Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது சின்னமகன்

பட்டப்படிப்பு முடியும்  தருவாயில்

3 மாதம் வேலை  செய்து அந்த வேலை  சம்பந்தமான அறிக்கை  சமர்ப்பித்து

நேரடி பரீட்சையிலும் சித்தி  பெறணும்

அதன்படி பெரிய  கம்பனி ஒன்றில்  வேலைக்கு சேர்ந்திருந்தான்

இவனோடு ஒரு பிரெஞ்சுக்காரர் ஒரு ஆபிரிக்கர்  இவன் என 3 பேரை அந்த நிறுவனம் எடுத்திருந்தது

இவர்களுக்கு பொறுப்பானவர்  ஒரு பிரெஞ்சுக்காறர்.

 

3  மாதம்  முடியும் தருணம்

இவர்களுக்கு பொறுப்பானவர் 

வெளிநாட்டுக்காரரான இருவருக்கும்

மிகவும் உதவியாக இருந்தார்

பரீட்சைக்கு எவ்வாறு எழுதுவது

நேர்முகத்தெர்வில்  எவ்வாறு பதிலளிப்பது என்பது  போன்று உதவியதோடு மட்டுமன்றி

இறுதி  நாள் நேரடி பரீட்சை  நடைபெறும் இடத்துக்கும்  நேரடியாக வந்திருந்தார்

பரீட்சை முடிந்ததும்

வெளியில் வந்த இவர்களுக்கு

பரீட்சையில் அவரது உதவி  பெருதும் உதவியதால் பெருத்த சந்தோசம்

மிக்க நன்றிகளை  சொல்லி

மனதிலிருந்த விடயத்தை நேரடியாகவே கேட்டனர்

எங்களுக்கு இவ்வளவு  உதவுகிறீர்களே

நேரத்தை செலவு செய்கிறீர்களே

இதற்கு ஏதாவது காரணமுண்டா? என்று.

 

அவர்  சொன்னார்  நான் ஒரு பிரெஞ்சுக்காரன்

எனக்கு  சொந்தமாக வீடு இருக்கு வசதி இருக்கு பரம்பரை சொத்துக்கள் இருக்கு 

எனக்கு  இந்த வேலை கூட ஒரு பொழுது போக்குத்தான்

இதனால்  வரும் வருமானத்தில்தான் நான்  வாழணும் என்றில்லை

எனது வருமானத்தை  நம்பி  எதிர்பார்த்து எனது குடும்பத்தில் எவருமில்லை

ஆனால் நீங்கள்  இருவரும்அப்படியில்லை

உங்களை  இந்த நிலைக்கு கொண்டுவர

உங்கள்  பெற்றோர் பட்ட வலிகள்  கொஞ்ச நஞ்சமில்லை

உங்களுக்காக அவர்கள் செய்த செய்து வரும் வேலைகள் 

அவர்கள் விரும்பி  செய்பவையல்ல

அவர்களது ஒரு கனவு உங்களையாவது மேலே கொண்டு வரணும் என்பது மட்டும் தான்.

அதற்காகத்தான் உங்களை  நானும் உள்ளே  எடுத்தேன்

3வது ஆளையும்உங்களில்  ஒருவரை  எடுக்கத்தான்  எனக்கு விருப்பம்

ஆனால்  பெரிய  இடத்தில் என்மீது சந்தேகம் வராமலிருக்கத்தான் ஒரு பிரெஞ்சுக்காரரை எடுத்தேன் என்றாராம்

 

சிலரிடமுள்ள 

இந்த மனிதம் தான் எம்மை  புலம் பெயர் தேசங்களில் உள்ளே  எடுத்தது

அரவணைத்தது

வாழ  வைத்தது

வாழ  வைத்துக்கொண்டிருப்பது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைமுறைக்கு இந்தக் குறை இருக்காது.அந்த பிரஞ்சுக்காரனை நினைக்க பெருமையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பேரில் ஒருவரிடம் தான் மனிதம்...வாழும்!

அதுவே உங்கள் மகனிடம் மாட்டுப்பட்டது...உங்களினதும், மகனினதும் அதிர்ஷ்டமே!

எனினும் மனிதம்..ஏதாவது வடிவில்...எப்போதும் தன்னை இனங்காட்டிய படியே இருக்கும்!
இல்லா விட்டால்...உலகம் இயங்காது!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

--------

சிலரிடமுள்ள 

இந்த மனிதம் தான் எம்மை  புலம் பெயர் தேசங்களில் உள்ளே  எடுத்தது

அரவணைத்தது

வாழ  வைத்தது

வாழ  வைத்துக்கொண்டிருப்பது.

இந்த வரிகள்....  மிக நிதர்சனமானவை,  விசுகு.
வெளிநாட்டுக்காரனை... வெறுக்கும் நாடுகளில்,
இப்படியான மனிதத் தன்மையுள்ளவர்கள் இல்லாமல் இருந்து இருந்தால், 
வாழ்க்கையே... வெறுத்து இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த தலைமுறைக்கு இந்தக் குறை இருக்காது.அந்த பிரஞ்சுக்காரனை நினைக்க பெருமையாக இருக்கிறது.

உண்மை  தான் அண்ணா

அடுத்த தலைமுறைக்கு இந்த சலுகை கிடைக்கது

ஆனால் அவர்கள் சலுகைகளை  வளங்கும் இடததில் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

நன்றியண்ணா

வருகைக்கும் நேரத்துக்கும்...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

ஆயிரம் பேரில் ஒருவரிடம் தான் மனிதம்...வாழும்!

