Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் கிளைப் பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயிண்ட் என்னெண்ட்டா, ஐ எஸ் மேற்க்குக்கு எதிரி.

ஆகவே ஐ எஸ் கொடியை மேற்கில் பிடிக்க முடியாது.

அதே போல்தான் புலி கொழும்புக்கு எதிரி ஆகவே புலிக் கொடியை கொழும்பில் பிடிக்க முடியாது.

இதுதான் சிம்பிள் லாஜிக்.

 

  • Replies 124
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை இங்கு கொண்டுவர வேண்டும் என்றுதான் 
நான் மெதுவா அடக்கி வாசிச்சேன் ....

இப்போ நான் பதில் எழுதிய அவருடைய கருத்தை சென்று வாசியுங்கள்!
புலி எல்லா இடமும் பயங்கரவாதி ....... அதுதான் சர்வதேசம் அவர்களை அழித்தது!

சர்வேதேசம் புலிகளின் எதிரி !

சர்வதேசம் ஐ ஸ் ஸ் யும் அழிக்கிறது 
புலியையும் அழித்தது 

இப்ப சர்வதேசத்தின் லொஜிக் பிழைக்கும் இல்லையா ?

அங்குதான் எங்கள் பக்க நியாயம் இருக்கிறது!
நாம் இப்போதும் போராடுகிறோம்.

எமக்கும் புலிகளுக்கும் இடைவெளி இல்லை 
நாம் தான் அவர்கள் அவர்கள்தான் நாங்கள் 

எமக்கு உரிமைதான் வேண்டும் !

"இன்னும் ஒரு திரியில் கனடாவில் தேசியத்தின் பெயரால் காசு சுருட்டியவர்களின் பெயர் விவரங்கள் இருந்தால் தாருங்கள், நான் அவர்களிடம் இது பற்றி கதைக்கிறேன் ஏன் என்றால் இது ஒரு ஈழ தமிழனின் கடமை எனவும் எழுதினேன். "--சசி 

கனடாவில் முள்ளிவாய்க்காளிற்கு பிறகு, தேசியத்தின் சொத்துக்களை பதுக்கிய கனடா உலகத்தமிழர் அமைப்பினரும்(WTM) மற்றும் அதன் கைப்புள்ளைகளான கனடிய தமிழர் தேசிய அவையினரும்(NCCT) சேர்ந்து மக்களை ஏமாற்றி திரும்பவும் பணம் வசூலிக்க போட்ட அம்புலிமாமா திட்டத்திற்கு மக்கள் செருப்படி கொடுத்து விரட்டியுள்ளார்கள்.

முள்ளிவாய்க்காளிற்கு பிறகு, கனடா உலகத்தமிழர் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இன்றுவரை மக்களை ஏமாற்றி வீட்டிற்குள் பதுங்கி பாதுகாப்பாக இருக்கும்  பொறுப்பாளரும்(தமிழ்) மற்றும் பல ஆண்டுகளாக மக்களின் பணத்தில் குடும்பம் நடத்தி வரும் (அருமை,கமல்,A1-கண்ணன்,நேரு) மற்றும் தேசியத்தின் பதுக்கிய சொத்துக்களில் நடைபெறும் வியாபாரத்தில் ஏப்பம் விடும் சில ஏரியா பொறுப்பாளர்களும், செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் மாவீரர்கள் மன்னிப்பு கொடுக்க மாட்டார்கள்.

இது இன்று முக புத்தகத்தில் வந்த செய்தி ,

 

இந்த ஐந்து பேரையும் சந்தித்துவிட்டு என்ன நடந்தது என்று  சசி பதில் எழுதினால் இன்னமும் பெயர்கள் தருகின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ரகு

உங்கள் கருத்தைப்பார்க்கும் போது

மிகவும் தள்ளி நின்றிருக்கின்றீர்கள் என்பது மட்டும் தான் தெரிகிறது..

அது உங்கள் தப்பல்ல

90 வீதமானவர்கள் இவ்வாறு தான் இருந்தார்கள்

நின்றார்கள்.

நீங்களுமா ரகு ......???

இதற்கு மேல் இத்திரியில் எழுத விரும்பவில்லை.

விசுகர்,

நான் எழுதியதில் என்ன தவறிருக்கின்றது என்று நினைக்கிறீர்கள் ? நான் எழுதியது எதுவுமே நடக்கவில்லை என்று கூறுகிறீர்களா ?

ஏன் விசுகர், கேள்விகேட்டால்ப் பிழை, விமர்சித்தால் பிழை என்று இனியும் இருக்கப் போகிறீர்களா ?

நன் அப்படி என்னதான் எழுதிவிட்டேன் ? இயக்கத்துக்கென்று பணம்சேர்த்து தமது சொந்த வயிறு வளர்ப்பது பிழை என்று சொல்கிறேன், நீங்கள் அப்படிச் சொன்னால் அதைத் தவறு என்று சொல்கிறீர்கள்.  போராளிகளுக்கென்றும், மக்களுக்கென்றும் சேர்க்கப்படும் பணம் அவர்களிடம் அப்படியே போய்ச்சேருவதுதானே நியாயம் ? அதைக் கையாடுவது அநியாயம்தானே ? இதைச் சொன்னால் நான் வேறு எங்கோ நிற்கிறேன், மாறிவிட்டேன், குழம்பிவிட்டேன் என்கிறீர்கள்.

புலிகளின் ரெண்டாம் நிலைத் தளபதியான கருணாவும் பணத்தோடுதான் வெளியேறினார். புலிகளின் சர்வதேச ஆயுத முகவரும், பின்னாள் தகலைவருமான செலவராசா பத்மனாதன் கூட மக்களிடம் சேர்த்த கோடிக்கணக்கான பணத்துடந்தான் அரசிடம் போய்ச் சரண்டைந்தார். அதேபோல புலிகளின் உள்ளூர்த் தளபதிகள் பலரும் பணத்துடன் தப்பியோடியுள்ளார்கள். சிலர் பிடிபட்டுத் தண்டனையும் பெற்றார்கள். அவர்களையெல்லாம் துரோகிகள் என்று உடனேயே பேர்வைத்துவிடும் நாம், வெளிநாட்டில் அப்படிச் செய்தவர்களை அழைப்பதில்லை. மாறாக அவர்கள் அனைவருமே நேர்மையானவர்கள் என்று நினைக்கிறோம்.

