Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவளும் அவளும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவளும் அவளும்! - வி.சபேசன்

நன்றி : www.webeelam.com

நெடுநேரமாகியும் மகள் வீடு திரும்பவில்லை. பொதுவாக இருட்டுவதற்கு முன்பே மகள் வீட்டிற்கு வந்து விடுவாள். ஆனால் இப்பொழுது நேரம் இரவு 10 மணியாகி விட்டது. மகளைக் காணமால் அவள் தவிக்கத் தொடங்கினாள். மெது மெதுவாக அச்சம் அவளைப் பற்றிக்கொண்டது. ஒரு சந்தேகத்தோடு மகளின் அறைக்குப் போனாள். மேசையில் ஒரு கடிதம்..

அம்மா,

நான் இனிமேல் வீட்டுக்கு வரப் போவதில்லை. என்னுடைய வாழக்கையை நானே தீர்மானித்துக் கொள்ள முடிவு செய்து விட்டேன். என்னுடைய வாழ்க்கைத் துணையை நீங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் அந்த அங்கீகாரத்திற்காக போராடுவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், அவ்வாறான போராட்டம் பெரும் கண்ணீரையும் வேதனையையும், இழப்புக்களையும் மட்டுமே மிச்சம் வைக்கும் என்றும் எனக்கு தெரியும் அம்மா.

நான் துணையாக தேர்ந்தெடுத்தது ஒருவரை அல்ல! ஒருத்தியை! எங்கள் வீட்டிற்கு அடிக்கடி என்னோடு வருகின்ற, நீங்களும் அப்பாவும் "வெள்ளைக்காரி என்றாலும் நல்ல பிள்ளை" என்று அடிக்கடி புகழுகின்ற அவள்தான் அவள். நீங்கள் அவளை நல்ல பிள்ளை என்று சொல்வதற்கு, அவளுக்கு ஆண்கள் யாரும் நெருக்கமான நண்பர்களாக இல்லை என்பதுதான் காரணம் என்று எனக்கு தெரியும். ஆனால் நாங்களே காதலிப்போம் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த அதிர்ச்சியை உங்களுக்கு தர வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறித்து எனக்கு நிறைய வருத்தம் உண்டு அம்மா.

ஒன்றை கட்டாயம் சொல்லியாக வேண்டும். நான் அவளைக் காதலிப்பது அவள் "அவள்" என்பதற்காக அல்ல. அவள் ஒரு "அவனாக" இருந்தாலும் காதலித்திருப்பேன். நான் காதலிக்கிறேன். காதலிக்கின்ற துணையுடன் வாழப் போகிறேன். அவ்வளவுதான். இவைகள் உங்களுக்குப் புரியப் போவதில்லை. புரிய வைக்கின்ற முயற்சியில் நேரமும் காலமும் வீணாவதை விட, அந்த நேரத்தை காதலில் வெற்றி பெறுவதற்கு பயன்படுத்துவது நல்லது என்று எனக்குப் படுகிறது...........

அதற்கு மேல் அவளால் கடிதத்தை படிக்க முடியவில்லை. இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள். மகளை "செல்லம்" குஞ்சு" என்று பாசத்தை கொட்டி வளர்த்தவள் அவள். மகள் இல்லாமல் ஒரு நாள் கூட அவள் இருந்ததில்லை. அதை விட தன்னுடைய மகள் மற்ற பெண்களைப் போல் பருவம் வந்ததும் ஆண் துணை தேடாது இருக்கிறாள் என்று அவள் கொண்டிருந்த பெருமையில் இப்படி ஒரு இடி விழும் என்றும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

மகள் வேறு ஒருத்தியுடன் வாழப் போய்விட்டாள் என்பதை அவளால் தாங்க முடியவில்லை. அத்தோடு சுற்றி இருப்பவர்கள் பேசப் போகின்ற பேச்சுக்களை நினைக்க அவளுக்கு தலையை சுற்றியது. இதை விட இன்னும் ஒரு விடயம் அவளிற்கு பெரும் அச்சத்தைக் கொடுத்தது.

அவளுடைய முரட்டுக் கணவன் அவனுடைய மருமகளின் திருமணத்திற்காக அயல்நாடு சென்றிருக்கிறான். வருவதற்கு நான்கு நாட்கள் ஆகும். அவன் வந்து இதை எல்லாம் கேட்டவுடன் நடக்கப்போவதை நினைக்கவே அவளிற்கு அச்சமாக இருந்தது. கொலை விழுவதை தவிர்க்க முடியாது என்று அவள் முடிவே செய்துவிட்டாள். இரண்டு முறை கணவன் தொலைபேசியில் பேசிய போதும் அவள் எதையும் சொல்லவில்லை. சொல்வதற்கு அவளுக்கு துணிவும் இல்லை. அந்த நான்கு நாட்களும் அவள் உறக்கமற்ற நரகத்தை அனுபித்தாள். மகள், கணவன், சுற்றம் என்று அனைத்தும் மாறி மாறி வந்து அவளிற்கு பெரும் வேதனையைக் கொடுத்தன.

