Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கன நாட்களின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கன நாட்களின்  பின்  அடி யேனுக்கு கூனி கிடைத்தது இதை என்னென்ன முறையில் சமையல் செய்யலாம் முறைகளை தரவும் 

கூனி என்றால் எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது 

( இறாலில் மிகவும் சிறியது கிழக்கில் இருக்கும் களப்புகளில் கிடைக்கும் )

முட்டைக்குள் போட்டு பொரித்து விட்டேன் என்ன ருசி  ஒரு சமையல் முடித்து விட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்

கூனி இறாலை... முருங்கக்காயுடன் சேர்த்து சமைத்தால், அந்த மாதிரி இருக்கும்.
இரண்டாம் தரமும்... கோப்பை நிரம்ப சோறு போட்டுச் சாப்பிடுவீர்கள்.

முனிவர் ஜீ.... மச்சம் சாப்பிடலாமா? அதுகும்....  வெள்ளிக்கிழமை அபச்சாரம், அபச்சாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் ஒடியல் மா கிடைக்குமெனில்... கூனியைக் கலந்து புட்டவித்துப் பாருங்கள்!

முல்லை இலையும் சேர்த்தால் இன்னும் விசேசம்!

ஆளை இருத்தி எழுப்பும்...!

7 minutes ago, புங்கையூரன் said:

முல்லை இலையும் சேர்த்தால் இன்னும் விசேசம்!

ஆளை இருத்தி எழுப்பும்...!

முல்லை இலையா அல்லது முருக்கம் இலையா புங்கை. முல்லை இலையை  சமைப்பதற்கு  பயன்படுத்துவார்களா? விநாயகருக்குத்தான் சாத்துவார்கள்  என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எல்லாம் சரி இருத்தி எழுப்பும் என்றல் இப்படி இல்லைதானே.

toilet paper emoticon

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

முல்லை இலையா அல்லது முருக்கம் இலையா புங்கை. முல்லை இலையை  சமைப்பதற்கு  பயன்படுத்துவார்களா? விநாயகருக்குத்தான் சாத்துவார்கள்  என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எல்லாம் சரி இருத்தி எழுப்பும் என்றல் இப்படி இல்லைதானே.

toilet paper emoticon

நான் சொல்லுறது இந்த முல்லை இலை...!

DSC03077-001.JPG

4 minutes ago, ஜீவன் சிவா said:

முல்லை இலையா அல்லது முருக்கம் இலையா புங்கை. முல்லை இலையை  சமைப்பதற்கு  பயன்படுத்துவார்களா? விநாயகருக்குத்தான் சாத்துவார்கள்  என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எல்லாம் சரி இருத்தி எழுப்பும் என்றல் இப்படி இல்லைதானே.

toilet paper emoticon

ஊரில எங்கப்பு இருந்து எழும்பிறது....?

அந்த நாளையில குந்தித் தான் எழும்பிறது...!

முல்லை இலை சொதிக்குள்ளும் போடலாம்.... கூழுக்குள்ளும் போடலாம்!

நானும் அவுஸ் முழுவதும் தேடிக்கொண்டு திரியுறன்!

எல்லாமே இருக்கு.. முல்லையைத் தவிர..!

37 minutes ago, புங்கையூரன் said:

முல்லை இலை சொதிக்குள்ளும் போடலாம்.... கூழுக்குள்ளும் போடலாம்!

முசுட்டை இலையா அல்லது குருஞ்சா  இலையா

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஜீவன் சிவா said:

முசுட்டை இலையா அல்லது குருஞ்சா  இலையா

இது முசுட்டை..!

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%

 

இது குறிஞ்சா...!

ht2015_zps4670504f.jpg

 

இது முல்லை..!

SDC14167-001.JPG

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கூனி இறாலை... முருங்கக்காயுடன் சேர்த்து சமைத்தால், அந்த மாதிரி இருக்கும்.
இரண்டாம் தரமும்... கோப்பை நிரம்ப சோறு போட்டுச் சாப்பிடுவீர்கள்.

முனிவர் ஜீ.... மச்சம் சாப்பிடலாமா? அதுகும்....  வெள்ளிக்கிழமை அபச்சாரம், அபச்சாரம்.

