Jump to content

சங்கானை வாள்வெட்டில் எட்டுப் பேர் படுகாயம்!


Recommended Posts

சங்கானை வாள்வெட்டில் எட்டுப் பேர் படுகாயம்!
2017-01-06 09:53:05

ரி.விரூஷன்


21630_knife.blood_.jpgயாழ். சுழி­புரம் பகு­தியில் இடம்­பெற்ற வாள்­வெட்டு சம்­ப­வத்தில் எண்மர் காய­ம­டைந்து யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­துடன் ஏனை­ய­வர்­களைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக வட்­டுக்­கோட்டை பொலிஸார் தெரி­வித்­தனர்.


யாழ்.சுழி­புரம் காட்­டுப்­புரம் பகு­தியில்  இரு­கு­ழுக்­க­ளி­டையே இடம்­பெற்ற வாள்­வெட்டு மற்றும் தாக்­குதல் சம்­பவம் கார­ண­மா­கவே எண்மர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் சிகிச்­சை­க­ளுக்­காக யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

 

இந்தச் சம்­ப­வத்தில் 19 தொடக்கம் 57 வயது வரை­யான எண்­மரே காய­ம­டைந்­தனர். படு­கா­ய­ம­டைந்­த­வர்கள் சங்­கானை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக நேற்று முன்­தினம் இரவு 8 மணி­ய­ளவில் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

 

இது தொடர்பில் வட்­டுக்­கோட்டை பொலிஸில் முறை­யிட்­ட­தனை தொடர்ந்து பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்­நி­லை­யிலே நேற்றுக் காலை சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

 

இந்த நப­ரிடம் மேல­திக விசா­ரணை மேற்­கொண்டு ஏனை­ய­வர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் பொலிஸார் தெரிவித்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21630#sthash.h5TVWz1D.dpuf
Link to comment
Share on other sites

புத்தனை தினமும் கொல்லுபவ்ர்களுக்கு இந்த செய்தி சாதாரணம் தமிழர்களாகிய எங்களுக்கு பாரதூரமான விடயம் காசாப்புகடைகாரனிடம் சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க சொல்லி வடகிழக்கு எங்கும் விட்டுள்ளார்கள் எப்படி அவர்களால் அடக்கமுடியும் ?

Link to comment
Share on other sites

இந்த செய்தியைப் பாத்தவுடனேயே யோசிச்சன் - நாலுபேர் சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பினம் எண்டு.

எதோ தாங்கள் எல்லாம் புத்தனின் வாரிசு போல நல்லவர்கள் என்றும் கதை அளப்பார்கள் + எதோ இங்கு மட்டுமே கலாச்சாரம் சீர்கெடுகுது, கொலை, கொள்ளை எல்லாம் நடக்குது எண்டு குளறுவார்கள் என்றும் நினைச்சேன் - எனது நினைப்பில் தப்பே இல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த செய்தியைப் பாத்தவுடனேயே யோசிச்சன் - நாலுபேர் சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பினம் எண்டு.

எதோ தாங்கள் எல்லாம் புத்தனின் வாரிசு போல நல்லவர்கள் என்றும் கதை அளப்பார்கள் + எதோ இங்கு மட்டுமே கலாச்சாரம் சீர்கெடுகுது, கொலை, கொள்ளை எல்லாம் நடக்குது எண்டு குளறுவார்கள் என்றும் நினைச்சேன் - எனது நினைப்பில் தப்பே இல்லை.
 

சிறிலங்கா அரச பாதுகாப்பு பிரிவால் இவற்றை அடக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?

Link to comment
Share on other sites

6 minutes ago, MEERA said:

சிறிலங்கா அரச பாதுகாப்பு பிரிவால் இவற்றை அடக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?

பாரிஸில் இருந்து ஒஸ்லோவுக்கு வந்து வாள்வெட்டு நடத்தியவர்களை பிரான்சும் அடக்கவில்லை, நோர்வேயும் அடக்கவில்லை. நடந்த பின்னர்தான் முழித்தார்கள். அப்படித்தான் இங்கேயும். கள்ளர்கள் எங்கேயும் இருப்பார்கள், கொலைஞர்களும் அப்படித்தான் - அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கில்லை.

முன்னொரு காலத்தில் இருந்தது போல சந்தேகம் வந்தால் போஸ்டில் கட்ட முடியாது இப்போது - எத்தனை அப்பாவிகள் இறந்திருப்பார்கள். இப்போது சட்டம் ஒழுங்கு இங்கு உள்ளது. அதற்கு என்று ஒரு வழிமுறையும் இருக்கு. வெட்டினோம் கவிழ்த்தோம் என்று இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

பாரிஸில் இருந்து ஒஸ்லோவுக்கு வந்து வாள்வெட்டு நடத்தியவர்களை பிரான்சும் அடக்கவில்லை, நோர்வேயும் அடக்கவில்லை. நடந்த பின்னர்தான் முழித்தார்கள். அப்படித்தான் இங்கேயும். கள்ளர்கள் எங்கேயும் இருப்பார்கள், கொலைஞர்களும் அப்படித்தான் - அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கில்லை.