அவளிற்கு விருப்பம் இல்லாமலேயே அவன் வருகின்ற நாளும் வந்தது. வந்தவனிடம் மகளைப் பற்றி தயங்கி தயங்கி சொல்லி முடித்தாள். அவள் முடிக்கும் முன்பே அவன் வெடித்தான். அவளை கண் மண் தெரியாமல் அடித்தான். பெல்ற்றைக் கழற்றி சுழற்றி சுழற்றி அடித்தான். "உன்னுடைய வளர்ப்பால்தானடி எல்லாம்..." என்று அவன் ஆரம்பித்து பேசிய தூசணை வார்த்தைகள் மிகக் கொடுரமானவை. ஒரு அரை மணி நேரமாக அவளை பெல்ற்றாலும் சொல்லாலும் சித்தரவதை செய்தபின் களைத்துப் போய் அமர்ந்தான்.

அவள் உடலிலும் மனதிலும் வலியைத் தாங்கியபடி மெதுவாக கட்டிலை நோக்கி நடந்தாள். கட்டிலில் மெதுவாக சாய்ந்த பொழுது மின்னலைப் போல் ஒரு எண்ணம் அவள் மனதிற்குள் வந்தது. "என்ரை செல்லம் இப்படி ஆரிட்டையும் அடி வாங்கத் தேவையில்லை".

இப்பொழுது அவளால் நிம்மதியாக உறங்க முடிந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதமான கதை சபேசன் அண்ணா

அதிலும்

"ஒன்றை கட்டாயம் சொல்லியாக வேண்டும். நான் அவளைக் காதலிப்பது அவள் "அவள்" என்பதற்காக அல்ல. அவள் ஒரு "அவனாக" இருந்தாலும் காதலித்திருப்பேன். நான் காதலிக்கிறேன். காதலிக்கின்ற துணையுடன் வாழப் போகிறேன். அவ்வளவுதான்."

என்ற வரிகள் அழுத்தமான வரிகள்.

Edited by இளங்கோ

அடுத்த கட்டம் ஆரம்பமாகி விட்டதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த கட்டம் ஆரம்பமாகி விட்டதா?

ஆதிவாசி அவர்களே! உங்கள் லொள்ளு மழைத்தண்ணியைக் காட்டிலும் அதிக வழிந்தோடுது

  • கருத்துக்கள உறவுகள்

காதல் யாருக்கும் எப்போதும் வரலாம் என்பதை எடுத்துக்காட்டுது.

தற்போதைய காலகட்டத்தில் மகள் யாரையும் காதலிக்காவிட்டாலும் தாயின் மனம் பரபரக்கின்றது. மகளின் வாழ்வு நல்லா இருக்கனும் என்பதை மனதில் நினைக்காத மனம் மற்றவர்களின் வாய்ப்பேச்சுக்களாகவே மனம் கலங்குகின்றது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ......................என்று நினைத்து நினைத்தே மனம் புழுங்கின்ற வாழ்வாகிப்போய்விட்டது.

கணவன் கொலைகாரனாய் சித்தரிப்பது, கண்மண் தெரியாமல் அடிப்பது இப்படிப்பட்ட ஆண்கள் நிறையவே இருக்கின்றார்கள் :angry: . கதையில் புதுமை.

சபேசன் உங்க கதை அழகு.

சபேசனையும் களத்தில் தேடியபடி..................

பாராட்டுக்களுக்கு நன்றி!

இந்தக் கதைக்கு பாராட்டுக்கள் வருவது குறித்து எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களுக்கு நன்றி!

இந்தக் கதைக்கு பாராட்டுக்கள் வருவது குறித்து எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி

அந்த மகிழ்ச்சி நீங்கள் மற்றவர்களின் ஆக்கங்களில் கருத்து எழுதி பாராட்டும்போது, அந்த சந்தோசம் ஏற்படும் அல்லவா?

ம்ம் காதல் யாருக்கும் வரலாம் என்ற யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதை நன்று.

Edited by Rasikai

கறுப்பி! இரண்டு பெண்கள் இணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்ட கதைக்கு பாராட்டு வந்தது குறித்துதான் எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி என்று சொன்னேன்.

இந்தக் கதை எழுதிய பொழுது அதிகமாக கண்டனங்களைத்தான் எதிர்பார்த்தேன்.

