Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வந்தார் மூன்

Featured Replies

வந்தார் மூன்
 
வந்தார் மூன்
மூன்று நாள் இலங்கை விஜயத்தினை மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கி மூன் இலங்கை வந்துள்ளார். இன்று மாலை 7.30 மணிஅளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்
 
இவர் இன்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதனை தொடர்ந்து, இளைஞர் நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் பொருட்டு காலிக்கு சென்று இன்றைய தினம் இரவு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இராபோசனத்தில் கலந்து கொள்வார் என எதிர்பாக்கப்படுகின்றது.
 
மேலும் அவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்திப்பார் எனவும் ‘நீடித்திருக்கும் சமாதானம்’ என்ற தொனிப்பொருளில் சிறப்பு சொற்பொழிவொன்றை கொழும்பில் உள்ள பிரதான விருந்தகம் ஒன்றில் நிகழ்த்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதை தொடர்ந்து யாழ் செல்லும் அவர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளார். பின்னர், மீள்குடியேற்ற பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
 
விஜயத்தின் நிறைவாக செப்டம்பர் 2ஆம் திகதி மாலை 6.30 அளவில் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை பான்கி மூன் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/16986

article_1472657037-33.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப விக்கி அய்யா....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அப்ப விக்கி அய்யா....

வெள்ளிக்கிழமை சந்திப்பதாக தான் எங்கோ வாசித்த ஞாபகம். சில வேளை வேறொரு நாளாக இருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:
இவர் இன்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதனை தொடர்ந்து, இளைஞர் நிகழ்வொன்றில் பங்குகொள்ளும் பொருட்டு காலிக்கு சென்று இன்றைய தினம் இரவு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இராபோசனத்தில் கலந்து கொள்வார் என எதிர்பாக்கப்படுகின்றது.
 
மேலும் அவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்திப்பார் எனவும் ‘நீடித்திருக்கும் சமாதானம்’ என்ற தொனிப்பொருளில் சிறப்பு சொற்பொழிவொன்றை கொழும்பில் உள்ள பிரதான விருந்தகம் ஒன்றில் நிகழ்த்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 என்ன.. மூன் தண்ணி அடிச்சிட்டு தான் ஆக்களைச் சந்திப்பாரோ..?! எல்லாம் இரவில நடக்குது.. அதுவும் தடல்புடல்.. சிங்களவனின் விருந்துபசாரங்களின் பின். எங்க நிலை.............................................................. :rolleyes:

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சப்பை அங்கை போய் என்னத்தை கிழிக்கப்போகுது.tw_blush:
சிங்களவன் எதுக்கெடுத்தாலும் வழமை போலை  ஓமோம் எண்டு சொல்லிப்போட்டு.......சந்தோசமாய் வழியனுப்பி வைப்பான்.:mellow:

8 hours ago, alvayan said:

அப்ப விக்கி அய்யா....

முதலில் விக்கி ஐயாவை சந்திக்கும் ஏற்பாட்டை "நல்லாட்சி" சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் செய்யவில்லை. பின்னர் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை 2 மணிக்கு விக்கி ஐயாவை சந்திக்கும் ஏற்பாட்டை செய்திருந்தனர்.

அதை மீண்டும் "நல்லாட்சி" சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் பல்வேறு காரணங்களைக் கூறி தடுத்து நிறுத்தியுள்ளனர். சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் இந்த முயற்சிக்கு சம்சும் கும்பலுக்கும் பெரும் துணை போனதாக தெரிகிறது. விக்கி ஐயாவை தனியாக சந்திக்க வேண்டியதில்லை அவரை நாங்கள் எங்களுடன் வருமாறு அழைத்துள்ளோம் என்று தேர்தலில் தோற்றும் விருப்பு வாக்குகளை மாற்றி வென்ற சுமந்திரன் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிக்கு அறிவித்து குழப்பங்களை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்புக்கு மாபெரும் துணை போன ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனும் உண்மைகளை தெளிவாக எடுத்துரைக்கும் விக்கி ஐயாவை தனியாக சந்திப்பதை தவிர்க்க விரும்புவதும் உறுதியாகியுள்ளது.