முன்னொரு காலத்தில் இருந்தது போல சந்தேகம் வந்தால் போஸ்டில் கட்ட முடியாது இப்போது - எத்தனை அப்பாவிகள் இறந்திருப்பார்கள். இப்போது சட்டம் ஒழுங்கு இங்கு உள்ளது. அதற்கு என்று ஒரு வழிமுறையும் இருக்கு. வெட்டினோம் கவிழ்த்தோம் என்று இருக்க முடியாது.

ஒஸ்லோவிற்கு மாதாந்தம் வந்து வெட்டினார்களா? 

நீங்கள் கூறும் சட்டமும் வழிமுறைகளும் இவர்களை லஞ்சம் வாங்கி ஊக்குவிக்கிறார்கள் என்று தெரியாதா? வாள் வெட்டு கோஸ்டிகளால் அப்பாவிகளை இறக்கவில்லையா?

இங்கு போஸ்டில் கட்ட வேண்டும் என்று யாருமே எழுதாத போது நீங்கள் எழுதியதில் இருந்து தெரிகிறது உங்கள் ஆழ்மனதில் உள்ளது. 

Link to comment
Share on other sites

கள்ளர்கள் எங்கேயும் இருப்பார்கள், கொலைஞர்களும் அப்படித்தான் - அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கில்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, ஜீவன் சிவா said:

இந்த செய்தியைப் பாத்தவுடனேயே யோசிச்சன் - நாலுபேர் சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பினம் எண்டு.

எதோ தாங்கள் எல்லாம் புத்தனின் வாரிசு போல நல்லவர்கள் என்றும் கதை அளப்பார்கள் + எதோ இங்கு மட்டுமே கலாச்சாரம் சீர்கெடுகுது, கொலை, கொள்ளை எல்லாம் நடக்குது எண்டு குளறுவார்கள் என்றும் நினைச்சேன் - எனது நினைப்பில் தப்பே இல்லை.
 

திரு ஜீவன் இங்க எவரும் நீங்க சொன்ன மாதிரி துள்ளி குதிக்கவிலலையே. ஏன் இப்படி கள உறவுகள் மீது பழி போடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

Just now, tulpen said:

திரு ஜீவன் இங்க எவரும் நீங்க சொன்ன மாதிரி துள்ளி குதிக்கவிலலையே. ஏன் இப்படி கள உறவுகள் மீது பழி போடுகிறீர்கள்?

 

3 hours ago, TNT said:

புத்தனை தினமும் கொல்லுபவ்ர்களுக்கு இந்த செய்தி சாதாரணம் தமிழர்களாகிய எங்களுக்கு பாரதூரமான விடயம் காசாப்புகடைகாரனிடம் சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க சொல்லி வடகிழக்கு எங்கும் விட்டுள்ளார்கள் எப்படி அவர்களால் அடக்கமுடியும் ?

 

Link to comment
Share on other sites

3 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

ஜீவன் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்போது காவல் துறைமீது மக்களி்ன் கோபம் திரும்புவது உலகில் எந்த நாடடிலும் சாதாரணம் தானே. அதை தானே இங்கு சுடடிக்காடடினார்கள். அதற்கு ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது என்பது என்னால் புரிந்து கொள்ள் முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறை என்ன வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் என்று கத்தும் கூட்டம் தான்

இவ்வாறான வன்முறையையும்

பழையவற்றை சொல்லி வரவேற்கிறது

அல்லது எங்கு தான் குற்றம் நடக்கவில்லை என்று 

தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்கிறது

ஆனால் தமிழரின் அதங்கம் என்னவென்றால்

ஏன் எம்மினம் இவ்வாறு மாற்றாந்தாயிடம் வளரவேண்டும்

எம்மை எம்மிடமே விட்டுவிடுங்களேன் என்பது தான்

அது தாயகமாக இருந்தாலும் புலமாக இருந்தாலும்...

அவர்களுக்கு ஒன்று குறைகிறது  என்பது பெரும் இலாபம்

எமக்கு........?????

Link to comment
Share on other sites

 

2 hours ago, விசுகு said:

வன்முறை என்ன வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் என்று கத்தும் கூட்டம் தான்

இவ்வாறான வன்முறையையும்

பழையவற்றை சொல்லி வரவேற்கிறது

அல்லது எங்கு தான் குற்றம் நடக்கவில்லை என்று 

தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்கிறது

ஆனால் தமிழரின் அதங்கம் என்னவென்றால்

ஏன் எம்மினம் இவ்வாறு மாற்றாந்தாயிடம் வளரவேண்டும்

எம்மை எம்மிடமே விட்டுவிடுங்களேன் என்பது தான்

அது தாயகமாக இருந்தாலும் புலமாக இருந்தாலும்...

