Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘எழுக தமிழ்’ நடத்தியவர்கள் தமிழகத்திற்குசெல்ல தயாராகுங்கள் -கூறுகிறார் கலகொட அத்தே ஞானசார தேரர்

Featured Replies

‘எழுக தமிழ்’ நடத்தியவர்கள் தமிழகத்திற்குசெல்ல தயாராகுங்கள் -கூறுகிறார் கலகொட அத்தே ஞானசார தேரர்
 
 
‘எழுக தமிழ்’ நடத்தியவர்கள் தமிழகத்திற்குசெல்ல தயாராகுங்கள் -கூறுகிறார் கலகொட அத்தே ஞானசார தேரர்
விக்னேஸ்வரன் உட்பட ‘எழுக தமிழ்’ நடத்தியவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு போவ தற்கு தயாராகவும் என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
“மக்களின் வாக்குகளால் வடக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரன் இன்று நாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நடந்து கொள்கின்றார்.
இலங்கையின் வரலாற்றையே மாற்றுகின்றார். அத்துடன் அவர் இரண்டாவது பிரபாகரனாக நடந்துகொள்கிறார்.
 
எங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை, எங்கே இந்த நாட்டில் நீதியை அமுல்படுத்துகின்ற கட்ட மைப்புகள், எங்கே? இந்த நாட்டின் இறையாண்மை  பற்றி பேசுகின்றவர்கள், நீதிமன்றங்கள், ஜனாதிபதி உட்பட இந்த நல்லாட்சி அமைச்சர்கள் எங்கே..?
 
நீதியை அமுல் படுத்தும் கட்டமைப்புக்கள் ஏன் இன்னும் மௌனமாக இருக்கின்றது. இன்னொரு பக்கம் 30 வருடங்களுக்கும் மேலாக பூசை செய்து மீட்டு எடுத்த இந்த தாய் நாடு இன்னும் ஒரு முறை அதே இடத்திற்கு கொண்டு செல்லும் நிலை.
 
இவர்களது இந்த நடவடிக்கைகளானது வடக்கு கிழக்கை மாத்திரம் அல்ல முழு நாட்டையும் பாதிக்கும் என்ற யதார்த்ததை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.
 
நாங்கள் விக்னேஸ்வரனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் சிங்களவர்களிடம் சண்டித்தனம் காட்ட வர வேண்டாம். சிங்களவர்களின் நிலத்தில் வசித்துக்கொண்டு இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று. எனக்கு விக்னேஸ்வரனை சந்திக்க கிடைத்தால் நீங்கள் எல்லோ ரும் தயாராகுங்கள் தமிழ் நாட்டுக்கு போவதற்கு என சொல்லுவேன். இப்படி நான் சொல்ல வேண்டுமா..? இப்படி நடக்க வேண்டுமா..? சிங்கள மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அரசியல்வாதிகள் அமைதியாக இருந்ததற்கு நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை” என அவர் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/18191

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் சரியான இடத்திலை பிடிச்சிருக்கு....இனி அய்யாவின் அறீக்கை வரப்போகுது...2016 டிசம்பர் இல்லை...3016 டிசம்பர்..அதுவரை அய்யா நீண்ட ஆயுளூடன் வாழ பிரார்த்திப்போம்.....

சிங்கள-பௌத்தர்கள் அனைவரும் அவர்கள் ரவுடிகளாக, காடையர்களாக கள்ளத்தோணிகளில் புறப்பட்டு வந்த (இன்றைய) பங்களாதேசுக்கு சென்றால் நல்லது. இல்லையென்றால் அனுப்பி வைக்கப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
 
Quote

 

எங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை, எங்கே இந்த நாட்டில் நீதியை அமுல்படுத்துகின்ற கட்ட மைப்புகள், எங்கே? இந்த நாட்டின் இறையாண்மை  பற்றி பேசுகின்றவர்கள், நீதிமன்றங்கள், ஜனாதிபதி உட்பட இந்த நல்லாட்சி அமைச்சர்கள் எங்கே..?
 
நீதியை அமுல் படுத்தும் கட்டமைப்புக்கள் ஏன் இன்னும் மௌனமாக இருக்கின்றது. இன்னொரு பக்கம் 30 வருடங்களுக்கும் மேலாக பூசை செய்து மீட்டு எடுத்த இந்த தாய் நாடு இன்னும் ஒரு முறை அதே இடத்திற்கு கொண்டு செல்லும் நிலை.