ஆஹா வெள்ளி கிழமை என்று எனக்கு கிடையாது  எல்லாம் மனதில் தான் அண்ணா  மீன் அதிகமாக கிடைக்கும் அதனால் போட்டு தாக்கு வதான்

நன்றி அனைவருக்கும்  முல்லை இலை சொதி ம் தூக்கி எடுத்து விடும் வாசனைக்காக சாப்பிடலாம் இரு கோப்பை

புங்கையூரான் இணைதனது இருப்பது தான் முல்லை இலை

  • கருத்துக்கள உறவுகள்

1. கூனி இறாலில் கருவாடு செய்துவிட்டு.. பின்னர் அரைத்துப் பொடியாக்கி வைத்தால்.. சம்பலில் போட்டு சாப்பிட சூப்பரா இருக்கும்.

2. கூனி இறாலை கோவா+கரட் பாற்கறியில் போட்டு கறி வைத்தால்... சுவையாக இருக்கும்.

3. கூனி இறாலில் இறால் வறை செய்யலாம். 

செய்முறை..

பாற்கோவா கடையில் வாங்க. சின்னதாக நறுக்கி எடுக்கவும்.

கூனி இறாலை நன்னீரில் சுத்தம் செய்த பின்.. கொதி நீரில் போட்டு.. 10 நிமிடம் விடவும். பின் வாலை நீக்கி தலை இழுக்க கோது வரும். கோது பிரச்சனை இல்லை என்பவர்கள்.. தலையை.. வாலை கொய்யலாம்.

தேய்ங்காய் துருவல் செய்து எடுக்கவும்.

வெங்காயம்.. பச்சை மிளகாய்.. இஞ்சி.. சிறிது சிறிதாக வெட்டி எடுக்கவும்...

பின்.. அடுப்பை மூட்டி.. (காஸ் அடுப்பென்றால் திருகி).. தீயை வர வைக்கவும்...

ஒரு கடாயை அல்லது ப்ரியிங் பானை எடுத்து..

சிறிதளவு எண்ணெய் விட்டு சூடு காட்டவும்..

பின் அதில் சிறிதளவு கடு.. விட்டு வெடிக்கப் பொரிக்கவும்

அதன் பின் வெங்காயம்.. பச்சை மிளகாய்.. இட்டு வதக்கி எடுக்கவும்..

பின் இஞ்சி சேர்க்கும் போது வெட்டி எடுத்த கோவாவையும் கலக்கவும்..

அது ஓரளவுக்கு வெந்ததும்.. (நிறம் மாறி வருவதை வைச்சு அல்லது கோவா நெகிழும் தன்மையை வைத்து வெந்திட்டான்னு கண்டுபிடிக்கலாம்)

கூனி இறாலையும் போட்டு சிறிது நேரம் வேக வைக்கவும்...

தேங்காய்ப் பூவோடு சிறிதளவு மஞ்சள்... மிளகாய்த் தூள் (ஊரில் செய்தது.. மிளகாய்.. மல்லி..பட்டை எல்லாம் போட்டுச் செய்தது)..வேண்டிய அளவு உப்பு போட்டு கலக்கி எடுக்கவும். பின் அதனை கடாயில் கொட்டி..

கலக்கி எல்லாம் ஓரளவு பொன்னிறம் ஆகும் வரை கலக்கி வேக வைக்கவும்..

வெந்த பின்.. இறக்கி.. ஆறவிட்ட பின்.. சோறு அல்லது பிட்டு.. அல்லது பாணுடன் சாப்பிடவும்.

சாப்பிட்டு விட்டு வந்து.. பதில் சொல்லவும். 

நன்றி.

இந்த வறைக்கு சுவைக்கு பொறுப்பு நெடுக்ஸ். (கவனிக்கவும்.. சொல்லப்பட்ட வகையில் செய்யாவிட்டால்.. சொல்லப்பட்ட மூலப் பொருட்கள் + உபரிகள் சேர்க்காவிட்டால்.. சுவைக்கு நாம் பொறுப்பல்ல.)