நீங்கள் சொல்வதுபோலவும் சிலர் இருக்கிறார்கள்தான், ஒத்துக்கொள்கிறேன். தனது சொந்தப் பணத்தில் தேசிய நிகழ்வுகளை நடாத்தி, தன்னார்வத் தொண்டர்களை வைத்துக்கொண்டு இங்கே நடக்கும் தமிழர் நிகழ்வுகளில் சமைத்துக்கொடுத்து வரும் லாபத்தை அப்படியே ஊரிலுள்ள மாவீரர் குடும்பங்கள், ஊணமுற்ற போராளிகளுக்கென்று அனுப்பவும் செய்கிறார்கள். அவர்களை நான் மேற்சொன்ன குழுவுடன் சேர்க்கவில்லை. மேலே தாக்குதலுக்கு உள்ளான பிரான்ஸ் நபர்கூட உண்மையானவராக இருக்கலாம். ஆனால் நான் எழுதியது பொதுவாகத்தான். வேறு இடங்களில் நடப்பவற்றைத்தான். 

தவறைத் தவறென்று ஒத்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும், அது அந்தத் தவறு மீண்டும் நடவாமல் இருக்க உதவிபுரியும்.

கேள்விகேட்பவனையிம், விமர்சிப்பவனையும் துரோகி என்றால் ஒன்றுமே செய்யமுடியாது விசுகர். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இங்கே எவர்க்காகவும், எந்தக் கருத்திற்காகவும் வருத்தப்பட்டு நீங்கள் மெளனமாக இருக்க வேண்டாம்.

இதைவிட வேறு எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

 

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தவறு செய்பவர்களும் இருந்தார்கள், நேர்மையானவர்களும் இருந்தார்கள். ஆனால் தவறு செய்தவர்களை மக்கள் முன்வைத்தோ, அந்த நாட்டுச் சட்டங்களின் முன் கொண்டு வந்தோ எதுவும் செய்யமுடியாத நிலை இருந்ததால் சுத்தியவர்கள் துணிந்து சுத்தினார்கள்.

சிலவேளைகளில் மக்கள் பணத்தை எடுத்து விரயம் செய்தவர்களும் உள்ளனர்.

பிரித்தானியாவில் தலைமைச் செயலகக்காரர்கள் ஒக்ஸ்போர்ட்டுக்கு அண்மையில் ஒரு farm house ஐ ஒரு மில்லியன் பவுண்ட்ஸ் கொடுத்து வாங்கி அங்கு தமிழர் வரலாறு மையம் என்று துயிலுமில்லம் கட்ட திட்டம் ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு வெம்ப்ளி ஹில்ரன் ஹொட்டலில் ஒன்றுகூடலும் நடாத்தினார்கள். நன்றாகப் பளிச்சிட்ட திட்ட ஆவணம் ஒன்றையும் பார்த்தேன். புலிகளைத் தடை செய்த பிரித்தானியாவில் வரலாற்று மையம், துயிலும் இல்லம் எல்லாம் கட்டுவது எல்லாம் இலகுவானதல்ல.  பதுக்கிய காசை வெளியில் எடுத்து செலவழிக்க வழி பார்க்கின்றார்கள் என்றுதான் தெரிகின்றது. சில வெண்ணை வியாபாரிகளும் தங்களது பவிசைக் காட்ட அள்ளியும் கொடுத்துள்ளார்கள்.

இவர்களுக்கு போராட்டத்தில் பங்குபற்றி வாழ வழியின்றி தற்கொலை செய்யும் முன்னாள் போராளிகளை எல்லாம் தெரியாது. தெரிந்தாலும் அதைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. 

விசுகு ஐயா, பிரான்சில் தமிழ்ச்செல்வனுக்கு கட்டின சிலை இப்போது எங்கு இருக்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, arjun said:

"இன்னும் ஒரு திரியில் கனடாவில் தேசியத்தின் பெயரால் காசு சுருட்டியவர்களின் பெயர் விவரங்கள் இருந்தால் தாருங்கள், நான் அவர்களிடம் இது பற்றி கதைக்கிறேன் ஏன் என்றால் இது ஒரு ஈழ தமிழனின் கடமை எனவும் எழுதினேன். "--சசி 

கனடாவில் முள்ளிவாய்க்காளிற்கு பிறகு, தேசியத்தின் சொத்துக்களை பதுக்கிய கனடா உலகத்தமிழர் அமைப்பினரும்(WTM) மற்றும் அதன் கைப்புள்ளைகளான கனடிய தமிழர் தேசிய அவையினரும்(NCCT) சேர்ந்து மக்களை ஏமாற்றி திரும்பவும் பணம் வசூலிக்க போட்ட அம்புலிமாமா திட்டத்திற்கு மக்கள் செருப்படி கொடுத்து விரட்டியுள்ளார்கள்.

முள்ளிவாய்க்காளிற்கு பிறகு, கனடா உலகத்தமிழர் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இன்றுவரை மக்களை ஏமாற்றி வீட்டிற்குள் பதுங்கி பாதுகாப்பாக இருக்கும்  பொறுப்பாளரும்(தமிழ்) மற்றும் பல ஆண்டுகளாக மக்களின் பணத்தில் குடும்பம் நடத்தி வரும் (அருமை,கமல்,A1-கண்ணன்,நேரு) மற்றும் தேசியத்தின் பதுக்கிய சொத்துக்களில் நடைபெறும் வியாபாரத்தில் ஏப்பம் விடும் சில ஏரியா பொறுப்பாளர்களும், செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் மாவீரர்கள் மன்னிப்பு கொடுக்க மாட்டார்கள்.

இது இன்று முக புத்தகத்தில் வந்த செய்தி ,

 

இந்த ஐந்து பேரையும் சந்தித்துவிட்டு என்ன நடந்தது என்று  சசி பதில் எழுதினால் இன்னமும் பெயர்கள் தருகின்றேன் 

இதை விட ஏதாவது காத்திரமாக தருவீர்கள் என்று எதிர் பார்த்தேன் அர்ஜுன் அண்ணே. 
இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் கூட இது பற்றி நான் உங்களுடன் உறவாடினேன். மறந்திருக்க மாட்டீர்கள். 
முகப்புத்தகத்தில்   யாரோ அநாமியாக பதிந்த ஒரு பதிவை காட்டி இருக்கிறீர்கள்.
இருந்தாலும் நேருவை நான் ஒரு சில தடவைகள் கூட்டங்கள், பொது நிகழ்வுகளில் சந்தித்தவன் என்ற முறையில் அவரை தேடி அணுகி உங்கள் குற்றச்சாட்டை விசாரிக்கிறேன். அது கை கூடும் நேரம் பதிவிடுகிறேன். 