அதுவே உங்கள் மகனிடம் மாட்டுப்பட்டது...உங்களினதும், மகனினதும் அதிர்ஷ்டமே!

எனினும் மனிதம்..ஏதாவது வடிவில்...எப்போதும் தன்னை இனங்காட்டிய படியே இருக்கும்!
இல்லா விட்டால்...உலகம் இயங்காது!

உண்மை  தான் அண்ணா

இந்த  மனிதம்  எம்மிடையே குறைந்து வருதல் சிலவேளை  எனக்கு கவலை தரும்  விடயம்.

ஆனாலும் எம்மவர்களிடையேயும் சிலர் பெரிய  மனசு படைத்தவர்கள்  இல்லாமலில்லை.

இத்தனை அழிவுகளிலிருந்து எம்மினம்  மீண்டுவருவதற்கு இந்த மனிதம்  தானே காரணம்.

நன்றியண்ணா

வருகைக்கும் நேரத்துக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதுவரை இப்படியானவர்களை காட்டியதில்லை இறைவன் அது ஒரு சிலருக்கு மட்டுமே  வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கும்   அவருக்கும்:97_raised_hand:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

இந்த வரிகள்....  மிக நிதர்சனமானவை,  விசுகு.
வெளிநாட்டுக்காரனை... வெறுக்கும் நாடுகளில்,
இப்படியான மனிதத் தன்மையுள்ளவர்கள் இல்லாமல் இருந்து இருந்தால், 
வாழ்க்கையே... வெறுத்து இருக்கும்.

உண்மை  தான்சிறி

எம்மை  அகதியாக ஏற்றுக்கொண்டதிலிருந்து

வீடு

வேலை

வசதிகள்

என ஒவ்வொரு விடயத்திலும் யாரோ ஒருவர் மனிதாபிமானத்தை  காண்பித்திருப்பார்

உலகம் உருள்வதற்கு இதுவே காரணம்

நன்றி சிறி

வருகைக்கும் நேரத்துக்கும்...

1 minute ago, முனிவர் ஜீ said:

எனக்கு இதுவரை இப்படியானவர்களை காட்டியதில்லை இறைவன் அது ஒரு சிலருக்கு மட்டுமே  வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கும்   அவருக்கும்:97_raised_hand:

இருக்கலாம்   ராசா

ஆனால் கதைகள்  என்று எனது அனுபவங்களையே  பதிவது வழமை

சில  அனுபவங்களை

செய்திகளை

தேவையானவற்றை  சொல்லிச்செல்லவேண்டியுள்ளது

அது தேவையும் கூட.

'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.'

ஒரு சிலரின் நேர்மை, நாணயம், மனிதாபிமானம் மற்றும்  உழைப்பில் தான் இந்த உலகம் உய்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானமுள்ள மனிதர்களைக் காண்பது குறைந்து கொண்டுவரும் இக்காலத்தில் இப்படியும் ஒருவரா என்று வியக்கவைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா தகப்பன் செய்வது பிள்ளையளுக்கு தான் சேரும் என்று சொல்வார்கள்.நீங்கள் செய்த நன்மை தான் உங்கடை மகனுக்கு சேர்ந்திருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வல்வை சகாறா said:

மனிதாபிமானமுள்ள மனிதர்களைக் காண்பது குறைந்து கொண்டுவரும் இக்காலத்தில் இப்படியும் ஒருவரா என்று வியக்கவைக்கிறது.

நன்றி சகோதரி..

மனதுக்குள்  இருந்த சில அனுபவங்களை

பதிவிட  நினைத்திருந்தேன்

யாழின் இந்த திரி  அதற்கு திறவு கோலாகிவிட்டது

நன்றி சகோதரி..

வருகைக்கும் நேரத்துக்கும்..

11 minutes ago, வாதவூரான் said:

அண்ணா தகப்பன் செய்வது பிள்ளையளுக்கு தான் சேரும் என்று சொல்வார்கள்.நீங்கள் செய்த நன்மை தான் உங்கடை மகனுக்கு சேர்ந்திருக்கு

அதில்   

 நிச்சயம்  நம்பிக்கையுண்டு

நன்றி சகோதரா

வருகைக்கும் நேரத்துக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎.‎03‎.‎2017 at 7:30 PM, விசுகு said:

சிலரிடமுள்ள 

இந்த மனிதம் தான் எம்மை  புலம் பெயர் தேசங்களில் உள்ளே  எடுத்தது

அரவணைத்தது

வாழ  வைத்தது

வாழ  வைத்துக்கொண்டிருப்பது.

அதே மனிதம் தான் எம்மை நித்திலும் அரவணைத்து. தன்னையே இழந்து எங்களை வாழ வைப்பதற்கும் முயன்றதைக் கண்டுகொள்ளாமல் அழித்துவிட்ட வரலாறும் உள்ளது. :(

On 28.3.2017 at 11:00 PM, விசுகு said:

சிலரிடமுள்ள 

இந்த மனிதம் தான் எம்மை  

வாழ  வைத்தது

வாழ  வைத்துக்கொண்டிருப்பது.

 

On 29.3.2017 at 3:59 AM, புங்கையூரன் said:

மனிதம்..ஏதாவது வடிவில்...எப்போதும் தன்னை இனங்காட்டிய படியே இருக்கும்!
இல்லா விட்டால்...உலகம் இயங்காது!

அழகிய அர்த்தமுள்ள வரிகள்

மனிதம் எப்பவும் எந்த ரூபத்திலும் எங்கேயும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

அந்த மனிதம் கொண்ட மனிதர்களாக நாங்களும் வாழ்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.