அவர்களுக்கு ஒன்று குறைகிறது  என்பது பெரும் இலாபம்

எமக்கு........?????

இதைத்தான் வளர்த்த கிடாய் மார்பிலே பாய்கிறதென்பது. வளர்த்த விதம் அப்படி - இனி குய்யோ முறையோ என்று கூப்பாடு போடாமல் இதுக்கு என்ன பண்ணலாம் என்று யோசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Surveyor said:

நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வழங்கும் முதல், அவர்களை கொலைகாரர்கள் என முடிவு செய்ய முடியாது.

நீதிமன்றமா?

சிறீலங்காவிலா?

ஒரு பாராளுமன்ற எம்பியை கொன்றவர்களையே 

அவர்களால் தண்டிக்கமுடியவில்லை.....

Link to comment
Share on other sites

2 minutes ago, விசுகு said:

எந்த ஆதாரத்தில்

எந்த நம்பிக்கையில்

சிறீலங்காவின்  எந்தவிதமான நீதித்துறை மற்றும் காவல்த்துறை சார்ந்த தீர்ப்பினூடாக 

மாற்றத்தை கண்டதினூடாக

இவ்வாறு நம்பிக்கையுடன் எழுதுகிறீர்கள்???

இவற்றை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்பதை புரிந்த உண்மையில்தான் இதனை எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இவற்றை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்பதை புரிந்த உண்மையில்தான் இதனை எழுதினேன்.

யார் தமிழர்கள் மாறணுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லை நாம்தான் மாற்றனும்

ஏதாவது ஒருவர் 

தமிழரது சுயநிர்ணய உரிமைப்போராட்டம் பற்றி பேசிவிட்டால்

உடனேயே கைது செய்யப்படுகிறார்

மாதக்கணக்கில் நீதி விசாரணையின்றி சிறையிலடைக்கப்படுகிறார்

ஏன் கொன்று தாட்டுவிட்டு காணாமல் போனவராக்கப்படுகிறார்

அந்தளவுக்கு இராணுவமும் காவல்த்துறையும் நுண்ணியமாக இயங்கும் ஒரு குடாவுக்குள்

இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன?

எந்த துணிவில் வாளை கையிலெடுக்கிறார்கள் என்பதே இங்கே பலரதும் கேள்வி.

Link to comment
Share on other sites

18 minutes ago, விசுகு said:

தமிழரது சுயநிர்ணய உரிமைப்போராட்டம் பற்றி பேசிவிட்டால்

உடனேயே கைது செய்யப்படுகிறார்

மாதக்கணக்கில் நீதி விசாரணையின்றி சிறையிலடைக்கப்படுகிறார்

ஏன் கொன்று தாட்டுவிட்டு காணாமல் போனவராக்கப்படுகிறார்

இது தப்பான கண்ணோட்டம் - நடந்த சம்பவத்தை குறிப்பிடுங்கள்.

20 minutes ago, விசுகு said:

அந்தளவுக்கு இராணுவமும் காவல்த்துறையும் நுண்ணியமாக இயங்கும் ஒரு குடாவுக்குள்

இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன?

இதுவும் தப்பான கண்ணோட்டம் 

21 minutes ago, விசுகு said:

எந்த துணிவில் வாளை கையிலெடுக்கிறார்கள் என்பதே இங்கே பலரதும் கேள்வி.

காசினால் தப்பலாம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

(இவர்கள் ஒன்றும் தமிழருக்காக போராடுபவர்கள் இல்லை. வெறுமனே பணத்துக்கான போராட்டம் மட்டுமே).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

இது தப்பான கண்ணோட்டம் - நடந்த சம்பவத்தை குறிப்பிடுங்கள்.

போன கிழடமையும் காந்திசிலையை உடைத்தவர்கள்கைது செய்யப்பட்டார்களே?

 

இதுவும் தப்பான கண்ணோட்டம் 

அப்படியாயின்இத்தனை லட்சம்இராணுவத்தினர்எதற்கு யாழ்குடாவுக்குள்??

என்ன செய்கிறார்கள்???

 

காசினால் தப்பலாம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

(இவர்கள் ஒன்றும் தமிழருக்காக போராடுபவர்கள் இல்லை. வெறுமனே பணத்துக்கான போராட்டம் மட்டுமே).