40 minutes ago, Sasi_varnam said:

இதை விட ஏதாவது காத்திரமாக தருவீர்கள் என்று எதிர் பார்த்தேன் அர்ஜுன் அண்ணே. 
இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் கூட இது பற்றி நான் உங்களுடன் உறவாடினேன். மறந்திருக்க மாட்டீர்கள். 
முகப்புத்தகத்தில்   யாரோ அநாமியாக பதிந்த ஒரு பதிவை காட்டி இருக்கிறீர்கள்.
இருந்தாலும் நேருவை நான் ஒரு சில தடவைகள் கூட்டங்கள், பொது நிகழ்வுகளில் சந்தித்தவன் என்ற முறையில் அவரை தேடி அணுகி உங்கள் குற்றச்சாட்டை விசாரிக்கிறேன். அது கை கூடும் நேரம் பதிவிடுகிறேன். 

முடிந்தால் ஜெயலலிதா கருணாநிதியையும் சந்தித்து உண்மையில் காசு அடித்தீர்களா என்று கேட்கவும் .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, arjun said:

முடிந்தால் ஜெயலலிதா கருணாநிதியையும் சந்தித்து உண்மையில் காசு அடித்தீர்களா என்று கேட்கவும் .

ம்ம்ம்....உங்களால் மட்டுமே இப்படி எழுத முடியும்.  I like you Arjun Annaa... :)
கருணாநிதிககும், ஜெயலலிதாவுக்கும்  இந்த கருத்தாடலில் என்ன தொடர்பு?
அப்படியே அவர்களை விசாரிப்பதேன்றால் அதை நீங்கள் தான் திறம் பட செய்யலாம், காரணம் நீங்கள் 84 களிலேயே இந்தியாவில் தூதரகம் / கிளை / செயலகம் அமைத்து பெரும் அரசியல்வாதிகளோடு தோல் உரசியவர் ஆயிற்றே.

சந்திக்க போகின்றீர்கள் என்று சொல்ல சிரிப்பு வந்துட்டது 

யாரப்பா தான் காசை சுருட்டியதை சொல்ல போகின்றான் 

அது மைக் டபி ஆகட்டும் கருணாநிதி ஆகட்டும் உலக தமிழர் ஆகட்டும் எல்லோரும் ஒரு பதில் தான் வைத்திருப்பார்கள் 

கருணாநிதியை விட நேரு அந்த மாதிரி விளக்கம் கொடுப்பார் போய் கேளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

விசுகு ஐயா, பிரான்சில் தமிழ்ச்செல்வனுக்கு கட்டின சிலை இப்போது எங்கு இருக்கின்றது?

அதே  இடத்தில் 

மாதிரி சிலை மாற்றப்பட்டு

முழுமையான சிலை வைக்கப்பட்டுள்ளது..

 

  • கருத்துக்கள உறவுகள்

ரகு, புலிகளுக்கு எதிராக கதைப்போர்,மாற்று இயக்கத்தினர்,மாற்று கருத்தினை உடையோர் பிழையே செய்யா விட்டிலும் அதைப் பற்றிக் கதைக்க,விமர்சிக்க விசுகு அண்ணா போன்றோருக்கு பிடிக்கும் அதே நேரத்தில் புலி,புலி ஆதாரவாளர்கள்,புலியை சொல்லிக் காசு அடிப்போர் எவ்வளவு தான் பிழைகள் செய்தாலும் அதைப் பற்றிக் கதைக்கக் கூடாது...கதைச்சால் துரோகிகள்...அப்படி மற்றவர்கள் கதைக்க கூடாது என்று நினைத்தால் அவர்களை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும்/இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

ரகு, புலிகளுக்கு எதிராக கதைப்போர்,மாற்று இயக்கத்தினர்,மாற்று கருத்தினை உடையோர் பிழையே செய்யா விட்டிலும் அதைப் பற்றிக் கதைக்க,விமர்சிக்க விசுகு அண்ணா போன்றோருக்கு பிடிக்கும் அதே நேரத்தில் புலி,புலி ஆதாரவாளர்கள்,புலியை சொல்லிக் காசு அடிப்போர் எவ்வளவு தான் பிழைகள் செய்தாலும் அதைப் பற்றிக் கதைக்கக் கூடாது...கதைச்சால் துரோகிகள்...அப்படி மற்றவர்கள் கதைக்க கூடாது என்று நினைத்தால் அவர்களை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும்/இருக்க வேண்டும்.

வைச்சிருக்கிறது ரொம்ப ஈசி 
இரண்டு மூன்று பேரை மண்டையில் போட 
மற்ற எல்லோரும் தானா திருந்துவார்கள் .....

என்ன அவர்கள் திருந்திவிட்டர்களே என்று பாராட்டவா போகிறீர்கள் ...?
சும்மா நின்றவர்களை சுட்டார்கள் என்று 
பழையபடி முருங்கையில் ஏறி உச்சி கொப்பில் நின்று ஆடுவீர்கள்.
 

எங்க வளையிறது ...
எங்கே நெளியிறது .....
என்றுதான் ஒரு மண்ணும் புரியவில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

சசி,

நெடியவன், விநாயகம், ரூட் ரவி, டி ஆர் டெக் சிறீ, டி ஆர் ஓ ரெஜி இவர்களையும் சீக்கிரம் கண்டு பதில் சொல்லவும்.

வெகு ஆவாலாய் காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ragunathan said:

விசுகர்,

நான் எழுதியதில் என்ன தவறிருக்கின்றது என்று நினைக்கிறீர்கள் ? நான் எழுதியது எதுவுமே நடக்கவில்லை என்று கூறுகிறீர்களா ?

ஏன் விசுகர், கேள்விகேட்டால்ப் பிழை, விமர்சித்தால் பிழை என்று இனியும் இருக்கப் போகிறீர்களா ?