 

பள்ளிவாசல்களை இடிக்கும் போது பிக்குவுக்கு இவை ஒன்றும் ஞாபகத்துக்கு வரவில்லையா??tw_angry:

  • தொடங்கியவர்

தமிழர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் ஞானசார தேரர்

 

kalakoda-therar.jpg

தமிழீழமும் இனவாதமும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் விக்கினேஸ்வரன் இன்று இரண்டாவது பிரபாகரனாக விஸ்வரூபம் எடுத்துள்ளார். சிங்களவர்களின் இறுதிக்கட்ட பொறுமையையும் சோதித்து பார்க்கும் விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுவது என்னவெனில், இனியும் எம்மை சீண்டிப்பார்த்தால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களும் இந்தியாவிற்கு செல்ல தயாராக வேண்டும் என்பதேயாகும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

வடக்கில் தலைதூக்கிவரும் ஈழ வாதத்தை தோற்கடிக்க அனைத்து பெளத்த சிங்கள அமைப்புகளும் பெளத்த மதத் தலைவர்களும் கட்சி பேதம் இன்றி ஒன்றிணைய வேண்டும். பொது அணியொன்றை உருவாக்கி சிங்கள பெளத்த கொள்கையை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பினால் நேற்று கிருலப்பனையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சியை பலப்படுத்துவதாக ஆட்சியமைத்த புதிய அரசாங்கம் நாளுக்கு நாள் முன்னெடுத்து செல்லும் நடவடிக்களின் மூலமாக நாட்டின் சிங்கள இனமும் சிங்கள கலாசாரமும் அழிந்துகொண்டு செல்கின்றது. நாட்டில் முப்பது வருடகால யுத்தத்தை கடந்து அவற்றை மறந்து வாழ்ந்த இந்த நாட்டு மக்களுக்கு மீண்டும் அந்த நிலைமைகளை நினைவுபடுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மீண்டும் இன்று நாட்டுக்குள் செயற்பட்டு வருகின்றன. புலிகளின் பிரதிநிதிகள் மீண்டும் இந்த நாட்டுக்குள் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாகவே தற்போது விக்கினேஸ்வரன் வடக்கில் தெரிவித்துவரும் கருத்துக்களும் அமைந்துள்ளன. புதிய ஈழ வாதமும், கைவிடப்பட்ட இனவாதமும் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. வடக்கில் சிங்கள மக்களும் சிங்கள புனிதத்துவமும் அழிக்கப்பட்டு வருகின்றது.

தெற்கில் சிங்கள மக்களுடன் வாழ்ந்து நீதியரசராக செயற்பட்ட விக்கினேஸ்வரன் இன்று வடக்கில் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சிங்கள மக்களுக்கு எதிராக அவர் செயற்படுவது நினைத்துக்கூட பார்க்க இயலாத அளவிற்கு அமைந்துள்ளது. விக்கினேஸ்வரன் இன்று இரண்டாவது பிரபாகரனாக செயற்பட்டு வருகின்றார்.

நாட்டின் நீதியை நிலைநாட்டுவதாகவும், அனைத்து மக்களுக்கும் சமமாக செயற்படுவதாக கூறிய அரசாங்கமும் சிவில் அமைப்புகளும் இப்போது அமைதிகாத்து வருகின்றமையே எமக்கு கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகம் பற்றி பேசியவர்கள் ஏன் இன்று அமைதிகாத்து வருகின்றனர். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு நியாயம் நிலைநாட்டப்படாதது ஏன் என்பதே எமது கேள்வியாகும். தெற்கில் தமிழர்கள் தடைகள் இன்றி வாழக்கூடிய சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுவரும் நிலையில், வானத்தை தொடும் அளவில் கோவில்களை அமைக்க சிங்களவர்கள் இடமளித்து வரும் நிலையில் வடக்கில் ஏன் சிங்கள மக்களும் தடைகள் விதிக்கப்படுகின்றது.

சிங்களவர்களின் இறுதிக்ககட்ட பொறுமையையும் சோதித்து பார்க்கும் விக்கினேஸ்வரனுக்கு நாம் கூறுவது என்னவெனில் இனியும் எம்மை சீண்டிப் பார்த்தால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களும் இந்தியாவிற்கு செல்ல தயாராக இருக்கிறார்களா? என்பதற்கு விக்கினேஸ்வரன் பதில் கூறவேண்டும்.

அதிகாரத்துக்காக அரசாங்கம் வாய்மூடி இருக்கலாம் ஆனால் நாட்டுக்காகவும் சிங்கள பெளத்த மக்களுக்காகவும் நாம் பொறுமையாக இருக்க மாட்டோம். நாம் இவ்வளவு காலமும் அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் இனியும் பொறுமைகாக்க முடியாது. நாட்டுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக தந்திரமாக புலிகள் அமைப்புகளும் மேற்கத்தேய நாடுகளும் செயற்பட்டு வருகின்றன. நாட்டின் புலனாய்வு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்து உள்ளது. ஆகவே நாட்டின் சிங்கள பெளத்த மக்கள் நாட்டுக்காக போராட முன்வரவேண்டும். அன்று லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சி இன்று இலங்கையிலும் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அனைத்து பெளத்த சிங்கள அமைப்புகளும் பெளத்த மதத் தலைவர்களும் கட்சி பேதம் இன்று ஒன்றிணைய வேண்டும். பொது அணியொன்றை உருவாக்கி சிங்கள பெளத்த கொள்கையை நிலைநாட்ட வேண்டும். மஹிந்த ராஜபக் ஷ போன்ற பலமான ஆட்சியை வீழ்த்த முடிந்த மக்களால் இந்த ஆட்சியை கவிழ்ப்பது கடினமான ஒன்றல்ல. ரணில், மங்கள, சந்திரிக்கா போன்ற தமிழ் இனவாதத்தை வளர்க்கும் நபர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். சிங்களவர்களின் ஒற்றுமை என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டுமாயின் அதையும் வெளிப்படுத்த நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/11833

