Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்

Featured Replies

 
 
13177909_10201582793049548_6953008401360

மீண்டும் மீண்டும் உருவேற்றி
மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி
சொல்லவும் மெல்லவும் முடியாமல் 
உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை
அணையாமல் காப்பது நம் கடனே
 
அடையாளம் அத்தனையும் தொலைத்து
அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள்
எங்கள் அன்னைத் தமிழீழ பூமி
உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை
உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு
 
இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம்
இல்லாமல் செய்தனர் அதைக் கூட
தினம் அங்கு தடம் அழித்து அழித்து
திருவிழா பூமியாய் மிளிருது இன்று
பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு
 
கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த
கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது
செத்துக் கிடந்தவர் பிணம் கூட
சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது
முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம்
 
மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல்
மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு
மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று
ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து
மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று
 
இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது மே 18 மட்டுமே
உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு
பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும்
சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம்
இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம்.
(படங்கள் பறந்த வாகனத்துள் இருந்து மனம் கனத்துச் சுட்டவை.)
 

Edited by Mayuran

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Mayuran said:
 
 
13177909_10201582793049548_6953008401360
 
 
மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல்
மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு
மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று
ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து
மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏடுகளின் எழுத்துக்களில்...,மட்டும்,

தர்மம் காக்கின்ற தேசங்களின்..,

மனச்சாட்சிகள்,

சனாதன தர்மத்தின் வரிகளால்,

சமாதானப் படுத்தப் பட்டு விட்டன!

 

வேரறுந்து போனதும்....,

மறைந்திருந்த கறையான்கள்,

மரத்தை அசை போடுகின்றன!

 

மனித அவலங்களும்,

மரணங்களும் கூட,,,,

தர்மப் போர் என்னும் ..,

போர்வையினால் போர்க்கப்பட்டு,,

போர்க்குற்றவாளிகள் எல்லோரும்,

புனிதர்களாக்கப் படுகின்றார்கள்!

 

குருசேத்திரத்தில்...,

கீதை சொன்ன கிருஷ்ணர்களாக,

பார்க்குமிடமெல்லாம்..,

புத்தனின் சீடர்கள்..,

'பிரித்' ஓதுகின்றார்கள்!

 

துகிலிருந்து கிடக்கும் என் தேசமே!

கூறையா...காஞ்சி புரமா?

என்றே எப்போதும் சிந்திக்கிறாய்!

கொஞ்சம் கீழே குனிந்து பார்!

உனது நிர்வாணம்,

உன்னிடமிருந்து மறைக்கப்படுவது,

உனக்குப் புரியும்!

 

 

 

நன்றி....மயூரன்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Mayuran said:
 
 
கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த
கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது
செத்துக் கிடந்தவர் பிணம் கூட
சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது
முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம்
###############
கவிதைக்கு நன்றி மயூரன்.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மனசைப் பிசைந்து நிக்கும் காலத்திற்கேற்ற கவிதை....!

நன்றி மயூரன்....!

  • தொடங்கியவர்
18 hours ago, Maruthankerny said:

 

வரவுக்கும் பதிலுலுக்கும் நன்றி

  • தொடங்கியவர்
On 12. Mai 2016 at 6:08 AM, தமிழ் சிறி said:

 

வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி தமிழ்சிறி அண்ணா.

  • தொடங்கியவர்
On 11. Mai 2016 at 1:05 AM, புங்கையூரன் said:

ஏடுகளின் எழுத்துக்களில்...,மட்டும்,

தர்மம் காக்கின்ற தேசங்களின்..,

மனச்சாட்சிகள்,

சனாதன தர்மத்தின் வரிகளால்,

சமாதானப் படுத்தப் பட்டு விட்டன!

 

வேரறுந்து போனதும்....,

மறைந்திருந்த கறையான்கள்,

மரத்தை அசை போடுகின்றன!

 

மனித அவலங்களும்,

மரணங்களும் கூட,,,,

தர்மப் போர் என்னும் ..,

போர்வையினால் போர்க்கப்பட்டு,,

போர்க்குற்றவாளிகள் எல்லோரும்,

புனிதர்களாக்கப் படுகின்றார்கள்!

 

குருசேத்திரத்தில்...,

கீதை சொன்ன கிருஷ்ணர்களாக,

பார்க்குமிடமெல்லாம்..,

புத்தனின் சீடர்கள்..,

'பிரித்' ஓதுகின்றார்கள்!

 

துகிலிருந்து கிடக்கும் என் தேசமே!

கூறையா...காஞ்சி புரமா?

என்றே எப்போதும் சிந்திக்கிறாய்!

கொஞ்சம் கீழே குனிந்து பார்!

உனது நிர்வாணம்,

உன்னிடமிருந்து மறைக்கப்படுவது,

உனக்குப் புரியும்!

 

 

 

நன்றி....மயூரன்!

 

 

வரவுக்கு நன்றி.

வலி சொல்லும் கவி நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

ம் வலி ஒன்று தான் மிச்சம் எஞ்சிய ஒன்று.   

வாழ்த்துகள் தொடரட்டும் 

  • தொடங்கியவர்
On 14. Mai 2016 at 5:47 PM, முனிவர் ஜீ said:

ம் வலி ஒன்று தான் மிச்சம் எஞ்சிய ஒன்று.   

வாழ்த்துகள் தொடரட்டும் 

வரவுக்கும் கருத்திடலுக்கும் நன்றி முனிவர் ஜீ.

உண்மை அது மட்டுமே ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.