நன் அப்படி என்னதான் எழுதிவிட்டேன் ? இயக்கத்துக்கென்று பணம்சேர்த்து தமது சொந்த வயிறு வளர்ப்பது பிழை என்று சொல்கிறேன், நீங்கள் அப்படிச் சொன்னால் அதைத் தவறு என்று சொல்கிறீர்கள்.  போராளிகளுக்கென்றும், மக்களுக்கென்றும் சேர்க்கப்படும் பணம் அவர்களிடம் அப்படியே போய்ச்சேருவதுதானே நியாயம் ? அதைக் கையாடுவது அநியாயம்தானே ? இதைச் சொன்னால் நான் வேறு எங்கோ நிற்கிறேன், மாறிவிட்டேன், குழம்பிவிட்டேன் என்கிறீர்கள்.

புலிகளின் ரெண்டாம் நிலைத் தளபதியான கருணாவும் பணத்தோடுதான் வெளியேறினார். புலிகளின் சர்வதேச ஆயுத முகவரும், பின்னாள் தகலைவருமான செலவராசா பத்மனாதன் கூட மக்களிடம் சேர்த்த கோடிக்கணக்கான பணத்துடந்தான் அரசிடம் போய்ச் சரண்டைந்தார். அதேபோல புலிகளின் உள்ளூர்த் தளபதிகள் பலரும் பணத்துடன் தப்பியோடியுள்ளார்கள். சிலர் பிடிபட்டுத் தண்டனையும் பெற்றார்கள். அவர்களையெல்லாம் துரோகிகள் என்று உடனேயே பேர்வைத்துவிடும் நாம், வெளிநாட்டில் அப்படிச் செய்தவர்களை அழைப்பதில்லை. மாறாக அவர்கள் அனைவருமே நேர்மையானவர்கள் என்று நினைக்கிறோம்.

நீங்கள் சொல்வதுபோலவும் சிலர் இருக்கிறார்கள்தான், ஒத்துக்கொள்கிறேன். தனது சொந்தப் பணத்தில் தேசிய நிகழ்வுகளை நடாத்தி, தன்னார்வத் தொண்டர்களை வைத்துக்கொண்டு இங்கே நடக்கும் தமிழர் நிகழ்வுகளில் சமைத்துக்கொடுத்து வரும் லாபத்தை அப்படியே ஊரிலுள்ள மாவீரர் குடும்பங்கள், ஊணமுற்ற போராளிகளுக்கென்று அனுப்பவும் செய்கிறார்கள். அவர்களை நான் மேற்சொன்ன குழுவுடன் சேர்க்கவில்லை. மேலே தாக்குதலுக்கு உள்ளான பிரான்ஸ் நபர்கூட உண்மையானவராக இருக்கலாம். ஆனால் நான் எழுதியது பொதுவாகத்தான். வேறு இடங்களில் நடப்பவற்றைத்தான். 

தவறைத் தவறென்று ஒத்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும், அது அந்தத் தவறு மீண்டும் நடவாமல் இருக்க உதவிபுரியும்.

கேள்விகேட்பவனையிம், விமர்சிப்பவனையும் துரோகி என்றால் ஒன்றுமே செய்யமுடியாது விசுகர். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இங்கே எவர்க்காகவும், எந்தக் கருத்திற்காகவும் வருத்தப்பட்டு நீங்கள் மெளனமாக இருக்க வேண்டாம்.

இதைவிட வேறு எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

நன்றி.

ரகு

நான் எழுதியதை தப்பாக விளங்கப்படுத்துகிறீர்கள்.

உங்களது மேலே உள்ள விமர்சனம்

புலிகளே உள்ளுரிலும் வெளியூரிலும் பொதுவாகவே அப்படித்தான் என்பதாக இருந்தது..

புலிகளைப்பொறுத்தவரை

2009க்கு முன்

பின் என இரு காலப்பகுதியுண்டு.

நீங்கள் மேலே உதாரணம் காட்டியவர்கள் 2009க்கு முன்பும் அவ்வாறு தான்  இருந்தார்களா???

அதாவது தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் அமைப்பு இருந்தபோது.....?

தலைமையின் கட்டுப்பாட்டுக்குள்  இருந்தபோது

பணத்தையெல்லாம் புலம் பெயர் தேசங்களில் தலைமை விட்டுவைத்தில்லை.

உதாரணமாக 5 லட்சம் சேர்ந்திருந்தால் அடுத்த கொடுப்பனவு 20 லட்சமாக கேட்கப்படும்.

அதற்கு ஓடி ஓடிச்சேர்த்து

முதலாளிகளிடம் மக்களிடம் கடன்பட்டு

வட்டிக்கெடுத்து

சீட்டெடுத்து

வங்கிகளில் அடைவு வைத்து

இவ்வாறு தான் பணம் அனுப்பப்படும்.

கொஞ்சம் இவற்றை முடித்துக்கொண்டுவர அடுத்த தொகை கேட்கப்பட்டுவிடும்.

களநிலமையும் அவ்வாறு தான் இருக்கும்.

இயக்கம் மற்றும் தலைவருடைய அனுபவங்கள் தான் இவற்றைத்தீர்மானித்தன.

எனவே அமைப்புக்களில்  இருந்திருந்தால் இவை உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

நீங்களுமா என்று நான் எழுதியது புலம் பெயர் அமைப்புக்களிலிருந்து நீங்களுமா தூர நின்றீர்கள் என்பதற்குத்தான்...??

மேலும் புலிகளின் வலைப்பின்னலின் இரகசியங்களை முழுமையாக அறிந்தவர் எவரும் இல்லை

அந்த நல்ல காரியமே இன்று சிலவற்றை எம்மால் அறியமுடியாமல்

நெருங்கமுடியாமல் செய்திருக்கிறது.

ஆனால் அது நிரந்தரமன்று.

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையும் முடிவும் உண்டு என நம்புகின்றேன்.

இவற்றை மனிதர்களின் பலவீனமாகத்தான் நான் பார்க்கின்றேன்

பெற்றோரை இழந்ததும்  சொந்த சகோதரர்களே சொத்துக்களை எவ்வாறு அபகரிக்கின்றனர்...

எனவே பொதுச்சொத.தக்களை அபகரிப்பொர் தோலுரிக்கப்படணும்

வெளிக்கொண்டுவரப்படணும் என்பதில் எனக்கு முழு உடன்பாடுண்டு

எல்லோரையும் விட அதில் எனக்கு உரிமையும் பொறுப்புமுண்டு. காரணம் அள்ளிக்கொடுத்தவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் எல்லோரையும் ஒரு குட்டைக்குள் போட்டு

தங்களின் செயற்பாடற்ற வாய்வீச்சுக்களுக்கு பாவிப்பதற்கு இடமளிக்கமுடியாது

இடமளிக்கவும் கூடாது. 

