Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு!

Featured Replies

இறக்காமத்தில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை, தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு!

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கபுரம் பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டமை தமிழ், முஸ்லிம் மக்களிடையே விசனத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ் மக்கள் வாழும் மாணிக்கபுரம் கிராமத்திலுள்ள மாயக்கல்லி மலையிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இன்று அம்பாறையிலிருந்து பெருமளவான வாகனத்தில் வந்தவர்கள் புத்தபிக்குகளுடன் இணைந்து இம்மலையில் புத்தர் சிலையை வைத்தனர்.

இதற்கு, மாணிக்கபுரத்தில் வசிக்கும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தபோது, தமக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் புத்தர் சிலை வைக்க அதிகாரம் உள்ளதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எல்லைக் கிராமங்களை ஆக்கிரமிக்கும்நோக்கில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு, பின்னர் அவ்விடம் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுவரும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாகத் தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்பதையும் மக்கள் தெரிவித்தபோதும், இதுவரைக்கும் எவரும் வந்து பார்க்கவுமில்லை, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத இலங்கை தீவின் கலாச்சாரத்துடன் சம்பந்தம் இல்லாத முஹம்மதுவும் அல்லாஹ்வும் வரும் போது இந்த மண்ணின் கலாச்சாரத்துடன் தொடர்புபட்ட புத்தர் வருவதில் என்ன தவறு????????????

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

இந்த மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத இலங்கை தீவின் கலாச்சாரத்துடன் சம்பந்தம் இல்லாத முஹம்மதுவும் அல்லாஹ்வும் வரும் போது இந்த மண்ணின் கலாச்சாரத்துடன் தொடர்புபட்ட புத்தர் வருவதில் என்ன தவறு????????????

வாறது தப்பில்லை

உடைக்காமல் நிற்பது தான் தவறு..

6 minutes ago, Dash said:

இந்த மண்ணின் கலாச்சாரத்துடன் தொடர்புபட்ட புத்தர்

புத்தருக்கு இந்த மண்ணின் கலாச்சாரத்துடன் என்ன தொடர்பு? எப்போதிருந்து?

6 minutes ago, விசுகு said:

வாறது தப்பில்லை

உடைக்காமல் நிற்பது தான் தவறு..

சிங்கள ஆக்கிரமிப்புக்கு இராணுவ பிரசன்னம் தேவை அது இல்லாமல் போகும் போது சிங்கள தேசியமும் இல்லாமல் போய்விடும் ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் அப்படியில்லை அது அப்படியே எமது தேசத்தை விழுங்கிவிடும்.

முல்லை தீவு எப்படி வெறும் 6 வருடங்களில் இஸ்லாமிய மயமானது???

Google Map இல் முள்ளியவளை பகுதியை பார்க்கவும் விசகு, அதை பார்த்த பின் உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு????

3 minutes ago, போல் said:

புத்தருக்கு இந்த மண்ணின் கலாச்சாரத்துடன் என்ன தொடர்பு? எப்போதிருந்து?

புத்தர் இந்து மத வழியில் வந்தவர், பௌத்த விகாரைக்கு சென்றால் அங்கே இந்து கடவுள்கஸ்ளை காணலாம். அதை தான் நான் குறிப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்காப்பா அம்பாறை தமிழ் அரசியல் வாதிகள் :unsure:

5 minutes ago, முனிவர் ஜீ said:

எங்காப்பா அம்பாறை தமிழ் அரசியல் வாதிகள் :unsure:

யாராவது முஸ்லீம் அரசியல்வாதி  விருந்து வைப்பான், அங்கு போய் தின்றுகொண்டு  இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

யாராவது முஸ்லீம் அரசியல்வாதி  விருந்து வைப்பான், அங்கு போய் தின்றுகொண்டு  இருப்பார்கள்.