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்திக்கான தலைப்பு இப்படி அமைவதே சரி'தமிழர்கள் மீது தாக்குதலை நடாத்துமாறு சிங்கள பௌத்த பயங்கரவாதியான ஞானசாரர் அழைப்பு' சரி. வந்தேறு குடிகளான அதுவும் திருட்டுக்கூட்டமாகக் கணிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டுக் கரையொதுங்கிய கூட்டம் தாம் என்பதை படிக்கவில்லையோ!
 

  • கருத்துக்கள உறவுகள்

தேரருக்கு இன்னும் விடியல்ல. 35 வருசமா அடிச்சும்... தமிழ் நாட்டுக்கு போன தமிழர்கள்.. வெறும் 5 இலச்சம் தான். ஆனால்.. மேற்குலக நாடுகளுக்குப் போனது 15 இலச்சம்.

எனவே தேரர் சரியாப் பேசனும். தமிழர்கள் மேற்குலக நாடுகளுக்கு இன்னும் இன்னும் போனால்.. தேரரும் பிச்சை எடுக்க மேற்குலக நாடுகளுக்கே வர வேண்டி இருக்கும். எப்படி வசதி..?! tw_blush::rolleyes:

ஏதோ சொறீலங்கா செல்வம் கொழிக்கும்.. சிங்கள பெளத்த தேசம் போல ஒரு எடுப்பு. 3ம் உலக நாட்டு அளவில் இருந்து கொண்டு. உந்த இனவாதிகளை முதலில் சிங்கள மக்கள் அடித்து விரட்டும் அறிவு வளர்ச்சி பெற்றால் அன்றி.. சொறீலங்கா இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு ஏழ்மை நாடாகவே இருக்கும். 

ஏற்கனவே புலியை அழிக்கஎண்டு வேண்டின கடனுக்கு நாட்டை இந்தியாக்காரனுக்கும் ,சைனாகாரனுக்கும் ,அமெரிக்காவுக்கும் பிரிச்சு கொடுத்தான விடயம் என்னும் மொட்டைக்கு யாரும் சொல்லவில்லை  போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் என்றால் யார், அவரின் கொள்கை, போதனை என்ன எண்டு தெரியாத, தெருச்சண்டியனெல்லாம் கஸ்ரப்படாமல் ஊரை சுத்தவும்,  ஏமாத்திவயிறு வளர்க்கவும்   காவியை போத்திக்கொண்டு வலிச்சண்டைக்கு திரியுதுகள். புத்தனே இப்ப வந்தாலும் அவருக்கும்  இதே நிலைதான். சுத்தக் காட்டான்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனோட தனிய மோத தயாரா என்று ஒன்றுக்கு 1000 தடவை யோசித்துவிட்டு

நாக்கு வளைக்க தொடங்கவும்..

 

8 hours ago, satan said:

புத்தர் என்றால் யார், அவரின் கொள்கை, போதனை என்ன எண்டு தெரியாத, தெருச்சண்டியனெல்லாம் கஸ்ரப்படாமல் ஊரை சுத்தவும்,  ஏமாத்திவயிறு வளர்க்கவும்   காவியை போத்திக்கொண்டு வலிச்சண்டைக்கு திரியுதுகள். புத்தனே இப்ப வந்தாலும் அவருக்கும்  இதே நிலைதான். சுத்தக் காட்டான்கள்.   

இப்ப புத்தர் வந்து உபதேசம் செய்தாலும் அவரை புலி ஆதரவாளர் என்று கொலை செய்துவிடும் இந்த சிங்கள-பௌத்த பிக்குப் பயங்கரவாதிகள் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாய் வந்து நம்மள கடித்தது என்றால் பதிலுக்கு நாய திரும்ப நம்மால் கடிக்க முடியுமா ..?  சுனா பானாக்கல்  நம்ம பிள்ட் பிரஸரை நூல் விட்டு செக் பண்ணுகிறார்கள் ..    நாம நம்ம வழியில் போய்கொண்டே இருக்கவேண்டும் ...!!

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா அந்தாள் நேரடியாகவே சொல்லி இருக்கிறான் எங்களை ஐரோப்பாவில் குடியேற அனுமதிக்க வேண்டும்  இப்போ நம்ம சனங்களும் போக வெயிட்டிங் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.