ஏனெனில் இவை பழி வாங்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

மற்றும்படி

இங்கு புலிகளின் நிதி சார்ந்து கை நீட்டுபவர்கள் யாரும் அதில் பங்கெடுத்தவர்கள் கிடையாது

அவர்களது ஊர்வலங்கள் உட்பட அனைத்திலும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தவர்கள் தான்.

புலிகளுக்கு மக்களிடம் ஆதரவில்லை

தமிழ் மக்கள் புலிகள் இல்லை என்றபடி

அவை மக்கள் பணம் என்கிறார்கள்...

அதிலிருந்தே இதை வைத்து இவர்களின் வாந்திக்கு மட்டுமே மக்களை இழுக்கிறார்கள்.

உண்மையில் மக்கள் மீது இரக்கமிருந்தால்

2009க்கு பின்னர் 

தாயகத்திலோ

புலத்திலோ

இவர்கள் ஒரு கூட்டத்தை அல்லது மாநாட்டைக்கூட்டி

அந்த மக்களுக்கு செய்த பங்களிப்பை கூறட்டும் பார்க்கலாம்..

2009க்குப்பின் இவர்கள் ஏன் செயற்படவில்லை???

ஏன் எந்த பங்களிப்பும் செய்யவில்லை??

தங்கள் தங்கள் வீடும்

கடற்கரைகளும் உணவகங்களும் தவிர்ந்து

போரால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு இவர்கள் செய்ததென்ன??

புலிகளை தாமே அழித்தோம் என்பவர்கள்

ஏன் புலிகளை அவர்களது சொத்துக்களை எதிர்பார்த்திருக்கிறார்கள்??

நாலு பேரை ஒற்றுமையாகக்கூட்டி ஒன்றையும்  செய்ய வக்கற்றவர்கள்

மேடை கோணல் என்பார்கள்

அதை நம்பி.......???

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். புலிக்கு எதிராக கதைப்போர்,ஒரு நிதி பங்களிப்பும் செய்யாதோருக்கு இந்த நிதியைப் பற்றி கேட்க ஒரு அருகதையும் இல்லை என அண்ணா[உங்கள் கருத்து]. அபடியாயின் சுருட்டினவர்கள் தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்ளட்டும். அதைப் பற்றி உங்களுக்கு அக்கறையும் இல்லை. கேட்கவும் மாட்டீர்கள் இல்லையா அண்ணா...தங்களுடைய பிரச்சனையை வீதிக்கு கொண்டு வந்து எல்லோருக்கும் தெரியப்படுத்தி விட்டுட்டார்கள் என்பது தான் உங்கள் கவலை.

தவிர இறுதி யுத்தம் காசு சேர்த்தது இத்தகைய அழிவுக்கு கொண்டு வந்து விட்டது மாற்று இயக்கங்களோ/கருத்தளார்களோ அல்லது நிதிப் பங்களிப்பும் செய்யாதோரோ அல்ல...இத்தகைய அழிவுக்கு யார் முதலில் காரணமோ அவர்கள் தான் தங்கள் பங்களிப்பை முழுமையாக செய்ய வேண்டும்[அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.]...அதை விடுத்து மற்றவர்கள் செய்ய வேண்டும் என நினைப்பது படு முட்டாள்தனம்

சம்பவத்துக்கு இரண்டு   கிழமை முதல் வந்தார்கள் மூன்று  நாட்டில்  இருந்து புலிகளின் புலனாய்வு துறையில் அங்கம் வகித்தவர்கள் ஐரோப்பா  நிர்வாகம் ஒன்றில் கணக்கு காட்ட  வேணும்  அல்லது நிர்வாகத்தை  கையளித்து விலகவேனும் என கேட்டார்கள் ,அதற்கு  இவர்கள்  சொன்ன  பதில் மீண்டும் அண்ணை வரட்டும் நீங்க யாரு  என்பதே ....

அவர்கள் நீங்கள் தலைவரை  காணமல் இருந்து  நிர்வாகம்  செய்த  உங்களுக்கு  இவ்வளவு  இருந்தால் தலைவருடன்  வளர்த்தது இருபது வருடம் வாழ்க்கையை  போராட்டத்தில் தொலைத்த எமக்கு நீங்கள்  சொல்லும்  பதிலும்  கேட்கும்  கேள்வியும்  இதுவா ,ஊரில்  உள்ள அங்கவீனமான  போராளிகள் இன்று  போராடி  விட்டு  வீடுக்கு  பாரமாக  போய்  இருக்கிறார்கள்  அதனால் தற்கொலை செய்கிறார்கள்  நாம் அவர்களை  எல்லாம்  ஒரு   இடத்தில  ஒன்றிணைத்து  பராமரிக்க  வேண்டிய  தேவை  இருக்கு  அதற்கு  பணம் வேணும் ,தாருங்கள்  அல்லது விலகுங்கள் ....

 

அப்படி தரமுடியாது எல்லாம்  நாட்டத்தில  ஓடுது வாடகை  கட்டகூட  காசு  இல்லை என இவர்கள்  ஒரே  பழைய  பாட்டு அதற்கு  அவர்கள்  கேட்டது 2009 க்கு முன்னம் எல்லாம்  இலாபத்தில்  ஓடியது  அது  என்ன  இப்ப  மட்ட்டும்  நட்டத்தில்  ஓடுது என்பதே ,நடத்தில்  ஓடும்  ஒரு  நிர்வானத்தை  எதற்கு  நீங்க  நடத்த  வேணும்  பூட்டுப்போட்டு  போங்கோ வித்து  போட்டு  காசை  தாங்கோ  என்றால்  அதற்கும்  பதில்   இல்லை .....

 

மற்ற நாடுகள்   ஓரளவு இப்ப  இறங்கி  வந்து ஒத்துழைப்பு  கொடுக்கிறது  பிரான்ஸ்  மட்டுமே  பிடிவாதம்  அனுபவித்து   பழகிட்டு ,பரிதியார்  பின்  வந்த  பார்த்தீபன்  காசுடன்  ஆள் இல்லை  இப்படி  ஆளாளுக்கு  அடிச்சுட்டு  போனால்  கொடுத்து   மக்கள்  மக்கள்  பணம்   கேள்வி  கேட்கும்  உரிமை  அனைவருக்கும்  இருக்கு ...