நோ கமன்ஸ் 

அம்பாறையை பொறுத்த வரையில் முஸ்லீம்களின்  சனத்தொகை வீதம் சிங்கள மக்களை காட்டிலும் அதிகரித்து கொண்டு போகிறது ஆகையால் சிங்கள் மக்களுக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது அதனால் மட்டக்களப்பில் உள்ள எல்லைக்கிராமங்கள் கூட அம்பாறை மாவட்ட்ங்களுக்குள் சேர்க்கப்பட்டு அவற்றை சிங்கள் ,மயப்படுத்தி வருகிறது  மூஸ்லீம்கள் கூட தற்பொழுது தமிழ் கிராமங்களை  கைப்பற்றி வருகின்றனர் இதையும் கண்டு கொள்ள வேண்டும் அம்பாறை தமிழ்  அரசியல் வாதிகள் ,தமிழ் நலன் விரும்பிகள் திராய்க்கேணி , அட்டைப்பள்ளம் ஆலங்குளம் போன்ற பகுதிகள் 

 

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் பிரச்சனை இல்லை. பெரிய பெருமாள் சிலையை வைத்து, புத்தர் எங்கண்ட ஆள் எண்டு கொண்டாட வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

64 நாயன்மாருக்கு பக்கத்தில் ஒரு 65 ஆவது ஆளா புத்தனை தூக்கி போட்டு விடவேண்டியதுதான் சிங்களம் நொந்து போயிடும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

64 நாயன்மாருக்கு பக்கத்தில் ஒரு 65 ஆவது ஆளா புத்தனை தூக்கி போட்டு விடவேண்டியதுதான் சிங்களம் நொந்து போயிடும் 

சிங்களம் அதை அப்படியே ஏற்று

கொஞ்சநாளில் அதை விகாரையாக்கிவிடும்

கதிர்காமம் உதாரணம்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

சிங்களம் அதை அப்படியே ஏற்று

கொஞ்சநாளில் அதை விகாரையாக்கிவிடும்

கதிர்காமம் உதாரணம்

அதுக்குத்தான் எதுக்கோ உலக்கை போடவந்த சிவசேனாவை  இந்த விடயத்தில் மாட்டி விடவேண்டியதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அதுக்குத்தான் எதுக்கோ உலக்கை போடவந்த சிவசேனாவை  இந்த விடயத்தில் மாட்டி விடவேண்டியதுதான் .

முடிந்தால்  மகிழ்ச்சி..

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

முடிந்தால்  மகிழ்ச்சி..

இதில் வெக்கபடவேண்டிய ஒன்று நம்ம தமிழ் அரசியல்வாதிகள் இயங்கா நிலை 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

64 நாயன்மாருக்கு பக்கத்தில் ஒரு 65 ஆவது ஆளா புத்தனை தூக்கி போட்டு விடவேண்டியதுதான் சிங்களம் நொந்து போயிடும் 

அதுதான்... விசயம்..

கதிர்காமக் கந்தரை அவையள் கொண்டாடுற மாதிரி, நாமளும் கொண்டாட.. நொந்து போய் விடுவார்கள்...

விஷ்ணுவின் 9 வது அவதாரம் என்று கொண்டாட வேண்டியது தான். :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கோ வந்த ipkf தமிழனை கொல்ல வைக்க சிங்களத்தால் முடியும் எங்களால் .....................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இதில் வெக்கபடவேண்டிய ஒன்று நம்ம தமிழ் அரசியல்வாதிகள் இயங்கா நிலை 

அது தான் 

எதிரி என்றாலும் சிங்களவனிடம் நாம் கற்கவேண்டியது

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பெருமாள் said:

எதுக்கோ வந்த ipkf தமிழனை கொல்ல வைக்க சிங்களத்தால் முடியும் எங்களால் .....................

எதுக்கோ என்று நாம்தான் நம்புகிறோம் ...........

அவர்கள் அதுக்கேத்தான் வந்தார்கள்.
படிப்படியாக தொடங்கினார்கள்.

சிங்கள அரசுதான் கெடுத்தது.
பிரமேதாசா வெளியேற சொல்லாது விட்டிருந்தால்.
ஒருவேளை புலிகளை அப்போதே முடித்து இருக்கலாம். 