தமிழர்களின் பிரச்சினைகளை தெளிவாக எடுத்துக் கூறுபவர்களை சந்திக்க மறுப்பதன் மூலம்,  ஐ.நா. பொதுச் செயலாளர் தொடர்ந்தும் சர்வதேச நடைமுறைகளை மீறி தமிழின அழிப்பை மேற்கொண்ட சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளையும், போர்க்குற்றவாளிகளையும், அவர்களின் பிரதிநிதிகளையும், அவர்களின் தயவில் கள்ளவாக்குகள் மூலம் வென்ற சுமந்திரன் மாவை கும்பலையும் மட்டும் சந்திக்க முயலுவது தெளிவாகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு எதிராகவும், சிங்களவனுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் "சம்சும் கும்பலை" 
தெரிவு செய்த மக்களை நோவதா, தமிழ் இனத்தின் விதியை நோவதா என்று ஆத்திரமாக உள்ளது.
இவ்வளவு அழிவு நடந்தும்... அதனை... ஒரு முக்கிய ஐ.நா. பிரதிநிதியிடம்,  தகவலை தெரிவிக்கக் கூடியவரான...
விக்கி ஐயாவை.... இந்த ஈனர்கள் ஓரம் கட்ட நினைப்பது, ஒருகாலமும் மன்னிக்க முடியாத செயல். 

  • கருத்துக்கள உறவுகள்

அவரை ஓரங்கட்டுவதன்மூலம்,  முதலமைச்சர் உண்மையாகவே தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல்   உழைக்கிறார் என்பது தெளிவாகிறது. எங்கே அவரை தனியாக சந்திக்க விட்டால் தங்கள் கொமிசன் குறைந்து போய்விடுமோ, தங்கள்  செயற்திட்டங்களில்  மாற்றம் ஏதும் வந்துவிடுமோ என்கின்ற அச்சந்தான் காரணம். எதுவாயிருந்தாலும் உந்த  மூனால எந்த மாற்றமும் எங்கள் வாழ்வில்  மலரப்போவதுமில்லை. சிங்களவனின் அபிவிருத்தியையும், த. தே. கூ விட்டுக்கொடுப்பையும் (குனிவையும்) புகழ்ந்து தள்ளிப்போட்டு போவார் என எதிர்பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

//வந்தார் மூன்//

எதோ குழந்தையிடம் ../  இஸ்கூல் பசங்களிடம் நிலாவை காட்டி சோறா இங்கு ஊட்டுகிறார்கள்...?  "மூனு.. " இதை கேட்டால் அந்த ஆம்ஸ்ராங்கே 2 ம் முறை தும்ப செடியில் தூக்கு மாட்டி செத்திருப்பான்.. மூன் அல்ல இவரு !! ஏகாதிபத்தியங்களின் உணவு தேவைக்கு வளர்க்க படுகிற ஏரி மீனு...

 

Hyderabadi%20Dum%20Chicken%20Biryani%205

 

மற்றும் பாங்கி  மீனுக்கு பிடித்த ..

chivas_regal_extra_homepage-carousel.jpg

 

இவுக என்ன வேல்ர்ல்ட் எக்கனாமி பேசபோறங்களோ ? குவாட்டர் அடிச்சுட்டு மட்டை ஆக போறார்கள் ...மேட்டர் ஓவர்..!

  • கருத்துக்கள உறவுகள்

பாங்க் மூன  நல்லா வச்சி செய்துட்டு அனுப்புவானுக அந்தாள் இங்க வந்து செகிட்டு கிளி போல கேட்டிருந்து போகாவிட்டால் என்னவென்று கேளுங்கள் வடிவேல் சொல்றா போல் வரும் ஆனா வராது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.