 

இறுதியாக  சொன்னது  இனி  பேசமாட்டம்  சந்திக்க மாட்டம்  ஆறுமாத  தவணை  ஒன்று விலகனும்  அல்லது  கணக்கு எமக்கு  வரனும் என்பதே இதில் எந்த முடிவு  என்றாலும் ஒகே இல்லை என  மீறினால் விபரீதம்  ஆகும்.

 

வந்தவர்கள் பொட்டரின் நேரடி  வளர்ப்புக்கள் முடியரசன் ,புத்தொளி ,செங்கண்ணன் ,மற்றும் தலைமை செயலகம் செவமலை போன்றோர் ஆச்சரியம் பலருக்கு இவர்கள்  எல்லாம்  உயிருடன்  உள்ளார்களா  என்பதே ,அதனால் ஐரோப்பா  எங்கும்  கொஞ்சம்  படபடப்பு  தொற்றியுள்ளது எச்சரிக்கை   சூடுகள்  விழுவது  தவிர்க்க  முடியாதது  ஆகிறது .

 

போலீஸ்  இருக்கு  சட்டம்  இருக்கு  இவை  என்ன  பண்ண  முடியும்  என  சொன்னதுக்கு  தான்  தோட்டா  பாய்த்து இனி ..........

 

 

இப்படி  இன்னும்  எவரும்  கதை  எழுதாமல் விட்டது  வேதனை  அளிக்கிறது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, அஞ்சரன் said:

சம்பவத்துக்கு இரண்டு   கிழமை முதல் வந்தார்கள் மூன்று  நாட்டில்  இருந்து புலிகளின் புலனாய்வு துறையில் அங்கம் வகித்தவர்கள் ஐரோப்பா  நிர்வாகம் ஒன்றில் கணக்கு காட்ட  வேணும்  அல்லது நிர்வாகத்தை  கையளித்து விலகவேனும் என கேட்டார்கள் ,அதற்கு  இவர்கள்  சொன்ன  பதில் மீண்டும் அண்ணை வரட்டும் நீங்க யாரு  என்பதே ....

அவர்கள் நீங்கள் தலைவரை  காணமல் இருந்து  நிர்வாகம்  செய்த  உங்களுக்கு  இவ்வளவு  இருந்தால் தலைவருடன்  வளர்த்தது இருபது வருடம் வாழ்க்கையை  போராட்டத்தில் தொலைத்த எமக்கு நீங்கள்  சொல்லும்  பதிலும்  கேட்கும்  கேள்வியும்  இதுவா ,ஊரில்  உள்ள அங்கவீனமான  போராளிகள் இன்று  போராடி  விட்டு  வீடுக்கு  பாரமாக  போய்  இருக்கிறார்கள்  அதனால் தற்கொலை செய்கிறார்கள்  நாம் அவர்களை  எல்லாம்  ஒரு   இடத்தில  ஒன்றிணைத்து  பராமரிக்க  வேண்டிய  தேவை  இருக்கு  அதற்கு  பணம் வேணும் ,தாருங்கள்  அல்லது விலகுங்கள் ....

 

அப்படி தரமுடியாது எல்லாம்  நாட்டத்தில  ஓடுது வாடகை  கட்டகூட  காசு  இல்லை என இவர்கள்  ஒரே  பழைய  பாட்டு அதற்கு  அவர்கள்  கேட்டது 2009 க்கு முன்னம் எல்லாம்  இலாபத்தில்  ஓடியது  அது  என்ன  இப்ப  மட்ட்டும்  நட்டத்தில்  ஓடுது என்பதே ,நடத்தில்  ஓடும்  ஒரு  நிர்வானத்தை  எதற்கு  நீங்க  நடத்த  வேணும்  பூட்டுப்போட்டு  போங்கோ வித்து  போட்டு  காசை  தாங்கோ  என்றால்  அதற்கும்  பதில்   இல்லை .....

 

மற்ற நாடுகள்   ஓரளவு இப்ப  இறங்கி  வந்து ஒத்துழைப்பு  கொடுக்கிறது  பிரான்ஸ்  மட்டுமே  பிடிவாதம்  அனுபவித்து   பழகிட்டு ,பரிதியார்  பின்  வந்த  பார்த்தீபன்  காசுடன்  ஆள் இல்லை  இப்படி  ஆளாளுக்கு  அடிச்சுட்டு  போனால்  கொடுத்து   மக்கள்  மக்கள்  பணம்   கேள்வி  கேட்கும்  உரிமை  அனைவருக்கும்  இருக்கு ...

 

இறுதியாக  சொன்னது  இனி  பேசமாட்டம்  சந்திக்க மாட்டம்  ஆறுமாத  தவணை  ஒன்று விலகனும்  அல்லது  கணக்கு எமக்கு  வரனும் என்பதே இதில் எந்த முடிவு  என்றாலும் ஒகே இல்லை என  மீறினால் விபரீதம்  ஆகும்.

 

வந்தவர்கள் பொட்டரின் நேரடி  வளர்ப்புக்கள் முடியரசன் ,புத்தொளி ,செங்கண்ணன் ,மற்றும் தலைமை செயலகம் செவமலை போன்றோர் ஆச்சரியம் பலருக்கு இவர்கள்  எல்லாம்  உயிருடன்  உள்ளார்களா  என்பதே ,அதனால் ஐரோப்பா  எங்கும்  கொஞ்சம்  படபடப்பு  தொற்றியுள்ளது எச்சரிக்கை   சூடுகள்  விழுவது  தவிர்க்க  முடியாதது  ஆகிறது .

 

போலீஸ்  இருக்கு  சட்டம்  இருக்கு  இவை  என்ன  பண்ண  முடியும்  என  சொன்னதுக்கு  தான்  தோட்டா  பாய்த்து இனி ..........

 

 

இப்படி  இன்னும்  எவரும்  கதை  எழுதாமல் விட்டது  வேதனை  அளிக்கிறது :rolleyes:

வந்தவர்களுக்கும்  கே பி இலங்கை இராணுவம் 
விழ விழ ஆயிரம் இரண்டாயிரமாய் எழுகிறவைக்கும் 
சம்மந்தம் இல்லை என்பது எப்படி தெரியும் ?? 