 

4. கூனி இறாலை சொதி வைக்கும் போது சேர்த்தால் சொதி சூப்பரா இருக்கும். 

முக்கிய குறிப்பு;(இது பாச்சளருக்கான ப்ரியான சுவையா சமையல். சம்சாரிகள்.. மனிசி மாரை செய்து தரும்படி கேட்டு அவர்கள் கூனி இறாலை நீயா துப்பராக்கிறது என்று உங்களை திட்டினால்.. துரத்தி அடித்தாலோ நாம் பொறுப்பல்ல.)tw_blush:

இது ஒரு யாழ் 18ம் ஆண்டு நுளைவு ஸ்பெசல்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கூனி இறாலில் : 1 )  ஒரு சட்டிக்குள் இறாலை சுத்தம் செய்து போட்டு அளவாக தேங்காய்ப் பால் (முதல் பால் அல்லது பெட்டிப்பால்) அந்த றாலை மூடும் மட்டத்துக்கு விட்டு அதனுள் தனிச் செத்தல் மிளகாய்த் தூள், சிறிது மஞ்சள் தூள் , உப்பு , கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு ஒருமேசைக் கரண்டி நல்லெண்ணை அல்லது ஒலிவ் எண்ணை விட்டு நன்றாகக் கையால் பிரட்டி 10 நிமிடம் ஊறவைத்து பின் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும் பால் நன்றாக வத்தி எண்ணை பிறக்கும்வரை ஒரு கூட்டுப் பதமாய் வரும்வரை அருகிலேயே இருந்து அப்பப்ப கிளறிவிட வேண்டும். (சீரியல் பார்க்கப் போகக் கூடது.)

பின் அடுப்பை விட்டு இறக்கி  ஆறவிட்டு ஒரு போத்திலில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு கெடாமல் இருக்கும். உடனே சாப்பிடுவதானால் வெங்காயம் சிறிதாக வெட்டித் தாளித்துச் சேர்க்கலாம். (போத்திலில் போடும் அயிட்டத்துக்கு வெங்காயம் தடா.)

2).நல்ல பால் சொதியில் சிறிது மஞ்சள் தூளும் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு பின் றாலைச் சேர்த்து விட இடியப்பத்துக்கு சுப்பராய் இருக்கும்....!

3) புளிக் கஞ்சிக்கும் கூனிறால் அருமையான அயிட்டம்...!

3 hours ago, புங்கையூரன் said:

இது முல்லை..!

நன்றி புங்கை

ஞாபகம் வருகுதே இல்லை . நான் சாப்பிட்டது இல்லை என்றுதான் நினைக்கிறன். முல்லைக்காக நாளைக்கு திருநெல்வேலிச் சந்தைக்கு போகத்தான் இருக்கு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

1. கூனி இறாலில் கருவாடு செய்துவிட்டு.. பின்னர் அரைத்துப் பொடியாக்கி வைத்தால்.. சம்பலில் போட்டு சாப்பிட சூப்பரா இருக்கும்.

2. கூனி இறாலை கோவா+கரட் பாற்கறியில் போட்டு கறி வைத்தால்... சுவையாக இருக்கும்.

3. கூனி இறாலில் இறால் வறை செய்யலாம். 

செய்முறை..

பாற்கோவா கடையில் வாங்க. சின்னதாக நறுக்கி எடுக்கவும்.

கூனி இறாலை நன்னீரில் சுத்தம் செய்த பின்.. கொதி நீரில் போட்டு.. 10 நிமிடம் விடவும். பின் வாலை நீக்கி தலை இழுக்க கோது வரும். கோது பிரச்சனை இல்லை என்பவர்கள்.. தலையை.. வாலை கொய்யலாம்.

தேய்ங்காய் துருவல் செய்து எடுக்கவும்.

வெங்காயம்.. பச்சை மிளகாய்.. இஞ்சி.. சிறிது சிறிதாக வெட்டி எடுக்கவும்...

பின்.. அடுப்பை மூட்டி.. (காஸ் அடுப்பென்றால் திருகி).. தீயை வர வைக்கவும்...

ஒரு கடாயை அல்லது ப்ரியிங் பானை எடுத்து..