பார்த்தசாரதியை வெளியேற்றியதே அதனால்தான் 

ஜோர்ஜ் பெர்னாடோ ஓரம்கட்டர் 

இந்து  ராம் டீலுக்கு ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகுதான் 
தி ஹிந்து குத்துகாரணம் அடித்தது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால்......இதுவும் வரும்.....இன்னும் வரும்.

6 hours ago, பெருமாள் said:

எதுக்கோ வந்த ipkf தமிழனை கொல்ல வைக்க சிங்களத்தால் முடியும் எங்களால் .....................

எதுக்கோ இல்லை!

தமிழர்களை அடக்கி அடிமையாகும் ஒரே நோக்கத்துடனையே இந்திய கொலைகாரர்கள் IPKF என்ற புனை பெயரில் வந்தார்கள். அந்தக் காலத்தில் வட இந்தியாவில் ஹிந்தியில் வெளிவந்த பத்திரிகை செய்திகள், ஹிந்தியில் வெளிவந்த கட்டுரைகள் பலவற்றில் இந்த நோக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.  

தமிழர்கள் பலம் பெறுவதை ஹிந்தி வெறியர்கள், மலையாள வெறியர்கள், தமிழனப் படுகொலைகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் வட இந்தியப் பயங்கரவாதிகள் ஒருபோதும் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

எதுக்கோ இல்லை!

தமிழர்களை அடக்கி அடிமையாகும் ஒரே நோக்கத்துடனையே இந்திய கொலைகாரர்கள் IPKF என்ற புனை பெயரில் வந்தார்கள். அந்தக் காலத்தில் வட இந்தியாவில் ஹிந்தியில் வெளிவந்த பத்திரிகை செய்திகள், ஹிந்தியில் வெளிவந்த கட்டுரைகள் பலவற்றில் இந்த நோக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.  

தமிழர்கள் பலம் பெறுவதை ஹிந்தி வெறியர்கள், மலையாள வெறியர்கள், தமிழனப் படுகொலைகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் வட இந்தியப் பயங்கரவாதிகள் ஒருபோதும் விரும்பவில்லை.

அப்ப  IPKF என்று வந்தார்கள் இப்ப ராமாயணத்தையும் ,கம்பரையும் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.....எது எப்படியோ இந்துக்கள் என்றுசொல்லிகொண்டு இந்தியாவிடமும்,புத்தர் எங்கன்ட ஆள் என்று சொல்லி சிங்களவனிடமும் சொல்லி பிழைக்க பழகினால் யாவும் சுபம் .....தேங்காய் பூவும் புட்டும் என்று தொடங்கினமோ அதோ கதிதான்.........

புத்தர்சிலையை நிறுவியவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லவில்லை – தமண காவல் நிலைய பொறுப்பதிகாரி

buthass888
சட்டத்துக்கு முரணான வகையில் இறக்காமம் பிரதேசத்தில் நேற்றைய தினம் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ள நிலையில்  மேற்படி சிலையினை குறித்த இடத்தில் வைப்பதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவொன்றை, சிலையினை நிறுவிய பௌத்த மதகுருமாரிடம், தான் ஒப்படைத்துள்ளதாகவே தான் அங்கு சென்றுள்ளதாக தமண  காவல் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

சிலையினை குறித்த இடத்தில் வைப்பதற்கு முன்னதாகவே, நீதிமன்ற உத்தரவினை தான் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்த அவர் சிலையினை அந்த இடத்தில் நிறுவியவர்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லவில்லை எனவும்  சட்டத்தினை நிலைநாட்டுவதற்காகவே  சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/5154

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் அமைச்சர் ஹக்கீம் சார் இடத்துக்கு போனாலும் பிக்கு விடுவதாக இல்லை பொலிஸ்மா அதிபருக்கு செய்தி கொடுக்கப்பபட்டிருக்கிறது இப்படி தீடீரென்றூ தோன்றிய புத்தர் சிலை பற்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.