செங்கண்ணன் இறந்துவிட்டார் என்பது 
எனக்கு ஓரளவு உறுதிபட தெரியும் !

இது இங்கின கதைக்கிற பேய் பிசாசு கதையா ?

அல்லது நீங்கள் நேரில் பார்த்தீர்களா ? 

6 minutes ago, Maruthankerny said:

வந்தவர்களுக்கும்  கே பி இலங்கை இராணுவம் 
விழ விழ ஆயிரம் இரண்டாயிரமாய் எழுகிறவைக்கும் 
சம்மந்தம் இல்லை என்பது எப்படி தெரியும் ?? 

செங்கண்ணன் இறந்துவிட்டார் என்பது 
எனக்கு ஓரளவு உறுதிபட தெரியும் !

இது இங்கின கதைக்கிற பேய் பிசாசு கதையா ?

அல்லது நீங்கள் நேரில் பார்த்தீர்களா ? 

செங்கண்ணன் ஐரோப்பா  வந்து  ஆறுமாதம்  ஆகிறது  எவர்  சொன்னது  இறந்தார்  என இங்கிருத்து  அவுஸ்திரேலியா வரை பேசினார்கள் நந்தன்  கூட  அவரும்  உள்ளார்  காலம்  போக  போக  தங்கள்  பாதுகாப்பை  உறுதிபடுத்திய  பின்  பலர் வெளியில்  வருகிறார்கள் ....

 

எல்லாம்  முடிச்சு  நாம  அடிச்சு  கொண்டு  போவம்  என  நினைதவர்களுக்கு இவைகள்  பேரிடி ஆக  இறங்கியுள்ளது ..

 

கேபி அனுப்பினது  போனது  எல்லாம்  பழைய  பல்லவி  புதுசா  வாங்க  இங்க  உள்ளவன்  செய்யும்  துரோகத்தை  விடவா  கேபி  செய்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருந்து வந்த கோரிக்கையை ஏற்று ஆயிரக்கணக்கில் கொடுத்தவன் எல்லாம் பேசாமல் இருக்க.. 5 பென்ஸ் ஈயாததுகள் எல்லாம் புலிட்ட கணக்குக் கேட்கிறது தான் பெரும் கொடுமை. என்ன உலகமப்பா இது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

விசுகு அண்ணா குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். புலிக்கு எதிராக கதைப்போர்,ஒரு நிதி பங்களிப்பும் செய்யாதோருக்கு இந்த நிதியைப் பற்றி கேட்க ஒரு அருகதையும் இல்லை என அண்ணா[உங்கள் கருத்து]. அபடியாயின் சுருட்டினவர்கள் தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்ளட்டும். அதைப் பற்றி உங்களுக்கு அக்கறையும் இல்லை. கேட்கவும் மாட்டீர்கள் இல்லையா அண்ணா...தங்களுடைய பிரச்சனையை வீதிக்கு கொண்டு வந்து எல்லோருக்கும் தெரியப்படுத்தி விட்டுட்டார்கள் என்பது தான் உங்கள் கவலை.

தவிர இறுதி யுத்தம் காசு சேர்த்தது இத்தகைய அழிவுக்கு கொண்டு வந்து விட்டது மாற்று இயக்கங்களோ/கருத்தளார்களோ அல்லது நிதிப் பங்களிப்பும் செய்யாதோரோ அல்ல...இத்தகைய அழிவுக்கு யார் முதலில் காரணமோ அவர்கள் தான் தங்கள் பங்களிப்பை முழுமையாக செய்ய வேண்டும்[அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.]...அதை விடுத்து மற்றவர்கள் செய்ய வேண்டும் என நினைப்பது படு முட்டாள்தனம்

கேட்கக்கூடாது என்பதல்ல

இவர்கள் இதை  வேறு நோக்கங்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள்

எனவே இவர்களும் மக்கள் நன்மை சார்ந்து நம்பகத்தன்மை கொண்டவர்களல்ல..

ரதி

உங்களிடம் ஒரு கேள்வி

இங்கு 

பெருமளவு பணத்தை கடன் எடுத்துக்கொடுத்தோர்

வீட்டை அடைவைத்துக்கொடுத்தோர்

என்று பலரும் உண்டு

அவர்களில் எவராவது புலிகளின் அலுவலகங்களிலோ

புலிகளின் கடைகளிலோ போய்நின்று தமது பணத்தை தரும்படி வற்புறுத்தியதாக

அல்லது ஆர்ப்பாட்டம் செய்ததாக இதுவரை ஏதாவது செய்திகள் வந்ததா?

ஏன் ??

கொடுத்தவர்களுக்குத்தெரியும் 

தமது பணத்தை எதற்காக கொடுத்தோம்

அதற்கு என்ன நடந்தது என்றும் 

இங்குள்ளவர்களில் பெரும்பான்மையானோர் தமது வாழ்வையே கொடுத்துவிட்டு வீதியில் நிற்கிறார்கள் என்றும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணத்துக்கு..

ஒரு முன்னாள் போராளியின் கால் வைத்தியச் செலவுக்கு காசு தாறம் என்று சொன்ன சில.. பிரான்ஸ் வாழ் யாழ் களத்தில் தம்மை முன்னாள் புலி என்று அடையாளம் காட்டும் சிலரே.. பின்னர் கூடிப் பேசி.. அவருக்கு எதுக்குக் கொடுக்கிறது... அவர் வெளிநாட்டில பொம்பிளை எடுத்திட்டார் என்று முழுப் பொய்யைப் பேசிட்டு.. ஓடி ஒளிந்துவிட்டார்களாம்.

இப்ப அவர்கள் எல்லாம் இங்கு வேதாந்தம் பேச வந்துவிட்டார்கள். எல்லாம்.. முகமூடிக் கொள்ளைக்காரர்கள். வெளிநாட்டுக்கு ஓடியாந்ததும் வேதாந்தம் பேச வெளிக்கிட்டு விடுகிறார்கள்.

வெளிநாட்டுக்கு ஓடியாந்த.. முன்னாள்...புலிகளே.. தாயகத்தில்...உள்ள.. முன்னாள் புலிக்கு உதவ முன்வராத வங்குரோத்து மனநிலையில் இருக்கிறார்கள். இதுதான் எங்கட இனம். இதுங்களட்ட போய்............