சிறிதளவு எண்ணெய் விட்டு சூடு காட்டவும்..

பின் அதில் சிறிதளவு கடு.. விட்டு வெடிக்கப் பொரிக்கவும்

அதன் பின் வெங்காயம்.. பச்சை மிளகாய்.. இட்டு வதக்கி எடுக்கவும்..

பின் இஞ்சி சேர்க்கும் போது வெட்டி எடுத்த கோவாவையும் கலக்கவும்..

அது ஓரளவுக்கு வெந்ததும்.. (நிறம் மாறி வருவதை வைச்சு அல்லது கோவா நெகிழும் தன்மையை வைத்து வெந்திட்டான்னு கண்டுபிடிக்கலாம்)

கூனி இறாலையும் போட்டு சிறிது நேரம் வேக வைக்கவும்...

தேங்காய்ப் பூவோடு சிறிதளவு மஞ்சள்... மிளகாய்த் தூள் (ஊரில் செய்தது.. மிளகாய்.. மல்லி..பட்டை எல்லாம் போட்டுச் செய்தது)..வேண்டிய அளவு உப்பு போட்டு கலக்கி எடுக்கவும். பின் அதனை கடாயில் கொட்டி..

கலக்கி எல்லாம் ஓரளவு பொன்னிறம் ஆகும் வரை கலக்கி வேக வைக்கவும்..

வெந்த பின்.. இறக்கி.. ஆறவிட்ட பின்.. சோறு அல்லது பிட்டு.. அல்லது பாணுடன் சாப்பிடவும்.

சாப்பிட்டு விட்டு வந்து.. பதில் சொல்லவும். 

நன்றி.

இந்த வறைக்கு சுவைக்கு பொறுப்பு நெடுக்ஸ். (கவனிக்கவும்.. சொல்லப்பட்ட வகையில் செய்யாவிட்டால்.. சொல்லப்பட்ட மூலப் பொருட்கள் + உபரிகள் சேர்க்காவிட்டால்.. சுவைக்கு நாம் பொறுப்பல்ல.)

 

4. கூனி இறாலை சொதி வைக்கும் போது சேர்த்தால் சொதி சூப்பரா இருக்கும். 

முக்கிய குறிப்பு;(இது பாச்சளருக்கான ப்ரியான சுவையா சமையல். சம்சாரிகள்.. மனிசி மாரை செய்து தரும்படி கேட்டு அவர்கள் கூனி இறாலை நீயா துப்பராக்கிறது என்று உங்களை திட்டினால்.. துரத்தி அடித்தாலோ நாம் பொறுப்பல்ல.)tw_blush:

இது ஒரு யாழ் 18ம் ஆண்டு நுளைவு ஸ்பெசல்.

 

நன்றி நெடுக்ஸ் குறிப்புக்கு வெளியாகி எடுப்பது தான் மிக பெரிய வேலை சின்ன சங்கு நிறையவே இருக்கிறது அதனுள்

நன்றி சுவி உங்கள் குறிப்புக்கும்

ஜீவன் சிவா எந்த திருநெல்வேலி இலங்கையில் உள்ளதா இல்லை இந்தியாவில் உள்ள திருநெல்வேலி காகா போறது?

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்  முனி

உந்த கூனி 

முனி

அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்

இனி யாழில் தொடர்ந்துமு இருங்கள்

அதுவே எமது விருப்பமும் வேண்டுகோளும்..

மிகவும் சந்தோசமாக இருக்கு யாழைப்பார்க்க...

பலரும் திரும்பவும் எழுதுகிறார்கள்..

தொடர்ந்திருங்கள்

வாழ்க வளமுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவர் ஜீ,

கூனியை பீற்றூட்டுடன் சேர்த்து சமைத்தால் சுவையாக இருக்கும் 

பீற்றூட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தேவையான வெங்காயம் பச்சை மிளகாய் கறி வேப்பிலை சேர்த்து வதக்கி வதங்கியதும் கறித்துள் போட்டு வதக்கி பச்சை வாசம் போனதும் கூனியையும் சேர்த்து வதக்குங்கள் அதன்பின்னர் தேங்காய் பால் விட்டு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5-6 நிமிடத்தின் பின் இறக்கி சாப்பிட்டு பாருங்கள் .....

