உரிய இலக்கை அடைய முடியும் என்பதை தயவாக கூற விரும்புகிறேன்.

ஆயுதப் போராட்டத்தில் அடைய முடியாத ஒன்றை, நமது தமிழ் பேசும் சமூகம் அடைவதற்கு நாம் பக்கபலமாக இருப்போம். வடக்கில் உள்ள  தமிழ்த் தலைமைகளும் தமிழ் அரசியல்வாதிகளும் எங்களை மனிதாபிமானத்துடன் நோக்குங்கள். உண்மையாக நேசியுங்கள். எல்லோரையும் அணைத்துக்கொண்டு செல்வதன் மூலமே நாம் அடைய இருக்கும் உண்மையான இலக்கை எட்ட முடியும். உசுப்பேற்றிப்  பேசுவதால் இன்னும் பகைமையே கூடும்.

எனவே, நான் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் வேண்டுவது என்னவென்றால், 25 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்து விரட்டப்பட்ட ஒரு சகோதர சமூகத்தை வேற்றுக் கண்ணுடன் பார்க்காதீர்கள். அவர்கள் மீள்குடியேற இடைஞ்சலாக இருக்காதீர்கள். அந்த மீள்குடியேற்றத்தைத் தடுக்கும் உங்கள் சமூகத்தைச் சார்ந்த ஒரு சில அரசியல்வாதிகளை ஊக்குவிக்காதீர்கள். இதுதான் எங்கள் சமூகம் சார்ந்த கோரிக்கையாகும் என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/164658/-%E0%AE%AE-%E0%AE%B8-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-#sthash.9jOALXkM.d

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு

உவருக்கு இப்பதான் உது தெரியுது போலை .....இப்பவும் சொல்லிறோம் நீங்கள் வேறை நாங்கள் வேறை ....சேரவும் கூடாது ....சேரவும் முடியாது 

மகிந்த காலத்தில் இவர் ஆடிய ஆட்டமெல்லாம் மறந்துவிட்டதா.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அய்த்தானே வாப்பா,

தேங்காப்பூ இல்லாம, பிட்டு நல்லா இல்ல தானே வாப்பா.

1 hour ago, புலோலியூரான் ரவீ..ன் said:

மகிந்த காலத்தில் இவர் ஆடிய ஆட்டமெல்லாம் மறந்துவிட்டதா.

 

 

 

அதிகாரத்தில் இருக்கும் போது ஆட்டம் ஆடாதவர்கள் யார் ?

இவர் இப்பவும் தான் ஆடுகின்றார் உலகம் முழுக்க பிரச்சனையே அதுதானே .

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை இப்ப தான் சரியா நடத்தினம் போலத் தெரிகிறது. காணி பிடிப்பு.. தமிழர் நிலம் பிடிப்பு.. இவர் செய்து வந்த காரியம். மன்னாரில் பறித்த நிலங்கள் இன்னும் விடுபடல்ல.

இவர்களை ஒரு குட்டு குட்டி வைச்சால் தான் நல்லது. இன்றேல் தமிழர்கள் அழிந்து விட்டார்கள் என்று சொல்லி... சிங்களவனோடு சேர்ந்து கூத்தடிப்பார்கள். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலோலியூரான் ரவீ..ன் said:

மகிந்த காலத்தில் இவர் ஆடிய ஆட்டமெல்லாம் மறந்துவிட்டதா.

தமிழர்களை துன்புறுத்தியபோதும்

தமிழர் சொத்துக்களை அபகரித்தபோதும்

சொந்த தாய் பிள்ளைகள் மனப்பான்மையில் இருந்தாராக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்
On 1/25/2016 at 10:44 AM, அக்னியஷ்த்ரா said:

உவருக்கு இப்பதான் உது தெரியுது போலை .....இப்பவும் சொல்லிறோம் நீங்கள் வேறை நாங்கள் வேறை ....சேரவும் கூடாது ....சேரவும் முடியாது 

இவங்களுடன் வாளுவதைவிட 
ஒரு விபச்சார விடுதியில் குழந்தை பெற்று ...
குடும்பமா வாழலாம்!

அதைவிட சிறப்பா சிங்களவனுக்கு அடைமாயாகவே வாழலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இதை மருதங்கேனியார் சொல்கிறார்tw_blush:

ரிஸாட் பதியுதீன் ஒரு சராசரி முஸ்லிம் அரசியல்வாதி, மற்றய பெரும்பான்மையான தமிழ், சிங்கள அரசியல்வாதிகளைப்போல்..

முஸ்லிம்களையும் இணைத்தே தீர்வெனும்போது, இவரையும் தவிர்க்க முடியாது.

 

சைலம் அடிக்க ஒரு கூட்டம் வெளிக்கிடும்.

வாப்பா வடக்கையும் இஸ்லாமிய மயப்படுத்த தான் தொடங்கினவர், ஆனால் எல்லாம் அல்லாவின் அருளால் கையும் களவுமாக அகப்பட்டு விட்டார். அதான் இப்ப வேறு வழியில் முயற்சிக்கிறார்.

நான் அறிந்த ஒன்று இப்பொழுது வடக்கில் முஸ்லிம்கள் தமிழரின் ஊடாக நிலங்களை , அதாவது ஒரு நிலத்தை வாங்க வேண்டுமானால் ஒரு தமிழரை வைத்து வாங்கி அதை பிறகு தமது பெயருக்கு மாற்றுவது , அதற்கு சில தமிழர்களும் துணை போகிறார்களாம்.

யாழ்பல்கலை கழகத்துக்கு முன்னாள் அரபு எழுத்துக்களுடன் ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

யாழ்பாணத்தில் ஒவ்வொரு வீதியிலும்  ஒரு கோவில்  இருக்கும், ஆனால் போகிற போக்கில் இவனுகள்  ஒரு கோவிலை கூட  விட்டு வைப்பார்களா என்பது சந்தேகம்.

இப்பொழுது அமைதியாக வருபவன் இன்னும் சில வருடங்களின் பின்னர் வன்முறையுடன் தமிழனை வேருட்டுவான், அனால் அதை காட்டி வெளி நாட்டில் அ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.