காசினால்தப்பலாம்என்றால்

அரசு

அரச நிர்வாகம் சரியில்லை என்று தானே அர்த்தம்

 

Link to comment
Share on other sites

19 minutes ago, ஜீவன் சிவா said:
44 minutes ago, விசுகு said:

தமிழரது சுயநிர்ணய உரிமைப்போராட்டம் பற்றி பேசிவிட்டால்

உடனேயே கைது செய்யப்படுகிறார்

மாதக்கணக்கில் நீதி விசாரணையின்றி சிறையிலடைக்கப்படுகிறார்

ஏன் கொன்று தாட்டுவிட்டு காணாமல் போனவராக்கப்படுகிறார்

இது தப்பான கண்ணோட்டம் - நடந்த சம்பவத்தை குறிப்பிடுங்கள்.

 

3 minutes ago, விசுகு said:

போன கிழடமையும் காந்திசிலையை உடைத்தவர்கள்கைது செய்யப்பட்டார்களே?

இவர்கள் தமிழரது சுயநிர்ணய போராட்டத்துக்காகவே காந்தி சிலையை உடைத்தார்கள்.

 

50 minutes ago, விசுகு said:

அந்தளவுக்கு இராணுவமும் காவல்த்துறையும் நுண்ணியமாக இயங்கும் ஒரு குடாவுக்குள்

இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன?

5 minutes ago, விசுகு said:

இதுவும் தப்பான கண்ணோட்டம் 

அப்படியாயின்இத்தனை லட்சம்இராணுவத்தினர்எதற்கு யாழ்குடாவுக்குள்??

என்ன செய்கிறார்கள்???

இது நியாயமான கேள்வி - ஆனால் முன்னர் போல் அவர்கள் வீதிகளில் இல்லை இப்போது. வெறுமனே வெட்டிப் பயலுகளுக்கு வக்காலத்து வாங்குவதை விட அவர்களையும் அகற்ற எதையாவது பண்ணலாமே என்பது எனது ஆசை. 

10 minutes ago, விசுகு said:

காசினால் தப்பலாம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

(இவர்கள் ஒன்றும் தமிழருக்காக போராடுபவர்கள் இல்லை. வெறுமனே பணத்துக்கான போராட்டம் மட்டுமே).

காசினால்தப்பலாம்என்றால்

அரசு

அரச நிர்வாகம் சரியில்லை என்று தானே அர்த்தம்

இதுவும் உண்மை

ஆனால்
பாரிஸில் நடைபெற்ற கொலைகள் எத்தனைக்கு தண்டனை வழங்கப் பட்டிருக்கு - அது போலவே இதுவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

இவர்கள் தமிழரது சுயநிர்ணய போராட்டத்துக்காகவே காந்தி சிலையை உடைத்தார்கள்.

தேவையென்றால் 

உடனே இயங்குகிறார்கள்இல்லையா?

இது நியாயமான கேள்வி - ஆனால் முன்னர் போல் அவர்கள் வீதிகளில் இல்லை இப்போது. வெறுமனே வெட்டிப் பயலுகளுக்கு வக்காலத்து வாங்குவதை விட அவர்களையும் அகற்ற எதையாவது பண்ணலாமே என்பது எனது ஆசை. 

இதுவும் உண்மை

ஆனால்
பாரிஸில் நடைபெற்ற கொலைகள் எத்தனைக்கு தண்டனை வழங்கப் பட்டிருக்கு - அது போலவே இதுவும்.

அதைத்தான்  நானும்சொல்கின்றேன்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்நடாத்தப்படுகின்றோம்என.

 

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:

தேவையென்றால் 

உடனே இயங்குகிறார்கள்இல்லையா?

யாருடைய தேவைக்கு?

2 minutes ago, விசுகு said:

அதைத்தான்  நானும்சொல்கின்றேன்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்நடாத்தப்படுகின்றோம்என.

இல்லை என்று சொல்லவில்லை
ஆனாலும் மாற்றம் என்பது உடனே நடந்து விடாது

தொலைத்த சந்ததிகள் போதுமே அடுத்த சந்ததியாவது குறைந்தது நின்மதியாய் இருக்கட்டும்.

- அம்புட்டுத்தான் - 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

 

இதைத்தான் வளர்த்த கிடாய் மார்பிலே பாய்கிறதென்பது. வளர்த்த விதம் அப்படி - இனி குய்யோ முறையோ என்று கூப்பாடு போடாமல் இதுக்கு என்ன பண்ணலாம் என்று யோசியுங்கள்.

ஐயா எதை வளர்த்த விதம் அப்படி என்று சொல்லுகின்றீர்கள்?பொலிஸ் அதிகாரிகள் இதை அடக்க வேண்டும் என்று சொல்லுகின்றோம்.....அது தமிழ் பொலிஸ் அதிகாரிகள் என்றால் இன்னும் நல்லம் ஐக்கிய இலங்கை வேண்டுமென்றால் நல்ல தமிழ் அதிகாரிகளை உள்வாங்க வேண்டும் ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.