எமது மக்கள் "அசாதாரண" உறவுகள் பற்றிய விடயத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றுள்ளது பற்றி எனக்கு மகிழ்ச்சி

ரசிகை! இது "காதல் யாருக்கும் வரும்" என்பதை சொல்லுகின்ற கதையாக மட்டும் நான் நினைத்து எழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்கு கண்டனங்கள் வரும் சபேசன்.

நம்ம நொடுக்கு வருவார் கண்டனங்களோடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கதைக்கு கண்டனங்கள் வரும் சபேசன்.

நம்ம நொடுக்கு வருவார் கண்டனங்களோடு

நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் கறுப்பியக்கா.

கூடவே நெடுக்கு என்ற மெயின் ஆர்டிஸ்டின் சைட் ஆர்டிஸ்ட்டாக விளங்கும் தூயவன், தேவன் போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

\\என்ரை செல்லம் இப்படி ஆரிட்டையும் அடி வாங்கத் தேவையில்லை". \\

மனைவியையும் பிள்ளைகளையும் அடிப்பதுதான் ஆணுக்கழகு என்று நினைப்பவர்களுக்குச் சுருக்கென்ற வசனம்!

வித்தியாசமான சிந்தனை.நல்ல கதை சபேசன்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன், இனி மனைவி மாரிடம் அடிவாங்கும் கணவர்கள் ஆறுதல் படுவதற்கு எதாவது கதை இருக்குதா?

ஏன் கந்தப்பு?? உங்கட மனைவி எவ்வளவு நல்லவா :-)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கந்தப்பு?? உங்கட மனைவி எவ்வளவு நல்லவா :-)

நான் எங்கே குஞ்சாச்சியைப் பற்றி சொன்னேன். நான் சொன்னது பொதுவாக ஊர் உலகத்தில நடக்கிறதைத்தானே சொன்னேன். ஆராவது கல்யாணம் கட்டின ஆண்களைக் கேட்டுப்பாருங்கோ. விதம் விதமான கதைகள் சொல்லுவினம். சிலர் அடி வாங்கியும் வெளியில் சொன்னால் மானம் போய் விடும் என்று வீரம் கதைப்பினம்

தயவு செய்து பகுத்தறிவு, சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழர் பண்பாட்டுக்கு ஒவ்வாத விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

ஓவியன்,

இந்தக் கதையிலும் தமிழர் பண்பாடு வருகிறதே!

அந்த முரட்டுக் கணவன் மனைவியைப் போட்டு சாத்து சாத்தென்று சாத்தியதை நீங்கள் படிக்கவில்லையா?

அதற்குத் தீர்வு இதுதானா?

இப்படியொரு தீர்வைப் பிள்ளைகள் தேடக்கூடாதென்பதற்காகவாவது இதை வாசிக்கும் மிருகத்தனமான அப்பாக்கள் திருந்தலாமில்லையா ஓவியன்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்கு கண்டனங்கள் வரும் சபேசன்.

நம்ம நொடுக்கு வருவார் கண்டனங்களோடு

இப்ப தான் பார்த்தம். இன்னும் மாட்டு வண்டியோட காலம் தள்ளுறவைக்கு எது சொல்லியும் புரியாது. நீங்க படியுங்கோ பாராட்டுங்கோ. கடுப்பி அக்கா..! :P

இப்ப பெண்கள் ஆண்களுக்கு அடிக்கிறதென்ன ஆண்களைக் கொலை பண்ணுற காலமுங்கோ..! :lol::rolleyes:

பெண்களால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் மாற்றங்களை செய்து இந்தக் கதையை படியுங்கள்

"அவனும் அவனும்"

கதையில் "அவள்" என்று வருகின்ற இடங்களில் "அவன்" என்று மாற்றுங்கள.; மகளை மகனாக்கி விடுங்கள். வெள்ளைக்காரியை வெள்ளைக்காரன் என்று மாற்றுங்கள்.

முரட்டுக் கணவனை முரட்டு மனைவி என்று மாற்றுங்கள்.

விசயம் முடிந்தது.

இப்படி மாற்றிப் படித்து கந்தப்புவும் நெடுக்காலபோவானும் திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள்.

ஓவியன்! நீங்கள் தமிழர் பண்பாடு என்று எதனை சொல்கிறீர்கள்?

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அவள் உடலிலும் மனதிலும் வலியைத் தாங்கியபடி மெதுவாக கட்டிலை நோக்கி நடந்தாள். கட்டிலில் மெதுவாக சாய்ந்த பொழுது மின்னலைப் போல் ஒரு எண்ணம் அவள் மனதிற்குள் வந்தது. "என்ரை செல்லம் இப்படி ஆரிட்டையும் அடி வாங்கத் தேவையில்லை". 

இப்பொழுது அவளால் நிம்மதியாக உறங்க முடிந்தது. 

 

இப்படி அற்புதமாக முடிகிறது கதை. வாழ்த்துக்கள் சபேசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.