கத்தரிக்காய் பாக்கறிக்கும் கூனிபோட்டு சமைக்க நன்றாக இருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூனிறால் போட்டு முருங்கை இலை வறுவல் செய்தால் அந்தமாதிரியிருக்கும்....:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

யோவ்  முனி

உந்த கூனி 

முனி

அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்

இனி யாழில் தொடர்ந்துமு இருங்கள்

அதுவே எமது விருப்பமும் வேண்டுகோளும்..

மிகவும் சந்தோசமாக இருக்கு யாழைப்பார்க்க...

பலரும் திரும்பவும் எழுதுகிறார்கள்..

தொடர்ந்திருங்கள்

வாழ்க வளமுடன்.

ம் இருக்கிறன் கொஞ்ச நாள் சென்ற பிறகு தொடர்ந்து இருப்பேன் அண்ணா 

 

1 hour ago, குமாரசாமி said:

கூனிறால் போட்டு முருங்கை இலை வறுவல் செய்தால் அந்தமாதிரியிருக்கும்....:cool:

மீண்டும் முருங்கையா போட்டால் கையும் காலும் தாவுமே தாத்தா நான் என்ன செய்வேன்??

3 hours ago, முனிவர் ஜீ said:

ஜீவன் சிவா எந்த திருநெல்வேலி இலங்கையில் உள்ளதா இல்லை இந்தியாவில் உள்ள திருநெல்வேலி காகா போறது?

தின்னவேலி எண்டுதான் எழுத நினைச்சேன், பண்டிதர்மார் என்ன  சொல்லுவினமோ என்ற பயத்தில திருநெல்வேலி எண்டு எழுதினான்

11 minutes ago, முனிவர் ஜீ said:

மீண்டும் முருங்கையா போட்டால் கையும் காலும் தாவுமே தாத்தா நான் என்ன செய்வேன்??

இதுக்குத்தான் சொல்லுறது பேசாம ஆசிரமத்திலேயே இருந்திருக்கலாம், சும்மா அன்டார்டிக்காவிட்கு  இடம்பெயர்ந்திட்டு முருங்கைக்கு பயப்பிட்டா எப்படி?.

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்கிளப்பில இருந்து கொண்டு ஒராளுக்கு கூனிக் கருவாரு எப்படி சமைக்கிறது என்று தெரியாதாம்....இந்த லொல்லுத் தானே வேணாங்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜீவன் சிவா said:

தின்னவேலி எண்டுதான் எழுத நினைச்சேன், பண்டிதர்மார் என்ன  சொல்லுவினமோ என்ற பயத்தில திருநெல்வேலி எண்டு எழுதினான்

இதுக்குத்தான் சொல்லுறது பேசாம ஆசிரமத்திலேயே இருந்திருக்கலாம், சும்மா அன்டார்டிக்காவிட்கு  இடம்பெயர்ந்திட்டு முருங்கைக்கு பயப்பிட்டா எப்படி?.

ஆஸ்ரமத்தில் இருந்தால் அங்க இங்க கமறாவை வச்சு வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விடுறாங்கள் அந்தக் கடுப்பில் தான் அந்தாட்டிக்கா பக்கம் போனது

இந்த முருங்கை படுத்தும் பாடு இருக்கே சப்பா..... ?

7 hours ago, ரதி said:

மட்டக்கிளப்பில இருந்து கொண்டு ஒராளுக்கு கூனிக் கருவாரு எப்படி சமைக்கிறது என்று தெரியாதாம்....இந்த லொல்லுத் தானே வேணாங்கிறது

இது தானே வேணாங்கிறது நான் சமைப்பன் மனிசிதான் கஸ்ரப்படுறாள் எப்படி சமைப்பதென்று தெரியாமல்

எப்போது நமக்கு எதிரணி ஒன்று இருக்கத்தான் செய்கிறது

இன்றைய சமையல் உளுவை மீன் பொன்னாங்கண்ணி சுண்டல், சொதி??

Edited by முனிவர் ஜீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.