முடிஞ்சா நீங்கள் உங்களுக்கு வசதின்னா.. உதவுங்க. எம்மவர் கதைக்கு அது யார் சொன்னாலும் காதுகொடுக்காதேங்க. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அஞ்சரன் said:

செங்கண்ணன் ஐரோப்பா  வந்து  ஆறுமாதம்  ஆகிறது  எவர்  சொன்னது  இறந்தார்  என இங்கிருத்து  அவுஸ்திரேலியா வரை பேசினார்கள் நந்தன்  கூட  அவரும்  உள்ளார்  காலம்  போக  போக  தங்கள்  பாதுகாப்பை  உறுதிபடுத்திய  பின்  பலர் வெளியில்  வருகிறார்கள் ....

 

எல்லாம்  முடிச்சு  நாம  அடிச்சு  கொண்டு  போவம்  என  நினைதவர்களுக்கு இவைகள்  பேரிடி ஆக  இறங்கியுள்ளது ..

 

கேபி அனுப்பினது  போனது  எல்லாம்  பழைய  பல்லவி  புதுசா  வாங்க  இங்க  உள்ளவன்  செய்யும்  துரோகத்தை  விடவா  கேபி  செய்தார் .

செங்கன்னனுடன் இறுதியாக இருந்தவர்கள்தான் அவர் இறந்துவிட்டார் என்று 
எனக்கு 2010இல் சொன்னார்கள்.

எல்லா இடமும் துரோகமும் கொள்ளையும் என்றால் 
நாம் யாரைத்தான் நம்புவது ...?

எல்லாம் முடிய எது இருக்கோ அதை அதை பார்க்க வேண்டியதுதான்.

மதிய கிழக்கு நாடு ஒன்றில் எங்கும் போக வழியில்லாமல் ....
அங்கும் இருக்க முடியாத நிலையில் பலர் தவிக்கிறார்கள் 
ஒரு வேளை நாடு போக நேர்ந்தால் அவர்கள் அங்கேயே தற்கொலை செய்வது உத்தமம் 
ஏன் இவர்கள் யாரும் அவர்களுக்கு உதவில்லை ?

நாட்டில் விடுதலையான போராளிகளை தொண்டு நிறுவனங்கள் ஊடக 
தொடர்பை ஏற்படுத்தி  ஓரளவு தேவையை பூர்த்தி செய்யலாம்.

இடைவெளியில் நிற்பவர்கள் என்ன செய்ய முடியும் ?

இவர்களுடன் இருந்தவர்கள்தானே அங்கு அவதி படுகிறார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,நீங்கள் காசு கணக்கு கேட்க மாட்டீர்கள்.நீங்கள் பெரிய கொடையாளி என்று எல்லோருக்கும் தெரியும்...ஜந்து சதம் குடுக்காதவர்கள் எல்லாம் நெடுக்கரை மாதிரி வாயை மூடிக் கொண்டு இருங்கோப்பா! நெடுக்கர் இருக்கிறாரல்ல

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நெடுக்கர்,நீங்கள் காசு கணக்கு கேட்க மாட்டீர்கள்.நீங்கள் பெரிய கொடையாளி என்று எல்லோருக்கும் தெரியும்...ஜந்து சதம் குடுக்காதவர்கள் எல்லாம் நெடுக்கரை மாதிரி வாயை மூடிக் கொண்டு இருங்கோப்பா! நெடுக்கர் இருக்கிறாரல்ல

நாங்க கணக்குக் கேட்கிறதில்லை. எங்களுக்கு நம்பிக்கை இருக்கு கணக்குக் கேட்காமல்.. மக்கள்..கொடுத்தது நல்ல வழியில் செலவாகும்.. செல்வாகி இருக்கும் என்று. கொள்ளை அடிக்கிறது எல்லா இடத்திலும் இருக்கு. அதையே பேசிக்கிட்டு இருக்க முடியாது. அதை தவிர்க்கிற வழியைச் சொல்லிக் கொடுக்கனுமே தவிர குற்றம் குறை பேசி எல்லாத்தையும் கெடுத்துக் கொண்டிருப்பது தான் தமிழருக்கு ஆபத்து.

ஒட்டுக்குழுக்களுக்கு இதைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கு. அவர்கள் அடிக்காத கொள்ளையா. 

எங்களைப் பொறுத்த வரை..யாழ்ப்பாணத்தில்..1990 இல் வாங்கினதை.. அவ்வளவு கஸ்டத்தின் மத்தியிலும் 1998 இல்... தங்கமாக.. கொழும்பில் இருந்தவர்களுக்கு கூட.. கடிதம் போட்டு வரவழைத்து தந்தவர்கள்.. மீது நம்பிக்கை இருக்குது. 

அவர்களின் இயலுகைக்குள் அவர்கள் நேர்மையாக இருந்திருக்கிறார்கள். இன்று அந்த இயலுகை பலவீனப்பட்டுள்ள நிலையில்.. குற்றம் சொல்வதே குறியாக இருக்கக் கூடாது. மாறாக.. குற்றம் குறைய வழிகாட்டலாம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

நெடுக்கர்,நீங்கள் காசு கணக்கு கேட்க மாட்டீர்கள்.நீங்கள் பெரிய கொடையாளி என்று எல்லோருக்கும் தெரியும்...ஜந்து சதம் குடுக்காதவர்கள் எல்லாம் நெடுக்கரை மாதிரி வாயை மூடிக் கொண்டு இருங்கோப்பா! நெடுக்கர் இருக்கிறாரல்ல

ரதியக்கா நீங்க என்னத்தை சொன்னாலும் 
கொடுத்தவர்கள் சும்மாதான் இருக்கிறார்கள் ...

எமக்கு யார் அடித்தார்கள் என்பதும் தெரியும் 
ஓரளவுக்கு எவளவு எவளவு அடித்தார்கள் என்பதும் தெரியும்.

ஆனால் இப்ப காலம் காலாம புலிவாந்தி எடுத்து வாழ்க்கை 
ஓட்டினவர்கள்தான் 
மக்களின் காசு 
மக்களின் காசு என்று ஒப்பாரி வைக்கிறார்கள்! 

சுவிசில் ஒரு விடயத்தை ஒரு சட்ட ஓட்டை ஊடாக 
கையாண்டுகொண்டு இருக்கிறேன் 
அது வெற்றி அளித்தால் ......
சுவிசில் கடன் எடுத்து கொடுத்த எல்லோருக்கும் அறிய தருகிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.